தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடை மூடப்பட்டு உள்ளது இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கர்நாடகா மாநிலத்திலிருந்து பாக்கெட் மதுபானங்கள் அதிக அளவில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு அதிக லாபம் ஈட்டி வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஆனந்தவாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில் மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட டாட்டா ஏசி 1 அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அதனை தடுத்து ஓட்டுநரிடம் விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது போலீசாரின் விசாரணையில் முன்னுக்கு பின்னாக ஓட்டுனரின் பதில் இருந்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வாகனத்தை தீவிரமாக சோதனை செய்தனர் அப்போது டாட்டா ஏசி வாகனத்தின் மேற்கூரையில் சுமார் 816 கர்நாடக மாநில பாக்கெட் மதுபானங்கள் இருந்ததை கண்ட காவல்துறையினர் மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ஓட்டுனரை கைது செய்தனர் அதன்பிறகு கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்த மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் மேல்செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சங்கமம் கொள்ளை பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மது பான பாக்கெட்டுகளை கொண்டு சென்று அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய எடுத்த வந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அஜித் மீது வழக்குப்பதிவு செய்து மேல்செங்கம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சோதனைச் சாவடியில் இதுபோன்று மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தது இதுவே முதல் ஆகும்
Category:
செய்திகள்
மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் மின்விசிறி கீழே விழுந்து பெண் நோயாளி தலையில் காயம்
by mohan
written by mohan
கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி முதல் மதுரை பேரையூர் மள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற மூதாட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, நுரையீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை அவர் படுக்கைக்கு அருகே இருந்த மின்விசிறி திடீரென பழுதாகி படுக்கையில் அமர்ந்திருந்த பாண்டியம்மாள் தலையில் விழுந்தது. அதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஏற்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதப் பகுபாடுள்ள குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி, மதுரை தெற்குவாசல் மஞ்சனக்காரத் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய த.மு.மு.கவினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் சீனி அகமது, மாநிலத் தலைவர் அப்துல் ரகுமான் தாஹீத், மாவட்டத் தலைவர் இபுனு, செய்யது ராஜா என்ற பாபு, முபாரக் அலி, பாபு பாட்ஷா, தாகை மைதீன், தாவூத்சேக் பரீத் உள்ளிட்ட தமுமுகவினர் பங்கேற்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருநகரை அடுத்த மொட்டமலை பகுதியில் திருநங்கைகள், முதியவர்கள், குழந்தைகள் கொரோனா ஊரடங்கால் வேலையின்றி பசியால் உணவின்றி தவிப்பதாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மாவட்ட தலைவர் குணாவிற்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உடனடியாக மாவட்ட செயலாளர் குமார், எலக்டிரிசீயன் வடிவேல் , ஹார்விபட்டி ஆர்.வி.நண்பர்கள் குழுவினருடன் மொட்டமலை பகுதிக்கு விரைந்து நேரில் சென்று விசாரித்த போது உணவின்றி தவித்த குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் முதியோர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். அதன் பின்பு வெஜ் பிரியாணி பொட்டலம், தண்ணீர் பாட்டில் , முககவசம் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. சுமார் 106 பேருக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. முககவசம் இன்றி வந்த குழந்தைகளுக்கு மாவட்ட தலைவர் குணா முககவங்களை முகத்தில் அணிவித்தார். மேலும் உதவிகளுக்கு தொடர்பு கொள்ளுமாறு ஆர்.வி.நண்பரகள் தெரிவித்தனர். தங்களின் உதவிக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதாக கூறினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.8 லட்சம் நிதி;தென்காசி ஆட்சியரிடம் வழங்கல்..
by mohan
written by mohan
தமிழகத்தில் நாள் தோறும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்தக் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தொழில் அதிபர்கள், திரைப்பட நடிகர்கள், வசதி படைத்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி உதவி வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் நாள்தோறும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஜிஎஸ் சமீரனை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் தென்காசி பகுதியைச் சார்ந்த ஓணம் பீடி உரிமையாளர் பாலகிருஷ்ணன், சதீஷ் பீடி உரிமையாளர் ராஜாக்கண்ணு, தென்காசி சாந்தி மருத்துவமனை டாக்டர் அன்பரசன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியாக தென்காசி ஓணம் பீடி உரிமையாளர் பாலகிருஷ்ணன் ரூபாய் 5 லட்சமும், சதீஷ் பீடி உரிமையாளர் ராஜாக்கண்ணு ஒரு லட்சமும், தென்காசி சாந்தி மருத்துவமனை டாக்டர் அன்பரசன் 2 லட்சமும் மொத்தம் 8 லட்ச ரூபாய் வழங்கினார்கள். அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மா.செல்லத்துரை, மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ்.வேலுச்சாமி, திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீவநல்லூர் கோ.சாமித்துரை, தென்காசி ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆர்.எம்.அழகுசுந்தரம், இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், நகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் த.ராமராஜ், குற்றாலம் பேரூர் செயலாளர் மந்திரம், இலஞ்சி ரவி, வல்லம் செல்வம், சுரேஷ் கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
by mohan
written by mohan
தென்காசி பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை (CAA ) எதிர்த்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி அரசின் குடியுரிமை திருத்த சட்ட அரசியலை எதிர்த்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற தேசம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, தென்காசி நகர எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் கொடிமரம், மவுண்ட்ரோடு, நடுப்பேட்டை, தவளபுரம், நிஹ்மத் நகர் ஆகிய பகுதிகளில் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நகர தலைவர் செய்யது மஹ்மூத் தலைமையில் நடைபெற்றது.
இதில் இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் பாதுஷா, நகர இணைச் செயலாளர் பீர் முஹம்மது, நகர பொருளாளர் அப்துல் அமீர், நகர செயற்குழு உறுப்பினர்கள் ஜாபர் அலி, பாதுஷா, கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக் ஜிந்தா மதார் , மாவட்ட செயலாளர் சினா, சேனா சர்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திவான் ஒலி, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
20 கிலோமீட்டர் துரத்திச் சென்று வழிப்பறிக் கொள்ளையர்கள் கைது செய்த போலீசார்
by mohan
written by mohan
மதுரை வில்லாபுரத்தில் ப சேர்ந்த சண்முகப்பிரியா(30) இவர் அரசு மருத்துவமனையில் கொரொன மருத்துவமனையில் நர்சாக உள்ளார் மிக நிலைகள் 30 ஆம் தேதி இரவு 2 மணி அளவில் பணிக்காக யானைக்கல் பாலத்தில் சென்றுள்ளார் பின்னால் அவரை பின்தொடர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று நபர்கள் சண்முகப்பிரியா தாக்கி 6 பவுன் செயின் அலைபேசியை பறித்து தப்பினர் இதில் கீழே விழுந்த சண்முகப்பிரியா தலையில் அடிபட்டு மயக்கமுற்றாள் தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார் சம்பவம் குறித்து அறிந்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா துணை கமிஷனர் ராஜசேகர் உத்தரவின்படி… உதவி கமிஷனர் ரவி வினோஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் சங்கர் . பெத்துராஜ் சீனிவாசன் துணை ஆய்வாளர்கள் தென்னரசு செந்தில் ஏடுகள் சலேத்துராஜ் சஞ்சீவ் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர் பின் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது நகை பறிப்பு ஈடுபட்டவர்கள் மதுரை நெல்பேட்டை யே சேர்ந்த அசாருதீன் 21. சல்மான் கான் 25 . மாலிக் பைசல்.21 எனத் தெரியவந்தது சப் குடியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவே போலீசார் அப்பகுதிக்கு சென்றனர் காவல்துறை வருவதை அறிந்த மூவரும் அங்கிருந்து இருசக்கர வாகனம் மூலமாக தப்பினர் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் போலீசார் அப்பகுதியில் துரத்தி சென்றனர் பாலம் வழியாக அவர்கள் வர வேண்டும் என்பதால் தனிப்படை போலீசார் பாலத்தை அடைத்து காத்திருந்தனர். மூவரையும் கைது செய்த போலீசார் அலைபேசி மற்றும் நகையும் மீட்டனர் சல்மான் கான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் அசாருதீன் மீது7 வழக்குகள் உள்ளன மூவரும் கடந்த சில நாட்களாக டூவீலர் திருட்டு அலைபேசி டவரில் உள்ள பேட்டரிகள் திருட்டு ஈடுபட்டது தெரியவந்தது 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை மாநகர காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்தார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூரில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய், சுகாதார, ஊரகத் துறை சார்பாக ஆலோசனை கூட்டம்
by mohan
written by mohan
தமிழகத்தில் கொரணா 2வது அலையை கட்டுபடுத்த தடுப்பூசி, சித்தா ஆயுர்வேதம உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துவருகிறது.தமிழகம் முழுவதும் அனைத்து பேரூராட்சிகள், ஊராட்சிகள் நகராட்சிகளில் கொரானா கவனிப்பு மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை பேரூராட்சி துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பாக வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில் கொரானா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் வட்டாட்சியர் பழனிகுமார், வட்டார மருத்துவர் வளர்மதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராட்சி பிரேமா, பாலசந்தர் மற்றும் அந்தந்த துறை அலுவர்கள் ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை வெங்கடேசன்எம்.எல்.ஏ.,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மதுரை மாவட்டடம்வாடிப்பட்டி ஊராட்சிஒன்றியம் ஆண்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளதனிமைப்படுத்தும் மையத்தினை பார்வையிட்டு துhய்மை பணியாளர்களுக்குஅரிசி,காய்கறி தொகுப்புகளைவழங்கினார்.கச்சைகட்டிஅரசுஆரம்பசுகாதாரநியத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதையும்,தனிமைபடுத்தப்பட்டமையத்தையும்,ஊராட்சிமன்றத்தில் உள்ளகாய்ச்சல்பரிசோதனைமுகாமினையும் பார்வையிட்டார். வாடிப்பட்டிபேரூராட்சியில் ஏழை எளியோர் பயன்பெறுவகையில் ரூ.100க்குகாய்கறிதொகுப்பினை தொடக்கிவைத்தாh;. வாடிப்பட்டி அரசு மருத்துவமணையில்கொரோனாநோயாளிகளும்புதியதாகஅமைக்கப்பட்ட தண்ணீரைசுடுபடுத்தும்இயந்திரத்தைதொடக்கிவைத்து கொரோனா வார்டினைபார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.ஊராட்சி ஒன்றிய அலுவலகம்ருகில் தாய் மெட்ரிக்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளதனிமைப்படுத்தும் மையத்தை தொடக்கிவைத்தார். இதில் , தாசில்தார் பழனிகுமார்,யூனியன்கமிஷனர்ராஜா, வட்டாரமருத்துவஅலுவலர் மனோஜ்பாண்டியன், செயல்அலுவலர்சிவக்குமார், ஒன்றியச் செயலாளர் பாலராஜேந்திரன், முன்னாள் பேரூர் செயலாளர்பால்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யவதை கண்காணிக்க 6 சிறப்பு குழு
by mohan
written by mohan
மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர்கள் ஆலோசனை நடத்தினார்கள், தனியார் மருத்துவமனைகளில் கொரைனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், கொரைனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்தும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுப்பதாக வரும் குற்றச்சாட்டு குறித்தும் விவாதிக்கப்பட்டது,பின்னர் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக முதல்வரின் சீரிய முயற்சியால் முழு ஊரடங்கு பயனை தந்துள்ளது, மதுரையில் நாளுக்கு நாள் கொரைனா தொற்று குறைந்து வருகிறது, ஒரு வாரத்துக்கு முன்னர் 1500 ஆக இருந்த பாதிப்பு தற்போது 700 க்கும் கீழ் வந்துள்ளது, ஒரு வாரத்தில் மதுரையில் கொரைனா பாதிப்பு மிக மிக குறையும்,மதுரையில் தனியார் மருத்துவமனைகளில் கொரைனா சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டம் முழுமையாக செயல்படுத்தவும், தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிசன் படுக்கைகளை உயர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது,தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யவதை கண்காணிக்க 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது,மதுரை அரசு மருத்துவமனையில் 90 இலட்சம் மதிப்பில் நிரந்தர ஆக்ஸிசன் தயாரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட உள்ளது, இந்த நிலையத்தில் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிசன் தயாரிக்க முடியும் என கூறினார்.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேத்தூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார். கொரோணா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட திமுக கட்சியினர்.
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் நெல் விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது.குறிப்பாக சேத்தூர், தேவதானம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பல விவசாயிகள் அறுவடை செய்து நெல் களஞ்சியங்களில் வைத்துள்ளனர்.இதை கொள்முதல் செய்வதற்காக அரசு சார்பில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதன் பேரில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இன்று நெல் கொள்முதல் நிலையத்தை கொரோணா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு கட்சியினரை கூட்டமாக கூட்டி தொடங்கி வைத்தார்.அப்போது திமுக கட்சியியை சேர்ந்த தொண்டர்கள் சமூக இடைவெளி இன்றி நோய் தொற்று பரப்பும் விதமாக கூட்டமாக நின்றனர்.தமிழக அரசு அறிவித்த விதிமுறைகள் சாமானிய பொதுமக்களுக்கு தானா? திமுக கட்சியினருக்கு இல்லையா? என்ற அளவிற்கு கூட்டமாக நின்றனர்.சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சமூக விதிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளி என்றிருப்பது நோய் தொற்றை அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு கூறினர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இருந்தும் , கொரோனா பேரிடரில் தன்னார்வ லர்களாக பணியாற்ற 33 ஆசிரியர்கள் மட்டும் முன் வந்து பணியாற்று கின்றனர் .
by mohan
written by mohan
கொரோனா தொற் றால் , தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது .இது பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள தால் , இந்த காலக்கட்டத்தில் , கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் ; மருந்து , மாத்திரை தேவைப் படுவோருக்கு மருத்துவ வசதிக்கும் , உணவு முறை பழக்கம் குறித்து நோயாளிகளுக்கு விளக்கி கூறுவதற்காக ” வார் ரூம் ” திறக்கப்பட்டுள்ளது . மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வார் ரூம் மையம் திறக்கப்பட்டுள்ளது . இந்த வார் ரூமில் கொரோனா பேரிடரில் தன்னார்வ லர்களாக பணியாற்ற விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது .கொரோனா தொற்றுக்கு நூற்றுக்கணக் கானோர் தினமும் பாதிக்கப் பட்டுள்ளனர் . ஆயிரக்கணக் கானோர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுகின்றனர் . அவர்களுக்கு, மருத்துவ வழிகாட் டுதல் மற்றும் கவுன்சிலிங் அளிக்கும் வகையில் தன்னார்வலராக பணியாற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது . மதுரை மாவட்டத் தில் , தற்போது வரை 33 ஆசிரிய , ஆசிரியைகள் மட்டுமே முன்வந்து இப்பணியில் சேர்ந்துள்ளனர் . இவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரோனா வார் ரூமில் செவிலியர்கள டன் இணைந்து தொலை பேசி மூலம் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான கவுன்சிலிங் அளிக் கின்றனர் .இவர்கள் சுழற்சி (ஷிப்ட்) முறையில் பணியாற்றி வரு கின்றனர் . மாவட்டத்தில் , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின் றனர் . அதில் , இரட்டை இலக்க எண்ணிக்கையில் 33 ஆசிரியர்கள் மட்டுமே தன்னார் வலர்களாக பணியாற்ற ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர் . இது குறித்து , தன்னார்வலர் ஆசிரியர்கள் கூறுகையில் , ‘ முதலில் எங்களுக்கு அழைப்பு விடுத்த போது கொரோனா தொற்று பாதிக்கப் படுவோமோ என்ற பய உணர்வு இருந்தது . பொது மக்கள் படும் அவதியை பார்க்கும் போது , இந்த பேரிடரில் நம்மால் முடிந்த உதவியை செய்யலாம் என முடிவு செய்து பணி யாற்ற முன் வந்தோம் . முதலில் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று கணக் கெடுக்க வேண்டும் என கூறினர் . அதில் போதிய பாதுகாப்பு இல்லை என உணர்ந்ததால் மாற்றுப் பணி கேட்டோம் . இதனைத் தொடர்ந்து , நோயாளிகளுக்கு கவுன்சிலிங் – கொடுக்க முடியுமா ?என கேட்டனர் . அதனை ஏற்று , கவுன்சிலிங் , தொலைபேசி மூலம் இரவு ,பகல் என பணியாற்றி வருகிறோம் . இத்துடன் பிற பணிகளிலும் பணியாற்ற தயாராக உள்ளோம் ‘ என்றனர்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மதுரையை உருவாகிட 6 அம்ச திட்டங்கள்.முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரசுக்கு வேண்டுகோள்
by mohan
written by mohan
தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மதுரையை உருவாகிட 6 அம்ச திட்டங்களை முழுமையாக மேற்கொள்ள முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மதுரை மக்கள் சார்பில் மதுரை மக்கள் சார்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து கூறினார்.திருமங்கலம் தொகுதியில் உள்ள புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு தலைவர் சண்முகப்ரியாபாவடியான், வக்கீல் பாஸ்கரன் உடன் இருந்தனர் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது ;நகர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வையும், நோயின் தாக்கத்தையும் அதன் விபரீதங்களை எடுத்து வைக்க வேண்டும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முழுமையான விழிப்புணர்வை கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும்.கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்துவதின்
மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் பாதிக்கப்பட்டவர்களை தொற்றின் ஆரம்ப நிலையை கண்டறிந்து அரசின் கோவிட் .19 வழிகாட்டு நெறிப்படி தேவையான சிகிச்சையை விரைவாக அளித்தால் தொற்று குணமடைந்து அதன் மூலம் குணமடைவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும்.தேவையான இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனைத்து பகுதிகளில் தடுப்பூசி முகாமை விரைவுபடுத்த வேண்டும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் மக்கள் அதிகமாக கூட்டமாக உருவாவதை தடுக்கும் வகையில் முறையான நடவடிக்கை மேற்கொண்டும், அதிக அளவில் தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்று அனைத்து மாவட்ட ,தொகுதி, பகுதிகளில் பாரபட்சமின்றி வினியோகம் செய்து மக்களை காக்க வேண்டும்.ஒவ்வொரு கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டுக்கு சென்று அவர்களின் ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை மருத்துவ உபகரணங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.தொற்று உள்ளவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் உளவியல் ஆலோசனைகளை வழங்கிட வேண்டும்.அதேபோல் நோய் தொற்றார்களுக்கும், பணியாளர்களுக்கும் உயிரை பணயம் வைத்து முன்களபணி செய்துவருபவர்களுக்கும் தரமான உணவு வசதிகளை போதுமான அளவில் சரியான நேரத்தில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.மேற்கண்ட 6 நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டால் கொரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மதுரை முதலிடத்தில் வந்துவிடும் என்பதை மதுரை மக்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.முதல் அலையின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அம்மாவின் அரசு 17 அமைப்புசாரா தொழிலாளர்கள், 14 நலவாரிய தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் உட்பட 35.65 தொழிலாளர்களுக்கும் மற்றும்13.35 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கினார்.தற்போது அதேபோல் முன்னாள் முதலமைச்சரும் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கடந்த 19ஆம் தேதி தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார் அதில் அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரிய தொழிலாளர்களுக்கும் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.ஆகவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டும் உடனடியாக நிவாரண உதவி மற்றும் உணவு பொருட்களை அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று கூறினார்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென் மாவட்டங்களுக்கான 5வது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு வருகை
by mohan
written by mohan
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 6 டேங்கர் லாரிகளில் 90.64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் இன்று மதுரை கூடல் நகர் வந்தது. இது தமிழகத்திற்கு வந்த 35 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும்.மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்திற்கு வந்த 3 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ரோல் ஆன் – ரோல் ஆப் (Roll On – Roll Off concept) திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட டேங்கர் லாரிகள் கூடல் நகர் ரயில் நிலையம் வந்தவுடன் சாலை மார்க்கமாக இயங்கி ஆக்சிசன் தேவைப்பட்ட மருத்துவமனைகளுக்கு விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது.இதனுடன் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு ரயில் மூலம் 2188.96 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்ட
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் பசித்திருப்போருக்குதேடி சென்று உணவு பொட்டலங்களை வினியோகித்து வரும் சிறப்பு காவல் படையினர்
by mohan
written by mohan
கொரோனா பெருந்தொற்றால் தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் மதுரையில் சாலையோர வாசிகளுக்கும் பொதுமக்களுக்கும்மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஆறாவது அணியின் சார்பில் கடந்த 10 நாட்களாக தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் என விதவிதமான உணவு பொட்டலங்களை தயார் செய்து உணவு வழங்கி பெரு சேவையாற்றி வருகின்றனர்.
மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஆறாவது அணியின் காவல்துறை கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையில், சிறப்பு காவல்படை சார்பு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள்தொடர்ந்து 10 நாட்களாக தினந்தோறும் 500க்கும் மேற்பட்டவர்களுக்குவெரைட்டி வெரைட்டியாக சாதம் தயார் செய்து மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் பழங்காநத்தம் ஆரப்பாளையம் பெரியார் பேருந்து நிலையம் மதுரை மாட்டுத்தாவணி என அனைத்து பகுதிகளுக்கும் சென்று சாலையோரங்களில் அமர்ந்திருக்கும் நபர்களை தேடி சென்று தினந்தோறும் விநியோகம் செய்து வருகின்றனர்.ஊரடங்கும் பசியால் யாரும் காத்து இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு அமைப்பினர் உணவுகளை வழங்கி வரக்கூடிய சூழலில் காவல்துறையினர் பசித்து இருப்போரை தேடி சென்று உணவளித்து வருவது மதுரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது
. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் நரிக்குறவ மக்களுக்கு வருவாய்துறை சார்பில் நிவாரண பொருட்களை கோட்டாட்சியர் வழங்கினார்.
by mohan
written by mohan
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது. கொரோனா முழு ஊரடங்கில் பசியால் தவிக்கும் ஏழை,எளிய மக்களுக்கு அரசுடன் இணைந்து பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் நிவாரன பொருட்கள், உணவு பொட்டலங்கள் வழங்கி வருகின்றனர்
.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டி ஊராட்சிட்குட்பட்ட சமத்துவபுரத்தில் சுமார் 50 நரிக்குறவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா முழு ஊரடங்கால் நரிக்குறவ குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த நிலையில் நரிக்குறவ குடும்பங்களுக்கு வருவாய்துறை சார்பில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் நரிக்குறவ குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார். இதில் வட்டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் நரிக்குறவ மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உசிலைசிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி – காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
by mohan
written by mohan
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது. கொரோனா முழு ஊரடங்கில் பசியால் தவிக்கும் ஏழை,எளிய மக்களுக்கு அரசுடன் இணைந்து பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் நிவாரன பொருட்கள், உணவு பொட்டலங்கள் வழங்கி வருகின்றனர்
.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனா முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து உணவு கிடைக்காமல் தவித்து வந்த ஏழை,எளிய மக்களுக்கு மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் இளங்கோவன் உணவு பொட்டலங்களை வழங்கினார். இதில் நகர தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி, முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயகாந்தன் மற்றும் சீவெல்பர் அறக்கட்டளை நிறுவனர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உசிலைசிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் முழு ஊரடங்கு நாளில் பசியால் தவித்து வரும் ஆதரவற்ற முதியோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரசுடன் இணைந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உணவுகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நியோ மேக்ஸ் குழுமம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் கலந்துகொண்டு நியோ மேக்ஸ் குழுமம் உசிலம்பட்டி தலைவர் ராஜ்குமார் முன்னிலையில் உணவு பொட்டலங்களை வழங்கினார். இதில் துரைச்சாமிபுரம் புதூரை சேர்ந்த எல்ஐசி அழகர்சாமி மற்றும் தனசேகரன் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
உசிலைசிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் கீழக்கரை நகர் சார்பாக தேவையுடையோருக்கு உணவு பொருட்கள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் கீழக்கரை நகர் சார்பாகவும் மாவட்ட தலைவர் அருளாடும் பெருமாள் அறிவுறுத்தலின் படியும், மாவட்ட இணை தலைவர் செய்யது நியாஸ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துகுமார் முன்னிலையில் நகர் தலைவர் அப்சல் கான் தலைமையில் நகர் இளைஞர் அணி செயலாளர் அப்துல் ரசாக் மேற்பார்வையில் மற்றும் நகர் துனை தலைவர் ஆசிப் யாசீன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனு வசதி இல்லாத குடும்பத்திற்கு சமையலுக்கு தேவையான பொருகள் இருபது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அறவழி போராட்டம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மத்திய அரசு கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இந்தியா முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கும் மக்கள் எதிர்ப்பு அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கீழக்கரை நகர் முழுவதும் பொதுமக்கள் திரளாக தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் பக்ருதீன் அலி முன்னிலை வகித்தார்.
You must be logged in to post a comment.