Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தகாத வார்த்தைகளால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் திட்டுவதாக மகளிர் சுய உதவிக் குழுவினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்…

தகாத வார்த்தைகளால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் திட்டுவதாக மகளிர் சுய உதவிக் குழுவினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்…

by ஆசிரியர்

தவணை தொகையை உடனே செலுத்த கூறி தகாத வார்த்தைகளால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் திட்டுவதாக மகளிர் சுய உதவிக் குழுவினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார். தவணை தொகையை உடனே செலுத்த கூறி தகாத வார்த்தைகளால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் திட்டுவதாக விருதுநகர் மகளிர் சுய உதவிக் குழுவினை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

மேலும் தவணைத் தொகையை செலுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் கால அவகாசம் பெற்று தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அளித்த மனுவில் கோரியுள்ளனர்.

கொரோனாவால் வேலையிழப்பு, வருவாய் சரிவு போன்றவை ஏற்பட்டுள்ள நிலையில், கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் இந்த பரிந்துரை பொருந்தும். எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் ரிசர்வ் வங்கியின் உத்தரவை மதிக்காமல் பல்வேறு தனியார் வங்கிகள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் தங்கள் வாடிக்கையாளர் மற்றும் கடன்பெற்ற நபர்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

விருதுநகர் அருகே ஆமத்தூர்,மூளிப்பட்டி, விருதுநகர், நக்கலக்கோட்டை,வரலொட்டி,வள்ளிக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இணைந்து நடத்தி வருகின்றனர். கொரானா ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ‌கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் தவணையை அவர்களால் சரிவர செலுத்த இயலவில்லை. அதனால் நிதி நிறுவனங்களிடம் அரசு அறிவித்தபடி கூடுதல் தவணை காலம் கோரி உள்ளனர். ஆனால் ஏற்க மறுத்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் வீடுகளுக்கே வந்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். தவணை தொகையை உடனே திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறி மிரட்டியும் உள்ளனர்.இதனால் கொதிப்படைந்த மகளிர் சுய உதவிக் குழுவினை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாலை விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். தவணைத் தொகையை திருப்பி செலுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் கால அவகாசம் பெற்று தர வேண்டும் என்றும்  அந்த மனுவில் கோரியுள்ளனர்.

பேட்டி:-கலா மகளிர் சுய உதவிக் குழு தலைவி .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!