இராமநாதபுரத்தில் அமிர்தா மருத்துவமனை சார்பில் இன்று நடந்த குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை சிறப்பு முகாமில் 270க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்தனர்.
ராமநாதபுரம் ராஜசூரிய மடை அமிர்தா வித்யாலயத்தில் கொச்சி அமிர்தா மருத்துவமனை, ஜெனிசிஸ் அறக்கட்டளை மற்றும் எச்டிஎப்சி எர்கோ சார்பில் இதய நோய் பாதித்த குழந்தைகளுக்கான இலவச பரிசோதனை சிறப்பு முகாம் இன்று நடந்தது. தமிழ்நாடு மாதா அமிர்தானந்தமயி மடத்தின் பிரம்மச்சாரி நிகிலேசம்ரிதா சைதன்யா தொடங்கி வைத்தார்.ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயம் முதல்வர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதய குறைபாடுகளுடன் பிறந்த 270 குழந்தைகளுக்குகொச்சி அமிர்தா மருத்துவமனை குழந்தை இருதயவியல் துறை தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் மருத்துவக்குழுவினர் சோதனை செய்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 130 குழந்தைகளுக்கு கொச்சி அமிர்தா மருத்துவமனையில் இலவச சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வழங்கப்பட உள்ளது. அமிர்தா மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை அல்லது வடிகுழாய் நடைமுறைகள் தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை உட்பட இலவச சிகிச்சையை வழங்க உறுதி அளிக்கப்பட்டது. டாக்டர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:ஜெனிசிஸ் அறக்கட்டளை, அமிர்தா ஹார்ட் கேர் அறக்கட்டளையின் தாராளமான ஆதரவின் மூலம் இந்த மனிதநேய முயற்சி சாத்தியமாகிறது. துணை முதல்வர் பாலவேல் முருகன் நன்றி கூறினார்
செய்திகள்
இலங்கையில் இருந்து கடல் வழியாக படகில் கடத்தி வந்த 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்த வழக்கில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இன்று கைது செய்தனர். இலங்கையிலிருந்து கடல் வழியாக படகு மூலம் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு நவ.28 இரவு தகவல் கிடைத்தது. இதன்படி, மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி கடற்பகுதிகளைசுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் நவ.29 அதிகாலை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பாம்பன் முந்தல் முனை கடற்கரைக்கு வந்த நாட்டுப் படகை சிலர் நங்கூரமிட்டு நிறுத்த முயன்றனர். இதையடுத்து அப் படகை அதிகாரிகள் சுற்றி வளைக்க முயன்ற போது படகில் இருந்த 4 பேர் ஒரு பண்டலை கடலில் வீசி எறிந்து தப்பினர். நாட்டு படகை அதிகாரிகள் சோதனை செய்ததில் அங்கு மறைத்து வைத்திருந்த 3.5 கிலோ தங்கக்கட்டிகளை கைப்பற்றினர்.இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் அளித்த தகவல் படி தனுஷ்கோடி -பாம்பன் இடையே மன்னார் வளைகுடா கடலில் தெர்மாகூலில் கட்டியவாறு மிதந்த தங்கக்கட்டி பண்டலை கைப்பற்றினர். அதை எடையிட்டதில் 4.5 கிலோ தங்கக்கட்டி இருந்தது தெரிந்தது. இதையடுத்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையோரை தீவிரமாக தேடி வந்தனர். இது தொடர்பான விசாரணையில் பாம்பனைச் சேர்ந்த பிரசாத், அஸ்கர் ஆகியோர் என தெரிந்தது. இவர்கள் ராமநாதபுரம் கடம்பா நகர், நாகநாதபுரம் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் படி 2 பேரையும் கைது செய்ய சுங்கத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்தனர். இதில் பிரசாத் என்பவரை இன்று கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானஅமலாக்கத்துறை அதிகாரி மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்
திண்டுக்கல் அரசு டாக்டரிடம்,லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை நீதிமன்ற உத்தரவில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, அவர்ரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக அவர் உணவு
உட்கொள்ளாமல் இருந்துவந்துள்ளார்.யில் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாகவும், மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதனால், அவருக்கு மனநல ஆலோசகர், தற்கொலை தடுப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்
.செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தனியாக இருந்த குழந்தை வீட்டில் உள் தாப்பாள் போட்டுக் கொண்டதால் அவதிப்பட்ட குழந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர் .
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டி சேர்ந்த ரவிக்குமார் .இவர்களது மகள் மேகவர்ஷினி வயது 6. பெற்றோர்கள் வெளியே படுத்துக் கொண்டிருந்த நிலையில் குழந்தை தனி அறையில் சென்று தெரியாமல்தாப்பாள் போட்டுக் கொண்டதால் குழந்தை எவ்வளவு முயன்றும் கதவை திறக்க முடியவில்லை. இதனால் பதறிப்போன மேகவர்ஷினி அழு குரல் கேட்டு தந்தை ரவிக்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை திறக்க முயன்றுள்ளனர். எனினும் கதவு திறக்க முடியவில்லை. உடனடியாக மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கதவை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டி சென்றனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிவகாசி அருகே, முன்னாள் அமைச்சர் தலைமையில், அதிமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதியின், அதிமுக கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.சிவகாசி அருகே, விஸ்வநத்தம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, விருதுநகர் மாவட்டம் எப்போதும் அதிமுக கோட்டை என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும். தமிழகம் முழுவதும், முன்னாள் முதல்வர் எடப்பாடியாருக்கு ஆதரவு அலை வீசுகிறது. தமிழக மக்கள் அதிமுக கட்சிக்கு வாக்களிப்பதற்காக காத்திருக்கின்றனர். அந்தளவிற்கு தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்வதற்கு அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அதிமுக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிர்வாகியும், அவர்களது பகுதியில் உள்ள வாக்காளர்களை சந்திக்க வேண்டும். கட்சியில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பேசினார். ஆலோசனை கூட்டத்தில்,விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பலராம், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பிலிப்வாசு, சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், மேற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மணிகண்டன், கலைப்பிரிவு செயலாளர் மாரிமுத்து உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
.செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கனமழை எதிரொலி; தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..
தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும் போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்கக் கூடாது. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருப்பதுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.மேலும், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற் கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633 290548 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கிழக்கு ஒன்றிய செயலாளர் இரா. கோடீஸ்வரன், தலைமை தாங்கினார் நகர செயலாளர் ராஜபிரபு, முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினரும் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் கழக அம்மா பேரவை செயலாளரும் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான டேவிட் அண்ணாதுரை, ஆகியோர் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு கிளை வாரியாக பூத் கமிட்டி அமைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தேனி பாராளுமன்றத்திற்கு யாரை வேட்பாளராக கை காட்டுகிறாரோ அவருக்கு அயராது பாடுபட்டு மகத்தான வெற்றியினை தேடித் தர வேண்டும் என்று கூறினர். இதில் நிர்வாகிகள் ஒன்றிய கழக செயலாளர்கள் ரகு, ராஜன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார், பேரூர் செயலாளர்கள் மதன், திரவியம், முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் வீரமாரி பாண்டியன், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பாலு, மாவட்ட இணைச்செயலாளர் சுமதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இளஞ்செழியன், சித்ரா, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தகவல் தொழில் நுட்ப அணி ரிஷபம் ரஜினி பிரபுமற்றும் நிர்வாகிகள் முனைவர் பாலு வக்கீல் சந்திரசேகரன் வேல்முருகன், பண்ணகுடி அசோக், நீதி, சங்கையா, சோழவந்தான் மீனாட்சி ரபீக்.சுந்தர் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. மாநில தலைவர் ஏ.சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர் கணேசன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி துவக்கவுரை ஆற்றினார். மாநில பொதுச்செயலாளர் அ.நூர்ஜஹான் சங்க வேலை அறிக்கை சமர்ப்பித்தார். நூர்ஜஹான் கூறுகையில், சத்துணவு மையங்களில் பல்லாயிரக்கணக்கான காலி பணியிடங்களை துரிதமாக நிரப்ப வேண்டும். முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும். காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதிய ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பிற துறை பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கும் ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் ஆண் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க உரிய அரசாணை வெளியிட வேண்டும் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் சத்துணவு ஊழியர்களுக்கு 12 நாள் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும். அரசு ஆணையின்படி 10 ஆண்டு பணி மூப்படைந்த சத்துணவு அமைப்பாளர்களுக் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றார்.மாநில பொருளாளர் பெ.சுப்புக்காளை வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.மாநில துணைத்தலைவர்கள் ப.மூர்த்தி, ஆ.மிக்கேல் அம்மாள், வி.குப்புச்சாமி, எஸ்.கனகவேல், மாநில செயலாளர்கள் சி.பிச்சுமணி, ஆ.கிருபாவதி, த.ஜெயந்தி, க.ரவி, கு.குணா, ப.சங்கரி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாநில பொதுச்செயலாளர் இ.மாயமலை, தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அமைப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வாசுகி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாநில தணிக்கையாளர் கே.சோமசுந்தரம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமி நாராயணன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாநில செயலாளர் மு.செல்வக்குமார் நிறைவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் ப.அபாராஜிதன் நன்றி கூறினார். இம்மாநில பொதுக்குழு கூட்டத்தில் 450க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் 100 வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக வந்த திமுக மகளிர் அணி செயலாளரும் எம் பியுமான கனிமொழி பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியது தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவரை கைது செய்துள்ளனர் இதே போன்று தமிழக அரசின் நடவடிக்கை எடுக்குமா? என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் ஒன்றிய அரசு போல பாஜக போல திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை, நீதி,நியாயத்தை நிலை நாட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதனால் யாரையும் மிரட்டுவதற்காக செய்துவிட்டு பாதியில் நிறுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கியதை வைத்து அனைத்து அதிகாரிகளையும் குற்றம் சொல்லக்கூடாது என பேசியது குறித்த கேள்விக்கு பாஜக மீது பாஜக நிர்வாகிகள் மீது சிஏஜி அறிக்கையில் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை அதற்கு பதில் சொல்லட்டும் என கூறிவிட்டுச் சென்றார்.கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கிட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி MP, , வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன்வசந்த் ,மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் தளபதி MLA, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டியில் பங்கேற்க மதுரை ,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள்ர்கள் கலந்து கொண்டனர்.
.செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்ப் பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரீத்தி உத்தரவின் பேரில், வடக்கு காவல்நிலைய போலீசார் மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையில், அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள காவல் சோதனை சாவடியில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, அதில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். புகையிலை பொருட்களை கடத்தி வந்த ராஜபாளையம், காட்டுநாயக்கர் தெரு பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (24) மற்றும் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூனம்பட்டி பகுதியைச் சேர்ந்த காந்திராஜா (31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருமங்கலம் அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதேவி ராமாக்கம்மாள், ஸ்ரீ கருப்பசாமி கோவில்களில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி ராமாக்கம்மாள், ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.அச்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீதேவி ராமாக்கம்மாள், ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவிலை 15 ஆண்டுக்கு பின் புதிதாக புரைமைத்த அக்கிராம நிர்வாகிகள், மஹா கும்பாபிஷேக விழாவினை வெகுவிமரிசையாக நடத்தினர். இச்சமூக (தெலுங்கர்) இனமக்கள் தமிழகம் மட்டுமின்றி புதுவை மற்றும் அயல்நாடுகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் இவ்விழாவினையொட்டி, இக்கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூடினர்.முன்னதாக, கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள்2 நாட்களாக நடைபெற்று, அங்கு பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தங்களை வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கோபுரங்களின் மேல் உள்ள கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றி மஹா சம்ப்ரோக்ஷணம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, புனிதநீர் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
.செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்குவரும் தாய்மார்களின் உறவினர்கள் தங்க இடம் இல்லாமல் டீக்கடை மற்றும் தற்க்காலிக பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் அவலம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து 500 மேற்ப்பட்ட தாய்மார்கள் வந்து செல்கின்றனர்.இந்த மருத்துவமணையில் சுமார் 102 படுக்கை வசதி உள்ளது.இந்த மருத்துவமணை வளாகத்தில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தில் 42 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டிய கட்டிடம் 2018ம் ஆண்டு முதல் நகராட்சியின் கிழ் செயல்பட்டு வந்தது கடந்த 20 நாட்களுக்கு மேலாக எந்த காரணமும் இன்றி பூட்டி உள்ளனர்.பிரசவத்திற்கு வரும் தாய்மார்களின் உறவினர்கள் வெளியில் தங்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும் சமூக ஆர்வலர்கள் கூறும் போது ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானேர் வருகிறார்கள் இந்த மருத்துவமனையில் 102 படுக்கை வசதி உள்ளது ஆனால் நேற்று மட்டும் 140 க்கு மேற்பட்ட தாய்மார்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர் மேலும் படுக்கை வசதி பற்றாக்குறையாக உள்ளது அரசு மருத்துவமனை வளாகத்தில் 42 லட்ச ரூபாய் மதிப்பில் சுமார் 50 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கடந்த 2018 ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை செயல்பட்ட கட்டிடம் 20 நாட்களாக பூட்டிய நிலையில் உள்ளது காரணம் இன்றி பூட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தால் பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் உடன் வரும் உறவினர்கள் இது பேரிடர் காலம் என்பதால் மிகவும் சிரமப்பட்டு எதிரில் உள்ள டீக்கடைகளில் தற்காலிக பேருந்து நிலையத்திலும் படுக்கும் அவள நிலை உள்ளது.மேலும் 102 படுக்கை உள்ள அரசு மகப் பேறு மருத்துவமனையில் 140 நபர்கள் இருப்பதால் 1 படுக்கையில் 2 பேர் தங்கும் நிலை உள்ளது.தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் உள்ள 50 படுக்கைகள் உள்ள கட்டிடத்தை அரசு மகப் பேறு மருத்துவமணை நிர்வாகத்திடம் வழங்கினால் பிரசவ தாய்மார்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு பயனாக இருக்கும் சம்மந்தபட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனிடம் மனு கொடுத்து உள்ளோம் என மருத்துவ துறை சார்பில் தெரிவிக்கின்றனர் எது எப்படியோ சம்மந்தபட்ட கட்டிடம் மருத்துவ துறை நிர்வாகத்தில் இருந்தால் மட்டுமே குழந்தை பெறும் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் பயன்படுத்த முடியுமே தவிர நகராட்சி நிர்வாகத்தில் இருந்தால் இந்த மாதிரி தவறுகள் நடக்கத்தான் செய்யும் ஆகவே முறையாக அந்த கட்டிடத்தை மருத்துவத்துறை நிர்வாகத்திடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அலங்காநல்லூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய கோரி அலங்காநல்லூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் வந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களிடம் எடுத்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்தில் தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று மனு கொடுக்கப்பட்டது . இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை..
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியாக கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் அங்கிட் திவாரி பணியில் சேர்ந்தார் கடந்த ஏப்ரல் மாதம் 2023 ஆம் ஆண்டு மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்க ப்படுவதாக கூறியும் இதிலிருந்து அவரை காப்பாற்றுவதாகவும் கூறி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார்.இதற்கு டாக்டர் சம்மதிக்காததால் கடைசியில் 51 லட்சம் என பேரம் பேசி முடிக்கப்பட்டது.அதில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் வைத்து கொடுத்தார்.மீதித் தொகையை நேற்று டாக்டரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டபோது இது குறித்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் அளித்தார்.அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி இன்று திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச் சாலையில் அதிகாரியின் காரில் 20 லட்சம் ரூபாயை வைத்தனர். அந்த காரை எடுத்து அவர் செல்ல முயன்ற போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார்.பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கொடைரோட்டில் உள்ள டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கி பிடித்து அவரை திண்டுக்கல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 20 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வருகை தந்தனர்.இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தற்பொழுது அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.இதனிடையே அமலாக்கத்துறை சார்பில் உள்ள வழக்கறிஞர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.முதன்முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைக்கு அமலாக்க துறையினர் மறுப்பு தெரிவித்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் சோதனையானது நடைபெற்று வருகிறது…
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே”.துபாயில் நடக்கும் ஐ.நா பருவநிலை மாநாட்டில் சத்குரு சிறப்புரை
துபாயில் டிச.1 தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார்.இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில் “நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த மண்ணில் விளையும் உணவை தான் உண்கிறோம், இறக்கும் போது மீண்டும் அதே மண்ணுக்கு தான் செல்வோம். மண் தான் நம்மை முழுமையாக ஒருங்கிணைக்கிறது. மக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடம் மாற்றத்தையும், மண் புத்துயிர் பெறுவதற்கான கொள்கைகளை செயல்படுத்துவதிலும் நம்பிக்கைத் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும்” என்று கூறினார்.இந்த மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் காலநிலை அமைச்சர் மரியம் அல்மெய்ரி, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அடையாளம் தெரியாத ஆண் பிரேதத்தை அகற்ற ஆள் வராததால் தனி ஒரு காவலரே தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரல்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் உள்ள கண்மாயில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மிதப்பதாக அப்பகுதியில் சென்ற விவசாயிகள் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ,சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கண்மாயில் மிதக்கும் ஆணின் சடலம் கண்டு, அவரது உடல் சிதைந்த நிலையில் இருப்பதால் , பல நாட்களுக்கு முன்பே கண்மாயில் உயிரிழந்திருக்கலாம் எனவும், இறந்தவர் கைலி மற்றும் நீல நிற சட்டை அணிந்துஉள்ளார் . 45 வயதுமிக்க அந்த ஆணின் சடலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு,அவரது உடலை எடுப்பதற்கு அங்கு கூடியிருந்த இளைஞர்கள் எவரும் முன் வராததால், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன், ஆஸ்டின்பட்டி காவல்நிலைய முதல் நிலை காவலர் முத்துக்குமார் , உடலை ஸ்டெட்சரில் வைத்து தூக்கி சென்று ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள், முதல் நிலை காவலர் முத்துக்குமாரின் சேவை பணியை பாராட்டி வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் நேற்று மற்றும் அதற்கு முன்பும் தொடர்ந்து கொலைகள் நடந்து வருவதால், அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அட்டை வாடிப்பட்டியில் வழங்குவதாக அதிகாரிகள் கொடுத்த அறிவிப்பை கண்டு தங்களது ஊர்களில் இருந்து ஆட்டோ களிலும் வாடகை வண்டிகளிலும் வாடிப்பட்டிக்குவந்த நிலையில் தவறான தகவல் கொடுத்து விட்டதாகவும் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்று அதற்குரிய அட்டைகள் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த நிலையில் மீண்டும் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சிக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் இந்த ஊராட்சிக்கு மட்டுமே இங்கு பதிய முடியும் உங்களுக்கு மேலக்கால் ஊராட்சிக்கு சென்று பதிய வேண்டும் என்று மீண்டும் அதிகாரிகள் தவறான தகவல் கூறியதை அடுத்து மீண்டும் ஆட்டோ பிடித்து தங்களின் சொந்த ஊருக்கு திரும்பிய அவலம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்த உறவினர்கள் கூறும்போது :
நேற்று முன்தினம் வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடப்பதாகவும் அதனால் முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையை பெற்று செல்லுமாறு கூறிய நிலையில் 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளை வாடிப்பட்டிக்கு அழைத்துச் சென்றோம் பின்பு அங்கு எங்களுக்கு தகவல் கொடுத்த வர்களிடம் கேட்டபோது முள்ளி ப்பள்ளம் ஊராட்சியில் முகாம் நடப்பதாகவும் அங்கு செல்லுமாறும் கூறிய நிலையில் மீண்டும் அனைவரையும் அழைத்துக் கொண்டு முள்ளிப்பள்ளம் வந்தபோதுமுகாமில் இருந்தவர்கள் இந்த ஊராட்சிக்கு மட்டுமே முகாம் நடைபெறுகிறது உங்களுக்கு மேலக்கால் ஊராட்சியில் நடைபெறும் அப்போது அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு கூறியதால் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளோம்.அதிகாரிகள் முறையாக அறிவிப்பு வெளியிட்டிருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது ஆகையால் இனி வரும் காலங்களிலாவது மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு உரிய முறையில் அறிவிப்பு வெளியிட்டு எங்களை அலைக்கழிக்காத வண்ணம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அருகே மானை வேட்டையாடி அதன் இறைச்சியை சிலர் சமைத்துக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று முன் தினம் இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா அறிவுறுத்தல் படி, ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் நித்யகல்யாணி தலைமையில் வனவர் பரக்கத் நிஷா,வனக்காப்பாளர்கள்முகில்நாதன்,திருப்பதி,முருகேசன்,வனக்காவலர் அஜித்ரன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.புல்லங்குடி மஞ்சலோடை மரப்பாலம் செங்கல் சூளையில் மானின் இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒன்றரை வயது பெண் புள்ளி மானை சுருக்கு கம்பி மூலம் வேட்டையாடி கொன்றது தெரிந்தது. இதை தொடர்ந மண்ணில் புதைத்து வைத்திருந்த புள்ளி மானின் தோல், மஞ்சள் தடவி வாட்டிய நிலையில் மானின் 4 கால்கள், சமைத்துக் கொண்டிருந்த இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக புல்லங்குடி பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் முத்துக்குமார் 19, ஆறுமுகசாமி 59, பால்பாண்டி 43, மகாலிங்கம் மகன் சூர்யா 27 ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்து தப்பியோடிய புல்லங்குடி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சரத்குமாரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்த 4 பேரையும் ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஹேமலதா கூறுகையில் ராமநாதபுரம் மாவட்ட வனப்பகுதிகளில், 2022ல் திருத்திய வன உயிரின சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும் என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கும் முதல் மூன்று கிளைச் செயலாளர்களுக்கு 19 ஆயிரம் பரிசு – ஒன்றிய செயலாளர் அறிவிப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் நடைபெற்றது.,இந்த கூட்டத்தில் கிளைச் செயலாளர்களுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அமைப்பது தொடர்பான படிவங்களை வழங்கிய ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி., விரைவில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடித்துத் தரும் முதல் மூன்று கிளைச் செயலாளர்களில் முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், இரண்டாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், மூன்றாம் பரிசாக 4 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் என 19 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது பலரது கவணத்தையும் ஈர்த்துள்ளது.,
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையின் பிரபல திரையரங்கில் ஆறு மாதமாக பில்போடாமல் பாப்கார்ன் விற்பனை செய்து 3 லட்சம் வரை மோசடி – 2 ஊழியர்கள் கைது
மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள வெற்றி சினிமாஸ் என மூன்று திரையரங்கம் உள்ளது .திரையரங்கின் மையப்பகுதியில் உணவுப் பொருள் விற்பனை செய்யும் கேண்டின் உள்ளது.கேண்டினில் பணிப அவனியாபுரத்தை சேர்ந்த சரவணக்குமார்( வயது22) , மற்றும் வில்லாபுரம் மீனாட்சிநகர் பகுதியைச் சேர்ந்த மெய்யப்பன் ( வயது19) ஆகிய இரு ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.மெய்யப்பன் கேண்டினில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். சரவணன் கடந்த எட்டு மாதங்களாக பணிபுரிந்து வருகிறார்.கடந்த சில மாதங்களாக கேண்டீனில் பணிபுரியும் மெய்யப்பன், சரவணன் இருவரும் பில் போடாமல் பாப்கார்ன் மற்றும கூல்ட்ரிங்க்ஸ்களை விற்பனை செய்துள்ளனர்.இதுகுறித்து கேண்டீன் மேலாளர் முனியராஜன் கணக்கு பார்த்தபோது கடந்த ஆறு மாதங்களில் மூன்று லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து முனியராஜன் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து அவனியாபுரம் போலீசார் மெய்யப்பன் சரவணன் இருவரையும் விசாரணை செய்ததில் இருவரும் பில் போடாமல் பாப்கான் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ்களை ரூபாய் மூன்று லட்சம் அளவில் விற்பனை செய்தது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.திரையரங்க கேண்டின் மேலாளர் முனியராஜா அளித்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு மெய்யப்பன், சரவணன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.