இது தொடர்பாக எஸ்டிபிஐ., கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு அதிகமான நபர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களை அரசே, 15 நாட்கள் தனிமைப்படுத்தி பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறது. இந்நிலையில் சார்ஜாவில் உள்பட பிற நாடுகளில் இருந்து இன்று இராமநாதபுரம் வந்த சிலருக்கு கொரோனா தொற்று உள்ளது என தெரிய வந்துள்ளது. இவர்களை தனிமை படுத்தாமல் தொற்று இல்லாதவர்களுடன் ஒன்று சேர்த்து இராமநாதபுரம சேதுபதி அரசு கலை கல்லூரி மற்றும் பிற இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மேலும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அவர்களை கொரோனா கட்டுப்பாட்டு உடனே மையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
Category:
RTI வட்டம்
அறிந்து கொள்வோம் சட்டம் – மன அழுத்தத்தை காரணம் காட்டி ராஜினாமா கடிதம் திரும்ப பெற முடியுமா?…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதத்தை பின்னர், அந்தக் கடிதத்தை பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கொடுத்து விட்டதாக கூறி திரும்பப் பெற முடியுமா??, ஒரு வழக்கு விபரம் கீழே..
பரமேஸ்வரி என்பவர் நாகப்பட்டினம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக 18.6.2008 ஆம் தேதி பணியில் நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு பல இடங்களுக்கு பணிமாறுதல் 5.8.2013 ஆம் தேதி ஒரு பணி விலகல் கடிதத்தை மாவட்ட நீதிபதியிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை மாவட்ட நீதிபதி 12.8.2013 ஆம் தேதி ஏற்றுக் கொண்டார். பின்னர் பரமேஸ்வரி தான் கொடுத்த பணி விலகல் கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்து விட்டதாகவும், அந்த கடிதத்தில் திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் 1.10.2013 ஆம் தேதி ஒரு மனுவை அதே மாவட்ட நீதிபதியிடம் அளித்தார். ஆனால் மாவட்ட நீதிபதி அதை ஏற்றுக் கொள்ள மறுத்து பணி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறிவிட்டார்.
பணி விலகல் கடிதம் கொடுத்தால் தமிழ்நாடு சார் நிலைப் பணியாளர்கள் பணி விதிகளின் விதி 41(A) ன்படி 90 நாட்கள் வரை மாவட்ட நீதிபதி காத்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு காத்திருக்காமல் தனது பணி விலகல் கடிதத்தை அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது சட்டப்படி தவறானது என்றும் தனக்கு சட்டம் வழங்கியுள்ள 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவில்லை அதனால் தனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று கோரியும் தனக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.
பரமேஸ்வரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிச்சுமையால் தான் பரமேஸ்வரி பணி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், இருந்தபோதிலும் பணி விலகல் கடிதம் கொடுத்து 90 நாட்கள் முடிவடைவதற்குள் அவருடைய பணி விலகல் கடிதத்தை இரத்து செய்யுமாறு கோரி ஒரு மனுவை மாவட்ட நீதிபதியிடம் பரமேஸ்வரி தாக்கல் செய்திருந்ததாகவும் ஆனால் அந்த மனுவை பரிசீலிப்பதற்கு முன்பாகவே மாவட்ட நீதிபதி பரமேஸ்வரியின் பணி விலகல் ஏற்கப்பட்டு விட்டதாக கூறியது தவறு என்றும் பரமேஸ்வரி பணியிலிருந்து விலக மனதார நினைக்கவில்லை என்றும் தமிழ்நாடு சார் நிலைப் பணியாளர்கள் விதிகளில் கண்ட விதி 41(A) ன்படி பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் காத்திருப்பு காலம் உள்ள நிலையில் பரமேஸ்வரியின் பணி விலகல் கடிதத்தை மாவட்ட நீதிபதி அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது சட்டப்படி தவறு என்று வாதிட்டார்.
மாவட்ட நீதிபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்டு அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அந்த பணி விலகல் கடிதத்தை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே விதி 41(A)(b) ன்படி வாய்ப்பில்லை என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள்….
தமிழ்நாடு சார் நிலை பணியாளர்கள் விதிகளின் விதி 41(A) மூன்று காரணிகளை உள்ளடக்கியது.
1. 3 மாதங்களுக்கு குறைவில்லாமல் பணி விலகல் குறித்து ஓர் அறிவிப்பை அரசு ஊழியர் கொடுக்க வேண்டும்.
2. அதனை வேலை அளித்த அதிகாரமுடைய நபர் ஏற்க வேண்டும்.
3. அளிக்கப்பட்ட பணி விலகல் அறிவிப்பை திரும்பப் பெறுதல் குறித்து விதி 41(A)(a)ல் கூறப்பட்டுள்ளது.
பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வது குறித்து தகுதி பெற்ற அதிகாரி குறிப்பிட்ட கால அவகாசம் அளித்து, அந்தப் பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டது அல்லது நிராகரித்தது குறித்து காரணங்களை குறிப்பிட்டு ஓர் உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.
அதிகாரம் பெற்ற நபர் பணி விலகல் கடிதத்தை குறித்து எந்தவொரு உத்தரவையும் அறிவிப்பு காலத்திற்குள் பிறப்பிக்கவில்லை என்றால் விதி 41(A)(c) ன்படி அந்தக் கடிதம் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். இந்த வகையில் அந்த விதியிலுள்ள கூறுகள் அரசு ஊழியருக்கு சாதகமாக அமைந்துள்ளது. பணி விலகல் அறிவிப்பு கொடுக்கப்பட்டதற்கு பின்னர் அந்தப் பணி விலகல் அறிவிப்பின் மீது ஓர் உத்தரவை பிறப்பிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும், அது தன்னுடைய பணியை விட்டு விலகுவதாக அறிவிப்பு கொடுத்த அரசு ஊழியரை பாதிக்காது.
உச்சநீதிமன்றம் ” பஞ்சாப் நேஷனல் வங்கி Vs P. K. மெட்டல் (1989-SUPP-2-SCC-175)” என்ற வழக்கில், பணி விலகல் கடிதம் 3 மாதங்களுக்கு பின்னரே நடைமுறைக்கு வரும். அதற்கு முன்பாக ஊழியரை பணியிலிருந்து விலகும்படி அதிகாரி வற்புறுத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
பணி விலகல் அறிவிப்பு கொடுத்த பின்னர் 90 நாட்களுக்குள் அதனை திரும்பப் பெற அரசு ஊழியர்களுக்கு உரிமை உள்ளது. இந்த உரிமையை விதி 41(A)(b) எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறி பரமேஸ்வரிக்கு மீண்டும் வேலையை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
W. P. No – 19361/2014
Dt – 16.6.2016
G. பரமேஸ்வரி Vs பதிவாளர், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பலர்
2016-5-CTC-161
தொகுப்பு அ.சா.அலாவுதீன்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு
by keelai
written by keelai
அரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், அரசு ஊழியர்கள் பொறுப்புணர்வோடும், ஆவங்களில் வெளிப்படை தன்மையோடும் செய்யப்படுவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பேருதவி புரிந்து நீதியை நிறுத்த சாமானியர்களுக்கு உதவுகிறது.
இந்த சட்டத்தின்படி பிரகாரம் அரசுத் துறையினரிடம் சாமானியர்கள் எவ்வாறு கேள்விகளை கேட்டு தகவல்களை பெறுவது ? அதற்கு உரிய வழிமுறைகள் என்ன.? சட்ட ரீதியாக அதிகாரிகளை எப்படி சிக்க வைப்பது ? உள்ளிட்ட விஷயங்களை சாமானியர்களுக்கு சட்ட பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி மூலம் கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் நேற்று நடத்தியது.
இந்நிகழ்ச்சி கீழக்கரை வடக்குத்தெரு இஸ்லாமிய அமைதி மையத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சட்ட பயிற்சி வகுப்பில் ஏராளமான சமூக ஆர்வலர்கள், சட்டப் போராளிகள் கலந்து கொண்டு சட்ட பயிற்சி பெற்றனர். தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பயிற்சி வகுப்பினை வழக்கறிஞர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் தகுந்த விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
‘மார்ச் 25’ – கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் நடத்தும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ பயிற்சி வகுப்பு – நீங்கள் முன் பதிவு செய்து விட்டீர்களா..?
by keelai
written by keelai
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும்..?
ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் தேவையில்லை. எந்த ஒரு பொது அலுவலகத்திலும் கேட்கலாம். அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
அரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களை கேட்கலாம். தகவல் கேட்கும் நமக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். இந்த சட்டம் மூலம் தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பொது மக்கள் எவ்வாறு அரசு அலுவலகங்களுக்கு முறையாக விண்ணப்பித்து தகவல் பெறலாம்,? அதற்கு உரிய வழிமுறைகள் என்ன.? என்பது குறித்தும், இந்த சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் மேல்முறையீடு குறித்து தகுந்த விளக்கத்துடன் பயிற்சி அளிக்கும் விதமாக கீழை நியூஸ் நிர்வாகத்தின் கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு எதிர்வரும் ‘மார்ச் 25′ ஞாயிற்றுக் கிழமை அன்று இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை சினர்ஜி இன்டர்நெஷனல் இன்ஸ்டிடியூட் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து வழக்கறிஞர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் பயிற்சி அளிக்க இருக்கிறார். இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடைய விரும்புபவர்கள் கீழ் வரும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விரைந்து உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.
முன் பதிவு செய்ய தொடர்பு கொள்க : 9791742074
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், சட்டத்திற்கு புறம்பாக அதிரடியாக திருத்தப்பட்ட நகராட்சி ‘மக்கள் தொகை’ – நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க ‘சட்டப் போராளிகள்’ முடிவு
by keelai
written by keelai
கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த நகராட்சி மறுவரையறை பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்த 2011 ஆம் ஆண்டின் கீழக்கரை மொத்த மக்கள் தொகைக்கும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கடந்த 2013 ஆம் ஆண்டு பெறப்பட்டிருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகைக்கும் ஏறத்தாழ 10000 வித்தியாசம் இருந்தது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக பெறப்பட்டு இருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகையும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த கீழக்கரை நகராட்சியின் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகையும் ஒன்றாக இருந்தது.
இது குறித்து நாம் கீழை நியூஸ் வலைத்தளத்தில், தெளிவான ஆதாரங்களுடன் கடந்த மாதம் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த தகவல்களை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வேளையில் இன்று மதுரையில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை ஆணையத்தின் முன்னிலையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதனால் இங்கு ஆட்சேபனை கருத்துக்ளை தெரிவிக்க வரும் மனுதாரர்கள் குளறுபடியான மக்கள் தொகை குறித்து நம்மிடம் கேள்வி கேட்பார்கள் என்கிற அச்சத்தில் நகராட்சி அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கீழக்கரை நகராட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அதிரடியாக திருத்தம் செய்துள்ளனர்.
நேற்று வரை 2011 ஆம் ஆண்டில் கீழக்கரை நகராட்சின் மொத்த மக்கள் தொகை 47730
இன்றைய தேதியில் சட்டத்திற்கு புறம்பாக கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக திருத்தியுள்ள கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகை 38355
இது குறித்து சமூக ஆர்வலர் சட்டப் போராளி முஹம்மது அஜிஹர் கூறுகையில் ”கீழக்கரை நகராட்சியில் இந்த வார்டு மறுவரையறை குறித்து பொதுமக்கள் அனைவரும், அறிந்து கொள்ளும் வகையில் முறையான பொது அறிவிப்பு செய்யவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வார்டு மறுவரையறை பட்டியலின் நகல் வழங்கப்படவில்லை. கீழக்கரை நகராட்சி பகுதியில் வாழும் நம் மக்கள் எவருக்கும் தாங்கள் எந்தெந்த வார்டுக்கு மாற்றி இருக்கின்றனர் என்பது கூட தெரியாமல் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம்.
இந்நிலையில் நகராட்சி ஆவணங்களின் படி நகராட்சியின் மொத்த மக்கள் மக்கள் தொகையான 47730 எண்ணிக்கையில் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்துள்ள கீழக்கரை நகராட்சி அதிகாரிகள், நேற்று வரை, கீழக்கரை நகராட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருந்த 47730 என்கிற மக்கள் தொகை எண்ணிக்கையை சட்டத்திற்கு புறம்பாக 38355 என்று திருத்தம் செய்துள்ளனர். இதனை சட்டப் போராளிகள் குழுமம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்த அனைத்து ஆவணங்களையும் நீதி மன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்து நீதியை நிலை நாட்டுவோம்.” என்று தெரிவித்தார்.
கீழைநியூஸ் இணையதளத்தில் சில மாதங்களுக்கு முன்பு நாம் வெளியிட்ட செய்தி..
http://keelainews.com/2018/01/05/ward-issue/
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் ஏற்படக் கூடிய வழக்குகள் உள்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாதந்தோறும், சட்ட உதவி முகாம்கள் நடத்தப்பட்டு, ஏழை-எளிய மக்களுக்கு கட்டணமின்றி வழக்குகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மக்கள் நீதி மன்றம் அழைக்கப்படும் லோக் அதாலத், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் என சென்னை மாநகரில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் நடைபெறுகிறது. இதேபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைமையகம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்படுகிறது.
இந்த சட்டப் பணிகள் ஆணைய குழு எதற்காக செயல்படுகிறது ? இந்த குழுவின் பணிகள் என்ன? யாரெல்லாம் இந்த குழு வழங்கும் இலவச சட்ட உதவிகளை பெற முடியும்? என்பதெல்லாம் இன்னும் பொது மக்களுக்கு தெரியாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவே உள்ளது.
ஆகவே அன்பான கீழை நியூஸ் வாசக பெருமக்களே..
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சேவைகளை தெரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வழி காட்டுங்கள்..
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு – ஓர் அறிமுகம்
இலவச சட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதியானவர்கள் யார் ? யார்?
சட்ட உதவி பெறுபவர்களுடைய முக்கிய தகுதிகள் என்ன.?
வழக்கு தாக்கல் செய்தவரோ அல்லது எதிர் வழக்கு செய்பவரோ சட்டப்படி சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள் ஆவார்கள், அப்படி உதவி பெற அந்த நபர்கள் கீழ் கண்ட தகுதிகள் பெற்றவராக இருக்க வேண்டும்.
★ஒருவர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மற்றும் மலை வாழ்குடி பிரிவினை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
★அரசியலமைப்பு சட்டம் சரத்து 23 ல் குறிப்பிடப் பட்டுள்ள பிச்சைக்காரர்கள் மற்றும் ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டோர்.
★பெண்கள் அல்லது குழந்தைகள்.
★1995 ஆம் ஆண்டு ஊனமுற்றவர்கள் (சமவாய்ப்புகள், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் ழுழுபங்கேற்பு) சட்டம் பிரிவு 2 சரத்து (1) ன் படி குறிப்பிட்டுள்ள படி உள்ள ஊனமுற்றோர்.
★பேரழிவு, இனக்கிளர்ச்சி, சாதி வன்கொடுமை, வெள்ளம், பஞ்சம், நில நடுக்கம், தொழில் அழிவு ஆகிய எதிர் பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட நபர்.
★தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளி.
★சிறைக்காவலில் இருப்பவர் அல்லது பாது காப்பு இல்லம், இளம் சிறார்கள் இல்லம், மனநல மருத்துவமனை, மனநல காப்பகம் ஆகிய இடங்களில் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டவர்கள்.
★பிரிவு 12 (எச்) இல் குறிப்பிட்டப்படி ஆண்டு வருமானம் ₹ 100000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) மிகாமல் உள்ளவர்கள்.
மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகள் பெற்ற நபர் யாராக இருந்தாலும் , அடிப்படையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களாய் இருந்தால் அவர்கள் வழக்கு தொடரவும், எதிர் வழக்கு நடத்தவும் இலவச சட்ட உதவிகள் பெற தகுதியுடையவர் ஆவார்கள்.
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சேவைகள் என்னென்ன?
★சிவில் வழக்குகள் சம்பந்தமாக.
★குடும்பநல வழக்குகள் சம்பந்தமாக.
★வங்கி கடன் சம்பந்தபட்ட வழக்குகள் மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமாக.
★குற்றவியல் வழக்குகள் நடத்துதல், மற்றும் ஜாமீனில் வெளியில் வருதல் சம்பந்தமாக.
★வழக்குகளை நேரடியாக கோர்ட் முறையில் இல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது. அதாவது நீதிமன்றம் செல்லாமல் சமரச தீர்வு ஏற்படுத்துவது.
★பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள்பற்றி தெரிந்து கொள்ள.
★மக்கள் நீதிமன்றம் / நடுவர் அரங்கங்கள் பற்றி விழிப்புணர்வு பெற .
★மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை பெற.
★காசோலைகள் கொடுக்கல் வாங்கல் ஆகிய வற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து.
★தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து.
பொது மக்கள் அவர்களது பிரச்சனைகளை மனுவாக சமர்ப்பிக்கலாம். வட்ட சட்ட பணிகள் குழு அந்தந்த வட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைகுழுவினையோ, அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றத்தையோ நேரில் அணுகி உரிய நிவாரணம பெறலாம்
இப்படி ஒரு இலவச சேவை இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்.?
- உங்களது பிச்சனைகளை இந்த குழுவினர் தீர்த்து வைப்பார்கள்.
- தீர்வு காண முடியாத பிரச்சனைகளாக இருந்தால் அவர்களே வழக்கறிஞர் வைத்து நீதிமன்றத்தில் தீர்வு பெற்று தருவார்கள்.
- வழக்கறிஞர் கட்டணம் உட்பட நீங்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
- வழக்கறிஞர்களுக்கான கட்டணத்தை அரசே கொடுக்கும் .
இனி கவலையை விடுங்கள்… வழக்கில் வென்று காட்டுங்கள்….
மேலும், இது குறித்த சந்தேகங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் அணுகுங்கள்.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு
வடக்கு கோட்டை சாலை,
நுழைவாயில் எண் : 6,
உயர்நீதிமன்ற வளாகம்,
சென்னை -600 104
தொலைபேசி :044 25342834
சட்ட உதவிக்கு :044 25342441
கட்டணம் இல்லா தொலைபேசி :1800 425 2441.
புகைப்படத்தொகுப்பு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை முக்கு ரோட்டிலிருந்து கடற்கரை வரை உள்ள 1.4 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி, 04.12.2016 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தப் பணியினை மாநில நெடுஞ்சாலை துறையினர் அருப்புக்கோட்டையை சேர்ந்த S.P.K கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதைப்பற்றிய செய்தியையும் மக்கள் ஓத்துழைப்பு கொடுக்கவும் நாம் வேண்டுகோள் விடுத்து இருந்தோம்.
ஆனால் தற்போது அவசர கதியில் மேற்கொள்ளப்படும் இந்த சாலை சீரமைப்பு பணியினால் தரமற்ற வேலைகள் நடை பெற்று வருகிறது. ஒப்பந்த முறைப்படி பழைய சாலைகள் முறையாக, முழுமையாக அகற்றப் படாமல், புதிய சாலை அமைப்பதால் ஒன்றரை அடிக்கு மேல் சாலை உயர்ந்துள்ளது. இதனால் உயர் அழுத்த மின்சார கம்பிகள் மீது வாகனங்களின் மேற்கூரை உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் இந்த சாலை சீரமைப்பு பனியின் போது குடிநீர் மற்றும் சாக்கடை குழாய்கள் பல இடங்களில் உடைக்கப்பட்டுள்ளதால் சுகாதார கேடும் நிலவுகிறது. இது சம்பந்தமாக கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் சார்பாக இன்று முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு பல மனுக்கள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.