41
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி பகுதியில் உள்ள எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி. சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளி என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளான மொத்தம் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா இலவச சைக்கிள்களை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி வழங்கினார். இதில் மொத்தம் 775 சைக்கிள்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகரச்செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- மோகன், உசிலம்பட்டி
You must be logged in to post a comment.