Home செய்திகள் இராஜபாளையம் அருகே அழகாபுரி பகுதியில் 10 வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் மழை நீரால் 15 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு..

இராஜபாளையம் அருகே அழகாபுரி பகுதியில் 10 வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் மழை நீரால் 15 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு..

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 10 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் .

அதேபோல் அருகில் உள்ள 15 ஏக்கர் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்துள்ளது இதனால் மக்காச்சோழம் நெல் ஆகிய பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரனம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்…

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com