Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சாமானியனின் போராட்டத்திற்கு பிறகு அகற்றபட்ட இறந்த நாய் …

சாமானியனின் போராட்டத்திற்கு பிறகு அகற்றபட்ட இறந்த நாய் …

by ஆசிரியர்

கீழக்கரை நகராட்சியை பொறுத்தவரை எந்த பணிகள் செய்வதாக இருந்தாலும் சமூக ஆர்வலர்களின் ஈடுபாடு இருந்தால் மட்டுமே செய்யக்கூடிய சூழல் நிலவுகிறது.  ஒரு சாமானியனாக எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாத சூழலே.

இரண்டு தினங்களுக்கு வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி அமைந்துள்ள பிரதான பாதையில் நாய் இறந்து கிடந்துள்ளது, நகராட்சியில் தெரு வாரியாக துப்பரவு பணியாளர்களும், மேற்பார்வையாளர்கள் இருந்தும் அகற்றப்படவில்லை.  இதனால் அப்பகுதியில் வசித்த மக்களும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் துர்நாற்றத்தால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பின்னர் அப்பகுதி சாமானிய மக்களின் பெரும் முயற்சிக்கு பிறகு இன்று (02/11/2018) நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.  டெங்கு காய்ச்சல் மற்றும் மூளை காய்ச்சல் பரவி வரும் வேளையில் இது போன்ற சுகாதாரக் பேடுகளை களைவது நகராட்சியின் தலையாய கடமையாகும்.

செய்தி :- முஃபீத், கீழக்கரை

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!