Home செய்திகள் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது..

பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது..

by Askar

பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மைய பகுதியில் அமைந்துள்ளது அரசு உதவிபெறும் தனியார் நடுநிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 455 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த ஜான் கெண்ணடி 2011 – ஆம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் 2015-ல் அதை பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேறு பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அங்கு பணிக்கு செல்லவில்லை. ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் குமார் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவரை பிடித்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து அவர் மீது போக்ஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவிகளுக்கு போதை வாஸ்துகளை கொடுத்து பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி குழந்தைகளை பாலியல் துன்புறுத்திய தாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் உள்ள பெற்றோர்களை கலக்கமடைய வைத்துள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!