அனில் காகோட்கர் (Anil Kakodkar) நவம்பர் 11, 1943ல் மத்தியபிரதேசத்தில் உள்ள பர்வானியில் பிறந்தார். இவரது பெற்றோர் கமலா காகோட்கர் மற்றும் புருசோத்தம் காகோட்கர் ஆவர். இவர்கள் இருவரும் காந்தியவாதிகள் ஆவர். பள்ளிப்படிப்பை பர்வானி மற்றும் மும்பையில் முடித்தார். கல்லூரிப்படிப்பை மும்பை ரூபாரேல் கல்லூரியில் பயின்றார். மேலும் 1963ல் பொறியியலில் இயந்திரவியல் பிரிவில் பட்டம் பெறுவதற்காக மும்பை வீரமாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். அனில் காகோட்கர் 1964ல் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார். பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் அணுஉலை பொறியியல் பிரிவில் காகோட்கர் சேர்ந்தார். முற்றிலும் உயர் தொழில்நுட்பத் திட்டமான துருவா அணு உலை வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் இவர் முக்கியப்பங்கு வகித்தார். 1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட அமைதிக்கான அணுசக்தி சோதனைகளின் முக்கிய குழுவில் இவரும் ஒருவராக இருந்தார்.
28
You must be logged in to post a comment.