இராமநாதபுரம், செப்.2- இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே பாப்பானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ரமேஷ் குமாரி, 40. தற்போது ராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கிறார். இவர் தேர்த்தங்கல் கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை பணிக்குச் சென்ற இவர் வேலை முடிந்த பின் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். ஆர்.காவனூர் அருகே வந்த போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், மீண்டும் திரும்பி வந்து ரமேஷ் குமாரி கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இதில் இரு சக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த ரமேஷ் குமாரி காயமடைந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுவி சிகிச்சைக்கு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இது குறித்து பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.