மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி 60வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை அக்கல்லூரியும் ,டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழும் இணைந்து 6 டி காண்க்கிளவ் என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள். இது ஒரு தொழில்நுட்ப கருத்தரங்கு.
இந்நிகழ்ச்சியில் பத்மபூசன் விருது பெற்ற முன்னாள் மாணவரும், இஸ்ரோ விஞ்ஞானியாகிய நம்பி நாரயணன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். கல்லூரி தாளாளர் கருமுத்து தி. கண்ணன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக டைம்ஸ் ஆஃப் இந்தியா சென்னை முதன்மை ஆசிரியர் அருண்ராம் , டாட்டா இண்டர் நேசனல்நிறுவனத்தின் தலைவர்.பத்மபூசன் முத்துராமன் மற்றும் அடல் இன்னோவேசன் மிசன் இயக்குநர் ரமணன் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் ஐ.ஐ.டி சென்னை முன்னாள் மாணவர்கள் தொடங்கி உள்ள பால்ஸ் என்ற நிறுவனத்தின் செயல்பாடுகளை ஸ்ரீ அலமேலு அவர்கள் வழங்கினார்கள்.
You must be logged in to post a comment.