தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் காளவாசல் அருகில் பாத்திமா நகரில் உலக மகளிர் தின விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சின்னத்திரை நடிகை நாதஸ்வரம் கல்யாண வீடு புகழ் ஜெயந்தி தலைமையிலும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சசேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் முன்னிலையிலும் அப்பாபாலாஜி, மீசை தங்கராஜ், தங்கப்பாண்டி நடிகைகள் அட்சயா, தேவகி, தேவயானி ராஜி (எ) ஹரணி,ஸ்ரீகலா, மல்லிகா, ராணி, சுமதி, பாண்டிச்செல்வி, மஞ்சு, கௌரி, சைலஜா, பாக்கியா, ஆண்டிப்பட்டி தனலட்சுமி, ஷாலினி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கேக் வெட்டி மற்றும் அனைவருக்கும் இனிப்புகளும் தேனீரும் வழங்கப்பட்டன. சங்க அலுவலக மேலாளர் பாலா, செய்தி தொடர்பாளர் செந்தில்நாதன் இணைந்து விழாவை ஏற்பாடு செய்தனர்*.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.