போலியோவை உலகை விட்டு ஒழிக்க ரோட்டரியின் பங்கு மகத்தானது. போலியோ சொட்டு மருந்திற்கான செலவை கடந்த 30 ஆண்டுகளாக ரோட்டரி ஏற்றுக் கொண்டு உள்ளது. போலியோ ஒழிப்பிற்கு 1,800 மில்லியன் அமெரிக்க டாலர் சர்வதேச ரோட்டரி இதுவரை செலவு செய்துள்ளது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தவிர மற்ற நாடுகளில் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டது. நம் அண்டை நாடுகளில் போலியோ இருப்பதால் நமக்கும் அது மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம். எனவே, போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இரண்டு வாகனங்கள் மேற்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக பிப்.23 ல் புறப்பட்டன. அந்த வாகனங்கள் நூறு நாள் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பிறகு காஷ்மீரில் இருந்து கராச்சிக்கு ஒன்று, காபூலுக்கு ஒன்று நன்கொடையாக வழங்கப்பட உள்ளது. இன்று மாலை ராமநாதபுரம், வந்த இந்த விழிப்புணர்வு வாகனத்தை ராமநாதபுரம் அரண்மனை முன் ராமநாதபுரம் டிஐஜி., ரூபேஷ் குமார் மீனா, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா கலந்து கொண்டு வரவேற்றனர். இதில் ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் ஜெ.தினேஷ் பாபு, முன்னாள் துணை ஆளுநர்கள் ஜெ.சுகுமாறன், பார்த்த சாரதி, பி.ஆர்.என்.முத்துராமலிங்கம், ராமநாதபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் நாகராஜன், உறுப்பினர்கள் செங்குட்டுவன், அருண். இன்ஜினியர் பாலா, அண்ணாதுரை, வழக்கறிஞர் ஜகத் இளவரசன், ராதாகிருஷ்ணன், கீழக்கரை ரோட்டரி நிர்வாகி பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Category:
செய்திகள்
கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும்:-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை!
by Askar
written by Askar
கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும்:-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை!
“தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 1300 மின் கணக்கீட்டாளர்கள் (ASSESSOR) பதவிக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும்” என்று அ.தி.மு.க. அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே இந்தி படித்தவர்களை எல்லாம் உதவிப் பொறியாளர்களாக நியமித்த முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி தலைமையிலான அரசு; அந்த மோசமான முன்னுதாரணத்தை தொடர்ந்து இப்போது, வீடு வீடாகச் சென்று மீட்டர் ரீடிங் எடுக்கும் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான தேர்வினை, முழுவதும் தமிழில் நடத்திட மறுப்பது; வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு, பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் திட்டமிட்ட சதியோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இந்தத் தேர்வுக்கான அறிவிப்பில், “இப்பதவிக்கு விண்ணப்பிப்பவருக்குக் கட்டாயம் தமிழ் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” – “தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்” – “தமிழ்மீடியம் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும்” என்றெல்லாம் “ஒப்பனைக்கு”க் குறிப்பிட்டு விட்டு, “ஆன்லைன் தேர்வு மட்டும் முழுக்க முழுக்க தமிழில் நடைபெறாது” என்று அறிவிப்பது, முற்றிலும் அநீதியான தேர்வு முறையாகும்.
தவறான கேள்விகளுக்கு “நெகடிவ் மதிப்பெண்” வழங்கும் முறையும், படித்து விட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞர்களை அடியோடு புறக்கணிக்கும் செயலாகும்.
தேர்வில் வெற்றி பெறுபவர்களில், “ஒரு பதவிக்கு இருவர் என்ற அளவில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைக்கப்படுவார்கள்” என்பது, முறையற்ற – எவ்வித நியாயமும் இல்லாத அளவுகோலாக இருக்கிறது.
மின் வாரியப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்துவது, ஏதோ “மின் கொள்முதல்” போன்றதல்ல; மாறாக, வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, தமிழ்நாட்டில் தமிழில் ஆன்லைன் தேர்வு நடத்துவது முக்கியம், அதுவே பொருத்தமானது, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியது, என்பதை மின்துறை அமைச்சர் திரு. தங்கமணி உணர்ந்து, ஏற்பட்டுவிட்ட தவறை உடனடியாகத் திருத்திக் கொண்டு, மறு அறிவிப்பு வெளியிட முன்வர வேண்டும்.
ஆகவே, கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புறங்களில் – ஏழ்மையான சூழ்நிலையில் பட்டப் படிப்புகளை முடித்துள்ள இளைஞர்களும், மின் கணக்கீட்டாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில், இந்தப் பதவிக்குரிய ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தவறான கேள்விகளுக்கு “நெகடிவ்” மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
கிராமப்புறப் பட்டதாரிகளின் நலன் கருதி, முதலமைச்சரும் மின்துறை அமைச்சருக்கு உரிய ஆணை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒலிபெருக்கி சத்தத்தால், தேர்வு நேரத்தில் மாணவர்கள் படிப்பு பாதிப்பதாக பொதுமக்கள் புகார்..
by Askar
written by Askar
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை இ. காட்டூர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகின்றன. இவ்விழாவினையொட்டி சிறப்பு நடன நிகழ்ச்சி 4 ஆம் தேதி புதன்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில்பெண்கள் நடனமாடும் மேடைபகுதிக்கு பார்வையாளர்கள் யாரும் கிட்டே வராத அளவிற்கு சீமை முள் செடிகளை வெட்டி போட்டு வைத்துள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்ட அதிரவைக்கும் ஒலிபெருக்கியை வைத்துள்ளனர். பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்வு நேரம் என்பதால் மாணவர்களின் கவனம் சிதறக்கூடும் என்றும் கிராமம் தோறும் நடைபெறும் மாரியம்மன், காளியம்மன் மற்றும் உள்ளூர் திருவிழாக்களுக்கு இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கியை வைப்பதும், நடன நிகழ்ச்சி வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென சமூக சிந்தனையாளர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் மகுடஞ்சாவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை வாய்மொழி உத்தரவு பிரபிப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கல்பாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிப்பு:- திமுக எதிர்ப்பால் பரபரப்பு..
by Askar
written by Askar
கல்பாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிப்பு:- திமுக எதிர்ப்பால் பரபரப்பு..
இளம்பிள்ளை அருகே கல் பாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக உறுப்பினர் வேட்பு மனு நிராகரிக் கப்பட்டு, அதிமுக உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இளம் பிள்ளை அடுத்த வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு கடந்த 2 முறை தேர்தல் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பான்மை உறுப் பினர்கள் வராததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 3-வது முறையாக புதனன்று மறை முகத் தேர்தல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 9 வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாள் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.
துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் 2-ஆவது வார்டு உறுப்பினர் மணி மற்றும் திமுக சார்பில் 4-ஆவது வார்டு உறுப் பினர் வெங்கடாசலம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராக ரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த மணி போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டதாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் திருவேரங்கன் அறிவித் தார்.இதன்பின் இந்த அறிவிப்புக்கான தகவலை ஒட்டப்படாமல், ஊராட்சி அலுவலகத்தினை பூட்டி விட்டு அவசர, அவசரமாக அவர் வெளியே செல்ல முற்பட்டார். இதையடுத்து அங்கிருந்த திமுக வினர் மற்றும் பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சென்ற காரை மறித்து, வெங்கடாசலம் மனு நிராகரிப்பு குறித்து விளக்கேட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டி யில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
by Askar
written by Askar
இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டி யில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப் பட்டி ஊராட்சி 4 ரோடு பகுதியில் சுடு காடு உள்ளது.
இந்த சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மேடை அமைக் கப்பட்டது. தற்போது, இதன் தூண்களில் ஆங்காங்கே காரைகள் பெயர்ந்து, மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
மேலும் சுடு காடு பராமரிப்பு இன்றி உள்ளது. எனவே தகன மேடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்பட வேண்டும். தகன மேடையை சுற்றி தடுப்புச் சுவர் இடிந்து காணப்பட்டு வருவதால் இதனையும் புதி தாக அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அடப்பாவிகளா!! நாய் படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை – முதியவர் அதிர்ச்சி..!
by Askar
written by Askar
அடப்பாவிகளா!! நாய் படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை – முதியவர் அதிர்ச்சி..!
மேற்குவங்க மாநிலத்தில் நாய் படத்துடன் முதியவருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
முர்சிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தை சேர்ந்த 64 வயதாகும் சுனில் கர்மாகர், தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட புதிய அட்டையில் கர்மாகர் புகைபடத்துக்கு பதிலாக நாயின் படம் இருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த கர்மாகர், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தார். இதையடுத்து அந்த அட்டையை வாங்கிக் கொண்டு, நாய் படத்தை நீக்கி, வேறு அட்டையை அளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் திருத்தம் செய்யும்போது நேரிட்ட தவறால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வா ?தேர்வுத்துறை இயக்குநர் சுற்றறிக்கையால் குழப்பம் – தெளிவான அறிக்கை வெளியிடதமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர்பி.கே.இளமாறன் அறிக்கை.!
by Askar
written by Askar
எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வா ?தேர்வுத்துறை இயக்குநர் சுற்றறிக்கையால் குழப்பம் -தெளிவான அறிக்கை வெளியிடதமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.!
குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச்சட்டம் திருத்தம் 2019 ன்படி தொடக்கக்கல்வி இயக்குநர் பொதுக்கல்வி வாரியத்தலைவருமான பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித அடிப்படையில் இந்த கல்வியாண்டிலேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கன செயல்முறைகளை தொடங்கியிருப்பது குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கும் வன்முறையாகவே கருதப்பட்டது. ஆடல் பாடல் முறை
விளையாட்டுமுறை கல்வி, கதைவழி முறை கல்வி என குழந்தைநேய கல்விமுறைக்கு எதிராக குழந்தைகளை துன்புறுத்துவதாகும். பள்ளிக்காக குழந்தைகள் இல்லாமல் குழந்தைக்காக பள்ளிகள் இருந்தால் ஆர்வத்தோடு பள்ளியினை நோக்கி குழந்தைகள் வருவார்கள்.
வீட்டுச்சூழல் போன்று பள்ளிச்சூழலும் அமைந்தால்தான் உண்மையான கல்வியாகும் என்று மகாத்மா காந்தியடிகள் குறிப்பிடுகிறார்கள்.
கற்றலில் இனிமை மாறி கஷ்டப்பட்டால்தான் இஷ்டம் வரும் என்றால் கல்வியினை கல்வியாக பார்க்காமல் கல்விச்சாலைகள் எல்லாம் தொழிற்சாலைகளாக மாறும்.
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும்.
குறிப்பாக தாழ்த்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகள்தான் அரசு பள்ளிகள் , மாநகராட்சிப்பள்ளிகள் அரசுநிதி உதவிபெறும் பள்ளிகளில் பயின்றுவருகிறார்கள். குழந்தைகள் பள்ளிக்கு வரவழைப்பதே பல போராட்டங்கள் நடுவில் அழைத்துவருகிறோம். இந்நிலையில் பொதுத்தேர்வென்றால் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிடும் அபாயத்திற்கு தள்ளப்படும். இது பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சுப்பாய்ச்சும். ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும். பொதுத்தேர்வென்று பள்ளியினைவிட்டு வேறுபள்ளிக்கு சென்று எழுதச்சொல்வது பயத்தை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே கல்விச்சீர்த்திருத்தம் என்ற பெயரில் குழந்தைகளின் மனநலத்தை கெடுக்கும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வினை ரத்துசெய்ய வைத்தக் கோரிக்கையினை ஏற்று பொதுத்தேர்வை ரத்துசெய்த மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டோம்.இந்நிலையில் 03.03.2020 அன்று அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கையில் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தேர்வுமையங்கள், தேர்வுமைய கண்காணிப்பாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. மழைவிட்டாலும் தூறல் நிற்கவில்லை.எனவே தெளிவான அறிக்கை வெளியிட வேண்டி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள மின் உயர் கோபுர விளக்கு பயன்பாட்டுக்கு வருமா ?பொதுமக்கள் எதிர்பார்ப்பு..
by Askar
written by Askar
செங்கம் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள மின் உயர் கோபுர விளக்கு பயன்பாட்டுக்கு வருமா ?பொதுமக்கள் எதிர்பார்ப்பு..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது .கோயில் வளாகத்தில் பல நாட்களாக காட்சிப் பொருளாகவே இருக்கும் உயர் மின் விளக்கு எரியாத சூழ்நிலை உள்ளது. வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் செல்ல அச்சம் தெரிவிக்கின்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் உள்ளது .பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது என்று மக்களிடையே பரவலாக பேச்சாக உள்ளது . செங்கம் பேரூராட்சி நிர்வாகம் மின் உயிர் கோபுர விளக்கு பயன்பாட்டில் கொண்டுவருமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழடி அகழாய்வுக்குப்பின் கல்லூரி மாணவர்கள் இடையே தொல்லியல், பண்பாடு, தமிழர் நாகரிகத்தை அறிவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மாணவர்களின் ஆர்வத்தை நிறைவேற்ற தமிழக வரலாறு, கலை, பண்பாட்டை மாணவர்கள் தெரிந்து கொள்ளவும் ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் தொல்லியல் மன்றம் தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் க.மகுதம்மாள் தலைமை வகித்தார். அவர் பேசுகையில் “ராமநாதபுரம் மாவட்டத்தில் பல தொல்லியல் தடயங்கள் சிதைந்து வருகின்றன. 2,600 ஆண்டுகள் பழமையான கீழடியை விட அகழாய்வில் அதிக பொருட்கள் கிடைத்த அழகன்குளம், தேரிருவேலி ஆகியவை ரோமானியருடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த பன்னாட்டு நகரங்கள் ஆகும். தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று அவற்றின் சிறப்புகளைத் தெரிந்துகொண்டால் தான் அவற்றை பாதுகாக்கவேண்டும் என்றார்.
உடற்கல்வி இயக்குநர் சோ.மணிமுத்து வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் மெ.செந்தாமரை முன்னிலை வகித்தார். தொல்லியல் மன்றமும் ராமநாதபுரம் மாவட்டச் சிறப்புகள் குறித்து
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான வே,ராஜகுரு,சங்ககாலக் கல்வெட்டுகள் குறித்து தமிழ்த்துறை மாணவி வே.சிவரஞ்சனிபேசினர். தொல்லியல் மன்றச் செயலாளர் ர.அதிசயம் நன்றி கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தலைமை தலைமை தாங்கி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், அம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சேகர், மட்டப்பாறை ஊராட்சி மன்றத் தலைவர் மகேந்திரன், ஒன்றியக் கவுன்சிலர் நல்லதம்பி, பள்ளி தலைமை ஆசிரியர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர்: ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சாகுல் ஹமீது இயற்கையின் மீது பற்று கொண்டு மரங்கள் வளர்ப்பது குறித்து இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து சென்னை தலைமைச் செயலகம் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறார்.மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டனை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.உடனடியாக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.சாகுல் ஹமீதை வரவேற்று வழிகாட்டி மணிகண்டன் பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.அவரது பசுமை விழிப்புணர்வு பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மக்கள் தொண்டன் அசோக்குமார் மற்றும் கிரி செய்தனர்.இதில் சமூக ஆர்வலர்கள் கண்ணன் தருன், லிங்கசெல்வி, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வார வழிபாட்டில் சாதனை செய்த மாணவர்கள். தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக பரிசுகளை குவித்த மாணவர்கள்
by mohan
written by mohan
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் வாரவழிபாட்டில் பரிசுகள் பெற்றதற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவில் ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகர சிவன் கோவிலில் நடைபெறும் வாரவழிபாட்டுக் கூட்டத்தில் தொடர்ந்து 52 வாரங்களுக்கு மேல் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள் தனுதர்ஷினி,புகழேந்தி,ஜெயஸ்ரீ,ஜனஸ்ரீ ,நாகமணிகண்டன் வெங்கட்ராமன் ஆகிய ஆறு பேரும் பரிசு பெற்றனர். பரிசுகள் பெற்று சாதனை படைத்தத மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக பள்ளி ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வா ?தேர்வுத்துறை இயக்குநர் சுற்றறிக்கையால் குழப்பம் – தெளிவான அறிக்கை வெளியிடதமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.மாநிலத்தலைவர்பி.கே.இளமாறன் அறிக்கை.!
by Askar
written by Askar
எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வா ?தேர்வுத்துறை இயக்குநர் சுற்றறிக்கையால் குழப்பம் – தெளிவான அறிக்கை வெளியிட
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.!
குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச்சட்டம் திருத்தம் 2019 ன்படி தொடக்கக்கல்வி இயக்குநர் பொதுக்கல்வி வாரியத்தலைவருமான பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித அடிப்படையில் இந்த கல்வியாண்டிலேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கன செயல்முறைகளை தொடங்கியிருப்பது குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கும் வன்முறையாகவே கருதப்பட்டது. ஆடல் பாடல் முறை
விளையாட்டுமுறை கல்வி, கதைவழி முறை கல்வி என குழந்தைநேய கல்விமுறைக்கு எதிராக குழந்தைகளை துன்புறுத்துவதாகும். பள்ளிக்காக குழந்தைகள் இல்லாமல் குழந்தைக்காக பள்ளிகள் இருந்தால் ஆர்வத்தோடு பள்ளியினை நோக்கி குழந்தைகள் வருவார்கள்.
வீட்டுச்சூழல் போன்று பள்ளிச்சூழலும் அமைந்தால்தான் உண்மையான கல்வியாகும் என்று மகாத்மா காந்தியடிகள் குறிப்பிடுகிறார்கள்.
கற்றலில் இனிமை மாறி கஷ்டப்பட்டால்தான் இஷ்டம் வரும் என்றால் கல்வியினை கல்வியாக பார்க்காமல் கல்விச்சாலைகள் எல்லாம் தொழிற்சாலைகளாக மாறும்.
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும்.
குறிப்பாக தாழ்த்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகள்தான் அரசு பள்ளிகள் , மாநகராட்சிப்பள்ளிகள் அரசுநிதி உதவிபெறும் பள்ளிகளில் பயின்றுவருகிறார்கள். குழந்தைகள் பள்ளிக்கு வரவழைப்பதே பல போராட்டங்கள் நடுவில் அழைத்துவருகிறோம். இந்நிலையில் பொதுத்தேர்வென்றால் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடிவிடும் அபாயத்திற்கு தள்ளப்படும். இது பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சுப்பாய்ச்சும். ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும். பொதுத்தேர்வென்று பள்ளியினைவிட்டு வேறுபள்ளிக்கு சென்று எழுதச்சொல்வது பயத்தை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே கல்விச்சீர்த்திருத்தம் என்ற பெயரில் குழந்தைகளின் மனநலத்தை கெடுக்கும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வினை ரத்துசெய்ய வைத்தக் கோரிக்கையினை ஏற்று பொதுத்தேர்வை ரத்துசெய்த மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டோம்.இந்நிலையில் 03.03.2020 அன்று அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கையில் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தேர்வுமையங்கள், தேர்வுமைய கண்காணிப்பாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. மழைவிட்டாலும் தூறல் நிற்கவில்லை.எனவே தெளிவான அறிக்கை வெளியிட வேண்டி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அணுவாயுதப் பரவல்தடுப்பு ஒப்பந்தம், அணுக்கரு ஆயுதங்கள் உருவாவதை தடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும். 1968 இயற்றப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் 189 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இசுரேல், வட கொரியா, தெற்கு சூடான்ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. தொடக்கத்தில் வட கொரியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பிறகு அதை மீறியது. இறுதியாக 2003ல் இந்த அமைப்பில் இருந்து விலகிக்கொண்டது. இந்த ஒப்பந்தம் அணுக்கரு உலைகள் கட்டவும் அணுவாற்றலை அமைதியான நோக்கங்களுக்குப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள்
1. அணு ஆயுதப் பரவலைத் தடைசெய்வது
2. அமைதி நோக்கங்களுக்கான அணு ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு வழங்குவது,
3. முற்றிலுமாக அணு ஆயுதங்களை ஒழிப்பது.
இந்த ஒப்பந்தத்தின்படி சீனா, பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் இரசியா என்ற ஐந்து நாடுகள் மட்டுமே அணுக்கரு ஆயுதங்களை வைத்திருக்க அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. சனவரி 1 1967 ஆம் நாளிற்கு முன்னால் அணுவாயுதம் தயாரித்த நாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுத நாடுகள் என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுதங்களை தயாரிக்க மற்றநாடுகளுக்கு உதவ மாட்டோம் என உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன.பிற நாடுகள் தாங்கள் அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்றும் மற்றவர்கள் தயாரிக்க உதவ மாட்டோம் என்றும் கையொப்பமிட்டுள்ளன.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமாவிலும், 9ம் தேதி நாகசாகியிலும் அணுகுண்டுகள் போடப்பட்டன. அணுகுண்டு தாக்குதல்களால், 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அச்சமயத்தில் உயிர் பிழைத்தவர்கள், தற்போது 82 வயது என்ற விகிதத்தில் ஏறத்தாழ 1 இலட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர்.உலகில் தற்போது 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன என, செய்திகள் கூறுகின்றன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா தவிர இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் தற்போது அணு ஆயுதம் வைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. 2003-ல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம்.
1970-ல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகுதான் வட கொரியா, இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அணு ஆயுத நாடுகளாயின. இவற்றில் தென் ஆப்பிரிக்கா நிறவெறி அரசு நீக்கப்பட்டதும் அணு ஆயுதங்களைக் கைகழுவிவிட்டது.இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உலகத்துக்கே தெரிந்தாலும் அதிகாரபூர்வமாக அந்நாடு இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. அமைதிக்கான அணு ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு என்பது நடைமுறையில் எப்படி இருக்கிறது? மேற்கத்திய நாடுகள் வளரும் நாடுகளுக்கு அணு உலைகளை விற்கத் தங்களது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகின்றன. அந்த அளவில்தான் ஒப்பந்தத்தின் இரண்டாவது நோக்கம் இருக்கிறது.
கடைசியாக – முழுமையான அணு ஆயுத ஒழிப்பு. இது எந்த அளவில் சாத்தியம் என்று பார்ப்போம். அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள்தான் இதனை முதலில் ஒழிக்க வேண்டும். ஆனால், அந்நாடுகள் அதற்குத் தயாராக இல்லை. சொல்லப்போனால், இந்த ஐந்து நாடுகள்தான் பிற நாடுகளுக்குப் பெரிய அளவில் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்கின்றன.
ஆயுத ஏற்றுமதிக்காக உலகையே பதற்றத்தில் வைத்திருக்கும் வகையில் போட்டி போட்டுக்கொண்டு ஆயுத விற்பனை செய்வதால், பல நாடுகள் தங்கள் அண்டை நாடுகளுக்கு இணையாக ஆயுதங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் வேறு. பாதுகாப்பு விஷயத்தில் அதிக நிதியை ஒதுக்குவதால், வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாமல் அந்நாடுகள் திணறுகின்றன.
தென் கொரியாவில் அமெரிக்கா அளித்துவரும் ராணுவரீதியான ஒத்துழைப்பால், அச்சமடைந்த வட கொரியா, ஏவுகணைகளையும் அணு ஆயுதத்தையும் உற்பத்திசெய்தது. சமீப காலமாக, அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் மூலம், தென் கொரியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் நேரடியாக மிரட்டல் விடுத்தது வட கொரியா.ஆனால், வட கொரியா மீது அமெரிக்காவால் ராணுவ நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மாறாக, வட கொரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது. காரணம், தென் கொரியா மீதும் ஜப்பான் மீதும் அணு ஆயுதங்களை வீசப்போவதாக வட கொரியா மிரட்டினாலே அமெரிக்கா பணிந்துவிடும். பாகிஸ்தான் விஷயத்திலும் இதே நிலைதான்.வளர்ந்த நாடுகளின் அச்சுறுத்தலின் காரணமாக, அணு ஆயுதங்களைத் தங்கள் தற்காப்புக்காக உருவாக்கும் நிலைக்குச் சில நாடுகள் தள்ளப்பட்டன என்பதை மறுக்க முடியாது. இந்தச் சூழலில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்துவருகின்றன!
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் பகுதியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்..!
by Askar
written by Askar
செங்கம் பகுதியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்..!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பொரசப்பட்டு தண்டா பகுதியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பொரசப்பட்டு தண்டா பகுதியில் நடந்த விழிப்புணர்வு முகாம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. செங்கம் காவல்துறை ஆய்வாளர் சாலமோன் ராஜா முகாமுக்கு தலைமை தாங்கினார்.
முகாமில் மதுவால் ஏற்படும் தீமைகளை குறித்தும் விழிப்புணர்வு காவல்துறை ஆய்வாளர் விளக்கமாக எடுத்துக் கூறினார். முகாமில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் செங்கம் சுற்றுவட்டப் பகுதியில் இது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3வது முறையாக ஒத்திவைப்பு: வளர்ச்சி பணிகள் முடங்குவதாக கவுன்சிலர்கள் புகார்..!
by Askar
written by Askar
ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3வது முறையாக ஒத்திவைப்பு: வளர்ச்சி பணிகள் முடங்குவதாக கவுன்சிலர்கள் புகார்..!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் வளர்ச்சி பணிகள் முடங்குவதாக கவுன்சிலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி ேதர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. தொடர்ந்து, கடந்த ஜனவரி 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்ெதடுக்கப்பட்டனர்.பின்னர், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த ஜனவரி 11ம் தேதி நடந்தது. அப்போது, நிர்வாக காரணங்களுக்காக தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுபடி கடந்த ஜனவரி 30ம் தேதி மீண்டும் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, இரண்டு ஒன்றியங்களிலும் தேர்தலில் வாக்களிக்க கவுன்சிலர்கள் தயாராக இருந்த நிலையில், திடீரென தேதி அறிவிக்காமல் 2வது முறையாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
எப்போது தேர்தல் நடக்கும் என காத்திருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதையொட்டி, தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகம், துரிஞ்சாபுரம் பிடிஓ அலுவலகத்தில் ஏடிஎஸ்பி வனிதா தலைமையில், டிஎஸ்பி அண்ணாதுரை, பழனி உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடக்க இருந்த ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக, திடீரென காலை பிடிஓ அலுவலக தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மீண்டும் தேதி குறிப்பிடாமல் 3வது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் வாக்களிக்க வந்த கவுன்சிலர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அதேபோல், துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் வாக்களிக்க திமுக கவுன்சிலர்கள் 10 பேரும், பிடிஓ அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அரவிந்த்தும் காத்திருந்தார். ஆனால், அதிமுக கவுன்சிலர்கள் வாக்களிக்க காலை 11 மணி வரை அலுவலகத்திற்கு வரவில்லை.துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 20 கவுன்சிலர்களில், 11 பேர் பங்கேற்றால் மட்டுமே தேர்தல் நடத்த முடியும். கோரம் இல்லாத காரணத்தால், ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று 3வது முறையாக தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறாததால், 2 ஒன்றியங்களிலும் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் முறையாக மக்கள் பணியாற்ற முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியா எங்கள்தேசம்!
இஸ்லாம் எங்கள்சுவாசம்!
கவிஞர்,கப்ளிசேட்
தொடருக்குள் நுழையும் முன் ஒரு அறிமுகம்!
இன்று உலகம் முழுவதும் இஸ்லாமை
இல்லாமல் ஆக்க குறி
வைத்திருக்கிறார்கள்.
முஸ்லீம்களுக்கிடையே
குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள்.
இஸ்லாமிய தீவிரவாதம் என்ற
போலி கட்டமைப்புகள்,
இஸ்லாமிக்ஃபோபியா
என்ற இஸ்லாமை
புரியாமல் புறக்கணிக்கிற வெறுப்புகள்,
அச்சங்கள், என்று
முஸ்லீம் சமூகம் மிகுந்த
சவாலை எதிர்கொள்கிறது.
இன்றைய இந்தியா,
முஸ்லீம்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி
இருக்கிறது.
பாசிசவாதிகள் தங்களுக்கு கிடைத்த
வாய்ப்பை பயன்படுத்தி
தங்களது நூற்றாண்டு
கால கனவான இந்துராஷ்டிரத்தை
அமைக்க முயல்கிறார்கள்.
அதற்கான எந்த எல்லைக்கு செல்லவும்
அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இவர்கள் ஸ்பெயினிலிருந்தும்,
ஜெர்மனியின் நாஜிக்களிடமும்,
இத்தாலியின் முசோலினியிடமும்
நேரில் பாடம் படித்தவர்கள்.
இவர்களுக்கான
தோல்வி துவங்கும்
புள்ளியை கண்டுபிடிப்போம்.
உலகின் பெரிய மதமான
கிறிஸ்தவம்
கத்தோலிக்கம்,
புரோட்டஸ்டண்டு
என்ற இரு பிரிவுகளாக
இருக்கிறது.
உலகின் மக்களதொகையான
சுமார் 700 கோடியில்
சுமார் 250 கோடி கிறிஸ்தவர்களில்,
கத்தோலிக்கர்கள்
சுமார் 150 கோடியும்,
புரோட்டஸ்டண்டுள்
சுமார் 100 கோடிகளும்
இருக்கலாம்.
முஸ்லீம்கள் சுன்னி, சியா,என்று இரு
பிரிவுகளாக
இருக்கிறார்கள்.
சியாக்கள் முஸ்லீம்கள்
இல்லை எனவும் கூறப்படுகிறது.
உலக முஸ்லீம்களின் மக்கள்
தொகையான சுமார்180 கோடியில12 கோடி சியா முஸ்லீமகள் இருக்கலாம்.
சுன்னிகள சுமார் 168 கோடி மக்கள் தொகை இருக்கலாம்.
மூன்றாவது பெரியமதமாக
எந்த மதத்தையும் சாராதவர்கள் உலகில்120 கோடிகள்
இருக்கலாம்.
இந்துக்களின் மக்களதொகை சுமாராக 105-110 கோடிகள் இருக்கலாம்.
அந்த வகையில் உலகில் தனித்துவமாக
சுன்னி முஸ்லீம்களே
அதிகமாக உள்ளனர்.
உலகில் முஸலீம்களின்
மக்கள் தொகை வளர்ச்சி 2050 ஆம் ஆண்டுகளில் பலமடங்குகளாக பெருகும் என்பது
மற்றமதங்களுக்கு
பொறாமையையும்,
அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நிறைய ஐரோப்பிய நாடுகள் 25-30 வருடங்களில் முழு இஸ்லாமிய நாடாக மாறும் விகிதத்தில் அங்கு இஸ்லாமிய வளர்ச்சி இருக்கிறது.
இந்தியாவில் முஸ்லீம்களின் வளர்ச்சி
இந்துத்துவவாதிகளை
அச்சத்திற்குள்ளாக்கி
இருக்கிறது.
இந்த நிலையில் இஸ்லாமிய முழு உலக வரலாறுகளை அறிவது அவசியம்.
இஸ்லாம் வீழ்ச்சியை
சந்தித்தபோதெல்லாம்
எப்படி எழுச்சிபெற்றது
என்பதெல்லாம் இன்றைக்கு தேவையான செய்திகள்.
இஸ்லாத்தின் வசீகரங்களையும்
வெற்றிகளையும்
இனி பேசுவோம்.
இந்தியாவின் சுதந்திரத்திற்கும்,
வளர்ச்சிக்கும் முஸ்லீம்கள் ஆற்றிய பங்குகள்,
இந்தியாவில் முஸ்லீம்களின்
நிலை,இனி வரும்காலங்களில்
முஸ்லீம்கள்நடந்து
கொள்ளவேண்டிய
முறைகள்,
போன்றவற்றை
இத்தொடரில் இறைவன் நாடினால்
தொடர்ந்து பேசுவோம்.!
இந்தியா எங்கள்தேசம்!
இஸ்லாம் எங்கள்சுவாசம்!
என்ற எனது தொடரை
படியுங்கள்!
கருத்துக்களை பதியுங்கள்!
உங்கள் ஆலோசனைகளையும்
வழங்குங்கள்!
அன்புடன்…!
கப்ளிசேட்
05.03.20
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மைய பகுதியில் அமைந்துள்ளது அரசு உதவிபெறும் தனியார் நடுநிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 455 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த ஜான் கெண்ணடி 2011 – ஆம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் 2015-ல் அதை பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேறு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அங்கு பணிக்கு செல்லவில்லை. ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் குமார் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவரை பிடித்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து அவர் மீது போக்ஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவிகளுக்கு போதை வாஸ்துகளை கொடுத்து பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி குழந்தைகளை பாலியல் துன்புறுத்திய தாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் உள்ள பெற்றோர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்”(WJUT) நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக ‘வின்டிவி’ நிறுவனர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்களுடன் ஒரு சந்திப்பு!
by Askar
written by Askar
“தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்”(WJUT) நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக ‘வின்டிவி’ நிறுவனர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்களுடன் ஒரு சந்திப்பு!
கடந்த வாரம் கோவையில் பிரமாண்டமான முறையில் WJUT யின் தேர்தல் நடைபெற்று மாநில, மாவட்ட, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தி பேசிய ஆர். எஸ்.பாரதியை கண்டித்து கோவையில் கடந்த சனிக்கிழமை பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம்மும், சிவகாசியில் (குமுதம் ரிப்போர்ட்டர்) செய்தியாளர் கார்த்தியை தாக்கிய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கலந்து கொண்டனர். பிறகு மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார் ஆகியோர் தலைமையில் வின்டிவி நிறுவனர் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள்.இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் சம்பந்தமாக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், கீழ்க்கண்ட மாநில மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திரு.லட்சுமி்ராசாராம்
திரு.ரங்கபாஷ்யம்
திரு.முன்னா
திரு.வல்லரசு செங்குட்டுவன்
திரு.ரமேஷ்
திருமதி.மேரி
திருமதி. தில்ஷாத்
திரு.சுவாமிநாதன்
திரு.சுபாஷ் கண்ணன்
திரு.புரசை பிரதீப்
திரு.அருள்நாதன்
திருமதி.ரூபா
திரு.சாலமன் ராசா
திரு.விஜயரமணன்
திரு.ஜேம்ஸ்
அனைவருக்கும் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் அவர்கள், வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இவன்:
ஜெ.அஸ்கர்,
மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர்!
தமிழ்நாடு
உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்வு நேரத்தின் போது முகக்கவசம் அணிந்து கொள்ள மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது!
by Askar
written by Askar
தேர்வு நேரத்தின் போது முகக்கவசம் அணிந்து கொள்ள மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது!
சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் தொடர்ந்து வைரஸ் பரவலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
இந்தநிலையில், கொரோனா பாதிப்பு எதிரொலியால், பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள், மாஸ்க், ஹேண்ட் சானிடைசர் கொண்டு வர அனுமதி அளிக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாநில முதன்மை செயலாளர்கள் மற்றும் சிபிஎஸ்இ இயக்குநர்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.