ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவில் அமைந்துள்ள சத்துணவு மையத்தில் 28 வது ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ் மங்கலம் அதிமுக சிறுபான்மை நலபிரிவு ஒன்றிய செயலாளர் பஜருல் ஹக் கலந்து கொண்டு தன் பிள்ளைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார் . மேலும் போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிரமான செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இம்முகாமில் அமைப்பாளர் நிர்மலா உதவியாளர் நிர்மலாதேவி ஆகியோர் இணைந்து குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கினர்
Category:
தேசிய செய்திகள்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் ! அனைத்து மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு !!
by Baker BAker
written by Baker BAker
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் அவசர மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேலும் எழுச்சியாகத் தொடர்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அநேக கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படாததால், வருகின்ற திங்கள் கிழமை (04.03.2024) மாலை 5.00 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், மாவட்ட தலைநகரில் ஒட்டுமொத்த வருவாய்த்துறை அலுவலர்களும் இரவு பகலாக தொடர்ந்து காத்திருப்பது எனவும் முடிவு செய்யப்பட்ள்ளது. அதிலும் முடிவு எட்டப்படவில்லையெனில் சென்னை வருவாய் நிர்வாகஆணையர் அலைவலகம் முன்பாக 14000 வருவாய்த்துறை அலுவலர்களும் இரவுபகலாக காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனி குமார் செய்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பேரணி !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெரியபட்டிணத்தில் 2024 – 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பேரணி திருப்புல்லாணி வாட்டாரக் கல்வி தொடக்க கல்வி அலுவலர் கோ. உஷாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிபள்ளி வளாகத்தில் தொடங்கி பேருந்தது நிலையத்திலிருந்து ஊரின் பிராதான சாலைகள் மற்றும் தெருக்களின் வழியாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் நன்மைகள் குறித்த பதாகைளுடன் கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இப்பேரணில் பெரியபடட்டிணம் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான், ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் ஜான் பீவி, மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் புரோஸ்கான் பள்ளி தலைமை ஆசிரியர் த. கொன்னமுத்து, ஆசிரியர்கள் மு. ரமேஷ் , த. சந்திரசேகர் , உதவி ஆசிரியர்கள், PTA தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மையம் ஆய்வு !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்று வந்த அரசு பொதுத்தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வரும் மையங்களை பார்வையிட்டதுடன், கண் பார்வையற்ற மாணவி தேர்வு எழுதி வருவதை பார்வையிட்டு உதவியாளர் உரிய உதவிகளை வழங்கி நல்ல முறையில் தேர்வு எழுதிட உறுதுணையாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 6,698 மாணவர்களும் 7,500 மாணவிகளும் தனித்தேர்வர்கள் 280 நபர்களும் என மொத்தம் 14,478 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு 160 மையங்களில் நடைபெறுகிறது. அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் போதிய பாதுகாப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் கூடுதல் அரசு தாலுகா மருத்துவமனை கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ! மும்மத குருமார்கள் கூட்டுப் பிரார்த்தனை !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அரசு தாலுகா மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மும்மத குருமார்கள் பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது கீழக்கரை நகர் மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை மருத்துவர் ஜவாஹிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசுவையில் தரம் உயர்த்தப்பட்ட தாலுகா அரசு மருத்துவமனை ஒன்பது கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கீழக்கரை உரக்கடங்கில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் நகராட்சி பொறியாளர் அருள் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா திமுக அயலக அணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன் திமுக நகர் துணை செயலாளர் ஜெய்னுதீன் ஒன்றிய பெருந்தலைவர் கே டி பிரபாகரன் கீழக்கரை நகர மன்ற உறுப்பினர்கள் சப்ராஸ் நவாஸ் சித்திக் மீரான் அலி நஸ்ருதீன் சுகைபு சேக் உசேன் சக்கினா பேகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உச்சிப்புளியில் வேளாண்துறை சார்பாக தெருக்கூத்து கலை நிகழ்ச்சி !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அருகே என் மனம்கொண்டான், தாமரைக்குளம் போன்ற கிராமங்களில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களை எடுத்து கூறும் வகையில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் தலைமை ஏற்று துவங்கி வைத்தார், தெருக்கூத்து கலை நிகழ்ச்சி வாயிலாக வேளாண் துறையில் செயல்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள், உழவன் செயலி பயன்கள், நெற்பயிருக்கு பின் இரண்டாம் போக சாகுபடியாக பயிறு வகைகள். பற்றி விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கலை நிகழ்ச்சி வாயிலாக பயிரிட்டு பயன்பெறும் வகையில் எடுத்துக் கூறப்பட்டது. இதில் உச்சிப்புளி வேளாண்மை அலுவலர் கலைவாணி, உதவி வேளாண் அலுவலர் சண்முகநாதன், முகமது யூசுப் ஆகியோர் கலந்து கொன்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் ஆகியோர் செய்திருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் சைபர் பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவியல் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பி.எஸ்.எஸ்.ஜே நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சுரேஷ் கண்ணன் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மணி பாரதி கருணாகரன் கலந்து கொண்டு கூறுகையில் . இன்றைய காலகட்டத்தில் மொபைல் மூலம் பல பிரச்சனைகளை இளைஞர்கள் பள்ளி பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர் .மொபைல் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது மொபைல்களை எப்படி பயன்படுத்துவது மற்றும் தற்காத்துக் கொள்வது என்கின்ற விளக்கத்தை அறிவியல் பூர்வமாக எடுத்துரைத்தார். இதன் மூலம் சைபர் பாதுகாப்பு காவல்துறைக்கு வழக்குகள் குறையும் என்றும், தனக்கு தெரியாமல் தனது மொபைலில் திருடக்கூடிய தகவல்களை தடுத்து பாதுகாப்புடன் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தனர். இதில்செந்தில் குமார் , பாலகிருஷ்ணன் , சுந்தரபாண்டியன் , ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கிய போது கைது !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கிய போது கைது ! இராமநாதபுரம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த செரிப்சேட் என்பவருக்கு கூரியூரில் சொந்தமான 8 வீட்டுக்கு வீட்டு மனை காலி இடங்கள் உள்ளது. இந்த இடத்திற்கு வரைபட அனுமதி பெறுவதற்காக இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப் பெருமாளை அணுகியுள்ளார். அதற்கு அவர் 60ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாளிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரித்து வருகிறன்றனர். மேலும் அலுவலக வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்காமல் வாசல் கதவுகள் பூட்டப்பட்டுள்ளது. தற்போது பணியில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஆண் பெண் அலுவலர்கள் இருக்கையை விட்டு எழ வேண்டாம் என லஞ்ச ஓழிப்பு போலிசார் அறிவுறுத்தி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் உணவு பாதுகாப்புத் துறை சம்பந்தமாக உணவு கடைகள் பேக்கரிகள் ஹோட்டல் பெட்டிக்கடைகள் மளிகை கடைகள் ஆகியோர்க்கு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் , பரமக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் கருணாநிதி ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் உணவு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வியாபாரத்தின் அளவுகள் பற்றியும் வாடிக்கை யாளர்களின் அணுகுமுறை பற்றியும் பொருட்களின் தரம் பற்றியும் பொருள்களில் உற்பத்தி செய்யும் தேதிகள் மற்றும் காலவாதியாகும் தேதிகள் குறிப்பிடுதல் பற்றியும் பயிற்சியாளர் சலீம் எடுத்துரைத்து பயிற்சி அளித்தார். மேலும் அரசு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இதில் கீழக்கரை சுற்றுவட்டார வியாபாரிகள் , கீழக்கரை வர்த்தக சங்கம் மற்றும் மருந்தாளர் நல சங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை விற்பனைக்குழு விபரம் ! விவசாயிகள் பயன்பெற வேண்டுகோள் !!
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராஜசிங்கமங்கலம், மற்றும் திருவாடானை ஆகிய ஆறு (6) ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விவசாயிகளின் விளை பொருட்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வாயில் முறையில் (Farm Gate) நேரடியாக வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.விவசாயிகள் விளைவித்த விளைபொருளின் தரநிர்ணயம் ஆனது ஒழுங்குமுறை விற்பனைக்கூட தரம்பிரிப்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பகுப்பாய்வு செய்து அதனை e-NAM திட்ட செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களி லிருந்தும் வியாபாரிகள் பார்த்து தேவைப்படும் வணிகர்கள் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதில் போட்டி அடிப்படையில் அதிகப்படியான விலை கோரியவர்களுக்கு விவசாயிகளின் விளைபொருள் அவர்களது சம்மதத்தின் அடிப்படையில் இலாபகரமான விலைக்கு விற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்றுக்கூலி, இறக்குகூலி, வண்டி வாடகை போன்ற எவ்வித கமிஷனும் இன்றி விவசாயிகளின் இருப்பிடம் / பண்ணைவாயில் இடத்திற்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட பணியாளர்கள்கள் நேரடியாக சென்று அதிகப்படியான இலாபக விலைக்கு விவசாயிகளின் விளைபொருள் விற்றுக் கொடுக்கப் படுவதால் விவசாயிகளும் பயனடைந்து பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.2023-24 -ஆம் ஆண்டில் நாளது தேதிவரை இராமநாதபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் இராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 214.66 மெ.டன் அளவு ரூ.44,68,824/- மதிப்பிலும், பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 204.79 மெ.டன் அளவு ரூ.51,07,348/- மதிப்பிலும், கமுதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 26.5 மெ.டன் அளவு ரூ.10,39,017/- மதிப்பிலும், திருவாடானை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 20.3 மெ.டன் அளவு ரூ.4,11,581/- மதிப்பிலும், இராஜசிங்கமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 144.6 மெ.டன் அளவு ரூ.32,21,494/- மதிப்பிலும் மற்றும் முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின்மூலம் 65.74 மெ.டன் அளவு ரூ.15,80,267/- மதிப்பிலும் ஆக மொத்தம் 676.59 மெ.டன்,158.28 இலட்சம் மதிப்பில் 148 விவசாயிகளுக்கு அவர்களது இருப்பிடம் பண்ணைவாயில் இடத்திற்கே சென்று நெல், மிளகாய்வத்தல், பருத்தி, தேங்காய், சோளம் மற்றும் இதர தானியங்களை தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம்(Farm Gate) மூலம் எவ்வித இடைத்தரகு / கமிஷன் ஏதுமின்றி சரியான எடைக்கு அதிகஇலாபத்திற்கு விற்று கொடுக்கப் பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் வத்தல் பருவகாலம் தொடங்கியிருப்பதால் விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கே நேரடியாக கொண்டு வந்து e-NAM திட்டம் வாயிலாகவும் நேரடியாக வர இயலாத விவசாயிகள் கீழ்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் / மேற்பார்வையாளர்கள் மற்றும் e-NAM திட்ட சந்தை பகுப்பாய்வளார்களை தொடர்பு கொண்டு தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம் (Farm Gate) மூலமும் விற்பனை செய்து அதிக இலாபம் பெற்று பயனடைந்திட இராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் பொ.இராஜா தெரிவித்துள்ளார். மேலும் கீழ்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளர்கள் எண் இராமநாதபுரம்9677844623 , பரமக்குடி 9025806296 ,கமுதி8248865221 ,இராஜசிங்கமங்கலம் 8608392299 , திருவாடானை 9443543211 ,முதுகுளத்தூர் 8056540941 , மற்றும் e-NAM திட்ட சந்தை பகுப்பாய்வளார்கள் அலைபேசி எண்கள்:- இராமநாதபுரம்8940224560 , பரமக்குடி 7305353023 , கமுதி 7904020713 ,இராஜசிங்கமங்கலம் 9790457740 , திருவாடானை 8682841150 ,முதுகுளத்தூர் 6383687185 , ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் !
by Baker BAker
written by Baker BAker
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (27.2.2024) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்கள், 315 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14,000க்கு மேற்பட்ட அலுவலர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் : 10 மாதங்களுக்கு முன்னதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 3 அமைச்சர்கள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது மேலும் தாமதமின்றி அரசாணை வெளியிடவும், 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிடவும், முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்ட பின்பும் காலதாமதம் செய்யப்படும் அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், உயிர் ஆபத்துமிக்க பல பணிகளை மேற்கொணடுவரும் வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வலியுறுத்தியும், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை உடன் வழங்க வலியுறுத்தியும், பொது மக்களுக்கான சான்றிதழ் வழங்க துணை வட்டாட்சியர் பணியிடம், 2024 நாடாளுமன்ற தேர்தல் நிதி ஒதுக்கீடு, முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களுக்கான கால அவகாசம்/ நிதி ஒதுக்கீடவும் , முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து, ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கை இன்னும் சில தினங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ள நிலையில், இப்பணிகளை மேற்கொள்ளவுள்ள வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. TNROA வைரவிழா ஆண்டில் அனைத்து கோரிக்கைகள் மீது தீர்வு எட்டப்படும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA) மாநில மையம் அறிவித்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் வளாகத்தின் முன்பாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311- சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றக் கோரியும் , தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஆசிரியர்களைக் கைது செய்வதைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மஹாலில் பி ஹியூமன் மற்றும் கிரசண்ட் இரத்த வங்கி மற்றும் விம் பெண்கள் அமைப்பு இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சகினா பேகம் கலந்து கொண்டார். பி ஹியூமன் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களால் துவங்கப்பட்டு கிடைக்கும் நேரங்களில் பொதுமக்களுக்கு சேவை பணிகளை செய்து வருகின்றனர். இளைஞர்களின் பணிகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சியின் கீழக்கரை நகர் நிர்வாகிகள் ஆதரவோடு இன்று இரத்ததான முகாமை முதல் முறையாக நடத்தியுள்ளனர். ஏராளமான இளைஞர்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர் . மேலும் இது போன்ற இளைஞர்களின் சேவை பாராட்டக் கூடியது என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர்கள் நலச்சங்கத்தின் வெள்ளி விழா !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் தனியார் மஹாலில் இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர்கள் நலச்சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட தலைவர் வரதராஜன் மாநில பொதுச் செயலாளர் குமாரவேலு ஆகியோர் தலைமையில் மாவட்ட பொருளாளர் கூரிதாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் உறுப்பினர்கள் 80க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் அனைத்து மாவட்டங்களின் உள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் உணரணவிரத்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் ! விரைவில் மீனவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம் !!
by Baker BAker
written by Baker BAker
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வெளிக்கடை சிறையில் உள்ள ஐந்து ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 16ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி மீனவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் விசைப்படகு உரிமம் உள்ளிட்டவற்றை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரீடம் வழங்குவதற்காக ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் நடை பயணமாக ராமநாதபுரம் நோக்கி சென்றபோது அவர்களை தடுத்து நிறுத்திய மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு சந்திரன் மீனவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். இதனையடுத்து நடை பயணத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற மீனவர்கள் நேற்று காலை முதல் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் உண்ணாவிர போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் சிறையில உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து .கொண்டு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வந்த நிலையில் இன்று மாலை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உண்ணாவிரத மேடைக்கு நேரில் வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் மீனவர்களின் வழக்கு தொடர்பாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யப்பட்டு உடனடியாக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க பாதிக்கப்பட்ட மீனவர்களை அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறையில் உள்ள மீனவர்களுக்கு தலா 25,000 ரூபாயையும் திமுக சார்பில் பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டதுடன் முதல்வரை சந்திக்க செல்லும் செலவை சட்டமன்ற உறுப்பினர் ஏற்றுக் கொள்வதாக கூறியதையடுத்து மீனவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உச்சிப்புளியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை கூட்டாய்வு !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கீழமான்குண்டு கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாய்வு நடைபெற்றது. திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எம்.கே. அமர்லால் தெரிவித்ததாவது , விவாசாயிகளிடம் பசுந்தாள் உரப்பயிர்களில் ஒன்றான சணப்பையை தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும், தக்கைப்பூண்டு, கொழிஞ்சி, சணப்பை போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழும் போது உரமாகிறது. இவ்வாறு பூ பூக்கும் சமயத்தில் மடக்கி உழுவதால் காற்றிலுள்ள நைட்ரஜன் உறிஞ்சப்பட்டு மண்ணுக்குக் கிடைக்கிறது. மேலும் இந்த செடி மக்கி மண்ணுடன் கலந்து விடுவதால் கரிம, கனிம சத்துக்கள் கிடைக்கிறது. அத்துடன் மண்ணில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.. இதனால் மண்ணின் நீர் உறிஞ்சும் திறன் அதிகரித்து நல்ல மகசூல் பெற முடிகிறது. மேலும் நன்மை செய்யும் பூச்சிகள் பாதுகாக்கப்படுவதால் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் செலவு குறைகிறது என்று விளக்கம் அளித்தார். பின்னர் இராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேரசிரியர் முனைவர் பாலாஜி கலந்து கொண்டு தென்னை பயிரில் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன் வண்டு பூச்சிக்கள் ஏற்படுத்தும் சேதங்களை பார்வையிட்டு அவற்றை அங்கக முறை மற்றும் இரசாயன முறைகளில் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மைக்கு டிராக்டரில் இயங்கும் விசை தெளிப்பான்கள் மூலம் தண்ணீரை வேகமாக இலையின் அடிப்புறத்தில் பீய்ச்சியடித்து கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 8 எண்கள் மஞ்சள் ஒட்டுப்பொறிகளின் 5×1½ நீளமுள்ள மஞ்சள் ஒட்டுப்பொறிகளை தென்னை மரங்களுக்கு இடையே கட்டி அதன் மேல் விளக்கெண்ணெய் அல்லது பசை தடவி வைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம் என்றார்.இந்த கூட்டாய்வில் 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர், இக்கூட்டாய்வுக்கான ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் பானுமதி மற்றும் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் மா.பவித்ரன் ஆகியோா் செய்தனா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் பேரூராட்சிகள் நிர்வாகத்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த செய்தியாளர் பயணத்தின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு பணி நடைபெறும் பொழுது பொறியாளர்கள் ஆய்வு செய்ததுடன் தரம் மற்றும் அதன் தன்மை மாறாமல் அமைப்பதை உறுதி செய்ய வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் பேரூராட்சி பகுதியில் நவீன மின்னணு மயானம் ரூ.161 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், பணியினை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கோட்டைமேடு ஊராட்சியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கவுள்ள உணவுப் பொருள்களின் தரம் குறித்து ருசித்துப் பார்த்ததுடன் பொருள்களின் இருப்பு குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன் சுகாதாரமான முறையில் பராமரித்திட வேண்டுமொன பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.பின்னர் முதுகுளத்தூர் வட்டம், சாம்பக்குளம் ஊராட்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு, பதிவேடுகளில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்துள்ள பட்டியலினிபடி விவசாயிகளிடம் அரசு நெய் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், இதேபோல் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்து பயன்பெற்றிட அலுவவர்கள் அறிவுறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.இந்த செய்தியாளர் பயணத்தின்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி , உதவி செயற்பொறியாளர் ஜெய கிருஷ்ணன் , இளம் பொறியாளர் இக்பால் , கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் கற்பகம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணி மாறுதல் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் கற்பகத்திற்கு நம்ம மேட்டுப்பாளையம் சமூக நலக்குழு சார்பாகவும் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவும் நேரில் சென்று கௌரவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் காவல் நிலைய காவலர்கள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரியமான் கடற்கரை டோல்கேட்டில் வசூல் வேட்டை ! சுற்றுலா பயணிகள் அவதி !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியததிற்கு உட்பட்ட அரியமான் கடற்கரை பகுதிக்கு தினமும் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 20,மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 30 என்ற முறையில் வசூல் செய்யப்படுகிறது. வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் வரி வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த இந்த டோல்கேட் தற்போது தனியார் கட்டுப்பாட்டில் வந்ததால் அதிக அளவு தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளதால் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்வதாக கூறப்படுகிறது. பொதுவாகவே இது போன்ற சுற்றுலா தளங்களில் கழிவறை குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட பராமரிப்பு காரணங்களுக்காக அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டிலோ அல்லது ஒப்பந்தம் மூலமாகவோ நுழைவு கட்டணம் வசூல் செய்வது வாடிக்கை ஆகும். ஆனால் கழிவறை குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தரப்படாததோடு அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது. அடிப்படை வசதிகளை சரி செய்வதற்கு பதிலாக வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அரியமான் சுற்றுலாத்தலத்தை அடிப்படை வசதிகளோடு சுத்தமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக இளைஞரணி தலைவர் துரைவைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அந்த பேட்டியின் போது திமுக கூட்டணியில் மதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் சமூகமாக நடந்து வருவதாகவும் கடந்த தேர்தலில் ஒரு லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்கப்பட்டது என்றும் இந்த தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்போம் என்றும் தெரிவித்தார், தமிழ்நாடு அரசு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் விநியோகம் செய்யப்படுகிறது பாமாயில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது அதற்கு பதிலாக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை வழங்கினால் நமது விவசாயிகளுக்கு உரிய உதவியாக இருக்கும். மத்தியில் ஆளும் பாஜகவை பொறுத்தவரை கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கொடுப்போம் என்றார்கள் அதையும் தரவில்லை டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது மத்திய அரசு அடக்கு முறையை கையாள்கிறது இது கடும் கண்டனத்துக்குரியது. பாஜக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவே முடியாத சூழல் நிலவி வருகிறது. வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுவது உறுதியாகும் தமிழகத்தை பொறுத்த வரை 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்
You must be logged in to post a comment.