திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியம் மேல் கரிப்பூர் பகுதியை சேர்ந்த 7 மாதம் கர்ப்பிணியான சுந்தரி தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது காதல் கணவர் சிலம்பரசனுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் மேல்முடியனூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் மேல் கரிப்பூர் பகுதியை சேர்ந்த சுந்தரி ஆகி இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர் இவர்களது காதலுக்கு சிலம்பரசனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சுமார் 11 மாதங்களுக்கு முன்பு சென்னை ஊரப்பாக்கம் மாரியம்மன் ஆலயத்தில் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு சிலம்பரசனின் பெற்றோர்கள் தனது உறவினருடன் வந்து சிலம்பரசன் கட்டாயப்படுத்தி மிரட்டி அழைத்து சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து என்ன செய்வதென தெரியாத இருந்து வந்த சுந்தரி சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு அதன் பிறகு செங்கத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் சிலம்பரசன் அழைத்து விசாரணை செய்து வந்த மகளிர் காவல்துறையினர் இருவரையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது தனக்கு சுந்தரியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என போலீசாரிடம் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.தனது காதல் கணவனின் பெற்றோர்கள் தனது கணவனை மிரட்டி அழைத்துச் சென்றதாக கூறிய சுந்தரி அதிர்ச்சி அடைந்தார் தற்போது சுந்தரி 7மாத கர்ப்பிணியாக உள்ளார் இவர் கடந்த மூன்று மாதங்களாக தனது சகோதரி வீட்டில் தங்கி உள்ளார். தனது கணவர் குடும்பத்தினர் அவரை என்னோடு சேர்ந்து வாழ விடாமல் மிரட்டி வீட்டுக்காவலில் வைத்திருப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருவதாகவும் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எவ்வித பலனும் இல்லாததால் மனமுடைந்த சுந்தரி செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெயிலில் அமர்ந்து தருணா போராட்டத்தில் ஈடுபட்டார்.தகவலறிந்து வந்த செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக காவலர்கள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்ததை அடுத்து சுந்தரி தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி 7 மாத கர்ப்பிணி பெண் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது
Category:
செய்திகள்
பெண்களிள் ஓட்டு அதிகமாக பதிவாகிருப்பதால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக – பாஜக ஆட்சி – எல்.முருகன்
by mohan
written by mohan
பெண்களிள் ஓட்டு அதிகமாக பதிவாகிருப்பதால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக – பாஜக ஆட்சி அமையும் என மதுரை விமானநிலையத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி.விடுதலை சிறுத்தைக.ள் கட்சியினர் அதிகளவில் பாஜகவில் இணைவதினால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலை சிறுத்தையினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும்,டாக்டர். அம்பேத்கர் உலக தலைவர் எனவும் அவரை ஒரு ஜாதிய வட்டாரதிற்குள் அடைக்கக்கூடாது எனவும் கூறினார்..!கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் போதிய ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத நிலையில், பிரதமரின் நிவாரண நிதி எங்கே என்ற ராகுல் காந்தி கேள்விக்கு ராகுல்காந்திக்கு கேள்வி கேட்பதை தவிர்த்து வேறென்ன தெரியும் என கேள்வி எழுப்பிய முருகன், எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டுமே தவிர கேள்விகள் மட்டும் கேட்க கூடாது என விமர்சனம் செய்தார்.!தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என கேள்விக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் பெண்களில் ஓட்டு அதிகளவில் பதிவாகியிருப்பதாகவும், பொதுவாக பெண்களின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என்றும், எனவே இந்த தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறினார்…!!
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருநகர் மொட்டை மலை குறிஞ்சி நகர் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அகற்றினர்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திரு நகர் குறிஞ்சி நகர் பகுதியில் மொட்டை மலை எனும் பகுதி உள்ளது இங்கு அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதால் திருப்பரங்குன்றம் தாசில்தார் மூர்த்தி மற்றும் திருநகர் காவல் ஆய்வாளர் காந்திமதி இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் குறிப்பிட்ட வீடுகளை இடிக்காமல் விட்டதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணபட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அனைத்து வீடுகளையும் இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.வீடுகளை இழந்த பொதுமக்கள் அழுத காட்சி பரிதாபமாக காணப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து விரைந்து செயல்பட்டு அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு .
by mohan
written by mohan
மதுரை மேலமாசி வீதி டி.எஸ்.பி. டவர் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா வங்கி நள்ளிரவு 12.30 மணி அளவில் தீ பிடித்ததாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது இதனை அடுத்து தீயணைப்பு இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த அனுப்பானடி நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மின் இணைப்பை துண்டித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த ஏ சி மற்றும் கம்ப்யூட்டர் இன்வெர்ட்டர்கள் எரிந்து முற்றிலும் நாசம் ஆனது விபத்துக்கான காரணம் குறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அவனியாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்து கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் பாலாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இக்கோவில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற கோவிலாகும் ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெறுவது போல் அவனியாபுரத்தில் உள்ள பாலம் மீனாம்பிகை திருக்கோவிலும் திருக்கல்யாண விழா சித்திரைத் திருவிழா நிகழ்வு நடைபெறும் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா அதற்கு முன்னோட்டமாக கோவிலில் சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது வழக்கம்போல் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளாமல் அச்சுறுத்தல் காரணமாக குறைவான பக்தர்களுடன் கொடியேற்று விழா நடைபெற்றது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பனைவெல்லம், பனங்கற்கண்டில் கலப்படம் : தடுப்பு குழு தலைவர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.
by mohan
written by mohan
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில்,” பனைமரம் தமிழகத்தின் மாநில மரம். பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படுவதோடு அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. பனங்கூழ், பனம்பழம், பனைவெல்லம், அதிலிருந்து தயாரிக்கப்படும் பனை கருப்பட்டி பனங்கற்கண்டு போன்றவை மருத்துவ குணம் உள்ளவையாக உள்ளன. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பனை சார்ந்த தொழில்கள் அதிக அளவில் உள்ளன. உடன்குடி, வேம்பார் பகுதி பனை வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால் பலர் இதனை தவறாக பயன்படுத்தி சர்க்கரை பாகு, சர்க்கரை ஆகியவற்றோடு சில ரசாயனங்களைச் சேர்த்து பனை வெல்லம் பனங்கற்கண்டு போன்ற தோற்றத்தையும் வாசனையையும் ஏற்படுத்தி விற்பனை செய்கின்றனர். உடன்குடி பகுதியில் சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கும் நிலையில் மாதம் 120 டன் சர்க்கரை அப்பகுதியில் விற்பனையாகிறது. இதன் மூலம் சர்க்கரை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமல்லாமல், இது போன்ற உணவு கலப்படத்திற்கும் பயன்படுத்தப்படுவது உறுதியாகிறது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றை கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்கவும் அதற்கு அனுமதி வழங்கவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் சர்க்கரைப்பாகு, சர்க்கரை ஆகியவற்றில் கலப்படம் செய்து பனை வெல்லம் பனங்கற்கண்டு போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்கும் போது கலப்படங்கள் தடுப்பதற்காக மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் மாநில அளவில் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் அடுத்த வழக்கு விசாரணையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையை சேர்ந்த தம்பதியின் குழந்தைக்கு தமிழ்நதி என்று அழகான தமிழ்ப்பெயர் சூட்டிய திருமாவளவன்.
by mohan
written by mohan
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான அன்பழகன்மகன் அறிவித்தரசுதிருமணம் நடைபெற்றது.இத் திருமண நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்டுகொள்ளாத காரணத்தினால் அவருடைய வீட்டிற்கு இன்று நேரில் சென்று அறிவுத்தரசு வைதேகி மணமக்களை வாழ்த்தினார்.தொடர்ந்து தலைவர் தொல் திருமாவளவன் மணமக்கள் இருவருக்கும் மாலை எடுத்துக் கொடுத்தார்.அதனைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்த சூர்யா மகேஸ்வரி தம்பதியின் குழந்தைக்கு தமிழ்பெயர் ஆன தமிழ்நதி என்று அழகான பெயர் சூட்டினார்.இதில் வி சி க கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஆய்வு பணி..
by mohan
written by mohan
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் சீவநல்லூர் ஊராட்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆணையாளர் இராதா அவர்கள் தலைமையில் அனைத்து கடைகளுக்கும் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வழங்கப்பட்டது. மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கும் படியும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் சீவநல்லூர் பகுதி மக்களுக்கு மாஸ்க் அணிவதின் அவசியம், கைகளை சுத்தமாக கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், பாதுகாப்புடன் இருத்தல் குறித்து வலியுறுத்தப்பட்டது.கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆனந்த், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம், சீவநல்லூர் ஊராட்சி செயலர் இசக்கி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதல் வெற்றிகரமான விமானத்தை உருவாக்கிய அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ரைட் சகோதரர், வில்பர் ரைட் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1867)
by mohan
written by mohan
வில்பர் ரைட் ஏப்ரல் 16, 1867ல் மில்வில், இண்டியானாவில் கிறிஸ்துவப் பாதிரியார் மில்டன் ரைட், தாய் சூசன் ரைட் இருவருக்கும் பிறந்தார். இவரது சகோதரர் ஓர்வில் ரைட். இருவரும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர். சாதாரணப் பொதுப் பள்ளிக்கூடத்தில்தான் இருவரும் படித்தவர்கள். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது ஓர்வில் குறும்புத்தனம் செய்தார். அதற்காகவே ஒரு முறை அவர் பள்ளியைவிட்டு வெளியேற்றப்பட்டார். இருவரும் ஏனோ கல்லூரிப் படிப்புக்கு அனுப்பப்படவில்லை. சிறு வயதில் அவர்கள் அறிவாற்றல் துறைகளில் தொடரவும், ஒன்றில் ஆர்வம் எழுந்தால், அதை ஆராயும்படிப் பெற்றோர் ஊக்க மூட்டினர். சுயமாய்த் தனித்துச் சிந்தனை புரிவது, ஒரு கொள்கையைப் பின்பற்றிச் செயல்படுவது, போன்ற நற்குணங்கள் இவர்கள் தந்தையிடம் கற்றவை. இவ்விருவரும் திருமணமே செய்துகொள்ளவில்லை.
தந்தையிடம் கற்றதை விடத் தாயிடம், இருவரும் அறிந்து கொண்டது அதிகம். தாய் கல்லூரிக்குச் சென்று அல்ஜீப்ரா, ஜியாமிதி கற்றுக் கொண்டவள். பையன்களுக்குப் ‘பனிச் சறுக்கி எப்படி டிசைன் செய்வது என்று சொல்லிக் கொடுத்து, படத்தைத் தாளில் வரைய வைத்து, இருவரையும் பலகையில் செய்யக் கற்றுக் கொடுத்தவள் தாய். முதலில் தாளில் துள்ளியமாக வரைந்தால், பின்னல் அதைச் செய்யும் போது, முறையாக அமைக்கலாம் என்று சிறு வயதிலேயே சிறந்த செய்முறை வழியைப் புகட்டியவள் தாய். அதைப் பின்பற்றி இருவர் அமர்ந்து செல்லும் பனிச்சறுக்கி ஒன்றைப் பலகையில் செய்து, போட்டியில் கலந்து கொண்டு முதலாவதாகப் பனியில் சறுக்கி வெற்றியும் அடைந்தனர்.
ஒரு சமயம் தாயுடனும், தம்பியுடனும் டேடன் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற போது, பறவை ஒன்று வானிலிருந்து நீரில் பாய்ந்து, ஒரு மீனோடு மீண்டதைக் கண்டு, பதினொரு வயதுச் சிறுவன் வில்பர் பேராச்சிரியம் அடைந்தான். பறவை எப்படிப் பறக்க முடிகிறது, அம்மா? என்று வில்பர் கூர்மையாகக் கேட்டான். இறக்கைகளால் பறக்கிறது என்று கூறினாள் தாய். வில்பருக்குத் தாயின் பதில் திருப்தி அளிக்கவில்லை. எப்படி அம்மா? பறவை நீரில் பாயும் போதும், மீனோடு மேல் எழும் போதும், அதன் இறக்கைகள் அசையவே இல்லை அம்மா என்று தாயைக் குறுக்குக் கேள்வியில் மடக்கினான் வில்பர். தாயால் அவனுக்கு விளக்கம் தர முடியவில்லை. நமக்கும் இறக்கைகள் இருந்தால் நாமும் பறக்கலாம், இல்லையா அம்மா? என்றான் வில்பர். கடவுள் நமக்கு இறக்கைகள் அளிக்கவில்லை என்றாள் தாய். இறக்கைகளை நாமே தாயாரித்து மாட்டிக்கொள்ளலாம், அம்மா என்று தர்க்கத்தைப் பூர்த்தி செய்தான், வில்பர்.
1878ல் அவருடைய தந்தை சர்ச் ஆஃப் தி யுனைடெட் பிரெத்ரென் இன் கிறிஸ்ட்டில் ஆயராக இருந்தார். பணிநிமித்தமாக அவர் அடிக்கடி பயணம் செய்தார். அவ்வாறு ஒருமுறை அவர்தம் பயணத்தின்போது எலிகாப்டர் பொம்மை ஒன்றை அவ்விரு குழந்தைகளுக்கும் வாங்கிவந்தார். வான்வழி தொலையளவு முன்னோடியான அல்ஃபோன்ஸ் பேனாட் என்ற பிரஞ்சு நாட்டவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு காகிதம், மூங்கில், கார்க்கு, இரப்பர் வளையம் ஆகியவற்றால் ஒரு அடி நீளத்திற்கு அப்பொம்மை செய்யப்பட்டிருந்தது. அது உடையும் வரை வில்பரும் ஓர்வில்லும் விளையாடினர். பிறகு அவர்களாகவே அதனை மீளமைத்தனர். அந்தப் பொம்மைதான் தங்களுக்கு பறப்பதற்கான ஆர்வத்துக்கான ஒரு தொடக்கப் பொறியாக இருந்தது என்று பிற்பாடு அவர்கள் தங்கள் அனுபவம் பற்றிச் சுட்டிக்காட்டினர்.
தம் யூகிப்பில், திறமையில் ஆழ்ந்த நம்பிக்கையும், தீர்மானமான முடிவில் தளராத உறுதியும் கொண்டவர்கள். ஏமாற்றம், ஏலாமை, இல்லாமை எதுவும் மனதைக் கலைக்காத விடாமுயற்சி. இரு பையன்களும் சிறு வயதிலிருந்தே பொறிநுணுக்க அறிவும், ஒப்பில்லாத இயந்திரச் செய்திறமையும் கொண்டிருந்தார்கள். தாமே படித்து அறிந்த ஞானத்துடன் முதலில் அச்சு இயந்திரங்களைப் (Printing Machines) புதிதாய் உருவாக்கி, உற்பத்தி செய்தார்கள். அடுத்து சைக்கிள் வண்டிகளை உருவாக்கி, உற்பத்தியும் செய்து விற்றார்கள். இந்த வர்த்தகங்களில் சேர்த்த பணத்தொகையே பின்னால் அவர்கள் விமானத் துறை ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவின. 1896ல் ஆக்டேவ் சனூட்ஸ் (Octave Chanutes) எழுதிய பறக்கும் இயந்திரங்களின் வளர்ச்சி (Progress in Flying Machines) வெளியீடுகளை, ஆழ்ந்து படித்து அறிந்ததுதான், அவர்களது அடிப்படையான ஆரம்பப் பாடம். அறுபது வயதான பிரென்ச் அமெரிக்கன், சனூட்ஸ் தன் சகாகக்களுடன் சிகாகோவுக்கு அருகில் மிச்சிகன் ஏரியின் மணற்பாங்கான தளத்தில், ஐந்து விதப் பொறியிலா ஊர்திகளை (Gliders) ஆயிரம் முறைக்கு மேல் பறக்க விட்டு முயன்றிருப்பவர். 1900ல் ரைட் சகோதரர்கள் டேடனில் தம் ஊர்திச் சோதனைகளை ஆரம்பித்த போது, சனூட்ஸ் அவரது ஆழ்ந்த தோழனாகி, அடிக்கடி கடிதம் எழுதித் தொடர்பு கொண்டிருந்தார்.
ரைட் சகோதரர்கள் விமானத் துறையில் அடி வைத்த காலம், அவர்கள் முன்னேறத் தகுந்த தருணமாக இருந்தது. 1896ல் தான் ஹென்ரி ஃபோர்டு தனது முதல் மோட்டார் காரைச் செய்தார். அப்போதுதான் டீசல் எஞ்சின், பெட்ரோல் எஞ்சின் புதிதாகத் தோன்றி வளர்ச்சி பெற்ற காலம். விமான நகர்ச்சி (Aerodynamics), கட்டமைப்புப் பொறித்துறை (Structural Engineering) ஆகிய பொறியியல் ஆக்க நுட்பங்கள் விருத்தியான காலம். இவற்றை எல்லாம் ஒன்றாய் இணைத்து வானத்தில் விமானத்தைப் பறக்க விடுவது, ரைட் சகோதரருக்கு ஓர் அரிய பெரிய வாய்ப்பாக அமைந்தது. ஜெர்மன் நிபுணர், ஆட்டோ லிலியென்தால் ‘பொறியிலா ஊர்தியில் வெற்றிகரமாய்ச் செய்த பல சோதனைகளை ஆழ்ந்து படித்த, வில்பர்தான் முதலில் பறக்கும் இயந்திரத்தில் மோக முற்றார். 1896ல் லிலியென்தால் தனது சோதனையின் போது, ஊர்தி கீழே விழுந்து மரணம் அடைந்தார்.
1899 ஆண்டு ஒரு சமயம், வில்பர் கழுகு பறப்பதை ஆழ்ந்து ஆராய்ந்த பின், விமானம் விழாமல் சீராய்ப் பறந்து செல்ல, மூன்று அச்சு முறையில் (Three Axes) இயங்கும் பொறியமைப்பு இருக்க வேண்டும், எனக் கண்டு பிடித்தார். அதாவது, முன் நகர்ச்சி (Thrust), மேல் எழுச்சி (Lift), திசை திருப்பி (Turning) ஆகிய ‘முப்புறக் கட்டுப்பாடு‘ என்ற புதிய பறப்பியல் நியதியைச் சிந்தித்து உருவாக்கினார். பறவையைப் போன்று, பறக்கும் இயந்திரம் பக்க வாட்டில் மிதக்க முடிய வேண்டும். மேலே உந்தி ஏறிச் செல்லவோ, கீழே இறங்கி நிற்கவோ இயல வேண்டும். இடப் புறமோ, வலப் புறமோ திரும்ப முடிதல் வேண்டும். தேவைப்பட்டால், இவற்றில் இரண்டு அல்லது மூன்று வித இயக்கங்களையும் ஒரே சமயத்தில் நிகழ்த்த வசதிகள் இருக்க வேண்டும். முன்னகர்ச்சிக்கு வலுவான பளுவற்ற எஞ்சின் தேவைப்பட்டது. எழுச்சி அளிப்பதற்கு ‘தூக்கிகள் (Elevators) வேண்டியிருந்தன. பக்க வாட்டில் திருப்ப திருப்பி (Rudder) வால்புறம் மாட்டப்பட்டது.
விமான இயக்கத்தில் ரைட் சகோதரருக்குப் ‘பறப்பியல் கட்டுப்பாடு ‘ (Flight Control) மிகப் பிரதானம் என்று தோன்றியது. கழுகு, பருந்துகள் உருளும் போது இறக்கைகள் சுழல்வதைக் கண்டார்கள். 1899ல் முதன் முதல் அவர்கள் சோதனை செய்த ‘இரு தளப் பட்டத்தில் (Bi-Plane Kite) சுழலும் இறக்கைகளை பிணைத்திருந்தார்கள். அவ்வாறு இறக்கைகளில் அமைத்ததால் விமானம் திரும்பிடும் போது, ஒருபுறம் எழுச்சி உயர்ந்தும், மறுபுறம் எழுச்சி இணையாகத் தாழ்ந்தும், காற்றை எதிர்த்துச் சீராகத் திரும்ப முடிந்தது. எஞ்சின் பொருத்திய முதல் விமானத்தை இயக்கியதோடு, முப்புற அச்சுக் கட்டுப்பாடுப் பொறியமைப்பைக் கண்டுப்பிடித்து வெற்றிகரமாய்ப் பயன்படுத்திப் பறப்பு இயந்திரவியலைச் (Aerodynamics) செப்பனிட்டுச் சிறப்பித்த பெருமை ரைட் சகோதரர்கள் இருவர்களுக்கு மட்டுமே சாரும்.
டிசம்பர் 17, 1903ல் 12 H.P. பெட்ரோல் எஞ்சின் கொண்ட ‘கிட்டி ஹாக் (Kitty Hawk) என்னும் Flyer பூமிக்கு மேல் முதலில் 12 வினாடிகள், கடைசியில் 30 mph வேகத்தில், 59 வினாடிகள் 852 அடி தூரம் பறந்தது. விமானத்தின் எடை 750 பவுண்டு. இறக்கையின் நீளம் 40 அடி 4 அங்குலம். சரித்திரப் புகழ் பெற்ற இந்தப் பயணத்தைச் செய்த முதல் வீரர், ஆர்வில் ரைட். பிறகு இரண்டு ஆண்டுகள் செம்மைப் படுத்தப்பட்டு, சிறப்பிக்கப்பட்டு, 1905ல் உலகின் முதல் பறக்கும் விமானம், Flyer III உருவானது. அது வானில் 38 நிமிடங்கள் நேரம் பறந்து, 24 மைல் கடந்தது. சிரமமின்றி எட்டாம் எண்போல் வட்ட மிட்டது, பக்க வாட்டில் திரும்பியது. 1908ல் ஐந்து மாதங்களில் வில்பர் மட்டும், 100 தடவைக்கும் மேல் 25 மணி நேரங்கள் பறந்து காட்டியிருக்கிறார். தொடந்து நீண்ட நேரம் பயணம் செய்தது, 2 மணி 20 நிமிடங்கள் பயணம் தடைப் பட்டதற்குப் பெரும்பான்மையான காரணம், எஞ்சினில் பெட்ரோல் தீர்ந்து போனதுதான், எஞ்சினும் சிறியது, பெட்ரோல் கலனும் சிறியது.
1909ல் அமெரிக்கா செப்பனிடப்பட்டு சீர் செய்யப்பட்ட முதல் யுத்த விமானத்தை ரைட் சகோதரர் உதவியில் தயார் செய்து உலகிலே முதன்மையானது. திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்நாள் முழுதும் விமானத்துறைப் படைப்புக்கே தங்களை அர்ப்பணித்த பிரம்மச்சாரி வில்பர் ரைட் 1912ல் ஒரு முறை தொழில்முறைப் பயணமாகப் போஸ்டன் சென்றிருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டேய்டனுக்குத் திரும்பிய பிறகு டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நோயின் தீவிரத்தால் தன்நினைவின்றி பல நாட்கள் இருந்தார். மே 30 , 1912ல் தனது 45வது அகவையில் தமது இல்லத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையைப் பரிசாக அளித்த, எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்து விடும் மகா கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1889)
by mohan
written by mohan
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) ஏப்ரல் 16, 1889ல் இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பா. லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் தான் சார்லியின் அம்மா. இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். ஒரு நாள் மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்னை, பாட முடியவில்லை ஒரே கூச்சல், அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள் ஹென்னா. ஆறு வயது சிறுவன் சார்லி என்ன நினைத்தானோ மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான். விசில், கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது. சில்லறைகள் சீறிப் பறந்தன. சில்லறைகளை பொறுக்கினான், சார்லி. பாடச் சொல்லி கூச்சலிட்டது கூட்டம். சில்லறைகளை பொறுக்கிய பிறகுதான் பாடுவேன். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது என்றான். மீண்டும் கொல்லென்று எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது.
தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி. மேடைப்பாடல், துணி தைத்து கொடுப்பது என்று வந்த வருமானம் போதுமானதாக இல்லை. பசிக்கு முன்னால் மூவரும் தோற்றுப்போனார்கள். வேறு வழியில்லாமல் ஹென்னா சார்லியின் அப்பா மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாள், தீர்ப்பு இழுத்தது. தன் பிள்ளைகள் இங்காவது வசதியாகப் படிக்கட்டும் என்று மூவரையும் அநாதை விடுதி ஒன்றில் சேர்த்தாள். தனித் தனியாக பிரிக்கப்பட்டார்கள். காலக்கொடுமை, அதனால்தானோ என்னவோ ஹென்னாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. சார்லி, ஸிட்னியையும் சார்லியின் அப்பா தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பா தன் இன்னொரு மனைவி லூஸி வீட்டுக்கு கூட்டிப்போனார். அங்கேயும் பசி சார்லி, சி ட்னியையும் வீதிக்குத் துரத்தி சிரித்தது. ‘அம்மா, அம்மா’ என்று கதறி அழுதான் சார்லி. அங்கே அவனுக்கு அழுகையைத் தவிர ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. ஒரு நாள் வீட்டு வாசலில் அந்த அதிசயம் நடந்தது, அம்மா ஹென்னா வந்திருந்தாள். சார்லி, சிட்னி ஓடிப்போய் ஒட்டிக்கொண்டார்கள் மீண்டும் மூன்று உயிர்களும் ஓர் உயிரானது.
சாப்ளின் அப்பாவிடம் இருந்து கொஞ்சம் பணம் வந்தது. பள்ளிப் படிப்பு தடையில்லாமல் தொடர்ந்தது. பள்ளிகளில் நடக்கும் நாடகம், நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரை சார்லி சம்பாதிக்கத் தவறவில்லை. அவன் சார்ந்த நடன, நாடகக்குழு அமெரிக்காவிற்குப் போகும் சந்தர்ப்பம் வந்தது. அங்கு போன சாப்ளின் அமெரிக்க சுதந்திரதேவி சிலை நோக்கி தன்னை மறந்து கத்தினான். ஏய்! அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான் வந்து கொண்டிருக்கிறான் என்று. அடுத்த ஐந்தாண்டுகளில் அதுதான் நடந்தது. உலகத்தையே கொள்ளையடித்தான், சாப்ளின். தன் முதல் காதலி ஹெட்டியை சார்லியின் ஏழ்மையைக் காட்டி பிரித்தான், அவளின் அண்ணன். அந்தத் தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்தது. பிற்பாடு அவர் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணற்ற திருப்தியற்ற திருமண வாழ்க்கைகளுக்கும் அதுவே காரணமாக அமைந்தது.
தன்னை துன்புறுத்தும் ஹெட்டியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க, பொய்யாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு தீவிர வாசிப்பை மேற்கொண்டார். தனக்கான சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட கால கட்டம் அது, முதல் படம் newspaper reporter. ஒரு நாள் ஏதாவது நடித்துக்காட்டு என்று நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்துச் சொன்னார் சென்னட் என்னும் தயாரிப்பாளர். அவர் சைசுக்கு உடைகள் இல்லை என்பதால், பெரிய சைஸ் தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை, ஷு, தொப்பி, கைத்தடி. இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளினின் உருவ முத்திரை. இந்த உருவ முத்திரை பதித்த பொருட்கள் இன்றும் கூட விற்று தீர்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியே மேடையேறி நடித்துக் காட்ட சிரிப்பால் மேடை அதிர்ந்து அடங்கியது. என்னிடம் கதை ஒன்று இருக்கிறது, நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன் என்றார் சென்னடிடம் சார்லி. முதலில் ஒத்துக்கொள்ளாத சென்னட், மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை மனதில் கொண்டு ஒரு நிபந்தனை விதித்தார். “அந்த படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பு செலவு அனைத்தையும் வட்டியும் முதலுமாக நீங்கள் திருப்பித் தரவேண்டும் சம்மதமா?” என்று கேட்டார். அதற்கு சாப்ளின் சொன்னார் “முழுப்பணத்தையும் திருப்பித் தருவேன். அந்தப் படம் தோல்வியடைந்தால், நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்” என்று அப்படி இயக்கி வெளிவந்த முதல் வெற்றிப்படம் caught in the rain.
ஒரு முறை சாப்ளின் படப்பிடிப்பு முடிந்து நியூயார்க் நோக்கிப் போன தகவல் எப்படியோ தெரிய வர, மலர்கொத்துக்கள், பேண்டு வாத்தியங்கள், உயரமான கம்பம், மரங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம். பசியும், அவமானங்களும் இதற்கு தானா? நம் வாழ்க்கை மனிதகுலம் பயனுறும் காவியமாக வேண்டாமா? யோசிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவிற்கு குடியேற வரும் மனிதர்களிடம் அரசு நடத்தும் கெடுபிடிகளை கடுமையாகச் சாடி the immigrant படம் வெளியானது. அமெரிக்க பிணந்தின்னும் கண் சார்லியை கண்காணிக்க உத்தரவு போட்டது. இப்படித்தான், சார்லி ஏழைகளைப் பற்றியே படம் எடுத்ததால், பணக்காரர்கள் எதிரிகளானர்கள். வேறு வழியில்லாமல் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டியதாயிற்று. இக்கால கட்டத்தில்தான் தன் காதலி ஹெட்டியைப் போலவே இருக்கிறாள் என்று மில்ட்ரெட் ஹாரிஸ் என்பவளை திருமணம் செய்து கொண்டார். ஆண் குழந்தை பிறந்து இறந்தது, அவன் நினைவாக தயாரான படந்தான் the kid. லிட்டா கிரே, பவுலட் கோடர்ட், ஊநா ஓ நீல் போன்றவர்கள் மேல் காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும் துன்பியல் வரலாறு! அவர்கள் அனைவரும் தோற்றத்தில் ஹெட்டியைப் போலவே இருந்தார்கள் என்பது இன்னொரு அதிசய தகவல்.
புகழின் உச்சியில் இருந்த நேரம்.. “என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ஹெட்டி! நான் ஒரு முட்டாள், அபாக்கியசாலி. நீங்கள் எவ்வளவு உயரமானவர் என்பதை உங்கள் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். கடைசியாக உங்களின் கைகளைப் பிடித்து கதறி அழு வேண்டும். என் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்!” என்ற கடிதம் படித்து தான் பார்த்த எல்லா வேலைகளையும் ரத்து செய்தை விட்டு லண்டனுக்குப் பயணமானர் சாப்ளின். பஞ்சையாய், பராரியாய், பிச்சைக்காரனாய் துரத்தியடித்த அதே லண்டன் தெருக்கள்வெட்கமே இல்லாமல் விழாக்கோலம் பூண்டது சார்லியை வரவேற்க. வெறி பிடித்த மக்கள் வெள்ளம், இந்த தடவையும் ஹெட்டி ஏமாற்றித் தான் போயிருந்தாள். அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது. அவளின் நினைவாக கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சார்லி இந்த இடி செய்தி கேட்டு இன்னும் ஒரு முறை செத்துப் போனார். கடவுளைப் போலவே காதலும் சரியாக புரிபடாமலேயே இந்த பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது. ஓவென கதறி அழக்கூட முடியவில்லை. அவ்வளவு மக்கள் வெள்ளம். நடு இரவில் முகத்தை மப்ளர் கொண்டு மூடி, பசியால் கதறி அழுது சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறைப் போய் மவுனமாக அழுது விட்டு வந்தான், அந்த மகா கலைஞன்.
கூடவே தன் தாயின் மரணமும் சுனாமியாக வந்து தாக்கியது, “இந்த தோற்கும் அன்பு அவளுடையது. அவளது தியாகம், திறமைகள், அவள் பட்ட வேதனைகளுக்கு முன்னால் நானும் என் படங்களும் அவளின் கால் தூசுக்குச் சமம்!” என்று சாப்ளின் நெஞ்சு வெடிக்க கதறி அழதார். சினிமா பேச தொடங்கிய போதும் கூட பேசாத படங்களையே எடுத்தார். தான் எடுக்கும் பேசாத படம் மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு எடுக்கப்பட்ட படந்தான் city lights. எதிரிகள் சதி செய்ததால் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்த படம். இந்தியாவிலிருந்து வரும் காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார். உலகம் இயந்திரமாகி வருவதையும், மனித பண்புகள் நசுக்கப்படுவது பற்றியும் சாடி வந்த modern times வெளி வந்த பிறகு மனித குலத்தை மேம்படுத்த வந்தவனை சரியாகத் தான் அடையாளப்படுத்தியது அல்பபுத்தி அமெரிக்க அரசு “கம்யூனிஸ்ட்!” என்று. அமெரிக்க அரசு லண்டனுக்குப் புறப்பட்ட சார்லியிடம் தெரிவித்து, உங்கள் சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது, அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்.
ஸ்விட்சர்லாந்து குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார். 1972 ஆம் வருடம் கலையுலகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது.
சாப்ளின், டிசம்பர் 25, 1977ல் கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88வது அகவையில் சுவிட்சர்லாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது உடலை வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். மார்ச் 1, 1978ல் இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்திய-அமெரிக்கப் நீரியல் மற்றும் நீரழுத்த பொறியியலாளர் கோ.வா. உலோகநாதன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 16, 2007)
by mohan
written by mohan
கோபிச்செட்டிப்பாளையம் வாசுதேவன் உலோகநாதன் (Gobichettipalayam Vasudevan) ஏப்ரல் 8, 1954ல் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்திலுள்ள கரட்டடிப்பாளையத்தில் பிறந்தார். தமது இளங்கலைப் பொறியியல் படிப்பை கோயம்புத்தூரிலுள்ள சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் 1976ல் முடித்தார். பின்னர் கான்பூரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பை முடித்தார். மேற்படிப்பிற்காக ஐக்கிய அமெரிக்கா சென்ற உலோகநாதன் அங்கு பர்டியூ பல்கலைக்கழகத்தில் முனைவர்.ஜாக் டெல்லூர் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்திற்கான ஆய்வு நடுத்தர நகரங்களில் நீர்நிலை இடைமுகங்களுக்கான பன்னோக்கு திட்டமிடுதலைக் குறித்ததாக இருந்தது.
உலோகநாதன் டிசம்பர் 16, 1981ல் அன்று வர்ஜீனிய டெக்கில் தமது முதல் வேலையில் அமர்ந்தார். அமெரிக்க வர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியின் அங்கமாயிருந்த குடிசார் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவரது முனைவுகள் நீரியல் மற்றும் நீரழுத்த வலைப்பின்னல்களை குறித்தாயிருந்தது. அவர் கூட்டாக மற்றவர்களுடன் எழுதிய நூல்களும் வெளியீடுகளும் நகராட்சி நீர்வழங்கு பரவல் பிணைப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. வர்ஜீனியா டெக் பல்கலையில் மிகச்சிறந்த ஆசிரியர் விருது, கற்பித்தலில் சீர்மைக்கான முதல்வர் விருது, குடிசார் பொறியியல் கல்வியில் சிறந்த ஆசிரிய மக்கள் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். வர்ஜீனிய டெக் செனட்டில் உறுப்பினராகவும் வர்ஜீனியா டெக் பெருமை அறமன்றத்தில் அறிவுரையாளராகவும் இருந்துள்ளார்.
அமெரிக்க குடிசார் பொறியியலாளர்களின் சமூகத்தில் செயற்பாடுள்ள உறுப்பினராகத் திகழ்ந்தார். நீரியல் துறை வல்லுநராக நீர்வளப் பொறியியல் இதழுக்கு துணை ஆசிரியராக இருந்தார். பல்கலைக்கழகத்திலும் வளாகத்திலேயே அமைந்திருந்த தேசிய வானிலை சேவை அலுவலகத்துடனான ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். வர்ஜீனியா டெக் வளாகத்திற்கருகேயே உலோகநாதன் தமது மனைவி உஷா, இரு மகள்கள், உமா, அபிராமியுடன் வாழ்ந்து வந்தார். நீரியல் மற்றும் நீரழுத்த பொறியியலாளர் கோ.வா. உலோகநாதன் வர்ஜீனியா ஏப்ரல் 16, 2007ல் தனது 53வது அகவையில் டெக்கில் 32 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிப் படுகொலை நிகழ்வில் உயிரிழந்தவர்களில் இவரும் ஒருவர். லோகநாதன் நோரிஸ் ஹாலின் அறை 206ல் ஒரு மேம்பட்ட நீர்வளவியல் வகுப்பைக் கற்பித்தார். ஏப்ரல் 16, 2007 அன்று, சோ நோரிஸ் அறை 206 ல் நுழைந்தார். துப்பாக்கிப் சூட்டில் லோகநாதன் முதல் இலக்காக இருந்தார். லோகநாதனின் வகுப்பில் பதிவு செய்யப்பட்ட பதினைந்து மாணவர்களில், ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மரபணு மூலக்கூறு உயிரியல் மற்றும் எக்ஸ் கதிர் படிக வரைவி நிபுணர், ஆங்கில வேதியலாளர் மற்றும் உயிர் இயற்பியல் அறிஞர் ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 16,1958).
by mohan
written by mohan
ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் (Rosalind Elsi Franklin) ஜூலை 25, 1920ல் லண்டனில் உள்ள நோட்டிங் மலை என்ற ஊரில் பிறந்தார். ஒரு பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க ஆங்கிலேய யூத குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை எல்லிஸ் ஆர்தர் பிராங்க்ளின் லண்டனில் வணிக வங்கி ஒன்றினைத் தொடங்கி நடத்திவந்தார். இவருடைய தாயார் முரியேல் பிரான்சஸ் வேலி. இவரது குடும்பத்தினர் பலரும் அரசில் உயர்பதவிகளை வகித்து வந்தனர். புனித பவுல் மகளிர் பள்ளியிலும், வடக்கு இலண்டன் கல்லூரிப் பள்ளியிலும் சேர்ந்து இவர் தனது தொடக்கக் கல்வியைப் பயின்றார். இலத்தீன் மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய பிராங்குளின் பள்ளிப் பருவத்திலேயே அறிவியலில் தணியாத ஆர்வத்தைக் காட்டினார். இவருடைய பதினைந்தாவது வயதில் வேதியல் ஆராய்ச்சி செய்வதே தன் வாழ்க்கையின் குறிக்கோள் எனத் தீர்மானித்தார்.
பிராங்க்ளின் சமூக சேவையில்தான் ஈடுபடவேண்டும். கல்லூரிப் படிப்பு பெண்களுக்குத் தேவையற்றது என்று கூறிய அவருடைய தந்தையின் எதிர்ப்பையும் மீறி, கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1941ல் பி.ஏ தேர்வில் வெற்றி பெற்றார். அன்றைய கால கட்டத்தில் பெண்கள் பட்டதாரி ஆனாலும் பெயருக்குப் பின்னால் பட்டத்தினைப் போட்டுக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற 1941-42 ஆண்டுகளில் தேம்ஸ் நதிக் கரையில் கிங்க்ஸ்டன் என்னும் இடத்தில் அமைந்திருந்த ஆங்கில நிலக்கரிப் பயன்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். இங்கு எக்ஸ் கதிர்கள் விளிம்பு விளைவுப் படிகவியல் (X-ray diffraction Crystallography) மூலம் நிலக்கரியின் மூலக்கூற்றின் அமைப்பைக் கண்டுபிடிக்கும் வழிமுறையை உருவாக்கினார். இதன் அடிப்படையில் இவருடைய ஆய்வை அமைத்துக் கொண்டார்.
தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு 1945ல் முனைவர் பட்டம் பெற்றார். 1951ல் லண்டனில் மன்னர் கல்லூரியில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிர் இயற்பியலாளர் பிரிவில் ‘ஜான் ரேண்டல்’ என்ற அறிவியலறிஞரின் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். அதே சமயம் தனிப்பட்ட முறையில் கரைசல்களில் உள்ள புரதங்கள், கொழுப்புகளின் (Proteins and lipids) தன்மை பற்றி எக்ஸ் கதிர் விளிம்பு விளைவின் உதவி கொண்டு அறிவதற்கான் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆராய்ச்சியில் இவருக்குக் கிட்டிய இந்த முன்னறிவை அறிந்த ரேண்டல், டி.என்.ஏ இழைகளின் அமைப்பு பற்றி ஆராயும்படி பிராங்குளினைக் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வுகளுக்கு ‘மௌரிசு வில்கின்சு’ என்பவரும், இவருடைய ஆய்வு மாணவர் ‘ரேமண்ட் கோசிங்’ என்பவரும் உதவி புரிந்தனர்.
எக்ஸ்ரே கதிர்குழாயும் மற்றும் நுண்மையான புகைப்படக் கருவியும் வில்கின்சு மூலம் கிடைத்தது. எக்ஸ் கதிர் ஆராய்ச்சியில் இருந்த முன்னறிவே பிராங்குளினை மரபணு அமைப்பை ஆராயும் அறிவியலறிஞர்களுடன் பணியாற்ற வழிகோலியது. மரபணு 1898ல் ஜோகன்மீச்சர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் இருபதாம் நூற்றாண்டில்தான் மரபணுவின் சரியான வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. ரோசலிண்ட் பிராங்க்ளினின் ஆராய்ச்சியே இதற்கு அடித்தளமாக அமைந்தது. பிராங்குளின் 1951-1953ம் ஆண்டு வரை மரபணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு மரபணுவின் பதிப்பை எக்சு கதிர்களின் விளிம்பு விளைவுப் படிகவியல் மூலம் படம் பிடித்தார். இந்தப் படங்களை பிராங்க்ளினின் அனுமதி பெறாமலேயே வில்கின்சு, வாட்சனுக்குக் காண்பித்தார்.
வாட்சன், கிரிக் ஆகிய இருவரும் மரபணு வடிவத்தைக் கண்டறியும் ஆய்வில் அப்போது ஈடுபட்டிருந்தனர். மரபணு இழை சுருள் வடிவம் கொண்டது என்பதனை மெய்ப்பிக்க மிகச் சிறந்த ஆதாரம் பிராங்க்ளின் எடுத்த படமே என அவர்கள் உணர்ந்தனர். அதனைப் பயன் படுத்தி அவர்களின் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். இந்த ஆராய்ச்சிகளில் அவர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் வாட்சன், கிரிக், வில்கின்சு ஆகிய மூவருக்கும் பின்னால் நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாட்சன் அவருடைய ஆராய்ச்சியப் பற்றி நூல் வெளியிட்ட போது மரபணு கண்டுபிடிப்பில் உரோசலிண்டு பிராங்குளின் பற்றி எழுதாமல் தவிர்த்தார். ஆனால் பின்னர் ஒரு சமயம் கிரிக், இதே கண்டுபிடிப்பை எட்ட பிராங்க்ளின் இன்னும் இரண்டு அடிகள் மட்டும் எடுத்து வைக்க வேண்டியிருந்தது என்று எழுதியிருந்தார்.
புகைப்படத்தை வாட்சனுக்குத் தந்த வில்கின்சு மட்டுமே நோபல் பரிசு பெற்ற போது பிராங்க்ளின் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். வாட்சன், கிரிக் மற்றும் வில்கின்சு மூவருக்கும் 1962ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தபோது பிராங்க்ளின் இறந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தன. நோபல் பரிசு பரிந்துரை விதிகளின் படி மூன்று நபர்களுக்கு மேல் ஓர் ஆராய்ச்சிக்கு பரிசு வழங்க அனுமதி இல்லை. மேலும் இறந்த பிறகு ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கும் வழக்கமும் கிடையாது. இதனால் பிராங்குளினுக்கு நோபல் பரிசு கிடைக்காமலேயே போயிற்று. பிற்காலத்தில் பிராங்க்ளினுடன் பணிபுரிந்தவர்களும் அவருடைய நண்பர்களும், பற்பல ஆராய்ச்சிகளின் போது அவர் எழுதிய குறிப்பேடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பிராங்க்ளினை உலகறியச் செய்தனர். மரபணு வின் வடிவத்தைக் கூட்டாக அன்றி தனியொரு பெண்ணாக உழைத்துக் கண்டறிந்ததை உலகம் புரிந்துகொண்டது.
தனது சூழ்நிலை காரணமாக பிராங்க்ளின் இலண்டனில் உள்ள் பர்பெக் கல்லூரியில் சேர்ந்து தனக்கென்று ஓர் ஆய்வுக் குழுவை உருவாக்கித் தன்னுடைய பழைய ஆய்வுகளைத் தொடர்ந்தார். வைரசுகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். ஐந்து ஆண்டுகளில் 17 ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். ஆய்வின் பொருட்டு அமெரிக்கா சென்ற போது பிராங்க்ளினுக்குக் கருப்பைப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய ஆய்வுகளின் இடையே மூன்று முறை அறுவை சிகிச்சை மற்றும் பல சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் நலம் தொடர்ந்து பாதிப்படைந்தது. மரபணு மூலக்கூறு உயிரியல் மற்றும் எக்ஸ் கதிர் படிக வரைவி நிபுணர் ரோசலிண்ட் பிராங்க்ளின் ஏப்ரல் 16, 1958ல் தனது 37வது அகவையில் லண்டனில் சிகிச்சை பலனின்றி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
தனி ஒருத்தியாக சாதனை செய்ததால், பிராங்க்ளினைப் போற்றும் வகையிலும் இவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் 2004ம் ஆண்டு சிகாகோ மருத்துவப் பள்ளி என்னும் பெயரை மருத்துவம் மற்றும் அறிவியலுக்கான ரோசலிண்ட் பிராங்க்ளின் பல்கலைக்கழகம் (Rosalind Franklin University of Medicine and Science) என்று மாற்றி அமைத்தனர். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பல ஆராய்ச்சிக் கூடங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களுக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நல்ல கவிதைகள் நல்ல நல்ல மனிதர்களை உருவாக்கும்;கவிஞர் இராதாகிருஷ்ணன் இணையவழி கவியரங்கத்தில் பேச்சு..
by mohan
written by mohan
திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கமும், திருச்செங்கோடு, சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிகளின் தமிழ் உயராய்வுத் துறைகளும் இணைந்து சித்திரைக் கவிதைக் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை இணையவழியில் நடத்தின. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் தலைமை தாங்கினார். நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி முன்னிலை வகித்தார். சங்ககிரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறைத் தலைவர் முனைவர் ஜெயந்தி வரவேற்புரை வழங்கினார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். கவிதைக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள் “முத்திரை பதிக்கும் சித்திரை “என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர். கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் “இலக்கியத்தில் மிகத் தொன்மையானது கவிதையாகும். நல்ல கவிதைகள், நல்ல நல்ல மனிதர்களை உருவாக்கும். இங்கு கவிதை வாசித்த மாணவிகளிடம் கவிதை வளம் நிறையவே இருப்பதை நான் பார்க்கிறேன். பாராட்டுகிறேன். இது போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் புதிய படைப்பாளிகள் கிடைப்பார்கள். அதற்காக கவிதை உறவும், பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து செயல்படும் “என்று குறிப்பிட்டார். உதவிப் பேராசிரியர் ப.மாசில்மா நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவிகள் கோபிகா மற்றும் கலைவாணி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இணையவழியில் நடந்த இந்நிகழ்ச்சியில், விவேகானந்தா மகளிர் கல்லூரிகளின் மாணவிகள்,பேராசிரியர்கள் மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் பகுதியில் கொட்டப்படும் அழுகிய காய், கனிகளால் கொரோனா தொற்று பரவும் அபாயம் – அச்சத்தில் பொதுமக்கள்.
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் – போளூர் சாலையில் பழைய காவல் நிலைய பகுதியில் பல்வேறு காய் கனி வியாபாரிகள் கொட்டப்படும் அழுகிய காய்கறிகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. இவற்றை ஆடு, மாடு பன்றிகள் தின்று சிதைத்து விடுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் துா்நாற்றத்தால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று நோய் பரவும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வரும் நிலையில், இது போன்று அழுகிய கொட்டப்படும் காய்கறிகளால் மற்றும் அழுகிய வெங்காயங்களால் வேகமாக நோய் பரவும் அபாய சூழ்நிலையில் உள்ளது மேலும் கிருஷ்ணாபுரம் சாலையோர பகுதி மற்றும் மில்லத் நகர் சாலையோர பகுதியில் அழகிய காய்கறிகள்., அழகிய வெங்காயத்தால் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நீண்ட நாட்களாக இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் சூழ்நிலையும் உள்ளது.இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் கண்காணித்து அழுகிய காய்கறிகள் கொட்டுபவர்கள் மீது அபராதம் விதித்தால் மட்டுமே சரி செய்ய முடியும் என்றும், பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்திருப்பதால் உடனடியாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கால் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் .
by mohan
written by mohan
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சையத் அஹ்மத் என்பவர் செங்கம் பகுதியில் இருந்து பக்கரிப்பாளையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நீப்பத்துறையிலிருந்து செங்கம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் இடது கால் முற்றிலும் உடைந்து விபத்துக்குள்ளானதுஇதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளான அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு நீண்ட நேரமாகியும் 108 ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தமுமுக இலவச சேவை ஆம்புலன்சை அழைத்து விபத்துக்குள்ளான சையத் ஹகமதை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது சையத் அகமத் பரிதாபமாக உயிரிழந்தார் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இதனைத் தொடர்ந்து செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் சுகாதாரதுறை சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
by mohan
written by mohan
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலையாக வேகமாக பரவும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. மேலும் சுகாதாரதுறை சார்பில் பொதுமக்களுக்கு இலவமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் சுகாதாரதுறை உத்தரவுப்படி தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார துறை மற்றும் உசிலம்பட்டி நகராட்சி இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம் அமைக்கப்பட்டன. அதனைதொடர்ந்து பொதுமக்கள் தங்களது ஆதார்எண் கொடுத்துவிட்டு இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
உசிலைசிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி மருந்து செலுத்தி கொள்ளும்படி தமிழக அரசு அறிவுறுத்தி வருகின்றனர் இதனை அரசு அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருந்து வருவதாகவும் இதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் ஒவ்வொரு அரசு அலுவலர்களும் கட்டாயமாக கொரோனா தடுப்பு ஊசி மருந்தைச் செலுத்திக் கொள்ள வேண்டுமெனவும் முகக் கவசம் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றவும் நோய் தொற்றிலிருந்து முழுமையாக காத்துக்கொள்ள அரசு அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் எனவும் செங்கம் வட்டாட்சியர் மனோகரன் தெரிவித்தார் இந்நிலையில் ஒவ்வொரு அரசு அலுவலக அதிகாரிகளையும் வரவழைத்து தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கும் முக கவசம் தனிமனித இடைவெளி கிருமிநாசினி உள்ளிட்டவைகளை முறையாகப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் யாருக்காவது உடல் வெப்பம் உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக செங்கம் வட்டார மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்து அதற்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது இந்த கொரோனா விழிப்புணர்வு கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டு கொரோனா பரவலைத் தடுக்க தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர்கள் சல்மான்கான், அசாருதீன் சகோதரர்கள். இவர்கள் சிறுவயது முதலே யோகா மற்றும் சிலம்பாட்ட போட்டிகளில் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளனர்.இன்று பிறக்கும் சித்திரை பிலவ தமிழ் “புத்தாண்டை ” வரவேற்கும் விதமாக கொரானவை ஒழிப்போம் பாதுகாப்புடன் இருப்போம் எனக்கூறி யோகாசனம் மற்றும் சிலம்பத்தில் தங்கள் மாணவர்களுடன் யோக பயிற்சிகள், சிலம்பத்தில் தற்காப்பு, மற்றும் அலங்கார சிலம்பம் விளையாட்டை மாணவர்கள் தாங்கள் கைவண்ணத்தைக் காட்டினர்.கொரானவை ஒழிப்போம். பாதுகாப்புடன் இருப்போம் .முக கவசம் அணிவோம் .சமூக இடைவெளியுடன் இருப்போம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்து சித்திரை முதல் நாளான இன்று “பிலவ” தமிழ் புத்தாண்டை வரவேற்றது கொரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதலைக்குளம் கிராமத்தில் கருப்புசாமி கோவில் கண்மாயில் மீன் பிடிக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முதலைக்குளம் கிராமத்தில் கருப்புசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட 500ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடமும் சித்திரை 2ம ;தேதியான இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் முதலைக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்று கண்மாயில் வலைகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான மீன்களை தேர்வு செய்து மீன்களை பிடித்து சென்றனர்.
கண்மாயில் கட்லா, கெண்டை,கெழுத்தி,உழுவை உள்ளிட்ட பல ரகங்களில் மீன்களை கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த திருவிழாவை கொண்டாடினர். மேலும் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்பதற்காக இருசக்கரவாகனங்களில் பலர் வந்திருந்தனர். மேலும் கொரோன விதிமுறைகளை மீறி முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூட்டமாக மீன் பிடித்ததால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பசுமாட்டை பத்திரமாக பாதுகாக்கும் பாசக்காரவேட்டை ராஜா. உசிலம்பட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்
by mohan
written by mohan
மதுரைமாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது அன்னம்பார்பட்டி. இங்கு உள்ள இரயில்வேபீடர் தெருவில் வசித்து வருபவர் பால்ராஜ்(45). விவசாயியான இவர் தனது வீட்டில் 3பசுமாடுகளும், 4ஆட்டுகுட்டிகளும், வளர்த்து வருகிறார். அதனுடன் சேர்த்து வீட்டுகாவலுக்காக இரண்டு நாயையும் வளர்த்து வருகிறார் .இதற்குN வட்டை ராஜா-ராக்கி எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்நிலையில் பால்ராஜ் தனது 3பசுமாடுகளை மேய்ச்சலுக்காக சுமார் 1கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது தோட்டத்திற்கு தினமும் காலையில் அழைத்து செல்வார்.
அப்போது அவருடன் வேட்டை ராஜா பெயர் கொண்ட நாயும் உடன் செல்லும். தன்னுடைய எஜமானர் பசுமாட்டை கயிறுகட்டி அழைத்துச் செல்வதை கவனித்த நாய் ஒருகட்டத்தில் பசுமாட்டை தானேபிடித்து செல்ல முயற்சி செய்த நிலையில் அந்த முயற்சி வெற்றி அடைந்தது. தினமும் காலையில் 2பசுமாட்டை பால்ராஜ் பிடித்து செல்ல அவருடன் மற்றொரு பசுமாட்டை பால்ராஜ் உடன் செல்லும் நாயும் மாட்டின் கயிற்றை தனது வாயால் கவ்வியபடியே தோட்டத்திற்கு அழைத்து செல்கிறது. காலைமுதல் மாலை வரை மேய்ச்சல் முடிந்த பிறகு பசுமாடுகளை மாலையில் பால்கறப்பதற்காக மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் போதும் அதே நடைமுறையில் 2பசுவை பால்ராஜ் அழைத்துவர, மற்றொரு பசுவை நாய் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருகிறது.ஒருகட்டத்தில் வத்தலக்குண்டு-உசிலம்பட்டி சாலையில் வாகனங்கள் வந்தாலும் நாய் பசுமாட்டை வாகனநெரிசலில் சிக்காமல் நைசாக சாலையை கடந்து பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருகிறது. இது போல்கடந்த 2வருடங்களாக பசுமாட்டைநாய் அழைத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இந்த நாய் காவல் தெய்வமாக காவல் காப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் இந்தநாய் இருப்பதால் அந்த பகுதி மக்கள் பயமில்லாமல் வெளியூர்களுக்கு செல்வதாகவும், இரவுநேரங்களில் திருடர்கள் வருவது குறைந்;துள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இந்தநாயின்செயல் உசிலம்பட்டி பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.