கீழக்கரை செய்திகள்
தண்ணீர் தேவை அவசியம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: ஜனாதிபதிக்கு கடிதம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் பட்டணம்காத்தானில் விசை படகு நாட்டு படகு மீனவர்களுக்கான உபகரண கருவிகள் கடை ..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வரும் 20/04/2018 (வெள்ளிக்கிழமை) அன்று இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி மாலை 06.00 மணி முதல் கிழக்கு தெரு KECT திடலில் நடைபெற உள்ளது. பெண்களுக்கான தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் சிற்ப்பு பேச்சாளர்கள் உஸ்தாத்.நிலாமுதீன் அஷ்ரஃபி மற்றும் உஸ்தாத்.S.அப்பாஸ் அலி ஆகியோர் சிறப்புரையுடன் இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிகழ்ச்சி சம்பந்தமான சுவரொட்டிகள் கீழக்கரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுர மாவட்டம் கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் 16-04-2018 அன்று நடைபெற்றது.
இவ்விழாவில் டாக்டர்.ஆயிஷா பர்வீன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மழலைகள் விதவிதமான வண்ண உடைகளில் வந்து பட்டங்களை பெற்றது அனைவரையும் கவர்ந்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிர்பயா, இந்தப் பெயரை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த டிசம்பர் 16, 2012 அன்று இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் நகரில் வலம் வந்த பொழுது, அரசு வாகன ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் 6நபர்களால் பலாத்காரம் செய்து சாலையில் வீசிய பொழுது சாமனிய பெண் முதல் இந்தியாவின் பெண் மந்திரிகள் வரை தெருவில் இறங்கி பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக ஓங்கி குரல் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வரை இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. அனைத்து ஊடகங்களும் இந்த வழக்கைப் பற்றி அக்கு வேராக, ஆணி வேராக மேடை போட்டு ஆராய்ந்தார்கள். பல வருடங்கள் ஆகியும் செய்யா குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து வரும் இந்திய தேசத்தில் துரிதமாக அனைவரும் ஆச்சரிய்படும் வகையில் குற்றவாளகள் அனைவரும் நிர்பயா வழக்கில் தண்டிக்கப்பட்டனர். இஸ்லாத்தை எதிர்த்தவர்கள் கூட இந்தக் குற்றத்திற்கு இஸ்லாம் முறைப்படி தண்டனை வழங்க வேண்டும் என்று வக்காலத்து வாங்கினார்கள். இந்த வழக்கிற்கு விரைந்து தீர்ப்ப வழங்கிய பொழுது இந்திய நாடே சுதந்திரம் அடைந்தது போல் ஒரு ஆர்ப்பரிப்பு உருவானது.
இன்று ஆசிஃபா எனும் எட்டு வயது நிரம்பி சிறுமியை சிறுபான்மையினருக்கு தங்கள் இனத்தின் மேல் மன ரீதியான பயத்தை உண்டாக்க வேண்டும் எண்ணத்தில் சிறுவன் முதல், கோயில் நிர்வாகி மற்றும் போலீஸ் அதிகாரி உட்பட நான்கு பேர் பல நாட்கள் கோயிலுக்குள் வைத்து சித்திவதை செய்து, வன்புணர்வு செய்து கொலை செய்து வீதியில் வீசி எறிந்துள்ளார்கள். அத்தோடு நிற்காமல் அக்குடும்பத்தையே ஊர் விலகல் செய்து வைத்துள்ளார்கள்.
இது நடந்தது ஜனவரி மாதம் 8ம் தேதி, ஆனால் இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்த பொழுது ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முதல் உள்ளர் அரசியல்வாதி வரை எந்த வித ஆட்சேபனை தெரிவிக்கவில்லை மாறாக அந்த சிறுபிஞ்சின் மீதும் அக்குடும்பத்தார் மீது அவதூறை வீசினார்கள். குற்றம் சாட்டப்பட்டார்களுக்கு எதிராக ஆளும் கட்சி பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர், தொலைகாட்சியில் குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் ஈன செயல்களிலும் ஈடுபட்டனர். ஏன்??. ஏனென்றால் அக்குடும்பத்தினர் அவ்வூரில் வாழும் தாழ்த்தப்பட இனத்தைச் சார்ந்தவர்கள். இந்த வழக்கில் அரசியல் வாதி முதல் போலிஸ் அதிகாரி வரை பல லட்சங்களுக்கு விலை போய் உள்ளார்கள். இந்தப் பிஞ்சு உள்ளத்திற்காக இன்று வரை பல பெண் மத்திய அமைச்சர்களை கொண்ட மத்தியில் யாரும் வாய் திறக்கவில்லை, சட்டைக்கும், பாவாடைக்கும் எதிர்ப்புக் குரல் கொடுக்கும் மாதர் சங்கம் இது வரை சிறு மூச்சு விடவில்லை. அபயா வழக்கிற்கு வீதியில் இறங்கிய நடிகர், நடிகைகள் கூட்டம் இதுவரை எந்த நீலிக் கண்ணீரும் வடிக்கவில்லை.
ஏனென்றால் இவள் ‘அவாள்’ இல்லை…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மண்டபம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி போராட்டம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் குந்து காலில் ரூ 70 கோடியில் மீன்பிடி இறங்குதளம் மீனவர்களிடம் ஆலோசனை..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு
கீழக்கரை நகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் இளைய சமுதாயம் போதையில் மயங்கி சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றனர். அந்தி மயங்கும் வேளைகளில் தெருவுக்கு தெரு இருள் சூழ்ந்த பகுதிகளில் உலவும் கஞ்சா வியாபாரிகளிடம் தங்கள் பொன்னான எதிர்காலத்தை தொலைத்து வருகின்றனர்.
இதனால் இன்று வீட்டுக்கு வீடு கஞ்சா அடிமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் படு ஜோராக எவ்வித அச்சமும் இல்லாமல் தொழில் நடத்தும் இந்த இரக்கமில்லாத கஞ்சா வியாபாரிகளிடம் சிக்கும் தங்கள் பிள்ளைகளை, திருத்தி நல்வழி படுத்திட முடியாமல் ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர்கள் தினமும் இரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொடி கட்டி பறக்கும் இந்த கஞ்சா மற்றும் போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிக்க கோரியும், இந்த அபாய போதை பொருள்களை சர்வ சாதாரணமாக விற்பனை செய்து வரும் தேச விரோத ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்(போதை தடுப்பு பிரிவு) அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள், ஆகியோரை கீழக்கரையை சேர்ந்த சமூக நல அமைப்பினர் சந்தித்து இன்று மனு அளித்தனர்.
இந்த நிகழ்வில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை நகர் நல இயக்கம், இஸ்லாமிய கல்வி சங்கம்(A I E), சட்டப் போராளிகள் இயக்கம், வடக்குத்தெரு சமூக நல அமைப்பு(N A S A) அரசியல் கட்சியினர் SDPI கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக அமைப்பினர் கலந்து கொண்டு மனு அளித்தனர். அதுமட்டுமல்லாது கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக 60 க்கும் மேற்பட்ட ஆன்லைன் பெட்டிசன்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த மனுவில் ”இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களின் வியாபாரம் எவ்வித அச்சமும் இன்றி நடைபெற்று வருகிறது. கீழக்கரை நகர் பகுதிகளான புது கிழக்குத் தெரு, முஹம்மது காசீம் அப்பா தர்ஹா பகுதி, சிவகாமிபுரம், பட்டாணி அப்பா தர்ஹா பகுதி, கீழக்கரை டி.எஸ்.பி அலுவலக பின்புறம், கஸ்டம்ஸ் ரோடு வள்ளல் சீதக்காதிவசந்த மாளிகை பகுதி, சாலை தெரு 18 வாலிபர்கள் தர்ஹா பகுதி அருகாமை, கலங்கரை விளக்கம் பகுதி, அஞ்சு வாசல் கிட்டங்கி பகுதி உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருள் படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரிகள் எந்த பயமோ தயக்கமோ இல்லாமல் தைரியமாக வெளிப்படையாகவே செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கீழக்கரை நகரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நடைபெற்று வரும் இந்த போதை பொருள் வியாபாரத்தால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆவதோடு நம் தேசத்தின் நலனும், சீர்மிகு மனித வளமும் சீர்கெட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது பள்ளி கல்லூரி அருகாமையில் பான்பராக், குட்கா, சைனி கைனி, போதை புகையிலை வஸ்துக்கள் விற்பனையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது .
இது சம்பந்தமாக 04.04.2018 நாளிட்ட தினகரன் நாளிதழ் மதுரை பதிப்பில் (கீழக்கரையில் மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?) என்கிற தலைப்பில் செய்தி வெளியாகி மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு குடும்பத்தை சீரழிக்கும் இந்த கஞ்சா வியாபாரத்தை முற்றிலும் ஒழித்திட சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மூன்று நாள் தொடர் மழையில் ஈரமாகிய நிலங்கள்.. நோயின் பயத்தில் மக்கள்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று (15.04.2018) இராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபாவை கற்பழித்து கொலை செய்த கயவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும், இது போன்ற குற்றங்கள் புரியோரை தண்டிக்கும் விதமாக கடுமையான தண்டனைகள் இயற்றப்பட வேண்டுமென்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்வர் அலி தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் அப்பாஸ் முன்னிலை வகித்தார் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஜஹாங்கிர், பொருளாளர் பரக்கத் துல்லாஹ் மற்றும் 100 க்கும் மேற்பட்ட த மு மு க கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புகைப்படத்தொகுப்பு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் எம்.ஜி பப்ளிக் பள்ளியின் 16ம் ஆண்டு ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி கயல்விழி 10, 12ம் வகுப்பில் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இப்பள்ளி நல்ல சுற்று சூழல் அமைப்புடன் உள்ளதாகவும், இப்பகுதி மாணவ மாணவிகள் தரம் உள்ள கல்வியை பயன்பெறும் வகையில் இப்பள்ளி நிர்வாகிகள் கொடுத்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். கல்வி, விளையாட்டு, தனித்திறமை , யோகா, டிரம்ஸ், நடனம், இசை, காரத்தே, ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் சிறப்பு அழைப்பாளர் சீப் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (Chief Judicial Magistrate) அனில்குமார் பேசுகையில்: அடிப்படை சட்டங்களை பற்றி மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும், இப்பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று மருத்துவர்கள் இணைந்து தங்களுடைய கடுமையான மருத்துவ பணிக்கு இடையே இப்பள்ளியை நடத்தி வருகிறார்கள், அதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். இப்பள்ளி மாநிலம் மற்றும் தேசிய அளவில் சிறந்து விளங்க வேண்டும், தற்போது தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைய வாழ்த்துகிறேன் என்றார். தினமும் ஒரு செய்தித்தாள் படியுங்கள், டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள், இங்கு உள்ள நூலகத்தில் 2000 புத்தகம் உள்ளன, தினமும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை எற்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் யோகா மாஸ்டர் சரவணன், சக்கர ஆசணம், பத்மாசணம் சூரிய நமஸ்காராம், மச்ச ஆசணம், பும்மா சணம், சர்வாங் ஆசணம், பஜ்ஜி முத்தாசணம், சீரசாணம், தனுர் ஆசணங்களை மாணவ மாணவிகள் செய்து காட்டினர். அவதார் வேடம் கண்டங்களின் கலாச்சார அடிப்படையில் நாட்டியங்கள் ஆப்பிரிக்கா துபாய் நடனம் ஆடினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மருத்துவர் சுப்பிரமணியன். டிரஸ்டி மருத்துவர் பிரேமா சுப்பிரமணியன் பள்ளி செயலாளர் ஹர்சவர்த்தன் சி.பி.எஸ்.சி பள்ளி முதல்வர் விஜயலெட்சுமி மெட்ரிக் பள்ளி முதல்வர் லலிதா சங்கரி கலந்துகொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரமலான் நோன்பு துவங்கும் முன்னரே கீழக்கரையில் நோன்பு கஞ்சி வினியோகம் களை கட்ட துவங்கியுள்ளது. மிஹ்ராஜ் கந்தூரி என்ற நிகழ்ச்சி தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் நடைபெறுகிறது. கீழக்கரையில் மிஹ்ராஜ் இரவை முன்னிட்டு சில பள்ளிகளில் நேற்று நெய் சாதம் செய்து மக்களுக்கு வழங்கினர். இந்நிலையில் இன்று சில இஸ்லாமியர்கள் நோன்பு அனுசரிப்பதால் கீழக்கரையில் பல பகுதிகளில் சமூக ஆர்வலர்கள் நோன்பு கஞ்சி காய்ச்சி வினியோகம் செய்தனர்.
இதன் ஒரு குழுவாக நடுத்தெரு பெத்தம்மாவாடியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஹாமீது இப்ராகீம், ஹாஜா நசீர், செய்யது முகம்மது புகாரி தங்கள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொறுப்பாளர் நதீர், ஆதில் அமீன், ஜகுபர் ஹூசைன், அகமது பாரீஸ் ஆகியோர் நோன்பு அனுசரிப்பவர்களுக்கு உதவும் முகமாக நோன்பு கஞ்சி காய்ச்சி வினியோகம் செய்தனர். பொது மக்கள் பலர் நோன்பு கஞ்சியை பெற்று சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் அம்மா பூங்கா எதிரில் உள்ள தனியார் மஹாலில் இன்று காலை கிருஷ்ணா இன்டர்நேசனல் பள்ளியின் சார்பாக NEET மற்றும் IIT தேர்வுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது.
இப்பயிலகத்தை இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் இரவிச்சந்திர இராம வன்னி , கிருஷ்ணா பள்ளியின் சேர்மன் மாதவனூர் கிருஷ்ணன், தாளாளர் கணேச கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தார் முன்னதாக கிருஷ்ணா பள்ளியின் செயலாளர் ஜீவலதா குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இந்த பயிலரங்கத்தில் இம்பல்ஸ் அகாடமியின் மேலாண்மை இயக்குநர் சங்கர் , நீட் (Neet) ஐஐடி (IIT) தேர்விற்கு எப்படி படிக்க வேண்டும், என்ன பாடங்களை படிக்க வேண்டும், தேர்வில் வினாத்தாள் எவ்வாறு அமைந்திருக்கும், தேர்வில் எவ்வாறு எளிதாக வெற்றி பெற வேண்டும், நாட்டில் எத்தனை மருத்துவம் மற்றும் ஐஐடி கல்லூரிகள் உள்ளன, அங்கு எவ்வாறு சேருவது, அட்மிஷன் மற்றும் கட் ஆஃப் (Cut off) ஆகியவை குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
இப்பயிலரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கிருஷ்ணா பள்ளியின் முதல்வர் முத்துகுமார் நன்றி கூறி நிறைவு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்
கீழக்கரை நகரில் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க ஆங்காங்கே சமூக மற்றும் சமுதாய இயக்கத்தினர் கோடை கால கால் நீர் மோர் பந்தல் அமைத்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் இன்று (15.04.2018) காலை 10:30 மணியளவில் வள்ளால் சீதக்காதி சாலையில் யூஸுஃப் சுலைஹா மருத்துவமனை அருகில் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் பந்தலை பிரபுக்கள் தெருவை சேர்ந்த சகோதரர் செய்யது அஹமது அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை அறக்கட்டளையின் துணை தலைவர் அஹமது சுஹைல், செயலாளர் முஹைதீன் அடுமை, துணை செயலாளர் அய்யூப் கான் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
அறக்கட்டளையின் ஆலோசகர்கள் சகோதரர் சீனி இப்ராஹீம் மற்றும் சகோதரர் முஹம்மது அன்ஸாரிப்பு ஆகியோர் உடனிருந்தனர். தெருவாசிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இழந்து விட்டோம் நாங்கள் பெற்றெடுக்காத பெண் பிள்ளையை – ஒரு தாயுள்ளம் கொண்ட சகோதரியின் பாசக்குமுறல்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஆங்கில மருந்துகள் விற்பனை நிலையங்கள் ஜெனரிக் மெடிக்கல் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கீழக்கரையில் ‘கீழை மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் கிழக்கு தெரு சிட்டி யூனியன் வங்கி அருகில் இருக்கும் இமாம் ஜகுபர் சாதிக் வணிக வளாகத்தில் மீண்டும் புது பொழிவுடன் இன்று (14.04.2018) மாலை 4.30 மணியளவில் துவங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தகத்தை கிழக்கு தெரு ஜமாஅத் செயலாளர் நெகர் சிகாப் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளர் சட்டப் போராளி முகம்மது அஜிஹர், மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் சட்டப் போராளி முகைதீன் இப்ராகீம், சட்ட போராளிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் முகம்மது சாலிஹ் ஹூசைன்
அல் பையினா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜாபீர் சுலைமான், SDPI கட்சியின் கீழக்கரை நகர் துணை தலைவர் சட்டப் போராளி நூருல் ஜமான், சட்டப் போராளி முஹம்மது அஸ்லம், கீழக்கரை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொறுப்பாளர் முகம்மது நதீர், S.M.மாசிக்கடை கலீல் ரஹ்மான் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கீழை மக்கள் மருந்தகத்தின் முதன்மை நிர்வாகி சட்டப் போராளி ஜாபீர் சுலைமான் கூறுகையில் ”இறைவனுடைய அருளால் கீழக்கரையில் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி கடந்த ஆண்டு ஏப்ரல் 28 அன்று, மக்கள் பாதை இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் உமர் முக்தார் அவர்களால் இதே இடத்தில் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.
மக்கள் மருந்தகம் மூலம் கீழக்கரை பகுதி ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் நிர்வாக மாறுதல் காரணமாக ஒரு சில மாதங்கள் மக்கள் சேவை முற்றிலும் தடைபட்டு இருந்தது. தற்போது அல்லாஹ்வின் கிருபையால் மீண்டும் புதுப்பொலிவுடன் இன்று முதல் ‘கீழை மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் மருந்தகம் செயல்பட துவங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வழக்கம் போல் உங்கள் ஆதரவை தந்து பயன்பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
You must be logged in to post a comment.