கீழக்கரை செய்திகள்கீழக்கரையில் தொடரும் அவலம்.. சாக்கடை பெருகெடுத்து ஓடும் சி.எஸ..ஐ பள்ளி பின்புறம்.. by keelai November 30, 2016 by keelai November 30, 2016 Bookmark 12கீழக்கரையில் தொடரும் அவலம்.. சாக்கடை பெருகெடுத்து ஓடும் சி.எஸ..ஐ பள்ளி பின்புறம்.. பொதுமக்களின் ஏமாற்றமும், எதிர்பார்ப்புகளும்… கீழக்கரையில் மிகவும் பழமை வாய்ந்த பள்ளிக்கூடங்களில் ஒன்று சி.எஸ்.ஐ பள்ளியாகும். இவ்வழிதான் கீழக்கரையின் முக்கியத் தெருக்களான வடக்குத் தெரு, புதுத் தெரு போன்ற இடங்களுக்கு செல்லும் நுழைவு வழியாகும். இப்பகுதியும் சாக்கடையும் பிரியாத அம்சம் போல் ஆகிவிட்டது. இங்கு வழிந்தோடும் சாக்கடையால் டெங்கு மற்றும் பல தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு சிறுவர்களும், பெரியவர்களும் பெரும் அவதிக்கு உட்பட்டு வருகிறார்கள். இங்கு வசித்து வரும் ஆசிரியை ஒருவர் நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக சென்று அதிகாரிகளைப் பார்த்து மனு கொடுத்த பின்பும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம். இங்கு தெருவில் விளையாடும் சிறுவர்கள் என்று தனக்கும் ஒரு தூய்மையான இடம் கிடைக்கும் என்ற ஏக்கத்திலேயே காணப்படுகிறார்கள். இப்பகுதியில் பல அரசியல்வாதிகளும், தொழில் செய்பவர்கள் வசித்து வந்தாலும் எந்த ஒரு முன்னேற்றமும் கடந்த காலங்களில் ஏற்பட்டது போல் தெரியவில்லை. கடந்த ஆட்சியில் இருந்த நகர் மன்ற உறுப்பினர்களாலும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை, வரப் போகும் நகர் மன்ற உறுப்பினர்களாவது செய்வார்களா? நம் தெரு சுத்தமடையுமா என்று எதிர்பார்ப்பு அத்தெரு மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. இந்நிலையில் மக்கள்நலப் பாதுகாப்பு கழகம் சார்பாகவும் மீண்டும் இப்பகுதி விசயமாக விரைவில் நிர்வாக அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்க இருக்கிறார்கள். இல்லையென்றால் இந்த தெருவுக்கும் சொந்த செலவில் சுத்தம் செய்யும் அரசியல்வாதி வந்தால்தான் விடிவு காலம் கிடைக்குமோ?? TS 7 Lungiesஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..Click to share on Facebook (Opens in new window)Click to share on X (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to print (Opens in new window)Like this:Like Loading...Related slider 0 comment 0 FacebookTwitterPinterestEmail keelai Follow Author previous post கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் நாளை (06-11-2016) TNPSC (Group-4) தேர்வு நடைபெற உள்ளது next post திங்கட் கிழமை அரசு விடுமுறையா?? காலை 11.30 வரை அதிகாரிகள் இல்லாத கீழக்கரை நகராட்சி.. You may also like Bookmark கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.. May 2, 2024 Bookmark கீழக்கரையில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டோட்டராக்ட்டுடன்... May 2, 2024 Bookmark சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட... May 2, 2024 Bookmark ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு... May 2, 2024 Bookmark சுரண்டையில் பீடி தொழிலாளர் மருத்துவமனை சார்பில் மே தின விழா... May 1, 2024 Bookmark பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய தென்காசி மாவட்ட... May 1, 2024 Bookmark தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒருமித்து... May 1, 2024 Bookmark பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி !... April 30, 2024 Bookmark இராமநாதபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி !... April 29, 2024 Bookmark கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும்; தென் பொதிகை... April 29, 2024
You must be logged in to post a comment.