“பொங்கல் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, மனோகரன், மீசை தங்கராஜ், அழகப்பன், சண்முகம், செந்தில் ராஜன், கோடீஸ்வரன், வேல்முருகன், எழுத்தாளர் விவேக் ராஜி ஆகியோர் முன்னிலை வைத்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக ரஜினி மன்ற தலைவர் பால தம்புராஜ், அகஸ்தியர் ஹெர்பல் நிறுவனர் நாகலிங்கம், திமுக பிரமுகர் ஏ.டி.மதியழகன், பத்தாவது வட்ட கழக திமுக செயலாளர் வி.சி.மாதவன், பத்தாவது வட்ட கழக அதிமுக செயலாளர் கே.எம்.கண்ணன், கேபிள் கண்ணன், ஜி.மணிகண்டன் கலந்து கொண்டனர். நடிகைகள் ராம ஜெயந்தி, வனிதா, அங்கிதா, பத்ர காளி ஆகியோர் இணைந்து பொங்கல் வைத்தார்கள். விழாவில் லெட்சுமி, நிரோஷ், ஜி.வனிதா, ஜி.வி.சன்மதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.