சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே (Samuel Pierpont Langley) ஆகஸ்ட் 22, 1834ல் இராக்சுபரி, மசாசூசட்சில் பிறந்தார். இவர் போசுடன் இலத்தீனப் பள்ளியிலும் போசுடன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும் கல்விகற்றார். இலாங்லே ஆர்வார்டு வான்காணகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த பிறகு, கணிதவியல் பேராசிரியராக அமெரிக்க நாவாயியல் கல்விக்கழகத்தில் சென்று சேர்ந்தார். உண்மையில் அங்கு அந்தக் கல்விக்கழகத்தின் சிறிய வான்காணகத்தை மீட்டு இயக்கச் சென்றார். இவர் 1867இல் அல்லெகேனி வான்காணகத்தின் இயக்குநரானார். மேலும் பென்னிசில்வேனியா மேற்குப் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியராகவும் விளங்கினார். இது இப்போது பிட்சுபர்கு பல்கலைக்கழகம் எனப்படுகிறது. இவர் 1887 இல் சுமித்சோனிய நிறுவனத்தின் மூன்றாம் செயலராகச் சேர்ந்தாலும் இப்பதவியில் 1891 வரை தொடர்ந்து இருந்தார்.
இலாங்லே கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்தவர் ஆவார். இது ஆரம்பத்தில் அகச்சிவப்பு கதிர்வீச்சை அளவிட பயன்படுகிறது. போலோமீட்டர் விஞ்ஞானிகளுக்கு ஒரு டிகிரி செல்சியஸின் 1 / 100,000 க்கும் குறைவான வெப்பநிலையின் மாற்றத்தைக் கண்டறிய உதவியது. இது பூமியில் சூரிய சக்தியின் அளவை அளவிடுவதற்கான அடித்தளத்தை அமைத்தது. அவர் 1881 ஆம் ஆண்டில் “தி போலோமீட்டர் மற்றும் கதிரியக்க ஆற்றல்” என்ற கட்டுரையை வெளியிட்டார். சந்திரனின் மேற்பரப்பு வெப்பநிலையை அளவிடுவதற்கான முதல் முயற்சிகளில் ஒன்றை அவர் மேற்கொண்டார். பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு மூலம் அகச்சிவப்பு கதிர்வீச்சின் குறுக்கீட்டை அவர் அளவிடுவது 1896 ஆம் ஆண்டில் ஸ்வாண்டே அர்ஹீனியஸால் பயன்படுத்தப்பட்டது. கார்பன் டை ஆக்சைடு அளவை எதிர்காலத்தில் இரட்டிப்பாக்குகிறது.
மேலும் இலாங்லே வானூர்தியியல் வல்லுனரும் ஆவார். இவர்தான் சுமித்சோனிய வானியற்பியல் வான்காணகத்தை நிறுவியவர் ஆவார். கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்த அமெரிக்க இயற்பியலாளர், சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே பிப்ரவரி 27, 1906ல் தனது 71வது அகவையில், அய்க்கன், தென்கரோலினாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.