Home செய்திகள் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேரோடு சாய்ந்து, கட்சியே மறைந்து விடப் போவதாக காங்கிரஸ் மதுரை மாவட்ட தலைவர் ஜெயராமன் சாபம்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேரோடு சாய்ந்து, கட்சியே மறைந்து விடப் போவதாக காங்கிரஸ் மதுரை மாவட்ட தலைவர் ஜெயராமன் சாபம்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு சமையல் சிலின் விலையை உயர்தியுள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சமையல் சிலின்டரின் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் ஜெயராமன் எடப்பாடி அரசுக்கு மானம், மரியாதை ரோசம் எதுவும் கிடையாது எனவும், கட்சியே மறைந்து விடப் போவதாகவும், அமைச்சர்ஆர்பி உதயக்குமார் காங்கிரஸ் கட்சி அழிந்து போன கட்சி என விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக மானங்கெட தனமாக காங்கிரஸ் சட்சி மாவட்ட தலைவர் ஜெயராமன் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இளங்கோவன், நகர தலைவர் மகேந்திரன், செயலாளர் சின்னராஜா, மாவட்ட செயலாளர் தங்கமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!