34
கீழக்கரையில் இன்று (மே 18,2021) இந்தியா முழுவதும் கொரோனவைரஸ் இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் இந்திய அரசு 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்க செயலாளர் எபன் பிரவீன்குமார் ஏற்பாட்டில் வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
You must be logged in to post a comment.