ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய ஒளி மின்விளக்கு பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது . கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி மக்கள் பயன்படும் வகையில் அப்பகுதியில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடப்படுகிறது.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/04/1000837467-large.jpg?resize=576%2C1024&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/04/1000837468-large.jpg?resize=1024%2C461&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/04/1000837465-large.jpg?resize=1024%2C576&ssl=1)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/04/1000837460-large.jpg?resize=1024%2C461&ssl=1)
You must be logged in to post a comment.