Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை இயக்கம் சார்பாக நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி …

கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை இயக்கம் சார்பாக நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி …

by ஆசிரியர்

இந்தியா முழுவதும் கொரோனா தோற்றாள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை இயக்கம் சார்பில் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கீழக்கரையில் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்களை அதன் நிறுவனத் தலைவர்  உமர் வழங்கினார். இதில் ஒரு பகுதியாக கீழக்கரை ஒப்பந்தத் மின், தொழிலாளர்கள் முடிதிருத்தும் தொழிலாளர்கள், மற்றும் மீனவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது கீழக்கரை மண்டல துணை வட்டாட்சியர் பழனிகுமார், ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு காஜி சலாவுதீன், ரோட்டரி சங்க செயலாளர் மூர் ஹசன்னுதீன்,  கீழக்கரை முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம், வெஸ்ட் ஆசியா ரிபாய் மற்றும் பலர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை ஜஹாங்கீர் அருசி ஆலிம் தொகுத்து வழங்கினார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com