ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (Jehangir Ratanji Dadabhoy Tata) பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர் இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார். பிரான்ஸ் ராணுவத்தில் இணைந்து பணியாற்றவும் செய்தார் அங்கிருக்கிற பொழுது எண்ணற்ற சாகசங்களில் விருப்பம் கொண்டவராகவும் இருந்தார். எனினும்,அவரின் தந்தை, “போதும் நீ அங்கிருந்து வா!” என்று அழைத்துக்கொண்டார். அப்படி அவர் அழைத்ததால் தான் ஜே.ஆர்.டி நமக்கு கிடைத்தார். அதற்கு பின் அவர் சார்ந்திருந்த படைப்பிரிவு மொராக்கோவில் நடந்த போரில் முழுமையாக அழிக்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜில் பொறியியல் படிக்கலாம் என்று மீண்டும் ஆர்வம் மேலிட போனார். மீண்டும் அப்பா டாடா நிறுவனத்தில் வேலைக்கு சேர அழைத்துக்கொண்டார். டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சம்பளம் பெறாத தொழில் பழகுநராக சேர்ந்தார். தொழில் நுணுக்கங்களை விரைவாக அறிந்துகொண்டார். பல்கலையில் படிக்கவில்லை என்கிற வருத்தம் இறுதிவரை ஜே.ஆர்,டி. டாட்டாவுக்கு இருக்கவே செய்தது.
39
You must be logged in to post a comment.