திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல் வன்னியனூர் கிராமத்தில் 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சக்தி திருவேங்கடம் தலைமை தாங்கினார்.
கலசபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம் உத்தரவின்பேரில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது . மேல் வன்னியனூர், கீழ் வன்னியனூர் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.இந்நிகழ்வில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஜெயராமன், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி எழுத்தர் திருநாவுக்கரசு திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர் ஏழுமலை, செவிலியர் மாலினி , சுவேதா மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்
மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் மதுபானக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து பா.ஜ சார்பில் உசிலம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கொரோனா வைரஸ் தாக்;கத்தின் 2வது அலையால் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.இந்நிலையில் வருகிற திங்கள் கிழமை முதல் அரசு மதுபானக்கடைகளைத் திறக்க அரசு அறிவித்துள்ளது.மது பானக்கடைகளைத் திறந்தால் கடைகளில் சமூக இடைவெளியின்றி கூட்டம் வரும்; .அதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும.;மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குப்படி தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பா.ஜ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சி மாவட்டச் செயலாளர் சொக்கநாதன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ் உசிலம்பட்டி ஒன்றிய தலைவர் தெற்கு முருகன் வடக்கு ஒன்றிய தலைவர் சின்னசாமி அமைப்புசாரா அணியின் மாவட்ட துணை தலைவர் முத்து நகர பொதுச்செயலாளர் சவுந்தரபாண்டி நகர பொதுச் செயலாளர் தமிழரசன் மாவட்ட செயலாளர் அமைப்புசாரா அணியின் பிரபு அமைப்புசாரா அணியின் ஒன்றிய தலைவர் நல்லதம்பி அமைப்புசாரா அணியின் ஒன்றிய துணைத் தலைவர் மயில் ராஜா அமைப்புசாரா ஒன்றிய தலைவர் செல்லம்பட்டி கலைச்செல்வன் நகர துணைத்தலைவர் அமைப்புசாரா அணியின் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர் கொரோனா முழு ஊரடங்கு சமயமென்பதால் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்களின்றி முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுபானக்கடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப பட்டன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் மூலம் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் தடுப்பூசி முகாம் 13.06.2021 ஞாயிற்றுக் கிழமை இன்று நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு (18 வயது முதல் அனைத்து வயதினருக்குமான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முகாம்) பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும், கோவேக்சின், கோவிஷீல்டு
தடுப்பூசி போட வரும் நபர்கள் ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. இரா .ஜெஸ்லின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கீழப்பாவூர் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொரோனா தடுப்பூசி (18 வயது முதல் அனைத்து வயதினருக்கும்) முதல் தவணை தடுப்பூசி முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு வட்டார மருத்துவ அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
1. குருசாமிபுரம் கோவில் மைதானம் (கோவி சீல்டு)
2. ஆவுடையானூர் ஊராட்சி மன்றம் (கோவி சீல்டு)
3. காந்திபுரம் சுடலைமாடசாமி கோவில் மைதானம் (கோவி சீல்டு)
4. சுரண்டை ஆர்.சி நடுநிலைப்பள்ளி 9வது வார்டு (கோவி சீல்டு)
5. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாவூர்சத்திரம்
(கோவேக்சின்)
குறிப்பு: தடுப்பூசி போட வரும் நபர்கள் ஆதார் அட்டை ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுரண்டை பகுதியில் அரசு மருத்துவமனை; வீ.கே.புதூர் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு..
சுரண்டை பகுதியில் பொதுமக்களின் அரசு மருத்துவமனை கோரிக்கையை ஏற்று அதற்கான இடத்தை தேர்வு செய்யும் வகையில் வீ.கே.புதூர் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சுரண்டையில் அரசு ஆஸ்பத்திரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் வகையில் வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு, ஆர் ஐ மாரியப்பன், ஆறுமுகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சுரண்டை பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆஸ்பத்திரி அமைப்பதற்க்கான சாத்தியக்கூறுகள், போதிய இட வசதி, போக்குவரத்து வசதி, நோயாளிகள் வந்து செல்லும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி என்ற இடத்தில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விடியற்காலை கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெங்களூரை சேர்ந்த பாதிரியார்கள் விக்டர்மோகன் (52)தாவீது (53) ஆகிய 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஓட்டுநர் சாம்சன் படுகாயத்துடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை வார்டு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களுக்கும், உடன் இருப்போருக்கும்,குழந்தைகளை எவ்விதத்தில் பாதுகாப்பது குறித்தும்,சித்தமருத்துவ மாத்திரைகள்,முகக் கவசங்கள்,சனிடைசர் கள், கபசுர பொடி வழங்கியும் மத்திய, மாநில அரசு அறிவித்தபடி கொரோனா குறித்து மேலூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் எஸ்.ஐ. பாலா கிருஷ்ணன், காஞ்சி முருகேசன், சூதா ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் சேவையை மருத்துவர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை எளிய மக்கள் 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்:
கடந்த 3 ஆம் தேதி அன்று திமுக முன்னால் தலைவர் கலைஞரின் 98 – வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் அவர்களின் ஆணைககிணங்க பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக மற்றும் பல்வேறு அமைப்பினர் நலத்திட்ட உதவிகள் கொரோனா நிவாரண ப் பொருட்கள் மற்றும் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன அதேபோல், மதுரை மாநகர் திமுக சார்பில் கொரோனா நிவாரணமாக ஏழை எளிய மக்கள் 1500 நபர்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன் முத்துராமலிங்கம் உத்தரவின்பேரில், மதுரை மாநகர் மாவட்ட திமுக கழகத்தை சேர்ந்த ஷாகுல் ஹமீது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மற்றும் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் நலத்திட்ட உதவிகள் வாங்கிச் சென்றனர் திமுக கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதில் முறைகேடு. கடும் நடவடிக்கை . சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சுந்தரம்மாள் தலைமையில் அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கலந்துகொண்டு இராஜபாளையம் நகர் பகுதியில் 42 வார்டுகளிலும் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது முறையாக ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்தால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர் ஆகையால் முறையான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் அதில் சில இடங்களில் குடிநீர் வழங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் அதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார் மேலும் அரசு உங்களுக்கு போதிய ஊதியம் வழங்கி வரும் நிலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக தண்ணீர் திறந்து விடாமல் தண்ணீர் திறந்துவிட பொதுமக்களிடம் பணம் கேட்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.இதை நீங்கள் சரி செய்து கொள்ளாவிட்டால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் இதேபோன்று நகராட்சி ஆணையாளர் சுந்தரம்மாள் பேசும்பொழுதும் பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமாக உள்ளது நீங்கள் திருந்திக் கொள்ள விட்டால் உங்கள் மீது சட்ட ரீதியான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் உங்களை பணி நீக்கம் செய்யவும் நேரிடும் என அதிகாரிகள் மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடக் கூடியவர்களை எச்சரித்தனர்…
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் போட்டோ வீடியோ கலைஞர் சங்கம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்தங்கபாண்டியனிடம் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் போட்டோ ஸ்டுடியோகள் கொரோனாவால் ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது மேலும் தமிழக அரசு அறிவித்த உத்தரவில் திறக்கவோ அல்லது மூடவோ எந்த ஒரு முழுமையான அறிவுப்பும் இல்லாத நிலையில் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினரிடம் சங்கத் தலைவர் ஈபிஎஸ் குமார் கோரிக்கை வைத்தார் .எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதால் கடைகள் திறக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்று கடைகள் திறக்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார் .அவருக்கு போட்டோ வீடியோ சங்க சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது…
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 44 குற்றவாளிகள் கைது – 41 டூவீலர்கள் மீட்பு
மதுரை மாநகரில் நடந்த இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க வேண்டி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர்( குற்றம் ) ராஜசேகரன், மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர்கள் ரமேஷ், ரவிபிரகாஷ் , ரவி மற்றும் வினோஜி இவர்களின் நேரடிப் பார்வையில் காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் 5 தனிப்படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.தொடர்ந்து தனிப்படையினர் கடந்த இரண்டு மாதங்களில் குற்றவாளிகளை தேடிவந்தனர். இதுவரை காணாமல் போன இருசக்கர வாகனங்களில் விலை உயர்ந்த புல்லட் வண்டி உட்பட 41 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன . அதில் நகர் சரகத்தில் 6 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது .இவைகளின் மதிப்பு சுமார் ரூ 17,50,000 / -ஆகும் . இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மதுரை மாவட்டம் துவரிமானைச் சேர்ந்த சூரியா , மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த கணேஷ் பிரவீன் உள்ளிட்ட 44 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் .இந்த குற்றவாளிகளை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் தபிரேம் ஆனந்த்சின்கா மற்றும் காவல் துணை ஆணையர் ராஜசேகரன் அவர்கள் பாராட்டினார்கள் .
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராஜபாளையத்தில் காவல்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்களுக்கு அரிசி பலசரக்கு காய்கறிகளை காவல் துறை துணை கண்காணிப்பாளர் வழங்கினார்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்ப்பகுதிகளில் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு காவல்துறை சார்பில் உதவி செய்ய வேண்டுமென விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் அறிவித்திருந்தார்
அதனடிப்படையில்இராஜபாளையம் பகுதியில் உள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட ஊனமுற்றவர்களை இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்நாகசங்கர் மற்றும் ஆய்வாளர்கள் உதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி பலசரக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர் முற்றிலும் செயலிழந்து ஊனமுற்றவர்களை அவரது வீட்டிலேயே கொண்டு சென்று காவல்துறையினர் விட்டனர் .உதவி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் காவல்துறைக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்…
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வு அறிக்கையினை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட வேண்டும் -அமைச்சர் தங்கம் தென்னரசு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தனர்.தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வு அறிக்கையினை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். உலகளவில் பேசப்படும் அளவில் கீழடி அருங்காட்சியம் விரைவில் அமையும் என்றவர். தொல்லியல் துறை அகலாய்வில் தமிழ்நாடு 2600 ஆண்டுகள் பழமையான நாகரிகம் கொண்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளதாகவும், கீழடி அகழ்வாய்வில் முதல் முறையாக முழுமையாக குறுவாள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபும் மாவட்டம் கீழக்கரை முன்னாள் நகர் மன்ற துணை தலைவரும் முன்னாள் திமுக கீழக்கரை நகர் மாணவரணி அமைப்பாளருமான மூர் ஜெயினுதீன் இன்று (12/06/2022) கீழக்கரை நகர் கழக செயலாளர் பசீர் அஹமது தலைமையிலும், இளைஞர்அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் தன்னை திமுகவில் மீண்டும் இணைத்துக் கொண்டார்.
அதை தொடர்ந்து மாவட்ட கழக பொறுப்பாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத் இடம் வாழ்த்து பெற்றார். இவர் சிறிது காலம் எஸ்.டி.பி.ஐ கட்சியில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“Meme Creators” சிரிக்க வைப்பவர்கள் மட்டுமல்ல… மனித நேய பணியிலும் உயர்ந்தவர்கள் என உணர்த்திய கீழக்கரை Meme Creators..
கீழக்கரையை சார்ந்த மீம் கிரியேட்டர்கள் சார்பாக இன்று (12/06/2021) கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெருவோரம் வசிப்போர்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கு 100நபர்களுக்கு மேல் கண்டறிந்து உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை ramnadpasanga (Rina), bodysoda_comics (Farhan & Bazahir), mind_of_klk_2.0 (Irfan), true_kilakarai (Rafeek) keelakarai_talkies (Ahamed), thooki_adichiruven_memes (Nafees Ali), keelakarai_appatakars (Saarim), ceo_of_klk (Jafran), thoughts_of_kilakarai (Hamdhan) ஆகியோர் ஏற்பாடு செய்து உணவுகளை வழங்கினர்.
இன்ஸ்டாகிரமில் வசூல் செய்த பணத்தை கொண்டு இவர்கள் உணவு வழங்கினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சர்வதேச உரிமைகள் சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் விதமாக சுகாதாரதுறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவுகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு சர்வதேச உரிமைகள் கழக மாவட்ட துணைத்தலைவர் சூரியபாண்டி தினமும் உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் பகுதி சேர்ந்த பள்ளி மாணவன் கமலேஷ் தனது உறவினர் வீட்டிற்கு இறையூர் சென்று திரும்பும்போது பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பொழிந்தால் அம்மாபாளையம் அருகே உள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் காற்றில் சாய்ந்து வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததை கண்ட செங்கம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் கம்லேஷ் பொறுப்புணர்வோடு அதனை சரி செய்து முன்னுதாரணமாய் செயல்பட்ட மாணவனுக்கு அனைவரிடத்திலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை வழியாக கனடா நாட்டுக்கு தப்பிக்க, முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட சிலர் கனடா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர்.ஆனால், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத நிலையில் கடும் கெடுபிடி இருப்பதால் வேறு வழியின்றி, அந்த இளைஞர்கள் மதுரை வழியாக கனடாவுக்கு தப்பிக்க முடிவெடுத்தாகக் கூறப்படுகிறது.இதற்காக அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலரை அணுகியபோது, மதுரைக்கு வந்தால் இங்கிருந்து கள்ளத் தோணி மூலம் கனடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.இந் நிலையில், இலங்கையைச் சேர்ந்த திருமகன், சுகந்தன், ஸ்ரீகாந்தன், கபிலன் தினேஷ் உள்ளிட்ட 23 பேரும் கள்ளதோணி மூலம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடி வழியாக மதுரை வந்துள்ளனர்.அவர்கள் திருமங்கலம் கப்பலூர் பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். தொழிலாளர்கள் போர்வையில் இருந்து கொண்டு கனடாவுக்கு தப்பிக்க, அவர்கள் முயற்சிப்பது குறித்து மதுரை மாவட்ட கியூ பிராஞ்ச போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து கப்பலூர் பகுதியை கியூ பிராஞ்ச் ஆய்வாளர் சண்முகம் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். நேற்று திருமகன் உள்ளிட்ட 23 பேரையும் கியூ பிராஞ்ச் போலீ ஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களது நாட்டில் இருந்து கனடாவுக்கு நேரடியாக செல்வதற்கு கெடுபிடி இருப்பதால் மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக தப்பிக்கலாம் என்ற முயற்சித்தாகவும், இங்கு வந்தபின் அதற்கான முயற்சியில் தாமதம் ஏற்பட்டதால் கப்பலூர் பகுதியில் ஒரு கம் பெனியில் வேலை பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து, 23 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து, மதுரை 3 வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைத்ததாக கியூ பிராஞ்ச் போலீஸார் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
24 மணி நேரமும் தங்கு தடையின்றி பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்லும் அவலம். கண்டு கொள்ளாத அதிகாரிகள்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பைபாஸ் சாலை எச்டிஎஃப்சி வங்கி முன்பும் அங்கிருந்து சுமார் 200 அடி தள்ளி 24 மணி நேரமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் தங்குதடையின்றி சாலையில் வீணாக செல்கிறது பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் ஏன் அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வில்லை கண்டும் காணாமல் இருக்கிறார்கள் குடிநீர் வீணாக ஏன் அவர் கண்களுக்கு தெரியவில்லையா என கேள்வி
இதுபோன்ற அஜாக்கிரதையாக செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் மாநகராட்சி நிர்வாகம் அதை செய்வார்களா எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலரும் பொதுமக்களும்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராஜபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கி யார் சாலையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் சங்கரலிங்கம் தலைமையில் குறைந்த காலத்தில் வறுமையில் வாழக்கூடிய 300-க்கும் மேற்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரிசி காய்கறி எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் வழங்கினர்
இந்த நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் சுகுமார் .முகமது தெளபிக், முத்துகிருஷ்ணன் பிரகாஷ் மற்றும் திமுக நகர செயலாளர் ராமமூர்த்தி , ராஜா அருள்மொழி மணிகண்ட ராஜா சியாம் ராஜா உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்கள் வசிக்கும் பகுதியில் குப்பைகளை தரம் பிரிக்க கீழக்கரை நகராட்சி அனுமதியா?? சுகாதார கேடால் முகம் சுழிக்கும் பொது மக்கள்..
கீழக்கரையில் வீடுகளில் கொடுக்கும் குப்பையை மக்கும் மற்றும் மக்கா வகை குப்பைகள் என்பதை தரம் பிரித்த பின்னர் குப்பைகள் கிடங்குகளில் கொட்டப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் உத்தரவு.
ஆனால் கடந்த சில வாரங்களாக வடக்குத்தெரு மணல்மேடு அருகில் தொடர்ந்து தரம் பிரிக்கும் பணியை நகராட்சி ஊழியர்கள் அப்ணிபயை தொடரச்சியாக செய்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள ஒருவர் கூறுகையில், “ஆரம்பத்தில் குப்பையை எடுத்து சென்று விடுவார்கள், ஆனால் சில தினங்களாக இப்பகுதியிலேயே தரம் பிரிக்கும் பணியையும் செய்து வருகிறார்கள். ஆரம்கத்தில் அவசரத்திற்காக ஒரு நாள் செய்கிறார்கள் என்று எண்ணினோம், ஆனால் இப்பொழுது அது தொடர் நிகழ்வாகி விட்டது, இதில் உடனடியாக நகராட்சி ஆணையர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேதனையுடன் கூறினார்.
You must be logged in to post a comment.