பழனி சந்தித்து ஓட்டு சேகரிக்க வந்த திமுக கழகத் தலைவர்
மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்த போது .பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பழனி கௌரவ தலைவர் ஸ்ரீ கந்த விலாஸ் N.செல்வகுமார் (டிவைன் போர்ட் உரிமையாளர்) வரவேற்பு அளித்தார் மற்றும் செயலாளர் ,A.ஹக்கீம் ராஜா மற்றும் துணைத் தலைவர் C. சந்திரசேகர் V.A.P. குமார், முருகானந்தம் Ex.Mc , சுரேஷ்,மணி மற்றும் இளைஞர் அணி ஆகிய சேக் பரீத், ரியாஸ் முகமது.,பைசல்,காஜா மற்றும் பல முக்கிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு பழனி முருகன் படத்தை நினைவு பரிசு வழங்கினார்கள்…செய்தியாளர் வி காளமேகம்
செய்திகள்
பசுமலை தியாகராஜர் காலனி பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.பாராளுமன்றத்தில் மதிக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த முறையை நாம் இப்போதுதான் கேட்டு இருக்கிறோம் என்ற பெருமையைப் பெற்றார்கள்.ஆனால் நடைமுறையில் அந்த பாராளுமன்றத்தை எள்ளளவு கூட அவர் கடந்த ஆறாண்டு காலத்தில் மதித்தது கிடையாது.பாராளுமன்ற கூட்டங்களில் பிரதமர் மோடி பெரும்பகுதி பங்கேற்பது கிடையாது.நேரு பிரதமராக இருந்தபோது நாள் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டார்.அதற்கு பதிலளித்து அவர் நல்ல ஆலோசனை கேட்டார் என்று இருந்த காலம் ஒன்று உண்டு இன்று கேட்பதே இல்லைஇந்தியா டுடே தலைப்புச் செய்திகளாக வந்தன ஆனால் அந்த அரசியல் சட்டம் மதிக்கப்படுகிறதா அந்த அரசியல் உரிமைகள் தேர்தல் ஆணையம், நீதித்துறை வருமாள வரித்துறை போன்ற அமைபுகள் ஆளும் பாஜக அரசிற்கு ஆதரவாக செயல்படுகிறது.இவை சுதந்திரமாக செயல்படவில்லை.வருமான வரித்துறைஅரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் ஏமாற்றி னால் அதை கண்டறிந்து சோதனை செய்ய வேண்டும்.இது சுதந்திரமாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு அதன் பணியை சுதந்திரமாக செயல்பட வேண்டும். கைால் அவை எப்படி செயல்படுகின்றன என்பதைப் பார்த்தால் நன்றாக தெரியும் .பழனியில் சித்தனாதன் பஞ்சாமிர்த கடையில் பாஜகவினர் தேர்தல் நிதி கேட்டரை்.ஒரு கோடி இல்லை இரண்டு கோடி இல்ல 50 கோடி ஐநூறு கோடி என்று கேட்கிறார் அவ்வளவு எங்களால் தர முடியாது என கூறினால் பாஜகவினர் மூலம் வருமான வரி சோதனை என மிரட்படுகின்றனர்பணத்துக்கு வருமான வரித்துறை சோதனை நடை பெறுகிறதுஇதே போல் செட்டிநாடு குழுமத்திற்கும் சோதனைவரி ஏய்ப்பு செய்பவர்கள் அனைவரிடமும் செய்வது என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாதுநீதிமன்றம் மாறிப்போய்விட்டது தேர்தல் ஆணையம் மாறிப்போய்விட்டது எதுவும் செய்ய முடியவில்லைஆளும் கட்சியாக இன்றைக்கு மத்திய ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது: இந்த நாடு எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. சர்வாதிகாரத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.நாட்டினுடைய நிலைமை என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாகிவிடும்விவசாயி அதிகபட்சமாக 70 சதவீதம்என்ன சொல்லுகிறீர்கள் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சலுகை என்பது விவசாய உற்பத்திப் பொருளுக்கு குறைந்தபட்ச விலையை மத்திய அரசாங்கம் தீர்வு அளிப்பதுஒரு குறைந்தபட்ச பாதுகாப்பு கூட இப்பொழுது நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எந்த பாதுகாப்பும் இல்லைதனியார்மயம் ஐபோன் விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது மட்டுமல்ல நியாயவிலைக் கடைகள் இருக்கிறது எதிர்காலத்தில் நியாய விலைக்கடை இருக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்அடுத்து புதிய மின்சார மசோதா தாக்கல் செய்ய தயாராக இருக்கிறார்கள். இந்த சட்டத்திற்கு ஆதரவான தமிழக அரசின் உதவியை மத்திய அரசு கேட்கிறது தமிழக அரசு புதிய மின் மசோதா சட்டத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.இங்கே குழுமியிருக்கும் தமிழ் நாட்டில் வாழுகிற அத்தனை குடும்பங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை யூனிட் 100 வரை கட்டணம் கிடையாதுதறி உள்ளவர்களுக்கு 200 யூனிட் வரை மின் கட்டணம் கிடையாது:.ஆனால் புதிய மின் மசோதா திட்டம் கொண்டு வந்தால் அனைத்தும் கட்டணம் ஆகிவிடும் மத்திய அரசாங்கம் : இன்று நாட்டில் குறிப்பாக கூட்டணி மோடி எடப்பாடி ரெண்டு பேரும் சேர்ந்து விடுகிற கூட்டணி என்பது கூட்டணி நிராகரிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறோம்.அடக்க விலை எவ்வளவு பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 டீஸல் ரூபாய் 30 ரூபாய் பெற்றுக் கொடுக்க முடியும் 30 ரூபாய் கொடுக்க முடியும் மாநில அரசும், மத்திய அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு வரியை உயர்த்துகிறார்கள்.பெட்ரோல் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்து கொண்டே இந்த சுமையை சுமப்பது பொதுமக்கள் தான்.பொது மக்கள் மீதான வரி அதிகரிப்பு குறித்தே கவலைப்படுகிறவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணி கட்சியினர் தான்.விலைவாசி உயர்வை கண்டித்துகொரான காலத்தில் அறிவாலயத்தில் கட்சிக்கு ஒருவர் வீதம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய அனுமதி மறுத்துவிட்டது.ஆனாலும் காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சிகள் தீர்மானம் நிறை வேற்றினோம். அழுத்தம் கொடுக்க முடியாத கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். திமுக கூட்டணி சார்பில் அனைத்து கட்சி தலைவர் களும் வீட்டு வாசலுக்கு முன்னால் கருப்புக் கொடி பிடித்து ஆர்பாட்டம் செய்தோம்.எங்கள் அணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தால் தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கொரான நிதி பாக்கி ரூபாய் 4000 வழங்கப்படும்நாங்கள் வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது மக்கள் நலன் சார்ந்த ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறதுசேலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்ற கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் அவர் கலந்து கொண்டார்கள்கடைசியாக ஒருவர் கரத்தை ஒருவர் சற்று உயர்த்தி எல்லோரும் பார்த்து நின்றதிலே தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் எல்லாம் பார்த்திருப்பர்கள் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்ஒரு கொள்கைக்காக நிற்கிறோம் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி உயர்த்திப் பிடித்து மக்கள் இந்த பிரேரணைக்கு கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.மோடி தாராபுரத்தில் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்பிரதமர் 130 கோடி மக்களுக்கு பிரதமர் ஆக இருக்கக் கூடியவர் ஒரு பொதுக் கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் நாலந்தர மனிதராக பேசினார்அதிமுக , பாஜக இந்த இரண்டு கட்சிகளின் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை என்கிற முறையில் மிக அநாகரிகமாக அசிங்கமாக பேசிய கூறப்படுகிறது: .எனவே இந்த கூட்டணி பாஜக, அதிமுக ஒரு கொள்கையற்ற கூட்டணி .அந்த கொள்கையற்ற கூட்டணி இங்கே போட்டியிடுவது நம்முடைய பொண்ணைத்தான் எதிர்த்துப் போட்டியிடுவது.அண்ணா திமுக போட்டியிடவில்லை பாஜக தான் இங்கே போட்டியிடுகிறதுபத்திரிகை கருத்துக் கணிப்பு வந்தது நமக்கு புரிய வைக்க வெளிவந்திருக்கிறது அவையனைத்தும் இடத்தில் கூட அதிமுக பாஜக வெற்றி பெற விடாமல்234 தொகுதிகளிலும் நம்முடைய அணி தான் வெற்றி பெற வேண்டும் நம்முடைய அணி வெற்றி பெறும் மூலமாகத்தான் இப்பிரச்சனை தீர்வு காண முடியும் நாட்டை காப்பாற்ற வேண்டும் நமது நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் அரசியல் காப்பாற்ற வேண்டும் அதை உருவாக்கிய அமைப்புகள் எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கை காப்பாற்ற வேண்டும் ஜாதி மத வேறுபாடு இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும்நமது வேட்பாளர் பொன்னுதாய் மற்றும் கூட்டணி வெற்றி பெற வேண்டுமாய் அனைவரையும் அன்போடு கேட்டு நிச்சயமாக வெற்றி பெற்ற பிறகே நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு வருவேன் என விடை பெறுகிறேன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதனை ஆதரித்து முனிச்சாலையில் வைகோ பிரச்சாரம் .
முதல்வராக முக.ஸ்டாலின் வர இருப்பதால் மதுரையில் எய்ம்ஸ் நிச்சயம் அமையும் முக.ஸ்டாலினை யாரும் ஏமாற்ற முடியாதுதமிழகத்தில் பெண்களின் துயரை உணர்ந்து செயல்படும் கட்சி திமுகபெண்களுக்கு சம உரிமை வழங்கியது கலைஞர்பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது பெரியார்தமிழக வரலாறு தெரியாமல் மோடி பேசி வருகிறார்அதிமுகவினர் பாஜவிற்கு கொத்தடிமையாக இருப்பதால் தமிழகத்தை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என நினைத்து தமிழகத்தை பாஜக அரசு கூறு போடுகிறார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார்- உலக அறிவாளிகள் /முட்டாள்கள் தினம் இன்று (ஏப்ரல் 1).
உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள்வரை வித்தியாசம் இல்லாமல் மற்றவர்களை ஏமாற்றியும், முட்டாள்கள் ஆக்கியும் கொண்டாடும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம். ஆனால், தினம் தினம் ஏதோ ஒருவகையில் நம் அறிவை மேம்படுத்தியவர்களுக்கு நன்றி கூறும் ஒரு நாளான `அறிவாளர்கள் தினம்’ பற்றி எத்தனை பேருக்குத் தெரியும். இந்த தினத்தன்று வெளிநாடுகளில், ஒருவருக்கொருவர் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்வார்களாம். இதன் முக்கியமான நோக்கம், அனைவருக்கும் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதுதான். ஒருவரை அறிவாளி/ முட்டாள் எனத் தீர்மானிப்பது யார். முட்டாள்’ என்று ஒதுக்கிவைக்கப்பட்ட எத்தனையோ பேரை பிற்காலத்தில், தலைசிறந்த அறிவாளி’ எனத் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறார்கள். சாக்ரடீஸ் முதல் பாரதியார் வரை, அவர்களின் குடும்பத்தாரிடமிருந்தே முட்டாள்’ பட்டம் பெற்ற பலரை, இன்று வரை நாம் கொண்டாடிவருகிறோம். இந்நிலையை என்னவென்று சொல்வது. இங்கு யார் அறிவாளி… யார் முட்டாள்?. ஏன், எதனால், எப்படி, போன்ற கேள்விகளில் பிறந்த எத்தனையோ பதில்களை நாம் தினமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
முதல்முதலில் நெருப்பைக் கண்டறிதலிருந்து, தனிநபருக்கு எவ்வளவு IQ (Intelligent Quotient) இருக்கிறது என்பதை யூகிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இப்படி ஒவ்வொரு நாளும் மனிதன், அறிவை வளர்த்துகொண்டேதான் இருக்கிறான். அப்படி உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ வியப்பூட்டும் அத்தியாவசிய பொருள்களால்தான் இன்று நாம் அதிநவீன வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆஹா!’ என்று பலமுறை நம்மை பிரமிக்கவைத்த பல தொழில்நுட்ப உபகரணங்களைக் கண்டுபிடித்த மறக்க முடியாத விஞ்ஞானிகளில், தாமஸ் ஆல்வா எடிசன், கிரஹாம்பெல், அலெக்ஸ்சாண்டர் ஃபிளெம்மிங், ரைட் பிரதர்ஸ், நியூட்டன், ஜேம்ஸ் வாட், ஐன்ஸ்டீன், சார்லஸ் பாபேஜ், கலிலியோ, ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்றோர் என்றைக்கும் ஸ்பெஷல் இடம்பிடித்தவர்கள். `அப்படினா ஏதாச்சும் கண்டுபிடிச்சாதான் அறிவாளியா?” என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. இவர்கள் நம் கண்ணுக்குத் தெரிந்த அறிவாளிகள். அவ்வளவுதான். தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், அதை அனைவரும் பயன்படுத்தும் முறையைச் சொல்லிக்கொடுக்கும் அடிப்படை கல்வி முதல் எது சரி, எது தவறு என்பதைப் பகுத்தறிந்து செயல்பட வேண்டும் என்று போதிக்கும் நம் பெற்றோர்கள் மற்றும் சமூகப் பகுத்தறிவாளர்கள் வரை அனைத்திலும் அனைவரிடமும் அறிவு’ சார்ந்த விஷயங்கள் உள்ளன. ஹிட்லர் முதல் பெரியார் வரை ஒவ்வொருவரின் எண்ணங்களும் கருத்துகளும் மாறுபடுமே தவிர, தனிப்பட்ட நபரின் அறிவாற்றலை அவ்வளவு எளிதில் எடை போட்டுவிட முடியாது.
சிறு வயதிலிருந்து, ஒழுங்கா படி. அப்போதான் அறிவு வளரும்’ என்ற வாசகத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம். ஆனால், அதையும் மீறி எத்தனையோ உண்மை விஷயங்கள் இருக்கின்றன என்பதை வெளியுலகை தனியாய் நின்று போராடும்போதுதான் தெரிந்தது. இதேபோல் எத்தனையோ பேர் வெறும் பாடப்புத்தகத்தில் இருக்கும் வரிகளை மட்டுமே உண்மை என நம்பி விவாதிக்கின்றனர். நடைமுறை வாழ்க்கையைச் சொல்லித்தரும் மனிதர்களை’ விட சிறந்த புத்தகம் எதுவுமில்லை. மனிதர்களைப் படிப்பதும் அவ்வளவு எளிதல்ல. படிக்கப் படிக்க சுவாரஸ்யம் குறையாத எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் ஒரே அழகிய புத்தகம். கி.பி. 16ம் நூற்றாண்டுவரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதிதான் புத்தாண்டாகக் கடைபிடிக்கப்பட்டது. இப்போது ஜனவரி முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம் இல்லையா? அதுபோல அப்போது ஏப்ரல் முதல் நாளை கொண்டாடினார்கள். அப்போதைய ஜூலியன் காலண்டரில் அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது. 1582ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி புதிய காலண்டரை 13ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர் அறிமுகப்படுத்தினார். இதைத்தான் கிரிகோரியன் காலண்டர் என்று சொல்கிறோம். இந்தக் காலண்டரில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பல நாட்டு மக்களும் ஏற்க மறுத்தார்கள். அப்படி ஏற்க மறுத்தவர்கள் ஏப்ரல் முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடினார்கள்.
ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக ஏற்று கொண்டவர்கள் இவர்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஏப்ரல் முதல் நாளில் புத்தாண்டு கொண்டாடுவோர் வீட்டுக்குப் பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தார்கள். ஆனால், பரிசுப் பெட்டியைத் திறந்தால், அதில் ஒன்றும் இருக்காது. ‘நீ ஒரு முட்டாள்’ என்று துண்டுச்சீட்டுதான் இருக்கும். அதேபோலச் சட்டையின் பின்னால் ‘நான் ஒரு முட்டாள்’ என்ற துண்டுச்சீட்டை ஒட்டி கேலி பேசினார்கள். பிரான்ஸ் நாட்டில்தான் முதன் முதலில் இப்படி முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடியதாகச் சொல்கிறார்கள். பின்னர் படிப்படியாக எல்லா நாடுகளும் புதிய காலண்டரை ஏற்றுக் கொண்டன. தொடக்கத்தில் புதிய காலண்டரை அப்படி ஏற்றுக் கொண்ட நாடுகள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொண்டாடும் புத்தாண்டு தினத்தை, முட்டாள்கள் தினம் என அழைத்தார்கள். இப்படித்தான் முட்டாள்கள் தினம் அறிமுகமானது. இன்று உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டரைப் பின்பற்றினாலும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள் தினமாகக் கொண்டாடுவது மட்டும் மறையவில்லை.
சிறுவயதில் உங்கள் பள்ளியில் உங்கள் நண்பர்களோடு முட்டாள்கள் தினத்தை கொண்டாடியது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும். ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டு சந்தோசமாக வாழ்ந்த காலம் அது. சர்வதேசரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் ‘தான் ஒரு முட்டாள்’ என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு ‘அறிஞனாக’ வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது. கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.
மக்களை எப்படியெல்லாம் உலகம் முழுக்க அன்றைய தினம் ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதைப்பற்றிய பதிவு. ஸ்வீடன் நாட்டில் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி ரொம்பவும் சீரியஸாக தொலைகாட்சி முன்னர் தோன்றிய தொகுப்பாளர் எல்லா கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளையும் நைலான் உறையொன்றை பொருத்தி நீக்குவதன் மூலம் வண்ணத்தொலைக்காட்சியாக மாற்றிவிடலாம் என்று அறிவிக்க பற்றிக்கொண்டது ஸ்வீடன். அப்புறம் ஜாலியாக ஸாரி சொன்னார்கள். ஏப்ரல் 1, 1998 அன்று உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலையை வால்ட் டிஸ்னியின் நிறுவனத்திடம் விற்று விட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அக்கல்வி நிறுவன தளம் தெரிவித்தது. பல்கலை இடிக்கப்பட்டு வெவ்வேறு பகுதிகளுக்கு அதன் கிளைகள் ஏற்படுத்தப்படும் என்று அது அறிவித்த பொழுது அதிர்ந்து போனார்கள். அப்புறம் அக்கல்விக்கூட மாணவர்கள் தளத்தை ஹாக் செய்த விஷயம் புரிந்து தலையில் அடித்துக்கொண்டார்கள்.
ஏப்ரல் 1, 1976 அன்று பிபிசியின் ரேடியோ வானவியல் அறிவிப்பாளர் சனி மற்றும் ப்ளூட்டோவுக்கு இடையே ஏற்படும் இணைப்பால் புவியின் புவி ஈர்ப்பு விசை குறையும் என்றும் 9:47 a.m க்கும் சரியாக குதித்தால் மக்கள் மிதக்கலாம் என்று அறிவித்து அதை அப்படியே செய்து விழுந்தார்கள் பலபேர். அதே பிபிசி 1957ல் நூடுல்ஸ் போன்ற உணவான ஸ்பாகாட்டி ஸ்விட்சர்லாந்து நாட்டில் மரத்தில் விளைவதாக அறிவிக்க அந்த மரத்தின் விதைகள் எங்களுக்கு கிடைக்குமா என்று போன் கால்கள் ஓயாமல் வந்து சேர்ந்தன. 1980ல் பிக் பென் கடிகாரத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்போவதாக அடுத்த அறிவிப்பை வெளியிட்டார்கள். பெரிய கூத்து ஜப்பானிய பிபிசி அந்த கடிகாரத்தின் பாகங்களை முதலில் அழைக்கும் நாலு பேருக்கு விற்பதாக சொல்ல அட்லாண்டிக் கடலின் நடுவில் இருந்து ஒரு நேயர் அழைத்து அசடு வழிந்தார்.
பொலிடிகன் எனும் கோபன்ஹெகன் நகர செய்தித்தாள் டேனிஷ் அரசு நாய்கள் எல்லாவற்றுக்கும் வெள்ளை பெய்ன்ட் அடித்து இரவில் அவற்றின் மீது வாகனங்கள் மோதாமல் தடுக்க சட்டம் கொண்டு வந்திருப்பதை சொல்ல பல் நாய்கள் பாவம் வெள்ளை பூச்சுக்கு மாறின. ஐரீஷ் டைம்ஸ் 1995ல் டிஸ்னி நிறுவனம் லெனினின் பாதுகாக்கப்பட்ட உடலை வாங்கி தன்னுடைய பொழுது போக்கு மையத்தில் வைக்க இருப்பதாகவும் அதன் பின்புறத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் குரல் கசியும் என்று வதந்தியை கசிய விட்டது. The China Youth Daily பத்திரிக்கை சீனாவில் முனைவர் ஆய்வில் ஈடுபடுவர்கள் ஒரு பிள்ளை மட்டுமே என்கிற சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று கிளப்பிவிட்டு அதை சில செய்தி நிறுவனங்கள் உலகம் ழுக்க கொண்டு போய் சேர்த்தன. முதல் உலகப்போரின் April 1, 1915 அன்று ஜெர்மனி வீரர்கள் நிறைந்த ஒரு இடத்துக்குள் பிரெஞ்சு விமானம் குண்டு ஒன்றை வீசிவிட்டு சென்றது. வெகுநேரம் வெடிக்காமலே இருக்கவே, அருகில் போய் அதை பார்த்தால் கால்பந்து, அதில் “ஏப்ரல் ஃபூல் !” என்று எழுதி வேறு ஒட்டியிருந்தார்கள். பர்கர் கிங் எனும் அமெரிக்க நிறுவனம் இடது கைப்பழக்கம் உள்ள மூன்றரை கோடி அமெரிக்கர்கள் உன்ன இடக்கை வோப்பர் எனும் உணவுப்பண்டத்தை கொண்டு வந்திருப்பதாக சொல்ல வலக்கை பழக்கம் உள்ளவர்கள் சண்டைக்கு வந்துவிடவே அதுவே புரூடா என்று புரிய வைத்தார்கள்.
கூகுள் ஏப்ரல் தினத்தில் குறிப்பிட்ட தயாரிப்பை வெளியிடுவதாக சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருந்தது. ஏப்ரல் 1, 2004ல் மின்னஞ்சல் சேவையை துவங்குவதாக சொல்ல எல்லாரும் ஏமாற்றப்போகிறார்கள் என்று அலர்ட் ஆகியிருந்தார்கள். ஜிமெயிலை மெய்யாலுமே உருவாக்கி ஷாக் தந்தது கூகுள்,இப்படியும் ஏமாற்றலாம் பாஸ். லண்டன் டைம்ஸ் இதழ் 1992 இல் பெல்ஜியத்தின் ஒரு பாதியை நெதர்லாந்தும் இன்னொரு பாதியை பிரான்சும் பிரித்துக்கொள்ளும் என்று அறிவிக்க அதை பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி உண்மை என்று நம்பி டிவி ஷோவில் வாதிக்க கிளம்பி விட்டார். அப்புறம் அஸ்கு,புஸ்கு சொன்னார்கள் அவருக்கு. இந்தியாவின் ப்ளிப்கார்ட் நிறுவனம் பணத்தை டெலிவரி செய்யும் சேவையை ஆரம்பிப்பதாக கிளப்பி விட்டார்கள். லேஸ் சிப்ஸ் நிறுவனம் செய்தித்தாளில் வெளிச்சத்தால் இயங்கும் டிவி பார்க்கலாம் என்றொரு விளம்பரம் தர அதை உண்மையென்று செய்தித்தாளை ஆட்டிப்பார்த்து ஏமாந்து போனார்கள் எண்ணற்ற வாசகர்கள்.
நமது இயக்குனர் பாக்கியராஜ் சிறந்த அறிவாளி. அவர் இந்தியாவின் சிறந்த திரைக்கதாசிரியர் என்பதுடன் சிறந்த குட்டிக்கதை சொல்லி எனும் புகழும் அவருக்கு உண்டு. அவர் நடத்தும் பாக்யா இதழின் கேள்வி-பதில் பகுதியில் அவர் பதிலளிக்கையில் ஒவ்வொரு கேள்விக்கும் சிறு சிறு கதைகள் சொல்லி விடையளிப்பது சுவாரசியமாக இருப்பதோடு அறிவுக்கும் விருந்தளிக்கும். ஒரு முறை முட்டாள்கள் யார்? அறிவாளி யார்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அறிவாளி என்றெல்லாம் யாரும் கிடையாது. உலகில் மூன்று வகை முட்டாள்கள் தான் இருக்கிறார்கள். முதல்வகை முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என அவர்களுக்கு தெரியாது, ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் தெரியும். இவர்கள் முட்டாள்கள். இரண்டாம் வகை முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என்று அவர்களுக்கும் தெரியும், அடுத்தவர்களுக்கும் தெரியும் இவர்கள் பொதுவானவர்கள். இறுதிவகையானவர்கள் முட்டாள்கள் என தங்களுக்கு தாங்களே தெரிந்த வைத்திருப்பர். ஆனால் மற்றவர்களுக்கு தெரியாமல் வைத்திருப்பர். இவர்கள் அறிவாளிகள் என்றழைக்கப்படுகின்றனர் என்று பதிலளித்திருந்தார். ஏப்ரல் ஒன்று மட்டுமல்ல வருடம் தோறும் வாழ்நாள் தோறும் நம்மை முட்டாளாக உணரச் செய்யும் ஆற்றல் ஆளும் வர்க்கத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது வரலாறு தாண்டிய உண்மை. ‘முட்டாள்கள்’ தினத்தில் நாம் முட்டாள்கள் ஆனாலும் சரி, பிறரை முட்டாள்கள் ஆக்கினாலும் சரி, மனம் புண்படாமல் பண்பாக விளையாடுவோம்.
Source By: Wikipedia, Vikatan and Hindutamil
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 15 நாட்கள் நடைபெறும் விழாவில் நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இன்று பகல் 11.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது . பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தங்கத்தினாலான திருமாங்கல்யம் தெய்வானைக்கு சூட்டப்பட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை காலை 5:45 மணிக்கு நடைபெற உள்ளது திருமண விழாவில் மதுரை திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பங்குனி திருவிழா கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் எம்எஸ் நைனா கண்ணு மண்மலை, முறையார் கரியமங்கலம் ,அரட்டவாடி, தண்டா , புரச ப்பட்டு ,மேல் பெண்ணாத்தூர் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வாக்கு சேகரிப்பின் போது அங்குள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் மலர் தூவி வரவேற்றனர். தேர்தல் அறிக்கை கொண்ட துண்டு பிரசுரங்களை கொண்டு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார் .அதிமுக வேட்பாளர் எம் எஸ் நைனா கண்ணு பேசுகையில் பெண்கள் கஷ்டப்பட்டு முதுகு வலிக்க துணி துவைத்த காலம் போதும். பெண்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும் என அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தல் அறிக்கையை விளக்கி வாக்குச் சேகரித்தார் மேலும் பொது மக்களின் அடிப்படை வசதி செய்து தருவோம் என்று வாக்குறுதி அளித்தார் நிகழ்வின்போது தெற்கு மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பாபு வெங்கடாஜலபதி ,செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் கே கே மணி, மாவட்ட பிரதிநிதி மேல் பெண்ணாத்தூர் முருகன், பிரதிநிதி ராஜன் முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டன
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அதில் பேசிய ஸ்டாலின், பொய் பிரச்சாரம் செய்து வரும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறாது என்றார்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் நடைபெறும் நாள் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார், ஆலங்குளம் வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.
அப்போது மறைந்த தமிழக முதல்வர்களான காமராஜருக்கும், கருணாநிதிக்கும் இடையே இருந்த நட்பை குறிப்பிட்டு பேசினார். உடல் நலிவுற்ற நிலையிலும் காமராஜர் தனது திருமணத்திற்கு வந்து வாழ்த்தியதையும் அப்போது அவர் நினைவு கூர்ந்தார். மேலும் அவர் பேசுகையில்,பாஜக கூட்டணி என்னதான் பொய் பிரசாரம் செய்து வந்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என தெரிவித்தார். அதிமுகவினரின் ஊழல் குறித்து புள்ளி விவரங்களை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.2014-2016-ல் ஜெயலலிதாவை அரசியலை விட்டு வெளியேற்ற வேண்டும் என மோடி பேசினார். யாரோ கூறுகிறார்கள் என்பதற்காக எதையாவது பிரதமர் பேசலாமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரையும் அருகில் வைத்துக் கொண்டு ஊழல் குறித்துப் பேசி வருகிறார். ரவுடிகளை கட்சியில் சேர்த்துள்ள நீங்கள் சட்ட ஒழுங்கை காப்பற்றுவோம் என்கிறீர்கள். 125 நாட்களாக மழை பனியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளை அழைத்து பிரதமர் மோடி பேசினாரா என்று கேள்வி எழுப்பினார். அதிமுக, பாஜக கூட்டணி என்ன தான் பொய் பிரசாரம் செய்து வந்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்டார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் புதூர் மு. பூமிநாதன் உயதசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
மதுரை காமராஜர் சாலை 53-வார்டு சாலை பிள்ளையார் கோவில் தெருவில் வீடு வீடாக சென்று திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் புதூர் மு. பூமிநாதன் உயதசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார் அவருக்கு வழி நெடுகிலும் வாக்காளர்கள் வரவேற்று உற்சாகமாக உங்களுக்கு ஓட்டு போடுவோம் என்று உறுதியளித்தனர் வாக்காளர்களிடம் வேட்பாளர் பூமிநாதன் பேசுகையில் யாரிடமும் லஞ்சம் வாங்காமல் ஊழலற்ற நேர்மையானவனாக உழைப்பேன் நீங்கள் அழைக்கும் போதெல்லாம் உங்கள் வீடு தேடி வருவேன் உங்களுக்காக உங.களோடு சேர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார் இவருடன் திமுக பொதுச்செயலாளர் எம்.எஸ். தட்சிணாமூர்த்தி மாவட்ட பிரதிநிதி டி.கணேசன் மொட்ட செயலாளர் என். ஆங்கன் ஆர் போஸ் இளைஞரணி சந்துரு நெல்லு பேட்டை பகுதி கோபிநாத் பிரதிநிதி பழனிச்சாமி மதியழகன் வன்னியராஜன் மதிமுக 1-ம் பகுதி செயலாளர் ராமர் மாவட்டத் துணைச் செயலர் செ.பரமேஸ்வரன் மாநில ஆபத்துக்கால பிரிவு செயலாளர் முனியசாமி உள்ளிட்ட திரளான திமுக மதிமுக காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் திரளாக உதயசூரியன் பதாகைகள் ஏந்தி வீடு வீடாக சென்று வேட்பாளர்கள் புதூர் பூமிநாதன் உற்சாகமாக வாக்கு சேகரித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்த மக்கள் விரும்பாத துரோக ஆட்சியை நீங்கள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் மதுரையில் டிடிவி தினகரன் பேச்சு.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவரை ஆதரித்து தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தநிலையில், மதுரை மத்திய தொகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிக்கந்தர் பாஷா ஆதரித்து அதேபோல் மதுரை மேற்கு தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அதன் வேட்பாளர் அவர்களை ஆதரித்து மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரத்தின் கூறும்போது, இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரும்பாத துரோக ஆட்சியை நீங்கள் முடிவுக்கு கொண்டு வரவும் அதேபோலவே தீயசக்தி கூட்டம் மீண்டும் வரவிடாமல் தடுக்கும் நீங்கள் வாக்களிக்க வேண்டிய வெற்றிச் சின்னம் முரசு சின்னம் மதுரை மேற்கு தொகுதியில் மதுரை மத்திய தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்களித்து தமிழ்நாட்டு நிலையான ஆட்சி மக்கள் விரும்பும் ஆட்சி மக்களுக்காக செயல்பட ஆட்சி நேர்மையான ஆட்சி ஊழலற்ற ஆட்சி வெளிப்படையாக ஆட்சி வேண்டுமென்றால் நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய வெற்றிச் சின்னம் முரசு சின்னம் மற்றும் குக்கர் சின்னம் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் இன்று சமுதாய சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடன் வாழவும் இங்கே வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வீட்டுக்கு ஒருவர் வேலைவாய்ப்பு அனைத்து துறை தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் அதேபோல், ஆசிரியருக்கும் அனைத்து திட்டங்களை நிறைவேற்றி தர நீங்கள் வாக்களிக்கும் என்று வெற்றி சின்னம் முரசு சின்னம் குக்கர் சின்னம் தீய சக்திகள் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விடு உங்கள் கடமை அதேபோல் தமிழின துரோகிகள் ஆட்சியில் தொடர விடாமல் செய்வது உங்கள் கடமை இதை நீங்கள் சரிவர செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல தமிழர்கள் தலை நிமிர நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் முரசு மற்றும் குக்கர் சின்னம் இந்த தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் இந்த பிரச்சார கூட்டத்தில், அமமுக மற்றும் தேமுதிக எஸ்டிபிஐ கட்சியினர் அதன் கூட்டணி கட்சி நிர்வாகி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி.
முதல்வர் பழனிச்சாமியை பற்றி விமர்சனம் செய்ததற்கு ராஜா மன்னிப்பு கேட்ட பின்னும் தொடர்ந்து போராட்டம் தொடர்வது குறித்த கேள்விக்குஇது முடிக்கப்பட வேண்டிய விஷயம் இது குறித்து தேவையில்லாத விமர்சனங்கள் எழக்கூடாது இதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி எனது தந்தை முன்னாள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர் சிதம்பரத்தை விமர்சனம் செய்தது குறித்து எந்தவித பதிலும் இல்லைவருமான வரித்துறை ஆளுங்கட்சியை அதைச் சார்ந்த இடமும் தொடர்வது குறித்த கேள்விக்குவருமான வரி ரெய்டு சோதனை ஒரு கண்துடைப்பு இது மீடியா முன்னிலையில் நடைபெறும். வேடிக்கை தேர்தல் முடிந்த பின்னர் அதிமுக கட்சியில் எத்தனை பேருக்கு நோட்டீஸ் கொடுக்கின்றனர் வழக்கு பதிவு செய்தனர் என்பது தெரியவரும்தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுக்கு கொரான தொற்று ஏற்படுவது குறித்த கேள்விக்குமுதலில் பாதுகாப்பு அவசியம் . பலபேர் முக கவசம் அணிவது இல்லை. நானே பேட்டிக்காக தான் வசதிகளுக்கு முக கவசம் அணியவில்லை தவிர மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிந்து தான் வருவேன்.முக கவசம் சானி டை சர் அனைவரும் உபயோகிக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவில் வாரிசு அரசியல் தொடர்கிறது விமர்சனம் செய்து குறித்துஇதை ரவீந்திரநாத் தாகூர் சீட்டுக்கொடுக்கும் போது யோசித்திருக்க வேண்டும் கார்த்திக் சிதம்பரம் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரு வேறு சம்பவங்களில் விஷம் அருந்திய ஆண் மற்றும் பெண் தற்கொலை போலீசார் விசாரணை.
குடும்ப பிரச்சினையால் மனமுடைந்தவர் விஷம்குடித்து தற்கொலை.மதுரைஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் திருமலை தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி 45. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த லியாகத்அலி வீட்டில் விஷம் தின்று மயங்கி கிடந்தார். அவரை ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்குசிகிச்சையில் இருந்தவர்சிகிச்சை பலனின்றிபரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகன் ராஜா உசேன் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் …,,,,, இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் மேலாளர் திட்டியதால்சீட்டு கம்பெனி பெண்ஊழியர் விஷம் தின்று தற்கொலைமதுரை பழங்காநத்தம் மணிகண்டன் தெரு மாடக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோவிந்த பிரசாத் மனைவி லட்சுமி 30. இவர் திருநகரில் உள்ள ஒரு சீட்டு கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த கம்பெனியின் மேனேஜர் லட்சுமியை தரக்குறைவாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த லெட்சுமி வீட்டில் விஷம் தின்று மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்துஇவரது கணவர் எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விளாங்குடியில்சென்ற பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.பரவை கம்பன் தெருவை சேர்ந்தவர் கற்பகவல்லி 48. இவர் விளாங்குடி விவேகானந்தர் தெரு இரட்டை பாதை ரோட்டில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர் அணிந்திருந்த பதினொன்றரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கற்பகவல்லி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பதவியில் இருக்கவும், வழக்குகளும் இல்லாமல் இருப்பதற்காக அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. – ஹார்விப்பட்டியில் திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம்.
திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாயி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பொதுமக்களிடம் அவர் கூறுகையில்:ராஜன் செல்லப்பா மேயராக இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை வடக்குத் தொகுதியில் இருந்த போதும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை இங்கே வென்றாலும் எதுவும் செய்ய மாட்டார். சட்டமன்றத்திலே உங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் அப்படிப்பட்ட வேட்பாளர் பொன்னுத்தாயி என்பதை உணர்ந்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியை ஸ்டாலின் உருவாக்கி இருந்தார்கள், இந்த கூட்டணி என்பது கொள்கைக்காக இருக்கக் கூடிய கூட்டம் இந்த கூட்டணி என்பது தற்போது அதிமுக பிஜேபி யை போல தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடிய கூட்டணி அல்ல. பாமக அந்த கூட்டணியில் தான் உள்ளது உடன் இருக்கக்கூடிய ஒரு கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வரை பற்றி பேசுகிறார். ஒரு வார்டு கவுன்சிலராக இருக்க கூட தகுதி இல்லாத ஒருத்தர் இன்று தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார் என்று சொன்னார். அதற்கு மேல் அவர், கூறியதை என் வாயால் நான் சொல்ல தயாராக இல்லை. இந்த அளவுக்கு முதலமைச்சர் மீது மரியாதை வைத்திருக்கிறார் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்.பதவியில் இருக்க வேண்டும் எந்த வழக்குகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்து உள்ளார்கள். வேளாண் திட்டங்களை அதிமுக ஆதரித்தது, குடியுரிமை சட்டத்தை ஆதரித்தது. ஆனால் தற்போது தேர்தல் வந்ததால் எந்த சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டார்களோ இன்று அந்த சட்டங்களை ரத்து செய்துள்ளது. பாஜக ஆதரிக்கின்ற சட்டத்தை தற்போது அதிமுக தேர்தல் காரணமாக மக்களுக்கு எதிரான சட்டங்கள் என்று அதை எதிர்க்கின்றனர். இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணி பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பாஜக கூட்டணியாள் தான் தமிழகத்திற்கு என்னால் நல்லது செய்ய முடிந்தது என்றார் தமிழக முதல்வர். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் ஆனால் இதுவரை கட்டி முடிக்கப்படவில்லை. அத்துடன் தொடங்கப்பட்ட அனைத்து மருத்துவ மனைகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டுள்ளது.அதிமுகவின் அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளது அந்த வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக பாஜக உடனான கூட்டணி வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் உரிமைகளை சமூகநீதியை தமிழர்களின் எதிர்காலத்தை டெல்லியில் அடகு வைத்துள்ள கூட்டணிதான் அதிமுக பாஜக கூட்டணி. தமிழ்நாட்டை விட்டு கொடுத்ததுதான் அதிமுகவின் மகத்தான சாதனை. பெண்கள் பாதி நாட்கள் குடிதண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள் ரேஷன் கடையில் எந்தவித பலனும் கிடைப்பதில்லை பெண்கள் உட்பட இந்த அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் மிரட்டப்படுகிறார்கள் கொலை செய்யப்படுகிறார்கள் ஆனால் தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என்கின்றனர்.உரிமைக்காக போராடிய 13 பேரை சுட்டுக் கொன்றனர். வாங்கத்தான் கட்டமைக்கப்பட்ட வன்முறை தமிழகத்தை தவிர வேறு எங்கும் நடந்ததில்லை. பொள்ளாச்சியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் ஒரு பெண் மட்டும் தைரியமாக புகார் அளித்தால் அவருடைய அண்ணனையும் அடித்து நொறுக்கி விட்டனர். ஒரு பெண் காவலர் தன்னுடைய உயர் அதிகாரி தன் மீது பாலியல் வன்கொடுமை செய்தார் என்று புகார் அளிக்க வந்தபோது அவரையும் மிரட்டி அனுப்பினர். விவசாயத்திற்காக போராடிய விவசாயிகளையும் காவல்துறை மூலம் அடித்து விரட்டினர்.நீட் தேர்வு மூலம் நம் பிள்ளைகள் அரசாங்க வேலைக்கும் டாக்டர் படிப்பு படிக்க முடியாமல் ஆகிவிட்டது. 1 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும். விவசாய தடை மறுபடியும் ரத்து செய்யப்படும் கலைஞர் 7000 கோடி ரத்து செய்யப்பட்டு செய்ததைப் போல ரத்து செய்யப்படும் 5 சவரனுக்கு கீழாக உள்ள நகைக் கடன் ரத்து செய்யப்படும். கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு மானியத்தில் கிடைக்கும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் ரேஷன் கடைகளில் பொருள் நியாயமாக ஒழுங்கான அளவு தரமான பொருட்கள் அளிக்கப்படும். பால் விலை குறைக்கப்படும் 100 நாள் வேலை 150 நாள் ஆக உயர்த்தி தரப்படும் 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படும். முதியோர் ஓய்வூதியத் தொகை ஆயிரத்திலிருந்து 1500 ஆக உயர்த்தி தரப்படும். கல்வி கடன் ரத்து செய்யப்படும்.உயர்நிலைப் படிப்பு மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் டேப்ளெட் இலவசமாக வழங்கப்படும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் உள்ள தொழில் பூங்கா மீண்டும் துவங்கப்படும்.திருப்பரங்குன்றம் பகுதியில் கண்மாய் தூர்வாரப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கப்படும்.திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்படும். கொரோனா நேரத்தில் மக்களுக்கு நிதி வழங்க கோரியது 5000 ரூபாய் ஆனால் ஆயிரம் ரூபாய் தான் கொடுக்கப்பட்டது மீதி 4 ஆயிரம் ரூபாய் கலைஞரின் பிறந்த நாளன்று உங்களுக்கு வழங்கப்படும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் முடங்கிப்போன தேமுதிக வேட்பாளர் பிரச்சாரம்கூட்டணி கட்சியினர் ஆதங்கத்தில் வாக்கு சேகரிப்பு.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க ,தே.மு.தி.க கூட்டணி வேட்பாளராக தே.மு.தி.க வேட்பாளர் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசாமி நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் நிலக்கோட்டை நால் ரோட்டில் ஒரு நாள் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து சென்றார். அதேபோன்று அ.ம.மு.க கட்சி நிறுவனரும், கட்சி பொதுச் செயலாளருமான டி.டி.வி தினகரன் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் முன்பு முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு சென்றார். இந்த 2 நிகழ்வுக்கு மட்டுமே நிலக்கோட்டை சட்டமன்ற தேமுதிக வேட்பாளர் ராமசாமி பிரச்சாரத்திற்கு வந்தார். அதன் பின்னர் நிலக்கோட்டை தொகுதியில் பக்கமே வரவே இல்லை. தேமுதிக கட்சியினரும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக கட்சியினரும் பிரச்சாரத்திற்காக நிலக்கோட்டை பகுதியில் 2 நாட்கள் அனுமதி வாங்கினார்கள். வத்தலகுண்டு பகுதியில் ஒரு நாள் அனுமதி வாங்கினார்கள். ஆனால் அனுமதி பெற்றதைத் தவிர பிரச்சாரத்திற்கு தேமுதிக வேட்பாளர் ராமசாமி வரவே இல்லை.. அனுமதி வாங்கி விட்டோம் என்று தேமுதிக , அம முக கட்சியினருடன் இணைந்து நிலக்கோட்டை பகுதியில் மட்டுமே ஒரே ஒரு நாள் மட்டும் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்தப் பிரச்சாரத்தில் முதல் நாளிலேயே மைக்கேல் பாளையத்தில் ஒருவர் டிடிவி தினகரன் படத்தையும் தேமுதிக கட்சி நிறுவனர் விஜயகாந்த் படத்தையும் கிழித்து எறிந்த சம்பவம் நடந்தது. இதற்கு காரணம் பரவலாக கட்சியினரிடையே பேசியது என்னவென்றால் வேட்பாளர் இல்லாமல் ஏன் பிரச்சாரம் செய்த என் செய்ய வந்தீர்கள் என்று அந்தக் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்தும் நிலக்கோட்டை தொகுதி பக்கம் தேர்தல் பிரச்சாரத்திற்காக தேமுதிக வேட்பாளர் ராமசாமி வராதது அக்கட்சியினர் மத்தியிலும், கூட்டணி கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏன் தேமுதிக வேட்பாளர் ராமசாமி பிரச்சாரத்திற்கு வரவில்லை என்று கேட்டால் உடல்நிலை சரியில்லை என்று காரணம் கூறப்படுகிறது. தேமுதிக வேட்பாளர் ராமசாமி பிரச்சாரத்திற்கு வராமல் இருப்பது மிகப்பெரிய அளவில் அந்த கட்சியினரிடையே இந்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
படம் விளக்கம் : ஜம்பு துரை கோட்டை பகுதியில் வேட்பாளர் இல்லாமல் முதல் நாள் கட்சியினர் மட்டும் வாக்குகள் சேகரித்தபோது எடுத்த படம்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி குடங்கள் மேல் அமர்ந்து பத்மாசனம் செய்த சிறுவன் .
திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் தீப மலை ஆன்மிக தொண்டு இயக்கம் ஆகியவை இணைந்து வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் யோகாசன நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடத்தினர். நிகழ்ச்சிக்கு இயக்குனர் ஹரி கோவிந்தன் வரவேற்றார். நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்சந்திரன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் 5 வயது தர்ஷன் என்ற சிறுவன் இரண்டு காலி குடங்களை் ஒன்றின் மேல் ஒன்றை அடுக்கி வைத்து அதன் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினான். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாநிதி கலந்துகொண்டு சிறுவனை வாழ்த்தி பரிசு வழங்கினார். மேலும் இச்சிறுவன் தக்காளிகள் மேல் அமர்ந்து பத்மாசனம் உள்ளிட்ட 21 ஆசனங்கள் செய்து உலக சாதனை செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குடகனாறு ஆற்றின் நீரினை முறையாக நிலக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பப்படும் அ.தி.மு.க வேட்பாளர் வாக்குறுதி.
நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ். தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ நிலக்கோட்டை தொகுதியில் உள்ள என்.கோயில்பட்டி, ராஜதானிகோட்டை ,ராமராஜபுரம், வத்தலகுண்டு, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர் பேசியதாவது: நிலக்கோட்டை தாலுகாவிலுள்ள செங்கட்டாம்பட்டி, சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாய் குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய், கொங்கர்குளம் கண்மாய், சிலுக்குவார்பட்டி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு குடகனாறு ஆற்றின் ஒரு பகுதியான ராஜ வாய்க்கால் மூலமாக ஆண்டுதோறும் மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் கிடைக்கும்.இந்த ராஜவாய்க்கால் நன்றாக தூர்வாரபட்டதால் தான் செங்கட்டாம்பட்டி கண்மாயும், சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாய், கொங்கர்குளம் கண்மாய், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிரம்பி வழிந்தது. இதுபோன்று வருடம்தோறும் அனைத்துக் கண்மாய்களை நிரப்ப தொடர்ந்து முழுமூச்சாக பாடுபடுவோம். அணைப்பட்டி பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளதால் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரியும் காரணங்களால் அணைப்பட்டியில் நவீன முறையில் பஸ் நிலையம் உருவாக்கப்படும். நமது தொகுதியை பொறுத்தவரை விவசாயம் சார்ந்த தொழில்களை கொண்ட பகுதியாக இருப்பதால் விவசாயத்திற்குத் தேவையான விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை இலவச மின்சாரமும், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய் 2500, கல்லூரி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி, விவசாயம் சார்ந்த தொழில்களான விலையில்லா ஆடுகள் , கறவை மாடுகள் கால்நடைகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை வழங்கிய அரசு அதிமுக அரசுதான். நான் உங்க ஊர்க்காரி, உங்களுக்கு எந்த நேரம் எது வேணாலும் பக்கத்துல இருக்கேன் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம். பொது மக்கள், விவசாயிகள், சகோதர, சகோதரிகள் அனைவரும் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் எனக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தில் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், எஸ். தும்மலபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல், உட்பட அ.தி. மு.க. வினர், அ.தி.மு.க கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம் : நிலக்கோட்டை அருகே என்.கோவில்பட்டியில் அ.தி.மு.க.வேட்பாளர் எஸ்.தேன்மொழி சேகர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தபோது எடுத்தபடம்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எக்ஸ் கதிர் நிறமாலைமானி கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் வில்லியம் லாரன்சு பிராக் பிறந்த நாள் இன்று (மார்ச் 31, 1890).
வில்லியம் லாரன்சு பிராக் (William Lawrence Bragg) மார்ச் 31, 1890ல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் பிறந்தார். இவர்களது குடும்பம் ஆங்கிலேய வம்சாவளி எனினும் லண்டனில் பிறந்து வளர்ந்த இவரது தந்தை வில்லியம் ஹென்றி பிராக் பணியின் காரணமாக ஆஸ்திரேலியாவில் வசித்த போது அங்கு பிறந்தார். இவருடைய தாயாரின் பெயர் குவெண்டோலின் பிராக். இவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. 1921ல் ‘ஆலிசு கிரேசு ஹாப்கின்சன்’ என்ற மங்கையை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு மக்கள் பிறந்தனர். ‘பில்லி’ என அழைக்கப்பட்ட இவர் சிறு வயது முதலே மிகவும் சுறு சுறுப்பாக இருந்த இவர் கணிதம் அறிவியல் ஆகியவற்றில் ஆர்வம் செலுத்தினார். இவருக்கு ஐந்து வயதிருக்கும்போது இவருடைய மூன்று சக்கர வண்டியிலிருந்து கீழே விழுந்து கால்முறிவு ஏற்பட்டது.
அப்போது வில்லெம் ரோண்ட்கன் எக்ஸ் கதிரைக் கண்டுபிடித்திருந்த நேரமாதலால், இவருடைய தந்தை வில்லியம் ஹென்றி பிராக் அக்கதிர் முறையைப் பயன்படுத்தி இவருடைய எலும்பு முறிவை அறிந்துகொண்டு சிகிச்சை செய்தார். இது ஆஸ்திரேலியாவில் எக்ஸ் கதிரைப் பயன்படுத்திய முதல் நிகழ்ச்சியாகும். கடற்கரைக்குச் செல்லும் போதெல்லாம் கிளிஞ்சல்கள், கூடுகள் ஆகியவற்றைச் சேமிப்பது இவருடைய வழக்கம். அவ்வாறு சேமிக்கும்போது எதிர்பாராத வகையில் ஒரு புதிய மீனைக் கண்டறிந்தார். அந்த மீன் தற்போது இவருடைய் பெயரால் ‘செப்லா பிராக்கில்'(Sepla Braggil) என்று அழைக்கப்படுகிறது. அறிவியலில் மட்டுமல்லாது ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுதல், தோட்ட வேலை, இலக்கியம் ஆகியவற்றிலும் இவர் ஆர்வம் செலுத்தினார்.
படிப்பில் இவருடைய வயதின் தன்மையை மீறிய அறிவுத்திறன் இவருக்கு அமைந்திருந்தது. இவருக்கு பதினைந்து வயதான போது ‘அடிலெய்டு பல்கலைக்கழகத்தில்’ சேர்ந்தார். 1908ல் கணிதத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆனார். 1909ல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கைக்கழகத்தில் சேர்ந்தார். அதே நேரம் இவருடைய குடும்பமும், இங்கிலாந்தின் லீட்சு என்ற இடத்தில் குடியேறியது. திரித்துவக் கல்லூரியில் (Trinity College) ஒரு சிறந்த கணித வல்லுநராகச் சேர்ந்தார். மிக உயர்வான கல்வி ஊக்கத்தொகை இவருக்குக் கிடைத்தது. இவர் தேர்வு எழுதும் சமயம் நிமோனியாவில் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையில் இருக்க நேர்ந்தது. ஆனால், இவருடைய தந்தை இவரை இயற்பியலில் கவனம் செலுத்தும்படி ஆர்வமூட்டினார். அவரும் அவ்வாறே செயல்பட 1911ல் இயற்பியல் பட்டம் பெற்றார்.
1912ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை முடித்துப் பட்டம் பெற்ற பிறகு அங்குள்ள கேவெண்ட்ஷ் ஆய்வுக் கூடத்தில் தன் பணியைத் தொடங்கினார். அப்பொழுது எக்ஸ் கதிர்கள் அலைவடிவம் கொண்டதா? அல்லது துகள்களா? என்ற விவாதம் தொடங்கியிருந்தது. இது பற்றி தந்தையும், மகனும் பல வகைகளில் விவாதித்தனர். எக்ஸ் கதிர்கள் பற்றியும், மேக்சு வான் லாவின் எக்ஸ் கதிர் வகைகள் பற்றியும், ஆய்வு செய்தபோது இவர்களுக்குப் பல வினாக்களுக்கு விடைகள் கிடைத்தன. இக்கதிர்கள் சில வகைகளில் அலை வடிவத்திலும் சில வகைகளில் துகள்களாகவும் செயல்படுகின்றன என்பதை உணர்ந்தனர். தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு பிராக் விதியை (Bragg’s Law) உருவாக்கினர். 1912ல் நவம்பரில் இந்த ஆய்வுகளை அறிக்கை வடிவத்தில் வெளியிட்டனர். எக்ஸ் கதிர்களைக் கொண்டு படிகங்களில் ஆய்வு நடத்திய பிறகு இருவரும் சேர்ந்து 1915ல் ‘எக்சு கதிர்கள் மற்றும் படிக அமைப்பு (X rays and Crystal Structure) என்ற புத்தகத்தை வெளியிட்டனர்.
முதல் உலகப் போரின் போது இவர் பிரான்சில் இராணுவத்தில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணி புரிந்தார். அந்தப் போரில் இவருடைய இளைய சகோதரர் ‘பாப்’ (Bob) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பணியில் இருந்தபோதுதான் இவருக்கு நோபெல் பரிசு பெற்ற செய்தி கிடைத்தது. 1919ல் மான்செஸ்டரில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். 1937 வரை அப்பதவியில் இருந்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அனைத்துலக படிக வரைவுச் சங்கம் (International Union of Crystallography) ஒன்றை நிறுவி அதன் ஆரம்பகாலத் தலைவராகச் செயல் பட்டார். இவர் தந்தையைப் போலவே ராயல் நிறுவனத்தில் பல சிறுவர்களுக்கு அறிவியல் தொடர்பான பல சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். 1937-38 ல் தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடத்தின் இயக்குநராகப் பணி புரிந்தார். 1938 மற்றும் 1954ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிஷ் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1953ல் டி.என்.ஏ அமைப்பைக் கண்டறிவதில் முக்கியப் பங்கு வகித்தார். பிரான்சிஸ் கிரிக், ஜேம்சு வாட்சன் என்பவர்கள் இவரின் கீழ் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். கிரிக், வாட்சன், வில்கின்சு ஆகிய மூவரும் 1962ல் நோபல் பரிசு பெற பிராக் பரிந்துரை செய்தார். 1954, 1966 ஆண்டுகளில் ராயல் கழகத்தின் தலைவராகப் பணிபுரிந்தார்.
பிற்காலத்தில் லாரன்சு ‘வடிவத் தொடர்புகளினால் தூண்டப்படும் முன்னேற்றங்கள் (Geometric relations could stimulate progress) என்ற வகையிலும் சிலிக்கேட்டுகள், சிலிக்கேட்டு வேதியல், உலோகவியல், புரத வேதியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். ராயல் நிறுவனத்தில் புரத மூலக்கூறுகளில் எக்சு கதிர்களைச் செலுத்தி அவற்றின் சிக்கல்களை ஆராய்வதற்கு என தனிப்பட்ட ஒரு குழுவை அமைத்துக் கொண்டு ஆய்வுகளில் ஈடுபட்டார். இவருடைய சிறப்பான சொற்பொழிவுகளாலும் இவரின் செயல்பாட்டுத் திறனாலும் இவருடைய ஆய்வுத் துறைகளில் பெரிதும் போற்றப்பட்டார்.
சோடியம் குளோரைடு என்ற வேதிச் சேர்மம், சோடியம் குளோரைடு என்ற மூலக்கூறுகளைப் பெறவில்லை. ஆனால், சோடியம் அயனிகளும், குளோரின் அயனிகளும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கான வடிவத்தில் அமைந்துள்ளன எனக் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்பு வேதியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. படிகங்களில் உள்ள அணுக்கள் அமைந்திருக்கும் விதத்தை இவர் ஆய்வு செய்தார். இவருடைய தந்தை எக்ஸ் கதிர் நிறமாலை மானி ஒன்றை உருவாக்கினார். மேலும் எக்ஸ் கதிரின் கதிரியக்கம் பற்றியும் விளக்கினார். இந்தக் கண்டு பிடிப்புகளுக்குத் தந்தை மகன் இருவருக்கும் நோபல் பரிசு 1915ல் வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற போது இவருடைய வயது 25. மிக இளம் வயதில் நோபெல் பரிசு பெற்றவர் பிராக் ஆவார். மத்யூக்கி பதக்கம், ராயல் பதக்கம், காப்ளே பதக்கம், ஹூக்ஸ் பதக்கம், நாட்டின் சிறந்த வீரர்(Knight)என்ற பட்டம் மற்றும் மதிப்பியல் பட்டம் (Companion of Honour)(இங்கிலாந்து நாட்டு அரசியால்) ஆகிய பட்டங்களும் பதக்கங்களும் இவரைப் பாராட்டி வழங்கப்பட்டன.
எக்ஸ் கதிர்களின் படிக அமைப்பு, சிலிகேட்டுகளின் கட்டமைப்பு மற்றும் தாதுக்களின் மூலக்கூறு அணு அமைப்பு மறைவு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். பிராக் ஜூலை 1, 1971ல் தனது 81வது வயதில் உடல் நலம் குன்றி இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவருடைய சிறப்பைப் போற்றும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. ஆஸ்திரேலியாப் பல்கலைக் கழகத்தில் இவருடைய பெயரில் தங்கப்பதக்கம் ஒன்று இயற்பியல் பிரிவில் சிறப்பாகப் பணி புரிபவருக்கு 1992ம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
குளோரோபில் நிறமிகள் ஆய்வு செய்த, நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் கரிம வேதியியலாளர் ஹான்ஸ் பிஷ்ஷர் நினைவு நாள் இன்று (மார்ச் 31, 1945).
ஹான்ஸ் பிஷ்ஷர் (Hans fischer) ஜூலை 27, 1881ல் ஜெர்மன் பிராங்பேர்ட்டின் நகரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் டாக்டர் யூஜென் பிஷ்ஷர், வைஸ்பேடனில் உள்ள கல்லெ& கோ நிறுவனத்தின் இயக்குனர், மற்றும் ஸ்டுட்கார்ட் தொழில்நுட்ப உயர்நிலை மற்றும் அண்ணா ஹெர்டெகன் பள்ளிகளில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். இவர் ஸ்டூட்கார்ட்டில் ஆரம்ப பள்ளிக்குச் சென்றார். பின்னர் 1899ம் ஆண்டில் வைஸ் பேடனில் “ஹுமனிஸ்டிஸ்செஸ் ஜிம்னாசியம்” மெட்ரிகுலேசன் பள்ளியில் பயின்றார். முதலில் இவர் லோசான் பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் மருந்துவம் படித்து, பின்னர் மார்பர்க்கில் படித்தார். இவர் 1904ல் பட்டம் பெற்றார். 1908 ஆம் ஆண்டில் இவர் எம்.டி. படிப்பிற்காக தகுதிபெற்றார். பிஷ்ஷர் 1935ல் வில்ட்ரூட் ஹூப்பை திருமணம் செய்து கொண்டார்.
முதன்முதலில் மூனிச்சில் உள்ள மருத்துவ நிலையத்திலும், பின்னர் எமில் ஃபிஷ்ஷரின் கீழ் பர்ஸ்ட் பெர்லின் கெமிக்கல் இன்ஸ்டிடியூட்டிலும் பணிபுரிந்தார். 1911ல் முனிச் திரும்பி ஒரு வருடத்திற்கு பின் அக மருத்துவவியல் பிரிவில் விரிவுரையாளராகத் தேர்வானார். 1913ம் ஆண்டில் முனிச்சில் உள்ள உடலியல் கல்விநிறுவனத்தில் உடலியல் பிரிவில் விரிவுரையாளராக ஆனார். 1916ம் ஆண்டில் இன்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியல் பேராசிரியராக ஆனார். அங்கிருந்து இவர் 1918ல் வியன்னா பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்.
1921ம் ஆண்டு முதல் முனிக்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் பேராசிரியராக இருந்தார். பிஷ்ஷரின் விஞ்ஞானப் பணிகள் பெரும்பாலும் இரத்த, பித்த நீர், மற்றும் இலைகளின் குளோரோபில் நிறமிகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதோடு, இந்த நிறமிகளை உருவாக்கும் பைரொல்லின் வேதியியலுடன் தொடர்புடையவையாக இருந்தன. இவரது பிலிரூபின் மற்றும் ஹெமின் உருவாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. 1930ல் நோபல் பரிசு பெற்றார். 1976ம் ஆண்டில் இவரின் நினைவாக ஃபிஷர் நிலவுக் குழிகள் என நிலவுக் குழிக்கு பெயரிடப்பட்டது.
அறிவியல் லியோபோல்டினாவின் அகாடெமி, தனியார் கவுன்சிலர், லிபிக் மெமோரியல் பதக்கம், வேதியியல் நோபல் பரிசு, கௌரவ டாக்டர் பட்டம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் லண்டனின் ராயல் சொசைட்டி டேவி மெடல் போன்ற சிறப்புகளை பெற்றுள்ளார். இரண்டாம் உலகப் போரின் கடைசி நாட்களில் இவர் தனது நிறுவனம் மற்றும் தனது உழைப்பு அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியால் ஜெர்மனி மார்ச் 31, 1945ல் ஜெர்மன் முனிச் நகரில் தனது 63வது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள் இன்று (மார்ச் 31, 1997).
இலைமன் சுட்டிராங் சுபிட்சர் (Lyman Strong Spitzer) ஒகியோவில் உள்ள தொலிடோவில் ப்ரெசுபைடேரியக் குடும்பத்தில் ஜூன்26, 1914ல் பிறந்தார். இவரது தந்தை இலைமன் சுட்டிராங் சுபிட்சர் ஆவார். இவரது தாயார் பிரம்பேக் எனப்படு பிளாஞ்சிகேரி ஆவார். தந்தைவழி பாட்டியால் இவர் புதுமைப்புனைவாளர் எலி விட்னெவின் உறவினர். ஓகியோ, தொலிடோவில் உள்ள சுகாட் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் 1929ல் பிலிப்சு கல்விக்கழகத்தில் பயின்றார். அதன் பிறகு, யேல் கல்லூரியில் சேர்ந்து 1935ல் பை—பீட்டா-கப்பா பட்டம் பெற்றார். அப்போது இவர் மண்டையோடு எலும்பு அமைப்பின் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஓராண்டூ பயிலும்போது ஆர்த்தர் எடிங்டனாலும் இளைஞர் சுப்பிரமணியன் சந்திரசேகராலும் பெரிதும் கவரப்பட்டுள்ளார். பின் ஐக்கிய அமெரிக்கா பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் 1935ல் கலை முதுவர் பட்டமும், 1938ல் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
சுபிட்சர் யேல் பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் துறைப்புல உறுப்பினராக இருந்தபோது போர்க்கால அறிவியல் பணியாக சோனார் உருவாக்கப் பணியில் ஈடுபட நேர்ந்துள்ளது. இவர் 1946 இல் விண்வெளியில் இயங்கும் தொலைநோக்கிகளை உருவாக்குவதில் ஈடுபட்டார். இவர் உடுக்கணங்காணி எனும் மின்மக் கருவியை உருவாக்கினார். நாசாவின் இந்தக் கருவி சுபிட்சர் விண்வெளித் தொலைநோக்கி எனப்படுகிறது. இவர் அறிவியலாளராக, விண்மீன்கள் உருவாக்கம் மின்ம இயற்பியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1947ல், என்றி நோரிசு இரசலுக்குப் பிறகு பிரின்சுடன் வான்காணக இயக்குநரானார். இதற்கு இவரும் மார்ட்டின் சுவார்சு சைல்டும் கூட்டாக 1970 வரை தலைமையேற்றனர்.
சுபிட்சரும் டொனால்டு மார்ட்டனும் 1965ல் கனடா, நுனாவட் மாவட்டப், பாஃபின் தீவில் அமைந்த ஆயூட்டக் தேசியப் பூங்காவில் உள்ள 1675 மீட்டர் உயரத் தோர் மலையை முதன்முதலாக ஏறிச் சாதனை படைத்தனர். அமெரிக்க ஆல்பைன் குழு உறுப்பினரான சுபிட்சர் “இலைமன் சுபிட்சர் மலையேற்ற முன்னேற்ற விருது” எனும் விருதை உருவாக்கினார். இந்த விருது ஒவ்வோராண்டும் மலையேற்றத்தில் முனைந்து வெற்றியீட்டும் வீரர்களுக்கு 12,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசை வழங்குகிறது. கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம், ஹென்றி ட்ராப்பர் பதக்கம், நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் மற்றும் க்ராப்போர்டு பரிசு ஆகிய பதக்கங்கள் இவரைப் பாராட்டி வழங்கப்பட்டன.இலைமன் சுட்டிராங் சுபிட்சர் மார்ச் 31, 1997ல் தனது 82வது வயதில் பிரிசிடோன் நியூ ஜெர்சி அமெரிக்காவில் மரணமடைந்தார். பிரின்சுடன் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகளில் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து வேட்பாளர்களின் முகவர்களுடன் விளக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல்6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சுடுபிடித்துள்ளது. மேலும் தேர்தல் பணிகளில் அதிகாரிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 410 வாக்கு சாவடி மையங்கள் உள்ளது. வாக்குசாவடி மையங்களில் (விவி பேட்டன் இயந்திரங்கள்) இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் குறித்தும், வாக்குசாவடிகளில் பொருத்தப்படும் இயந்திரங்கள் மூலமாகவே இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து உசிலம்பட்டி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஜோதியாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் அனைத்து வேட்பாளர்களின் முகவர்களுக்கு எல்இடி விவி மூலம் விளக்க பயிற்சியும், ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.