மதுரை பாராளமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரி அறையில் அத்துமீறி ஒரு பெண் அதிகாரி நுழைந்ததாகவும் அங்கு உள்ள சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றதாகவும் தகவல் பரவியது.
இதனைத் தொடர்ந்து அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் திரு.சு.வெங்கடேசன் தலைமை யிலான பொதுமக்கள் காவல்துறையுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு பதற்றமான சூழ்நிலை அங்கே நிலவுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.