இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ,அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த மீனவர் ரொனால்ட். இவரது கூரை வீட்டில் மின் கசிவால் இன்று (06/06/2020) மாலை ஏற்பட்ட தீ விபத்தால் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சம் மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இது குறித்து ராமேஸ்வரம் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Category:
கீழக்கரை செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றாங்கரை வடக்கு கடல் பகுதியில் ராட்சத சுறா இறந்து கரை ஒதுங்கி கிடப்பதாக அப்பகுதி மீனவர்கள் ராமநாதபுரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்படி மாவட்ட வன உயிரின காப்பாளர் மாரிமுத்து, உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் சதீஷ் உள்ளிட்ட வன பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆற்றாங்கரை கடற்பகுதிக்கு சென்றனர். இறந்து ஒதுங்கிய ராட்சத சுறாவை கயிறு மூலம் மீட்டனர். வாலாந்தரவை கால்நடை மருத்துவர் நிஜாமுதீன் உடற்கூறு ஆய்வு செய்தார். 6.30 மீட்டர் நீளம், 3.6 மீட்டர் சுற்றளவு உடைய சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சுறா என ஆய்வில் தெரிந்தது. ஒன்றரை டன எடை கொண்ட ராட்சத சுறாவை கடற்கரை ஓர மணலில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்தனர். கடல் பகுதியில் வீசும் பலத்த காற்றால் பலவீனமான சுறா பாறைகளில் மோதி இறந்திருக்கக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்று வரை 93 என சுகாதாரத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 பெண், 3 ஆண்கள், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 26 வயது கர்ப்பிணி என 6 பேருக்கு இன்று (06.6.2020) கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் கர்ப்பிணிக்கு கொரானா தொற்று உறுதியானதையடுத்து அப்பெண் வசிக்கும் ராமநாதசுவாமி நகர் சீல் வைக்கப்பட்டு அப்பகுதியில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். துபாயில் இருந்து திரும்பிய புதுமடம், நம்புதாளை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், எஸ். தரைக்குடியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஆகியோருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுமி உள்பட 4 பெண்கள், 5 ஆண்கள் என 9 பேருக்கு இன்று கொரானா தொற்று உறுதியானதால் மாவட்டத்தில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று (06/06/2020) ஜித்தாவில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் விமானம்.. சென்னையில் தயார் நிலையில் தமுமுக ஆம்புலன்ஸ்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இன்று (06/06/2020) வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு 3 மணி அளவில் 140 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது ஜித்தா கவுன்ஸிலட் அதிகாரிகள் ஹம்ரா மரியம் மற்றும் அம்ஜத் ஆகியோர் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் சங்கம் சிராஜூதீன் மற்றும் ஜித்தா தமுமுக நிர்வாகிகள் அனைத்து பயணிகளுக்கும் விமானத்தில் ஏறும் வரை உடன் இருந்து உதவிகள் செய்தனர்.
சென்னை செல்பவர்களில் உடலிலை குறைவான பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து உதவிகள் புரிய தமுமுக ஆம்லான்ஸ் தயார் நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே போல் கற்பணி பெண்கள் தனியாக தங்குவதற்கு ஏதுவாக நட்சத்திர ஹோட்டல்களில் அறைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அனைத்து ஏற்பாடுகளையும் தமுமுக/மமக மாநிலச் செயலாளர் யாகூப் தலைமையில் குழுவாக களப்பணியில் உள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரைக்கு என தனித்துவமும், பல வரலாற்று சிறப்புகளும் உண்டு, ஆனால் அந்த வரலாற்று சிறப்புகளை வெளி உலகுக்கு கொண்டு வரவும், திறமையாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக கீழக்கரையை சார்ந்த ஜஹுபர் அலி என்பவரால் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது இலக்கியம் என்று ஒரு வட்டத்திற்குள் இல்லாமல் அனைத்து வகையான திறமைகளையும் வெளி உலகத்துக்கு கொண்டு வந்து, இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.
இது சம்பந்தமாக ஜஹுபர் கூறுகையில்’ “ இது பெரிய project என்பதால் இனி வரும் காலத்தில் கீழக்கரையில் அலுவலகம் அமைத்து இதற்கேன்று குழு அமைத்து செயல்பட ஒரு யோசனை இருக்கிறது. இதற்கு சில காலதாமதம் பிடிக்கும் இருப்பினும் முயற்சி செய்ய உள்ளோம். முயன்றால் முடியாதது ஏதும் இல்லை என்ற வாக்குக்கேற்ப கூடிய விரைவில் இந்த கீழை இலக்கிய தமிழ் பேரவை செயல்படுத்த நம்மவர்களின் ஒத்துழைப்பும் அவசியம்@ என்றார்.
இந்த இலக்கிய பேரவை:
1. விளையாட்டுகள்
2. கவிதை மற்றும் கட்டுரை
3. வரைபடம் (ஓவியம் )
4.பேச்சு திறன்
5.சமூக சேவை மற்றும் சமூக ஆர்வம்
6. சுகாதாரம் சார்ந்த
7. நடனம்
8. பாடல்(நல்ல குரல் வளம்) மற்றும் பாடலாசிரியர்கள்
9. நடிப்பு மற்றும் இசை
10. வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தொல்பொருள்
11. சிறு சிறு விஞ்ஞான கண்டுபிடிப்புகள்
12. எழுத்தாளர்கள் (நாவல்)
13. பத்திரிக்கை ஆசிரியர்கள்
14. ஆடைகள் வடிவமைப்புகள்
15. விவசாயம் மற்றும் தோட்டக்கலை
16. மரம் நடல் ஆர்வலர்கள்
17. முதலுதவி (first aid) சம்பந்தமான
18. சமையல் குறிப்புகள்
19. நகைச்சுவை நடிப்பு மற்றும் நகைச்சுவை பேச்சு
மற்றும் இன்ன பிற திறமைகளை வெளிகொண்டு வர உதவி புரியும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னிட்டு 05/06/20 அன்று உலக சுற்றச்சூழல் தினத்தை முன்னிட்டு காலை 9:30 மணியளவில் கடற்கரை பள்ளி அருகில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிநடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கீழக்கரை நகர் தலைவர் காதர் முகைதீன் தலைமையில் மற்றும் நகர் செயலாளர் அஃப்ரித் முன்னிலையிலும் நடைபெற்றது.
கீழை கேம்பஸ் ஃப்ரண்ட் மாணவர்கள் பர்விஸ், ஜஹுபர், இப்ராஹிம் ஷா, முஜிப், அப்துர்ரஹ்மான் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர்.
மேலும் கடந்த (2019) வருடம் ஜனவரி மாதம் கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக மரக்கன்றுகள் நடுத் தெரு ஜும்மா பள்ளி அருகிலும் , PEE YES YEM மருத்துவமனை அருகில் நடப்பட்டு இருந்தது. அது தற்போது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வளர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தது. இச்சம்பவம் உடனடியாக கீழை நியூஸ் சார்பில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிவித்ததின் அடிப்படையில் அங்கு மின்சார ஊழியர்கள் அறுந்த உயர்மின் கம்பியை சரி செய்யும் பணியை தொடங்கியுள்ளார்ள்.
கீழை நியூஸ்
S.K.V சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மஹ்தூமியா (MASA) சமூக நல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவு….
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ரமலான் நோன்பு மாதத்தில் கீழக்கரை மாசா சமூக நல சங்கம் மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய “சுதந்திரப்போரில் கீழக்கரையின் பங்கு”, “அழகிய கீழக்கரை உங்கள் பார்வையில்”, “மனிதநேய பணிகளில் கீழக்கரை” என்ற மூன்று தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது..
இக்கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரத்தை இன்று (05/06/2020) MASA – மஹ்தூமியா சமூகநல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் வெளியிட்டுள்ளது.
முதல் பரிசு 3000
இரண்டாம் பரிசு 2000
முன்றாம் பரிசு 1000
பரிசு வென்றவர்களின் விபரங்கள்.
முதல் பரிசு
ஜூமைலத் ரபிஹா
இரண்டாம் பரிசு
பாத்திமா ஹசன்,
அமிரூன் பைஹா, மற்றும்
முகம்மது ரய்யான் ஆகிய மூவருக்கும்.
மூன்றாவது பரிசு
ரஹ்மத்துல் பசரா மற்றும் இபுறாகிம் ஹனிபா ஆகிய இருவருக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு MASA – மஹ்தூமியா சமூக நல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் சார்பில் பரிசுகள் வழங்கப்படுகிறது.
கீழை நியூஸ்
S.K.V சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை “மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை” (MHCT) புதிய அலுவலக திறப்பு விழா..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மக்கள் பணி என்பது… மகேசனுக்கு செய்யும் பணி என்பதை உணர்ந்து செய்யும் பணியை சேவை மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செய்து வரும் குறிப்பிட்ட சில அமைப்புகளில் முக்கியமான அமைப்பு மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை (MHCT) ஆகும்.
கடந்த சில வருடங்களாக தற்காலிக அலுவலகத்தில் இயங்கி வந்த இந்த அறக்கட்ளை அலுவலகம் நேற்று (04-06-2020) வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளிக்கிழமை இரவு மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை (MHCT) புதிய அலுவலக திறப்பு விழா மாலை நேர தொழுகைக்கு பிறகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த நிகழ்வுக்கு முன்னாள் பொறுப்பாளர்கள் திறந்து வைத்தனர். மேலும் இந்நிகழ்வு மின் ஹாஜியார் பள்ளி மற்றும் கடற்கரை பள்ளி ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதே சமயம் இந்த நிகழ்வு அரசாங்கம் விதித்த விதிகளுக்குட்பட்டு சமூக இடைவெளியை பின்பற்றி இவ்விழா சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று 4.6.2020 ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி கீழக்கரையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு நடத்தினார். தடை செய்யப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் வாகனம் செல்வதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார்.
உடன் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கீழக்கரை நகர் செயலாளர் ஹபீப் முஹம்மது தம்பி, திமுக மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான், மக்கள் டீம் காதர், ஹாசன்,பயாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
கீழை நியூஸ்
SKV சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நடைபெற்ற ரமலான் போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு….
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் சமூக சேவையில் இருந்து மார்க்க செயல்பாடு வரைக்கும் முன்னிலையில் இருக்கும் அமைப்புகளில் முக்கியமான அமைப்பு கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) அமைப்பாகும். இந்த அமைப்பு சார்பாக இந்த வருடம் சிறுவர், சிறுமியர்களின் தினத்திறமைகளை வெளி உலகுக்கு கொண்டு வரும் வகையில் ரமலான் மாதத்தில் பல்வேறு விதமான இஸ்லாமிய அடிப்படையிலான போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் அதிகமான மக்கள் பங்கு பெற்றதே இப்போட்டியின் வெற்றிக்கு அடையாளமாகும். இந்நிலையில் இப்போட்டிகளுக்கான முடிவுகள் இன்று (3/6/2020) வெளியிடப்பட்டது. அதன் விபரங்கள் கீழ்கண்டவாறு:-
கிராஆத் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
பிரிவு-A (8 வயதிற்கு கீழ்)
ஆண்கள்:
1. முஹம்மது இஃப்ரான் (வடக்குத் தெரு)
2. அப்துல் ரஹ்மான் (கிழக்கு தெரு)
3. அபூஹுரைரா பின் கருணை அலி (வடக்குத் தெரு)
பெண்கள்:
1. ஹைருன் ஷஹ்ரி (OJM தெரு)
2. ஆயிஷா ஃபராஹ் ( தெற்கு தெரு)
3. ஃபாத்திமா ஹனியா (வடக்குத் தெரு)
4. ஃபாத்திமா ஷாஹினா ( வடக்குத் தெரு)
பிரிவு-B (வயது 8-12)
ஆண்கள்:
1. முஸாப் ஹுசைன் பின் காதர் ஹுசைன் (வடக்குத் தெரு)
2. ஃபவாஸ் அமீன் (நடுத்தெரு)
3. முஹம்மது ஸயான் பின் செய்யது மீரான் (கிழக்குத் தெரு)
பெண்கள்:
1. ஃபாத்திமா இஸ்லா (வடக்குத் தெரு)
2. ஜீனத் தௌஸிஃபா (வடக்குத் தெரு)
2. நூருல் ஹனா (SN தெரு)
3. அஃபானா மர்யம் பின்த் ஜெய்னுலாப்தீன் (வடக்குத் தெரு)
3. ஆயிஷா லிபா ( கிழக்குத் தெரு)
பயான் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
ஆண்கள்:
1. முஹம்மது ஸயான் பின் செய்யது இம்ரான் (கிழக்குத் தெரு)
2.ஃபவாஸ் அமீன் (நடுத்தெரு)
3. முஹம்மது ஹாஸிம் (வடக்குத் தெரு)
பெண்கள்:
1.ஃபாத்திமா ஃபர்ஹா (KM தெரு)
2. ஆயிஷத் ரிஷ்ஃபா (கிழக்குத் தெரு)
3. ஃபாத்திமா ஹனியா (வடக்குத் தெரு)
ஒவிய போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
1.ஸியாத் அஹமது பின் ஷபிர் அஹமத் (வடக்குத் தெரு)
2. முவாஃபிகா உனைஷ் (வடக்குத் தெரு)
3. ஆரிஃபின் ரயிஷா (நடுத்தெரு)
சிறந்த 10 படைப்புகள்:
1. ஹமீது முனஃபா (கிழக்குத் தெரு)
2. ருவைஃபா (வடக்குத் தெரு)
3.ஆயிஷா (கிழக்குத் தெரு)
4. இனாமுல் ஹஷன் (நடுத்தெரு)
5. ஃபாஸிலா (தெற்குத் தெரு)
6. ஃபயாஸா (SN தெரு)
7. முஹம்மது ஹஃபீஸா (தெற்குத் தெரு)
8. முஹம்மது ஸிதான் (வடக்குத் தெரு)
9. ரோஷன் ஸஃபிஹா (வடக்குத் தெரு)
10. அலீஸா மெஹ்ரின் (500 பிளாட்)
அரபி எழுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
1. நஜீபா (புது கிழக்குத் தெரு)
2. ஆயிஷத் நுஷைஃபா பின்த் முஹம்மது ரஷீன் ( வடக்குத் தெரு)
3. ஷிபியா (வடக்குத் தெரு)
சிறந்த 10 படைப்புகள்:
1. ஆயிஷா (கிழக்குத் தெரு)
2. முஹம்மது நாதிஃப் இப்றாஹிம் (வடக்குத் தெரு)
3. ஆஸிஃபா (சின்ன கடைத் தெரு)
4. ஷாஹிரா (சாலைத் தெரு)
5. நூருல் ஆஸிகா பின்த் செய்யது இப்றாஹிம் (வடக்குத் தெரு)
6. ஃபஹிமா பின்த் சலீம் (வடக்குத் தெரு)
7. முஹைதீன் (நடுத்தெரு)
8. ஷுல்ஃபியா ஃபாத்திமா (தெற்குத் தெரு)
9. ஜகுபர் ஆயிஷா பீவி (நடுத்தெரு)
10. முஹம்மது ஷைஃபி (வடக்குத் தெரு)
இஸ்லாமிய மாதிரிகள் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
1. ரில்வானா பீவி (புது கிழக்குத் தெரு)
2. மர்யம் ஃபகிஹா (வடக்குத் தெரு)
2. ஃபாத்திமா ஃபைஸானா (வடக்குத் தெரு)
3. நூருல் மௌஃபிகா (மதார் அம்பலம் தெரு)
3. ஆயிஷா பின்த் அன்ஸாரி (புது கிழக்குத் தெரு)
சிறந்த இஸ்லாமிய மாதிரிகள்:
1.ஃபாத்திமா ஃபர்ஹா (KM தெரு)
2.ரோஸன் நுஸைஃபா (கிழக்குத் தெரு)
3. அல் ஃபஸ்லுனா (வடக்குத் தெரு)
4.ஆயிஷத் ருக்ஸானா (மதார் அம்பலம் தெரு)
5. ஜெய்த்தூன் (வடக்குத் தெரு)
இஸ்லாமிய குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
முதல் இடம்:
காதர் மற்றும் குழுவினர் (பிரபுக்கள் தெரு)
இரண்டாம் இடம்:
முஹம்மது ஷாஹிக் (வடக்குத் தெரு)
சிறந்த குறும்படங்கள்:
1. ஷமீம் தாஹிர் (வடக்குத் தெரு)
2. ஃபிர்னாஸ் மற்றும் நண்பர்கள் (வடக்குத் தெரு)
3. ஃபவாஸ் அமீன் மற்றும் ஹய்யான் இப்றாஹீம் (நடுத்தெரு)
ரமலான் போட்டியில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு NASA பாராட்டுக்களையும் துஆக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், ரமலான் போட்டிகளுக்கு பொருளாதாரங்களைத் தந்துதவி பங்களிப்புச் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் மேலான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்கு, மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 97வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் குடியிருப்பு பகுதியில் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் திமுக., கொடியேற்றினார். மாற்றுத் திறனாளிகள், மனநலம் குன்றியோருக்கு உணவு பொருட்கள், காய்கறிகள் தொகுப்பை வழங்கினார்.
சூசையப்பர் தேவாலய பகுதியில் 200 குடும்பங்களுக்கு உணவு பொருட்களை மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி வழங்கினார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் ஏ.சி.ஜீவானந்தம், தங்கச்சிமடம் ஊராட்சி திமுக செயலர் எஸ்.கதிரேசன், 21வார்டு ஒன்றிய கவுன்சிலர் பேரின்பம், 20 வாா்டு ஒன்றிய கவுன்சிலா் உஷாலட்சமி முத்து கருப்பன், தண்ணீர் ஊற்று கிளை செயலர் பால் தாமஸ், ரப்பானி, எஸ்தர், சந்தானம், சேசுமிக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மண்டபம் மேற்கு ஓன்றிய திமுக சார்பில் புதுவலசையில் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் நிவாரண உதவி வழங்கினார். ஓன்றிய திமுக பொறுப்பாளர் ஏ.சி.ஜீவானந்தம், ஒன்றியக்குழு துணை தலைவர் பகவதி முத்துக்குமார், புதுவலசை ஊராட்சி செயலர் முகமது ஜெய்னுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மண்டபம் ஓன்றிய திமுக சார்பில் வாணியன்குளம், எம்பிகே வலசை, வடக்கு வலசை, கோரவள்ளி கிராமங்களில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
மண்டபம் பேரூர் திமுக., சார்பில் கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாள் விழா பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று காலை கொண்டாடப்பட்டது. அங்குள்ள கொடி கம்பத்தில் நகர் திமுக., செயலாளர் டி.ராஜா (முன்னாள் கவுன்சிலர்) கட்சி கொடி ஏற்றினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.சம்பத் ராஜா (முன்னாள் கவுன்சிலர்), இந்திய தகவல் தொடர்பு துறை நியமன பிரதிநிதியும், ஹிந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகியுமான காந்தக்குமார், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் என்.பூவேந்திரன் (முன்னாள் கவுன்சிலர்), நகர் துணை செயலர் எஸ்.பகுருதீன் (முன்னாள் கவுன்சிலர்), மேலமைப்பு பிரதிநிதி சாதிக்பாட்சா, ஒன்றிய பிரதிநிதிகள் சி.தில்லை குமார், மூத்த உறுப்பினர்கள் ஆர்.ஆறுமுகம், பி.பாண்டியன், குலாம் (எ) சாகுல்ஹமீது, மதார்ஷா, இளைஞரணி செயலர் பா.கீத்தா னந்த், கா.ராஜ்குமார், மாணவரணி செயலர் கிருஷ்ணா, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் டி.வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் மறைந்த திமுக தலைவரின் கலைஞரின் 97வது பிறந்தநாள் கொண்டாட்டம்….
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை நலத்திட்ட உதவியுடன் கொண்டாடப்பட்டது.
இதில் வழக்கறிஞர் V.Sஹமீது சுல்தான் மாணவரணி அமைப்பாளர் தலைமையிலும் ஜமால் ஃபாரூக் துணைச்செயலாளர் முன்னிலையிலும், நகர் அவைத்தலைவர் மணிகண்டன், இப்திகார் ஹஸன் மாணவரணி துணை அமைப்பாளர், மாவட்ட பிரதிநிதி மரைக்கா, SKV முகம்மது ஹாஜா சுஐபு, நகர இளைஞரணி அமைப்பாளர், மக்கள் டீம் காதர் நகர் வர்த்தக அணி அமைப்பாளர், ஹாஜாமைதீன் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர், சுல்தான், இளைஞர் அணியைச் சேர்ந்த கெஜி, பயாஸ், நையும், ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கினார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதுமடத்தில் விபத்துக்குள்ளான மின்சார ஊழியருக்கு தமுமுக சார்பாக நிதி உதவி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் மின்சார ஊழியர் திரு பால்சாமி அவர்கள் மின்பகிர்மானம் பழுது பார்க்கும் பொழுது புதுமடத்தில் விபத்துக்குள்ளானார் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரான நோய் பரவும் இந்த இருக்கமான காவ காலகட்டத்தில் மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணி செய்யும் மருத்துவர் & செவிலியர் காவல்துறை துப்புரவு பணியாளர்கள் மின் பொறியாளர் & ஊழியர்களின் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதை கருத்தில் கொண்டு மின்சார ஊழியர் பால்சாமி விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுவோம் அவரின் ஏழ்மை நிலையை அறிந்து அவருக்காக புதுமடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மருத்துவ உதவியாக ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதற்காக ஏற்பாடு செய்த புதுமடம் நிர்வாகத்திற்கும் மருத்துவ உதவியைப் பெற்றுக் கொண்ட பால்சாமி குடும்பத்தினர் நன்றியை தெரிவித்தார்கள் இந்த உதவியை தமுமுக மாநிலச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் மாவட்ட பொருளாளர் பரக்கத்துள்ளாஹ் மாநில செயற்குழு உறுப்பினர் புதுமடம் இப்ராஹிம், சுலைமான், ஜஹிர்பாபு. ஹாஜா சுகுபுதீன் ஆகியோர் பால்சாமி மகன் முகேஷிடம் ஒப்படைக்கப்பட்டது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை கர்ப்பமாக இருந்த யானைக்கு சிலர் கொடுத்ததில், அதை உண்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
அடையாளம் அறியப்படாத நபர்களின் இந்தக் கொடூரச் செயலுக்கு உள்ளான, அந்த யானைக்கு சுமார் 14-15 வயது இருக்கும் என கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை என்றும் பிறகு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த யானையின் வாய் மற்றும் தும்பிக்கை பகுதி மூன்று நாட்களாக நீருக்குள்ளேயே இருந்துள்ளது.
“அந்த யானைக்கு எங்கு அடிபட்டது என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை. வலி தெரியாமல் இருக்க, அந்த யானை நிறைய தண்ணீர் குடித்திருக்கும் என்று நினைக்கிறேன். வாயின் இரு பக்கங்களிலும் பல காயங்கள் இருந்தன. பற்கள் இருக்கவில்லை,” என்கிறார் சைலன்ட் வேலி தேசிய பூங்காவின் வனக் காப்பாளர் சாமுவேல்.
வலியோடு அந்த யானை அருகில் உள்ள கிராமத்தின் வீதிகளில் உதவிக்காக சுற்றி திறிந்தபோது கூட, ஒரு மனிதரையும் அது தாக்கவில்லை என்று வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருந்தார். அந்த கர்ப்பிணி யானையின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
இந்த யானை தொடர்பாக வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பிறகுதான் இந்த முழு சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்தது.
பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் மனித – விலங்கு மோதல் சம்பவங்கள் இதற்கு முன்னரே பல முறை நிகழ்ந்திருந்தாலும், இப்படி ஒரு கொடூரமான நிகழ்வு நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உங்கள் உடல் நலத்துடன் பிறர் நலன் பேணுங்கள்…இராமநாதபுரத்தில் பிரபல மருத்துவரையும் விட்டு வைக்கவில்லை “கொரோனோ”..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கொரோனோ எனும் கொடிய வைரஸ் எங்கோ தொடங்கியுள்ளது என்று எண்ணிய நிலையில் நம் நாட்டில் நுழைந்து, நம் ஊருக்குள் தொற்றி இன்று நம் நெருங்கிய சொந்த பந்தங்களையும் தொற்ற ஆரம்பித்துள்ளது. நமக்கு வராது என்று எண்ணி இருந்த நிலையில் நம்மையும் பாதித்து விடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
மேலும் பல்லாண்டு காலம் குடும்ப மருத்துவராக இருத்த பிரபல மருத்துவரையும் நோய் பாதித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், இந்த நோய்க்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்தியுள்ளது. இதனால் அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முதற்கட்டமாக அவர்களுடைய உறவினர்கள் மருத்தவமனையில் உள்ள நபர்கள் என 163 நபர்களுக்கு முதல் பரிசோதனை நடைபெற்றுள்ளது.
மேலும் இராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழக்கரை, புதுமடம் மற்றும் இன்னும் பலர் சில நாட்கள் முன் வரை சிகிச்சை வந்துள்ளார்கள். ஆகையால் சமீப நாட்களாக அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நபர்கள் தாங்களாகவே முன் வந்து கொரோனோ பரிசோதனை செய்து கொள்வதுடன், தங்களை தனிமைபடுத்தி கொள்வதுடன் இந்த தொற்று நோயிலிருந்து தங்களையும், தங்கள் சுற்றங்களைநும் பாதுகாத்து கொள்வது நல்லது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பனங்காட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் கைதான 6 பேரிடம் ரூ.15,800 பறிமுதல்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி போலீஸ் எஸ்ஐ., வசந்தகுமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். நாகநாத சமுத்திரம் பனங்காட்டிற்குள் சீட்டாடிய கும்பலை பிடித்தனர். விசாரணையில், பெரியபட்டினம் ராம்குமார், முகமது நஸீர், முகமது மீராஸா, அப்துல் மஜீத், முகமது சீனி அல்தாப், அழகன்குளம் ராஜேஷ் ஆகியோர் பணம் வைத்து சீட்டாடியது தெரிந்தது. இவர்களிடமிருந்து ரூ.15,800 ஐ பறிமுதல் செய்து 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் இவர்களை ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமேஸ்வரத்தில் சண்டை சேவல் விற்கப்படுவதாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக அலைபேசி எண் 94899 19722 க்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., அறிவுறுத்தல் படி ராமேஸ்வரம் நகர் போலீஸ் தனிப்பிரிவு காவலர் துரித விசாரணையில் வெளியூர்களில் சேவல் சண்டைக்கு வீட்டில் வளர்க்கும் சேவலை சரவணன் என்பவர் விற்பது தெரிந்தது.
இதன்படி சரவணனை பிடிக்க அவர் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது, அங்கு அவரிடம் சேவல் வாங்க வந்தவரிடம் போலீசார் விசாரித்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த பிரபாகரன் எனவும், இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிந்தது. ஒரு கொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனை, மதுரை அவனியாபுரம் போலீசார் நீண்ட நாள் தேடி வருவதும் தெரிந்தது. இதனையடுத்து பிரபாகரனை அவனியாபுரம் போலீசாரிடம் ராமேஸ்வரம் நகர் போலீசார் ஒப்படைத்தனர். சண்டை சேவல் வியாபாரி சரவணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் கடந்த 45 நாட்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை பேரிடர் துயர் போக்கும் நிவாரணமாக வழங்கினார். அதிமுக., நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள், ஊரடங்கு உத்தரவினால் வருவாய் இழந்த தினக்கூலி தொழிலாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி தூய்மை காவலர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார். இந்நிலையில் விடுபட்ட பகுதிகள், மீனவ மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சட்ட மன்ற உறுப்பினர் மணிகண்டனிடம் அதிமுக., நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன்படி, பாம்பன், தங்கச்சிமடம் பகுதி மீனவ மக்கள் 2 ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகை பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். மணிகண்டன் இன்று (02.6.2020) வழங்கினார். ராமநாதபுரம் நகர் பொருளாளர் எம்.ஜெயக்குமார், இளைஞரணி பாசறை செயலர் என்.ஆர்.பால்பாண்டியன், மண்டபம் அவைத்தலைவர் எம்.சுப்ரமணியன், இளைஞரணி செயலர் ஜாகீர் உசேன், அம்மா பேரவை செயலர் எல்.கஜேந்திரன், பழக்கடை சலீம், ஒன்றிய, மகளிரணி செயலர் விஜயலட்சுமி, வார்டு செயலர் ஆதில் அமீன், இளைஞர் பாசறை நிர்வாகி பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதுக்கோட்டை இருதய ஆண்டவர் தேவாலயம் வாசலில் மூதாட்டி உட்பட முதியவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, அந்த வழியாக நகராட்சி ஆய்வு மாளிகை திறப்பு விழாவுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், தேவாலயம் வாசலில் முதியவர்கள் அடுத்தடுத்து உட்கார்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, உடனே காரில் இருந்து இறங்கி தேவாலயத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்களிடம் விசாரித்தார்.
ஒவ்வொருவரும் தங்களது நிலை பற்றி எடுத்துக்கூறவே, அவர்களின் கதையைக் கேட்டுக் கவலையடைந்த ஆட்சியர், முதியவர்கள் அனைவருக்கும் உடனே முதியோர் உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியர், “சில தினங்களிலேயே உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். தயவு செய்து இனி யாசகம் பெற வேண்டாம்” என்று அன்புக் கட்டளை விதித்தார்.
அதோடு, அருகே இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இவர்களுக்கு உடனே உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
You must be logged in to post a comment.