கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் 30.000 பேர்கள் தணியார் தேயிலை மற்றும் காப்பித்தோட்டங்களில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் நேற்றைய தினம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியிலிருந்து கமலம் 58 என்ற பெண் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பரிந்துரையின் பேரில் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் கேரள மாநிலத்திற்கு சென்று வந்ததாக அவர் கொடுத்த தகவலின் பேரில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் பதட்டமடைந்து கொரோனா தொற்றாக இருக்குமோ என சந்தேகித்து கோவை அரசு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்ட பெண்ணை அவசர கதியில் அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தால் வால்பாறை பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர் இந்நிலையில் நேற்று இரவு லோட்டஸ் தொலைக்காட்சியில் வெளியிட்ட செய்தி குறிப்பில் சந்தேகத்தின் பேரில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த கமலம் என்பவருக்கு கொரோனா இல்லை அவருக்கு நிமோனியா என்று மருத்துவர்களின் முறையான தகவல்படி உறுதி செய்துள்ளதாக செய்தியின் படி வால்பாறை பகுதி மக்களிடையே ஏற்ப்பட்டிருந்த அச்சத்தை தவிர்க்க முடிந்ததால் தற்ப்போது பொதுமக்கள் பொதுமக்கள் இயல்பான நிலையில் இருந்து வருகின்றனர் மேலும் இதுபோன்ற தவறான தகவல்களால் தற்ப்போதுள்ள குரோனா பீதியை போக்க வால்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைத்தால் பொதுமக்களை பீதியிலிருந்து காக்க உதவியாக இருக்கும் ஆகவே வால்பாறை பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு உடனடியாக குரோனா பரிசோதனை மையம் அமைத்துத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category:
செய்திகள்
பள்ளி படிப்பை கூட தாண்டாமல் பிரம்மிக்க வைக்கும் கண்டுபிடிப்பு- இந்தியா முழுக்க பிரபலமான ஏழை விவசாயி..
by Askar
written by Askar
பள்ளி படிப்பை கூட தாண்டாமல் பிரம்மிக்க வைக்கும் கண்டுபிடிப்பு- இந்தியா முழுக்க பிரபலமான ஏழை விவசாயி..
ஆரம்ப பள்ளி படிப்பை கூட தாண்டாத ஏழை விவசாயி ஒருவரின் கண்டுபிடிப்பு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கண்டுபிடிப்பிற்கு ஆர்டர்கள் குவிவதால் அவர் இந்தியா முழுக்க பிரபலமடைந்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள உன்ச்சா கானா என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் கர்மாலி. இவர் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஷோரூம் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். ஆனால் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அந்த வேலையை விட்டு விட்டு தனது சொந்த ஊருக்கு வந்து விட்டார்.
இதன்பின் தனது குடும்பத்திற்கு உதவும் நோக்கத்தில், விவசாய பணிகளை செய்ய தொடங்கினார். மிகவும் சாதாரண விவசாயிதான் என்றாலும் தற்போது மகேஷ் கர்மாலி இந்தியா முழுக்க வெகு வேகமாக பிரபலம் அடைந்து வருகிறார். ஏன் என தெரிந்தால் உங்களால் நிச்சயமாக மகேஷ் கர்மாலியை பாராட்டாமல் இருக்க முடியாது.
மகேஷ் கர்மாலி ஆரம்ப பள்ளி படிப்பை கூட தாண்டாதவர். ஆனால் தற்போது மிகவும் குறைவான செலவில் டிராக்டர் ஒன்றை மகேஷ் கர்மாலி உருவாக்கியுள்ளார். தனது நிலத்தை உழுவதற்காக இந்த டிராக்டரை மகேஷ் கர்மாலி உருவாக்கியுள்ளார். அதுவும் பழைய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரின் கழிவில் இருந்து இந்த டிராக்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பழைய பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரை தனது நண்பர் ஒருவரிடம் இருந்து 4,251 ரூபாய்க்கு மகேஷ் கர்மாலி வாங்கியுள்ளார். பின்னர் அதனை டிராக்டராக மாற்றியுள்ளார். பழைய ஸ்கூட்டரை டிராக்டராக மாற்ற மகேஷ் கர்மாலி ஒட்டுமொத்தமாக வெறும் 12 ஆயிரம் ரூபாயை மட்டுமே செலவிட்டுள்ளார். இந்த டிராக்டர் மூலம் 8,640 சதுர அடி நிலத்தை உழுவதற்கு வெறும் 2.5 லிட்டர் பெட்ரோல் இருந்தால் போதும்.
வழக்கமான டிராக்டருடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான செலவு என மகேஷ் கர்மாலி கூறியுள்ளார்.
இதுகுறித்து மகேஷ் கர்மாலி கூறுகையில், ”நான் பஜாஜ் ஷோரூமில் 7 ஆண்டுகள் மெக்கானிக்காக பணியாற்றி வந்தேன். இந்த டிராக்டரை உருவாக்குவதற்கு அந்த அனுபவம் எனக்கு பெரிதும் கை கொடுத்தது. இந்த இயந்திரத்தை உருவாக்க எனக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டது” என்றார்.
மகேஷ் கர்மாலி தனது கண்டுபிடிப்பிற்கு பவர் டில்லர் என பெயர் சூட்டியுள்ளார்.
தற்போதைய நிலையில் நிலத்தை உழ வேண்டும் என்றால், இந்த இயந்திரத்துடன் ஒருவர் நடந்து செல்ல வேண்டும். ஆனால் பவர் டில்லரின் அதிக சக்தி வாய்ந்த மற்றும் பெரிய வெர்ஷனை அடுத்த ஆண்டு கொண்டு வர வேண்டும் என மகேஷ் கர்மாலி திட்டமிட்டு வருகிறார்.
இதில், வழக்கமான டிராக்டரை போல் அமர்ந்து செல்ல முடியும். இதனிடையே தனது சக விவசாயிகளுக்கு மிகவும் குறைவான விலையில் விவசாய இயந்திரங்களை உருவாக்கி கொடுப்பதற்காக ஒர்க் ஷாப் ஒன்றை திறக்க வேண்டும் என மகேஷ் கர்மாலி விரும்புகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”எனது நிலத்தை உழ தொடங்கியது முதல், இந்த பவர் டில்லருக்கு ஏராளமான ஆர்டர்கள் வந்து கொண்டே உள்ளன.
ஆனால் இதுபோன்ற இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க வேண்டும் என்றால், டிரில்லிங், கட்டிங் மற்றும் வெல்டிங் உபகரணங்கள் தேவை. இதற்கு ஒட்டுமொத்தமாக 3-4 லட்சம் முதலீடு தேவைப்படும். தற்போது ஒர்க் ஷாப் தொடங்க பொருளாதார ரீதியிலான உதவிகளை எதிர்நோக்கியுள்ளேன். எனக்கு உதவி கிடைத்தால் என்னால் இந்த வாகனங்களை உருவாக்க முடியும்” என்றார்.
அனுபவமே சிறந்த ஆசான் என்பதை மகேஷ் கர்மாலி நிரூபித்து விட்டார். ஆரம்ப பள்ளி படிப்பை கூட தாண்டாத மகேஷ் கர்மாலியின் கண்டுபிடிப்பு தற்போது நாடு முழுக்க அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெறும் ரூ.50 ஆயிரத்தில் விவசாயிகளுக்கு இந்த டிராக்டர் வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சாதிமத ஆணவக் குற்றங்களை ஊக்குவிக்கும் அதிமுக அமைச்சரை பதவி நீக்கம் செய்க!தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
by Askar
written by Askar
சாதிமத ஆணவக் குற்றங்களை ஊக்குவிக்கும்
அதிமுக அமைச்சரை பதவி நீக்கம் செய்க!
தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தைச் சேர்ந்த ” செல்வன் – இளமதி ” தம்பதியினரை வன்முறையின் மூலம் பிரித்தது மட்டுமின்றி, அதற்காக நீதி நியாயத்துக்காகப் போராடிய தோழர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் மீது காவல்துறை பொய்வழக்குப் பதிவுசெய்துள்ளது. அதற்கு அதிமுக அமைச்சர் ஒருவர் தூண்டுதலாக இருந்துள்ளார் என்று தெரியவருகிறது. அவர் யாரென்று வெளிப்படையாக அரசுக்கு அடையாளப்படுத்த வேண்டியதில்லை. காவல்துறையினரின் மூலம் அச்சுறுத்தி அத்தம்பதிகளைப் பிரித்த அமைச்சர் யாரென அடையாளம் கண்டு அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். அத்துடன், ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளமதி என்பவரும் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் என்பவரும் மில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களுக்கிடையே கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகக் காதல் ஏற்பட்டு அது இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. . இந்நிலையில் அவர்கள் இருவரும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் சிலர் அந்த திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்துள்ளனர். திருமணம் நடந்த அன்றைய இரவு 100க்கும் மேற்பட்ட பாமக மற்றும் கொங்கு அமைப்பைச் சார்ந்தவர்கள் மணமக்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து அவர்களை மட்டுமின்றி திருமணம் நடத்தி வைத்த தோழர்களையும் கொடூரமாகத் தாக்கி மணமக்களைக் காரில் கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் இளமதியை மட்டும் தனியே பிரித்து வேறு இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். திருமணமண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மணமகன் செல்வம் மற்றும் திவிக தோழர்கள் மட்டும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
சுமார் ஒருவார காலமாக இளமதியை ஒளித்து வைத்திருந்த சாதி வெறியர்கள் நேற்று அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கடுமையாக மிரட்டப்பட்டிருந்த நிலையில் இளமதி பெற்றோருடன் செல்வதாகக் கூறியுள்ளாரெனத் தெரிகிறது. இளமதியின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் காவல்துறையினர் சட்டவிரோதமாக அவரை மற்றவர்களின் பொறுப்பில் அனுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி சாதி மறுப்புத் திருமணத்துக்கு ஆதரவாக இருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் மீது இளமதியைக் கடத்தியதாகப் பொய்வழக்கொன்றைப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இவை எல்லாமே அதிமுக அமைச்சர் ஒருவரின் தூண்டுதலினால்தான் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமான ஆணவக் குற்றத்துக்குத் துணைபோகும் அமைச்சரை அப்பொறுப்பிலிருந்து விலக்கிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அண்மையில் கோவை இராமகிருட்டிணன் தலைமையிலான த.பெ.தி.கவினர் 10 பேரை ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களின் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசியதாக போலிஸ் பொய் வழக்கு புனைந்து கைது செய்ததுடன், அவர்களைக் குண்டர்தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தியுள்ளது.
இப்போது கொளத்தூர் மணி மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. தமது இந்துத்துவ எஜமானர்களை திருப்திபடுத்தவே பெரியாரியக்கத் தொண்டர்கள்மீது தமிழக அரசு பொய் வழக்குகள் போட்டு ஒடுக்குமுறையை ஏவுவதாகத் தெரிகிறது.
அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சாதிமத ஆணவக் குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. ஆட்சியாளர்கள் அதை வெளிப்படையாக ஊக்குவிப்பதே அதற்குக் காரணமெனவும் தெரியவருகிறது.
2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மிண்புமிகு இராமசுப்ரமணியன் அவர்கள் வழங்கிய தீர்ப்பில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒன்பது கட்டளைகளைப் பிறப்பித்திருந்தார்.
27.03.2018 அன்று அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், “ கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ஹெல்ப்லைன் வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்” என உத்தரவிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு இதுவரைப் பின்பற்றவில்லை. இது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும் என்பதையும் ஆட்சியாளர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
இந்நிலையில், தோழர் கொளத்தூர்மணி உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை இரத்து செய்யவேண்டும் எனவும் ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டுமெனவும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்
விசிக.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டெக்னாலஜி எல்லாம் ரொம்ப பாஸ்டா சேஞ்ச் ஆகறதால பெரிய இருக்காம் இளைஞர்களுக்கு . கமல் பத்து வேஷம் போட்ட படத்தை பாத்துருக்கோம். தசாவதாரம். ஆனா, ஒரே லைஃப்ல ஏகப்பட்ட technological changes பாத்த ஒரே generation நாங்கதான்..
இப்போ பொறக்கற பசங்க எல்லாம் பொறக்கும் போதே கையில smartphone -வோடயே பொறக்கறாங்க..
நாங்க பொறக்கும் போது டிவி ஒரு மிகவும் அறிய பொருள். அதுவும் கருப்பு வெள்ளை டிவி. சந்துல ரெண்டு மூணு வீட்டுல தான் இருக்கும். அப்புறம் கலர் டிவி வந்தது. அப்போ கொஞ்சம் எல்லார் வீட்டுலயுமே டிவி இருக்க ஆரம்பிச்சது. படம் சரியா வரலேன்னா மாடிக்கு போய் ஆண்டெனா திருப்பணும். திருப்பறதுக்கு ஒருத்தர். சரியா வருதான்னு பாத்து கத்தறதுக்கு ஒருத்தர்.
லேண்ட் லைன் போன். அப்ளை பண்ணிட்டு வருஷக்கணக்கா காத்துருக்கணும். பக்கத்து வீடு எதிர் வீடுன்னு ஓடி ஓடி போய் கால் வந்திருக்குன்னு கூட்டிண்டு வரணும்.
அப்புறம் சேட்டலைட் டிவி. தூர்தர்ஷன் மட்டும் பாத்த காலம் போய், புதுசு புதுசா ப்ரோக்ராம் பாக்க ஆரம்பிச்சோம். சாயங்காலம் மட்டும் டீவின்னு இல்லாம நாள் பூரா ப்ரோக்ராம் வர ஆரம்பிச்சது. டேப் ரெக்கார்டர் வந்தது. வீடியோ டெக் வந்தது. அப்புறம் சிடி பிளேயர் வந்தது.
கணினி வகுப்பு அங்கங்கே ஆரம்பிச்சது. கணினின்னா என்னன்னே தெரியாம இருந்துட்டு திடுதிப்புனு இனிமே வேலை செய்யணும்னா அது தான் கத்துக்கணும்னு ஆயிடுத்து. ஏதோ எளிமையா State Board Syllabus படிச்சு மார்க் வாங்கி நல்ல காலேஜ்ல சேர்ந்து வேலைக்கு ட்ரை பண்ணலாம்னா, இது ஒரு திடீர் இம்சை. தட்டு தடுமாறி ஏதோ கத்துண்டு ஒரு வேலைக்கு போயி அங்கே training programmes attend பண்ணி இன்னும் கொஞ்சம் கத்துண்டு Basic, Cobol, Fortran, MS Dos, Multimate, Lotus – அப்படின்னு படிச்சா, திடீர்னு Microsoft Word ங்கறான் Excel ங்கறான் , HotMail ங்கிறான்.
வேற வழியில்லேன்னு அதையும் கொஞ்சம் கொஞ்சமா வேலையிலேயே கத்துண்டு பண்ண ஆரம்பிக்கும் போது வந்தது பேஜர். பல பேர் இடுப்புலயே கட்டிண்டு சுத்துவா. எங்கே போனாலும் இதுல பிடிச்சிடுனுவானுங்க.
அதையும் பொறுத்துண்டு continue பண்ணா, அப்ப வந்தது இந்த யமன். செல் போன். செங்கல் மாதிரி இருந்ததை எடுத்துண்டு சுத்தணும். ஒழுங்கா திட்டம் பண்ணி வாழ்க்கை நடத்திண்டு இருந்த காலம் போய், ஒருத்தரை எப்ப கூப்பிடலாம் எப்ப கூப்பிடக்கூடாதுங்கற இங்கிதம் எல்லாம் தொலைஞ்சு போயி, நெனச்ச போதெல்லாம் கூப்பிட ஒரு வசதிங்கங்கற பேர்ல வந்த ஒரு மகா தொல்லை.
சரி , போன் தானே அப்படின்னு நெனைக்கறதுக்குள்ள ஸ்மார்ட் போன் அப்படின்னு இன்னுமொரு புது அவதாரம்.
இந்த பீடை வந்ததிலேருந்து, கேமரா போச்சு, கால்குலேட்டர் போச்சு, வாட்ச் போச்சு, காலண்டர் போச்சு, புக்ஸ் போச்சு, ரேடியோ போச்சு, கூடிய சீக்கிரம் டிவியும் போயிடும்.
ஏன் இப்ப சில Tiktok, Musically… appங்கிற பெயர்ல வெக்கம் போச்சு, மானம் போச்சு, சூடு போச்சு, சொரணை போச்சு, மரியாதை போச்சு.
சரி, சரி, நெறைய சௌகர்யமும் வந்ததுன்னு வெச்சுக்கோங்க, அப்புறம், ப்ளூ tooth ன்னாங்க, chrome cast ன்னாங்க, fire stick ன்னாங்க , ipad , notebook, kindle… இன்னும் என்னென்னமோ வந்துண்டே இருக்கு. அதை எல்லாமும் கத்துண்டோம்..
Whatsup, Facebook, Telegram, Instagram, Google Pay, Phone-pe, Internet banking, ATM, Online payments, Online bookings, Selfie, Status update, Story update, Ola, Uber, Swiggy எல்லாம் யூஸ் பண்ணலேன்னா மக்குன்னு சொல்லிடுவாங்களோன்னு எல்லாத்துலயும் நொழஞ்சு கத்துண்டோம்.
இவ்வளவு பரிணாம வளர்ச்சி தாண்டி இன்னிக்கும் ஸ்டெடியா நின்னு புதுசு புதுசா கத்துக்கற எங்களை யாரும் பாராட்ட மாட்டாங்க, ஏன்னா இப்போ இருக்கற பசங்களுக்கு இவ்வளவு adaptation நம்ப பண்ணிண்டு இருக்கோம்ங்கறதை நாம தெளிவா சொன்னதே இல்லையே..
ஒரு லைப்-ல எவ்வளவு பாரு.. இன்னும் மாற்றம் வரட்டும். எவ்வளவோ பாத்துட்டோம். இன்னும் கத்துக்க மாட்டோமா..
என்ன பாஸ் நான் சொல்றது.. இதுக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் ஆக கூடாது.
ஆனா நான் சொன்னதுல ஏதாவது தப்பான்னு சொல்லுங்க மக்களே.
தகவல்:இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை – சீமான் பாராட்டு…
10, 12 ஆம் வகுப்புகளிலும், பட்டப்படிப்பிலும் தமிழில் படித்தவர்களுக்கே தமிழகத்தின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டமியற்றியிருப்பதை முழுமனதோடு வரவேற்கிறேன்.
பன்னெடுங்காலமாக தமிழர் நிலமெங்கும் கருத்தியல் பரப்புரையும், களப்பணியும் செய்து நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகள் முன்வைத்த கோரிக்கை முழக்கம் இன்று செயலாக்கம் பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. சட்டமியற்றிய தமிழக அரசின் இச்செயல்பாட்டை மனதார பாராட்டுகிறேன்.
உடனடியாக இந்த ஆண்டிலிருந்தே இச்சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ரெண்டாம் பிரிவு பாடத்திட்டத்தில், தமிழ் மொழியில் கேட்கப்படும் கேள்வித்தாள் நீக்கப்பட்ட புதிய பாடத் திட்டத் தேர்வு முறையை திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் காவல் நிலையம் சார்பில் சாத்தனூர் அணை மீன்பிடிப்பு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது..
by Askar
written by Askar
செங்கம் காவல்நிலையம் சார்பில் சாத்தனூர் அணை மீன்பிடிப்பு தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த போயம்பள்ளி தண்டா கிராமத்தில் நடைபெற்றது செங்கம் காவல் ஆய்வாளர் சாலமென் ராஜா விழிப்புணர்வு கருத்துக்களை பேசினார் மீன்பிடிப்பு தொழில் செய்பவர்கள் உரிய அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடிக்க வேண்டும் சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட கூடாது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்தார். இதில் போயம்பள்ளி தண்டா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீன்பிடிப்பு தொழில் செய்பவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் பஸ்நிலையத்தில் பேருந்துகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக டைசால் தெளிப்பான் பூச்சி மருந்து அடிக்கப்பட்டது.
by Askar
written by Askar
செங்கம் பஸ்நிலையத்தில் பேருந்துகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக டைசால் தெளிப்பான் பூச்சி மருந்து அடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் புதிய பஸ்நிலையத்தில் வந்த பஸ்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பேருந்துநிலையத்திற்கு வந்த அனைத்து பஸ்களிலும் டைசால் தெளிப்பான் பூச்சிமருந்து அடிக்கப்பட்டது. மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் சேகர் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்த அனைத்து பஸ்களிலும் பூச்சிமருந்துகளை அடித்தனர்.
செய்தியாளர் , செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலக்கோட்டில் மது மற்றும் போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து வருவாய்த்துறை சார்பில் பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
by Askar
written by Askar
பாலக்கோட்டில் வட்டாட்சியர் ராஜா தலைமையில் மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் போதைக்கு அடிமையானவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள், உடல் வலிமை இழப்பது போதையால் குடும்ப சூழ்நிலைகள் மாறுவது உள்ளிட்ட பாதிப்புகளை குறித்து பயணிகள், நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.மேலும் கள்ளச்சாராயம் கடத்துவது வைத்திருப்பது ,விற்பது உள்ளிட்ட குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந் நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராஜா உடன் மண்டல துணை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தேர்தல் துணை வட்டாட்சியர் ரஜினி, வருவாய் ஆய்வாளர் ஞானதீபம், கிராம நிர்வாக அலுவலர்கள் சாம்ராஜ், செல்வம், உள்ளிட்ட வருவாய் துறையை சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் கொரானோ குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் காட்டி பாடி ரயில் நிலையம் மற்றும் கிறிஸ்தியான் பேட்டை செக்போஸ்ட்டில் கொரானோ விழிப்புணர்வு நிகழ்ச்சி முடித்துவிட்டு காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்திற்கு வந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால் போக்குவரத்து போலீசார் , மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் காலெக்டர் அங்கு வராமல் நேரடியாக வேலூர் சென்று விட்டார். அதன் பிறகு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலாஜி சுகாதார அலுவலர் பாலமுருகன் கொரானா விழிப்புணர்வு செய்தனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் அடுத்த காட்பாடி ரயில்வே சந்திப்பில் ஆட்சியர் சண்முகசுந்தரம் கொரானோ குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆய்வை மேற்கொண்டார். மாவட்ட எஸ்.பி.பிர்வேஷ் குமார். தாசில்தார் பாலமுருகன் , டிஎஸ்பி துரைப்பாண்டி மாநகராட்சி சுகாதார அலுவலர் பாலமுருகன் மற்றும் ரயில்வே அதிகாரிகள், போலீசார், சுகாதார துறையினர் பங்கேற்றனர்.
கே.எம் வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பார்வையிட வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரகணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். கொரோனா வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை(18.3.2020) முதல் வரும் 31 ஆம் தேதி வரை மூடுவதாக சென்னை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மேலாளர் அறிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையர் அவர்களின் முக்கிய அறிவிப்பு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019 சட்டப்பிரிவு 199(A)-ன்படி உரிய ஓட்டுநர் உரிமம் /பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை இயக்கும் சிறார்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு ரூ. 25,000/-அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.12 மாதங்கள் வாகனத்தை சாலையில் ஓட்டுவது ரத்துசெய்யப்படும்.வாகனத்தை இயக்கிய சிறார்கள் தங்களின் 25 வயது வரை எந்தவித ஓட்டுநர் உரிமமும் பெற முடியாது…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா பாதிப்பில் தப்பிக்க மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் அதிரடி நடவடிக்கை
by mohan
written by mohan
மதுரை மண்டலத்தின் அரசு போக்குவரத்து கழகத்தில் மதுரை மண்டல மேலாண் இயக்குனர் முருகேசன் உத்தரவின்பேரில் பெரியார் பேருந்து நிலையம் மற்றும் அதிரடியாக 1500 அரசு பேரூந்துக்கு கிருமி நாசினி (லைசால் கோரஸ்) கிருமி நாசினி மருந்து அடிக்க்கபட்டு மதுரை இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளிலும் பேருந்துகளில் பணியாற்றும் பணியாற்றிய வரும் ஊழியர்களுக்கு அவர்களின் கை கால்களை சுத்தம் செய்ய சோப்பாயில் வைத்தும் போக்குவரத்து கழகத்தில் அங்காங்கே கிடந்த டன் கணக்கான குப்பைகளையும் அகற்றி உள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள 16 போக்குவரத்து கிளைகளிலும் கிருமி நாசினி அடிக்கும் பணி தினசரி மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் தெரிவித்தார். பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள பேரூந்துகளை சுத்தம் செய்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகம் செயல்பாடு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில், நேற்று முன் தினம் (மார்ச் 15) இரவு நடந்த ஒரு சமூக சங்க கூட்டத்தில் சாயல்குடி பேரூராட்சி தேர்தல் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்ட, அதே சமூகத்தைச் சேர்ந்த சரவணமூர்த்தி, அவரது சகோதரர் பழனி ஆகியோர் மீது 25க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில், படுகாயமடைந்த சகோதரர் இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சரவணமூர்த்தி புகாரில் 17 பேர் மீது சாயல்குடி போலீசார்வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போதி தர்மர் மீண்டும் வருவாரா?உலகையே உலுக்கி வரும் கொரோனா.. கை கொடுக்க தவறிய பாரம்பரிய மருத்துவம்…
by Askar
written by Askar
போதி தர்மர் மீண்டும் வருவாரா?உலகையே உலுக்கி வரும் கொரோனா.. கை கொடுக்க தவறிய பாரம்பரிய மருத்துவம்…
பெளத்தமும் சித்தமும் இணைந்த சுத்த சாமியார் யார் தெரியுமா? நம்ம போதி தர்மர்தான். பல்லவ சாம்ராஜ்யத்தில் உதித்து தென் பொதிகை மலைச் சாரலில் அகஸ்தியரிடம் பல அரிச்சுவடிகளை பயன்று, சீனம் சென்று பல வித்தைகளையும், அற்புதங்களையும் நிகழ்த்தி அசத்தி மறைந்த மாபெரும் துறவிதான் போதி தருமர்.
போதி தருமர் வரலாறு நிறையப் பேருக்கு சரிவரத் தெரியாது. காரணம், அவரது வரலாறை சரிவர யாருமே பதிவு செய்யவில்லை. பல தகவல்கள், வரலாறுகள் மறைக்கப்பட்டு விட்டன.
அகஸ்தியரின் நேரடி சீடர்தான் போதி தருமர் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பான உண்மையான பதிவுகள் எங்குமே இல்லை. ஆனால் அகஸ்தியரிடம்தான் போதி தருமர் சித்த வைத்தியத்தையும், தற்காப்புக் கலையையும் பயின்றதாக சொல்கிறார்கள்.
தான் கற்ற வித்தைகளையும், மருத்துவத்தையும் மிகப் பெரிய அளவில் மக்களுக்காக பயன்படுத்திய பெருமைக்குரியவர் போதி தருமர். நமது நாட்டில் இவர் பயன்பட்டதை விட சீனத்தில்தான் மிகப் பெரிய அளவில் பங்களித்துள்ளார். இவர் சீனத்திற்குப் போன காலத்தில் அங்கு பெரு வியாதி ஒன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட கொரோனா போல.
அன்று கொரோனா போல ஆட்டிப்படைத்து பல உயிர்களைக் குடித்துக் கொண்டிருந்த அந்த நோய்க்கு போதி தருமர் முற்றுப் புள்ளி வைத்ததாக சொல்கிறார்கள். அதுவரை துயருக்குள்ளாகி கொத்துக் கொத்தாக மடிந்து விழுந்து கொண்டிருந்த சீனர்களுக்கு போதி தருமரின் சித்த வைத்தியம் உயிர்களை காப்பாற்றி கை கொடுத்தது. அவரது மருத்துவ முறையால் சீனர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
மருந்து கொடுத்து உயிர்களைக் காத்த போதிதருமர் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தபோது அவரை போகக் கூடாது என்று அன்புக் கட்டளையிட்டு தடுத்து நிறுத்தினர் சீனர்கள். இதனால் அங்கேயே தங்கினார் போதி தருமர். தான் கற்ற மருத்துவத்தை அவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். அத்தோடு நில்லாமல் அதுவரை தற்காப்புக் கலை குறித்து அறியாமல் இருந்த சீனர்களுக்கும் தனது தற்காப்புக் கலையை கற்றுக் கொடுத்து அவர்களை வீரர்களாக்கினார்.
இப்போது நாம் போதி தருமரை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. அவரை விட.. அவர் கற்றுக் கொடுத்த மருத்துவத்தை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. போதி தருமரைப் போல எத்தனையோ முனிவர்கள், சித்தர்கள் இதுபோன்ற கொடும் நோய்களுக்கெல்லாம் நிச்சயம் மருந்து கண்டுபிடித்திருப்பார்கள். அவர்கள் காலத்தில் வராத கொள்ளை நோயா.. இப்போது வந்து விடப் போகிறது. ஆனால் அதையெல்லாம் அவர்கள் தங்களது மூலிகை மருத்துவத்தால் நிச்சயம் குணப்படுத்தியிருக்கவே செய்வார்கள்.
எனினும் இன்று அவையெல்லாம் எங்கே போயின.. அந்த மருந்துகள் என்னவாயின.. காலப் போக்கில் அவை காலத்துடன் கரைந்து போய் விட்டனவா.. நாம் ஏன் இதுபோன்ற மருந்துகளை தொலைத்து விட்டு இப்படி அருமைாயன உயிர்களை எமனுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவும் சரி, சீனமும் சரி உலகுக்கு பல விஷயங்களில் முன்னோடிகள் ஆவர். கலாச்சாரம் ம ட்டுமல்லாமல் கலை மட்டுமல்லாமல் மருத்துவத்திலும் நாம் எத்தனையோ சாதித்துள்ளோம்.
ஆனால் இன்று நாம் அனைவருமே அந்த பாரம்பரியத்தை தொலைத்து விட்டு நிர்க்கதியாக நிற்கிறோம். நிச்சயம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தி குணப்படுத்தி விடக் கூடியதாகவே இருக்கக் கூடும். ஆனால் அதற்கான சரியான மருந்து நம் கையில் நிச்சயம் இல்லை. ஆனால் அது நிச்சயம் சித்த மருத்துவத்தில் இருக்க வேண்டும். ஆனால் அந்த மருந்தை நாம் தொலைத்து விட்டோம்.. கண்ணுக்கு தெரியாமல் எங்கேயோ அது போய் விட்டது. இதுதான் வருத்தமாக இருக்கிறது.
சீனத்தை அன்று காத்த போதிதருமரைப் போல இன்றும் இந்த கொரோனாவின் பிடியிலிருந்து உலகைக் காக்க யாராவது வர மாட்டார்களா என்று ஒவ்வொருவரின் மனசும் ஏங்குகிறது என்பது உண்மைதான்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தாகம் தணிக்கும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நகர நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை இராமநாதபுரம் மாவட்டம் மேற்கு தொகுதி செயலாளர் நூருல்_ஜமான் தொடங்கி வைத்தார். மேலும் தாகம் தணிக்கும் ஐஸ் மோரை ஏராளமானோர் வாங்கி அருந்தி பயன்பெற்றனர்.
தகவல் :- ராவியத் அசாருதீன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில், புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்றியுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 1 லட்சத்து 82 ஆயிரத்து 611 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 171 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போர்க் களத்தில் இருப்பதாகக் கூறியுள்ள ஃபிரான்ஸ், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஃபிரான்சில் 6 ஆயிரத்து 633 பேருக்கு கொரானா பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
உணவு, மருந்துகள் வாங்கச் செல்வது, பணிக்கு செல்வது, நடைப் பயிற்சி செல்வது தவிர்த்த வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
குறைந்தது அடுத்த 15 நாட்களுக்கு பயணங்கள், வெளியே செல்வது பெருமளவு குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அவசியத் தேவைகள் தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வீட்டில் இருந்து பணியாற்ற முடியாத சூழலில் மட்டும் அலுவலகம் செல்லுமாறும் மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளார். வீடுகளில் விசேஷங்களுக்காக கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நாம் போர்க் களத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார்.
கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும், சோதனை சாவடிகளில் கண்காணிக்கவும் ஒரு லட்சம் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து ஃபிரான்சும் போக்குவரத்து, மக்கள் நடமாட்டத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை மூடி வருகின்றன.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 65 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க நாட்டின் எல்லைகளை அடுத்த 15 நாட்களுக்கு மூட அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் கல்லி கற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வரவேற்கின்றோம் அதேநேரத்தில் 20% விழிக்காடு இருந்து 50% விழுக்காடாக உயர்த்த வேண்டும்:-தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்..
by Askar
written by Askar
பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு வரை தமிழ்வழியில் கல்லி கற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வரவேற்கின்றோம் அதேநேரத்தில் 20% விழிக்காடு இருந்து 50% விழுக்காடாக உயர்த்த வேண்டும்:-தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்..
தமிழ்வழியில் கல்வி கற்பவர்களுக்கு 2010ம் ஆண்டு அப்போதைய அரசு கொண்டு வந்து நடைமுறைநில் இருந்து வருகிறது,
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பில் தொடர்ந்து பட்டப்படிப்பு வரை தமிழ்வழில் பயின்று இருந்தால் மட்டுமே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு தகுதிற்கான வேலைவாய்ப்பில் ஒன்று வகுப்பு முதல் தொடர்ந்து பயின்றிருக்க வேண்டும் என்றும் சட்டசபையில் மாண்புமிகு பணியாளர்கள் நிர்வாக சீர்த்திருத்த துறை அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்குத்தக்கது ஏன் என்றால் தமிழ் வழிக்கல்வியில் அதிக அளவில் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர் , இந்த சூழ்நிலையில் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த துறை அமைச்சர் அறிவித்திருப்பது ஏழை எளிய குடும்த்தை சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் நிகழ்வாகும். ஏற்கனவே இருக்கும் 20% என்பதை 50% விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே தேர்ச்சிபெற 35 மதிப்பெண் என்று இருந்ததை 45 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அறிவிப்பை மறுபரிசீலனை செய்து ஏற்கனவே இருப்பது போல தேர்ச்சி பெற 35 மதிப்பெண் எடுத்தால் போதுமானது என மாற்றி அமைத்தால் ஏழை மாணவர்கள் பயண்பெறுவார்கள், அதே நேரத்தில்
மேலும் அரசு ஊழியர்கள் மேற்படிப்பு படிக்க வழங்கி வந்த ஊக்க ஊதித்தை அரணு 10.03.2020 அன்று முதல் ரத்து செய்து உத்தரவு இட்டது, இதில் பெரும்பாலம் ஏழ்மைநிலையில் இருந்து கடைநிலை ஊழியர்களாக அதாவது அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர், ஓட்டுநர்,துப்புறவு பணியாளர்களாக பணியில் சேருகின்றனர் தமிழ்நாடு தேர்வாரியத்தின் மூலம் இளநிலை உதவியாளர்களாக தேர்வாகி பின்பு மேற்படிப்பிற்கு படிக்க தொடர அவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து கல்வி பாதியிலயே நின்று விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு 1977 ம் ஆண்டு டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு இந்த உத்தரவை பிறப்பித்தது, தொடர்ந்து பல்வேறு மேற்படிப்பு தொடர 1978, 1983,1984,1985 ஆண்டுகளில் படிப்படியாக பல்வேறு மேற்படிப்டிப்பிறகு ஊக்க ஊதிய வழங்க அந்தந்த துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்தது தொடர்ந்து இந்த உத்தரவு தொடர்ந்து வந்த நிலையில் 10.03.2020 பின்னர் மேற்படிப்பு பயிலும் அரசு ஊழியர்களுக்கு ரத்து செய்வதாக அரசு உத்தரவு பிறப்பித்தது, இந்த உத்தலவை ரத்து செய்து மீண்டும்
கடைநிலை ஊழியர்களின் நலன் கருதி மேற்படிப்பிற்கு ஊக்க ஊதிய பெற ஆணை பிறப்பிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் இ.பி. காலணி அருகே உள்ள ஒரு தனியார் மஹாலில் 1963 முதல் 1975 ஆம் ஆண்டு நிலக்கோட்டையில் உள்ள பள்ளிகளில் நிலக்கோட்டை நாடார் நடுநிலைப் பள்ளியிலும் , நிலக்கோட்டை சௌராஷ்ட்ரா நடுநிலை பள்ளியிலும், நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் 12 ஆண்டுகள் தொடர்ந்து நண்பர்களாக பயின்ற பழைய மாணவ, மாணவியர்கள் சந்திக்கும் பழைய மாணவர்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர் செல்லப்பா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகப் பொறுப்பாளர் லெனின் வரவேற்று பேசினார். சந்திப்பு நிகழ்ச்சியில் 1963 ஆண்டுமுதல் 1975 ஆண்டு வரை தனது இளமைக் கால படிப்பு குறித்தும் பழைய நினைவுகள் பற்றியும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்களாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஆசிரியர்கள் மிக வயதானவர்களாக இருந்தாலும் தங்களது மாணவர்களை மாணவர்களாக கருதி வாழ்த்தி ஏற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் சுந்தரம், மருதமுத்து, செல்வராஜ், ராஜசேகரன், ரமேஷ்பாபு, ராஜலட்சுமி மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரிப்பன், திருநாவுக்கரசு, ஜெயராணி , மனோன்மணி சந்திரா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட தேர்வு மையங்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கு கிருமிநாசினி தெளித்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்..
by Askar
written by Askar
கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட தேர்வு மையங்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கு கிருமிநாசினி தெளித்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்..
உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எளிதில் தொற்றும் கொரோனா வைரஸ்
சீனாவில் தொடங்கி இத்தாலி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட. நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து இந்தியாவையும் விட்டுவைக்க வில்லை. கர்நாடகா,டெல்லியில் தலா ஒருவர் வீதம் இரண்டுபேரை பலிவாங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட. பள்ளிகள்,கல்லூரிகள்,விளையாட்டு அரங்குகள்,மால்கள் உள்ளிட்ட மக்கள்கூடும் இடங்களை மார்ச் 31 வரை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது.
மேலும் 10,11,12, ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடக்கின்ற தேர்வு மையங்களாகச் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களின் நலன்கருதி தினந்தோறும் கிருமிநாசினி தெளித்திட வேண்டுகின்றோம். மேலும் மாணவர்களுக்கு விடுமுறையளித்து விட்டு ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைப்பது பல்வேறு சிரமங்கள் உள்ளது. மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸை கொடுமையிலிருந்து தற்காப்பு நடவடிக்கையாக ஆசிரியர்களையும் விடுவிக்க வேண்டுகிறோம்.
தமிழ்நாட்டில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட ஈராசிரியர் பள்ளிகள் 1000க்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் உள்ளிட்ட 35 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கிவருகிறது. இப்பள்ளிகளில் 2 லட்சத்து 96 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
மேலும் “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்” ஆசிரியர்களுக்கும் தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம். அதேநேரத்தில் பெரும்பாலான
ஆசிரியர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டுவருகிறோம். மாணவர்களுக்கு விடுமுறை விடும்போது ஆசிரியர்களுக்கும் விடுமுறை வழங்குவதற்கு ஆவனச் செய்தும் தேர்வு நடைபெறும் அனைத்துப்பள்ளிகளுக்கும் கிருமிநாசினி தெளித்திட வேண்டியும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
You must be logged in to post a comment.