ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பேருந்து நிலையம் தனியார் கல்லூரிகள் போன்ற இடங்களில் உள்ள கடைகளை கீழக்கரை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் எம் ஜெயராஜ் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா சுகாதாரத்துறை சுகாதார ஆய்வாளர் சுரேந்தர், ராம்குமார் கீழக்கரை காவல் நிலைய காவலர் ராம்கி ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர். . ஆய்வின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளை கண்டறிந்து அபராதம் விதித்து மூடப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ரூ 50,000 இருந்து ஒரு லட்சம் வரை அபராத விதிக்கப்படும் என்றும் 30 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரை கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என்றும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Category:
செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நிறைவு
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி திருக்கோவில் கடந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து ஒரு மாதம் கழித்து கோவில் உண்டியலில் பெறப்பட்ட காணிக்கைகள் எண்ணும் பணி இன்று கோவிலின் மண்டபத்தில் நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில், நம்புநாயகி அம்மன் கோவில், ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் மூலம் தரப்பட்ட காணிக்கைகளை கோவில் பணியாளர்கள் மூலம் கைப்பற்றி காணிக்கைகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வந்தன.உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர். ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி திருக்கோவில் கடந்த ஒரு மாதத்தில் பெறப்பட்ட காணிக்கைகளின் உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றுள்ளது. அதில் உண்டில் எண்ணப்பட்டதில் ஒரு கோடியே 51லட்சத்து 53ஆயிரத்து 776 ரூபாய் பணமும், 101 கிராம் 200 மில்லிகிராம் தங்கம், 6 கிலோ 630 கிராம் வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக பறவைகள் தின விழா! எல்.பி.கே.நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.
by syed abdulla
written by syed abdulla
உலக பறவைகள் தின விழா எல்.பி.கே.நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஒன்றியம் ,எல். கே .பி. நகர் அரசு நடுநிலைப் பள்ளியில், உலக பறவைகள் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
ஆசிரியை ,அனுசியா வரவேற்றார்.
சமூக ஆர்வலர் முரா பாரதி , சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பறவைகளின் முக்கியத்துவம், பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு, அழிந்து வரும் பறவை இனங்கள் ஆகியவற்றை குறித்து ,
மாணவ மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். எல்லா பறவைகளும் விரும்பி உண்ணும் அத்தி மரக்கன்று நடவு செய்யப்பட்டது. மேலும் சக்கிமங்கலம் சாலையில் கால்வாயை ஒட்டி நூறு விதை பந்துகள் தூவப்பட்டன. மாணவ மாணவிகள் பல்வேறு வகையான பறவைகளின் படங்களை கையில் பிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆசிரியர் மனோன்மணி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆசிரியைகள் அருவகம், சித்ரா, தமிழ்ச்செல்வி, அம்பிகா, அகிலா, சுகுமாறன் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்வில், பள்ளி சுற்றுச்சூழல் மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், வி. காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேலூர் அருகே, சபரிமலை சென்று விட்டு திரும்பிய வேன் மீது லாரி மோதி விபத்து : 5 பக்தர்கள் படுகாயம், சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி..
by syed abdulla
written by syed abdulla
மேலூர் அருகே, சபரிமலை சென்று விட்டு திரும்பிய வேன் மீது லாரி மோதி விபத்து : 5 பக்தர்கள் படுகாயம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி..
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி அருகே நான்கு வழிச்சாலையில், திருச்சியில் இருந்து மதுரைக்கு சீனி மூட்டைகள் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி எதிரே சபரிமலையில் இருந்து சுவாமி தரிசனம் முடித்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் பயணம் செய்த மேலூர் அருகே மங்களாம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (45). சிங்கம்புணரி அருகே காளாப்பூரை சேர்ந்த வைரமணிகண்டன் (28) .
மற்றும் மோகன் உட்பட 5 பக்தர்கள் காயமடைந்த நிலையில், இதுகுறித்து தகவலறிந்த ஒத்தக்கடை காவல்துறை ரோந்து அதிகாரி ராஜேந்திரன், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் நவாசுதீன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி காயமடைந்த பக்தர்களை மீட்டு, சிகச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்துக்குறித்து ஒத்தக்கடை காவல்
துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர், வி. காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா.! 10 ஆயிரம் பேருக்கு தடபுடலாக பறிமாறப்பட்ட கறி விருந்து:
by syed abdulla
written by syed abdulla
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அனுப்பபட்டி கிராமத்தில்,
காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில், பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.
இந்த விழாவில், பலியிடப்படும் ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்
படுகின்றன. வளரும். இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள். கரும்பாறை முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக நடந்தது.
காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர், நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 101 ஆடுகள் குறிப்பாக கருப்பு ஆடுகள் மட்டும் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன.
100 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது.
இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காயந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோயிலின் தரிசனத்திற்கு வருவர். இன்று நடந்த கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டு அசைவ உணவினை உண்டு மகிழ்ந்தனர்.
செய்தியாளர், வி. காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொங்கல் பரிசு 1000 ரூபாய்… யாருக்கு கிடைக்கும்.. யாருக்கு கிடைக்காது?
by syed abdulla
written by syed abdulla
பொங்கல் பரிசு 1000 ரூபாய்… யாருக்கு கிடைக்கும்.. யாருக்கு கிடைக்காது?
தமிழகத்தில் வரும் தை ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் யாருக்கெல்லாம் 1000 ரூபாய் ரொக்கம் கிடைக்கும், யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்காது என்பதை பார்ப்போம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10-ம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பார்த்தால் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கும். அதாவது PHH எனப்படும் முன்னுரிமை கார்டுகளுக்கும். PHH – AAY எனப்படும் அந்தோதயா அன்ன யோஜா கார்டுகளுக்கும், அதாவது 35 கிலோ அரிசி வாங்குவோருக்கும் கண்டிப்பாக கிடைக்கும். அதேபோல் NPHH – எனப்படும் முன்னுரிமையற்ற கார்டுகளுக்கும் வழங்கப்படும்.
NPHH-S என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என்பதால் இந்த கார்டுகளுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு கண்டிப்பாக கிடைக்காது, NPHH-NC ரேஷன் அட்டைதார்கள் எந்த பொருளும் வாங்காதவர்கள் என்பதால் அவர்களுக்கும் 1000 பொங்கல் பரிசு கிடைக்காது. அதேநேரம் NPHH கார்டோ அல்லது PHH கார்டோ, PHH – AAY கார்டிலோ குடும்ப உறுப்பினர்கள் யாராவது அரசு ஊழியராக இருந்தால் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருமான வரி கட்டியிருந்தாலோ அந்த குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசான 1000 ரூபாய் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வருமான வரி கட்டியவர்கள், அரசு ஊழியர்கள் என்றால், உங்கள் ரேஷன் கார்டு காட்டிக் கொடுத்துவிடும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு! பாதிக்குமா பஸ் போக்குவரத்து.?
by syed abdulla
written by syed abdulla
தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகிற 9-ந் தேதி ஸ்டிரைக் கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு! துரிதமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..
by syed abdulla
written by syed abdulla
திண்டுக்கல் மாவட்டம் கல்லோடை கிராமம் ,அடியனூத்து பஞ்சாயத்து, ராபர்ட் கென்னடி என்பவருக்கு சொந்தமான 50 அடி நீர் இல்லாத கிணற்றில் பசு மாடு கால் தவறி விழுந்துதது, தகவல் அறிந்த உதவி திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு துறையினர் சென்று மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தின் அடித்தளம் ஆடிப்போய் உள்ளது.. முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு..
by syed abdulla
written by syed abdulla
தமிழகத்தின் அடித்தளம் ஆடிப்போய் உள்ளது அதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை! முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு..
கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் வாங்கிய கடன் 3,53,561 கோடி ,திமுக ஆட்சிக்கு வந்து இந்த இரண்டு வருடங்களுக்கு மேல் வாங்கிய கடன் 2,72000,தமிழகத்தின் அடித்தளம் ஆடி போய் உள்ளது அதை சீர் செய்யநடவடிக்கை எடுக்கவில்லை.விளம்பரத்திற்காகத்தான் உலக முதலீட்டார் மாநாடு.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு!
2021 ஆம் ஆண்டு முதல் கடன் சுமை வருகிறது.திமுகஆட்சியில் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை.அம்மாவுடைய ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட திட்டங்களை எடப்பாடியார் தொடர்ந்து வழங்கினார்.தற்போது திமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது, விலையில்லா ஆடு மாடுகள் வழங்குற திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது, அம்மா உணவகத்தை இன்றைக்கு ஒட்டுமொத்தமாக மூடுகிற நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.
அம்மா,எடப்பாடியார் ஆட்சி காலங்களில் 17 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சி காலத்தில் புதிதாக 7 சட்டக் கல்லூரிகள், 21 பல்வகை தொழில் நுட்பக் கல்லூரிகள்,4 பொறியியல் கல்லூரிகள், 1102 ஏக்கரில், 1,203 கோடியில், மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா, 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், புதிதாக 248 தொடக்கப் பள்ளிகள், 1079 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக உயர்வு, 604 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக உயர்வு, தமிழகத்தின் மின் உற்பத்தியை 32,140 மெகா வாட்டாக உயர்வு, 8,552 மெகாவாட் காற்றாலையில் மின் உற்பத்தி, 1,440 கோடியில் 12 மீன்பிடித் துறைமுகங்கள், 520 கோடியில் 43 இடங்களில் மீன் இறங்கு தளங்கள்,
இப்படி வளர்ச்சி திட்டங்களை நாம் பட்டியல்யிட்டு கொண்டே செல்லலாம்.
தற்போது நாடாளுமன்ற தேர்தலை சந்தித்திருந்த நேரத்திலே கூட, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று தொடங்கி வைத்த திட்டம் என்று பார்த்தால் அது பூஜ்ஜியமாகத்தான் நமக்கு விடை கிடைக்கிறது. ஏற்கனவே எடப்பாடியார் தொடங்கி வைத்த திட்டத்தை தான் இவர்கள் இப்போது சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
திமுக ஆட்சி பொறுப்போட்டு 2001முதல் கடன் சுமை ஒப்பிட்டு பார்த்தால் 2021-22 ஆம் ஆண்டில் கடன் தொகை 5,18,796 கோடி, 2022 2023 ஆண்டில் கடன் தொகை 6,30,000 கோடி, 2023 2024 ஆண்டில் கடன் தொகை 7,28,000 கோடியாகும். குறிப்பாக கடந்த பத்தாண்டு கால அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் வாங்கிய கடன் 3,53,561 கோடி ,திமுக ஆட்சிக்கு வந்து இந்த இரண்டு வருடங்களுக்கு மேல் வாங்கிய கடன் 2,72,000 கோடியாகும்.
அம்மாவின் அரசு விலைவாசி உயர்வை மக்கள் மீது சுமத்தாமல் கொரோனா, ஜிஎஸ்டி வரி இழப்பை தாண்டி வாங்கிய கடன் சதவீதம் ஜிடிபி அளவில் 21.22 சகவீதம் தான். ஆனால் சொத்து வரி உயர்த்தி, மின்சார கட்டணத்தை உயர்த்தி இன்றைக்கு விலைவாசியை உயர்த்தி, மக்களை அனைத்து துன்பங்களிலும் ஈடுபடுத்தி எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் செய்யாமல், சமூக நலத்திட்டங்களை எல்லாம் ரத்து செய்துவிட்டு, எந்தவிதமான கட்டமைப்புகளை உருவாக்காமல் இன்றைக்கு விடியா திமுக அரசின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு வாங்கிய கடன் ஜிடிபி அளவில் 26 சகவீீீீதம் அளவில் வாங்கி உள்ளது.
எடப்பாடியார் ஆட்சியில் பொருளாதார மாநிலங்களாக மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது 15.7 சகவீீத ஜிடிபி பங்களிப்பு கொண்டு மகாராஷ்டிரா முதாவது இடத்திலும், 9.2 சகவீத ஜிடிபி பங்களிப்பை கொண்டு உத்திரபிரதேசம் இரண்டாவது இடத்திலும், 9.1 சகவீத ஜிடிபி பங்களிப்பை கொண்ட தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக 14 இடத்திலிருந்த உத்தரப்பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தில் முன்னேறி உள்ளது.
மிகப்பெரிய அளவிலே மக்களுக்கு தாக்குதலை இந்த அரசு கொடுத்திருக்கிறது . விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை, சொத்து வரிஉயர்வு, மின்சார வரி உயர்வு, விலைவாசி உயர்வு என மும்முனை தாக்குதலால் மக்கள் வேதனையின் உச்சமாக உள்ளார்கள்.
உலக முதலீட்டார்கள் மாநாட்டை நாங்கள் நடத்தப் போகிறோம் என்று விளம்பரத்தை தேடி விளம்பர வெளிச்சத்தால் நடைபெறுகிற ஒரு அரசாங்கமாக இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தின் அடித்தளம் ஆடி கொண்டு இருக்கிறது அதை சீர் செய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய மனநிலையில் இல்லை.
புரட்சித்தலைவி அம்மா உலக முதலீட்டர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் 2019 ஆம் ஆண்டு உலக முதலீட்டார்கள் மாநாட்டை நடத்தி அதன் மூலம் 3 லட்சம் கோடி அளவில் முதலீட்டை ஈர்த்து, அதன் மூலம் 10.5 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை கிடைக்க செய்தார். அதனைத் தொடர்ந்து உலக முதலீட்டர்கள் மாநாடு பிறகு 2019 ஆண்டு 79 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 52,069 கோடி முதலீட்டை ஈர்த்து அதன் மூலம் 1,24,829 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்தார். அதேபோல் வெளிநாடு பயணத்தின் போது 41 புரிந்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அதன் மூலம் 8,835 கோடி முதலீட்டை ஈர்த்து அதன்மூலம் 35,520 வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வரவேற்க யாதும் ஊரே எந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குறிப்பாக கொரோனா காலத்திலும் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மையாக மாநில திகழ்ந்தது அந்த வரலாற்றை எடப்பாடியார் உருவாக்கினார்.
எவராலும் மறைக்க முடியாது இதையெல்லாம் இந்த அரசு இன்றைக்கு முடி மறைக்க நினைத்தால் தோல்வி தான் பெறும். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க எடப்பாடியார் அயராது உழைத்தார்.
இன்றைக்கு தமிழகத்தில் கடன் சுமை அதிகரித்துள்ளது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நிதி பற்றாக்குறை, இப்படி இருக்கும் நிலையில் தனது தந்தையார் பெயரில் மாவட்டந்தோறும் சிலை வைக்கிறார். கடலில் பேனா, நூலங்கள்,மைதானங்கள், ஜல்லிக்கட்டு திடலுக்கு கருணாநிதி பெயர்களை சூடுகிறார்கள் இப்படியே சென்றால் கருணாநிதி நாடு என்று கூட தமிழகத்தை பெயர் மாற்றம் செய்து விடுவார்கள்.
இந்த அரசு விளம்பரப்படுத்தி தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டே செல்கிறார்கள் தவிர, அடிப்படை அடித்தளத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சரியான தோல்வியை திமுக பெறுவார்கள் என கூறினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
06.01.2023 சின்ன கடை தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கழிவு நீர் வாய்க்கால் மூடி உடைந்த நிலையில் கிடக்கிறது. கண்டுகொள்ளுமா கீழக்கரை நகராட்சி????
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மறைவு:விஏஓ அனைவரும் புகழஞ்சலி..
by syed abdulla
written by syed abdulla
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மறைவு:விஏஓ அனைவரும் புகழஞ்சலி..
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளரும் நத்தம் தாலுகாவில் பணியாற்றி வந்தவருமான வெ.முருகன் என்பர் இயற்கை எய்தினார்.
இவரது மறைவிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த முருகன் அவர்கள் மாவட்ட செயலாளராக மிகவும் சிறப்பாக பணியாற்றியதாகவும்,கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தமான எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக அதை சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி சுமூகமாக முடித்து வைப்பார்,அனைத்து அதிகாரிகளையும் அரவணைத்து செல்லக்கூடிய நல்ல ஒரு கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்று திண்டுக்கல் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 5ம் ஆண்டாக நாட்டு பசுமாடு வழங்கும் சமூக ஆர்வலர்க்கு பொதுமக்கள் பாராட்டு
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் திருநாளையொட்டி நடைபெறுகிறது. இதில் சிறந்த மாடுபிடி வீரர்க்கும் சிறந்த காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த காளைக்கு பரிசாக நாட்டு பசு இனங்களை பாதுகாக்கும் நோக்கில் நாட்டுபசுமாடு கன்று குட்டியுடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஆண்டுதோறும் அலங்காநல்லூரைச் சேர்ந்த பொன் குமார் என்பவர் வழங்கி வருகிறார். இந்தாண்டு பரிசினை வழங்க அனுமதி அளித்த பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகளுக்கு நன்றி கூறினார். மேலும் நாட்டு பசு மாட்டினங்களை பாதுகாக்க பல்வேறு சமூக ஆர்வலர்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்தார். மேலும் நாட்டு இன மாடுகளை பாதுகாக்கும் விதமாக செயல்படும் இவரின் இந்த செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே தச்சம்பத்து முதல் சாய்பாபா கோயில் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேரும் சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சிறுமழை பெய்தாலே சாலை ஓரங்களில் சேரும் சகதியும் தேங்கி விடுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணம் இந்த பகுதியில் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய்க்கான பைப் லைன் பதிக்கும் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் அதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாமல் பெயரளவிற்கு மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மூடி விட்டு சென்றதால், சிறு மழை பெய்தவுடன் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் ஒரு புறத்தில் வாகனம் செல்வதே மிகவும் சிரமமான நிலையில் எதிர்திசையில் வரும் வாகனங்கள் சகதிக்குள் சிக்கிக் கொள்ளும் அவலம் நடைபெறுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் செய்திகள் வந்த பிறகும் எந்த ஒரு அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் மெயின் ரோட்டில் உள்ள சாலைகளின் ஓரங்களில் சேரும் சகதியும் தேங்கி அருகில் உள்ள வீடுகளுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். ஒரு வாரத்திற்குள் இந்த சாலைகளை சரி செய்யவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்..
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெகிழி பயன்பாடு இல்லாத பள்ளி கல்லூரி வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..
by mohan
written by mohan
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (SUP) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு (Plastic Carry bags) மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் (https: //tenkasi.nic.in.) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2024. விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் அல்லது நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (CD) இரண்டினை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
by mohan
written by mohan
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காசிதர்மம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் இசக்கி முத்து(29) என்பவரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் சத்திரக்குடி போன்ற ஊர்களில் உள்ள கடைகளை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.விஜயகுமார் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு 25,000 ரூ அபராதம் விதிக்கப்பட்டு அபராதமும் 15 நாட்கள் கடைகள் மூடப்பட்டது. மேலும் இரண்டாவது முறையாக புகையிலை விற்று பிடிபட்டால் 50000 ஆயிரம் அபராதமும் 30 நாட்கள் கடையினை மூடப்படும் என்றும் மூன்றாவது முறையாக பிடிபட்டால் 100000 அபதாரம் 90 நாட்கள் கடையினை மூடப்படும் என்றும் அந்தக் கடையில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் காவல்துறை சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
என்ற வரலாற்று புதினத் தொடர் 1300 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சிகளை,
வரலாற்றை,
கலாச்சாரத்தை
பேசும் தொடர்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!
பகுதி-1
கப்ளிசேட்!
உமையாக்களின் பேரரசு-1
(கி.பி.661-750)
மத்திய தரைக்கடல்
அலைகளின் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அமைதியாக இருந்தது.அன்று வானத்தில் நிலா வளரத் தொடங்கியிருந்தது.
நட்சத்திரங்களின் கண்சிமிட்டலில் வானம் வசீகரமாக மின்னியது.
கப்பல்களின் வெளிச்சங்களால்
அந்தப்பகுதி ஒளிக்கோளமாக காட்சி அளித்தது.
உமைய்யா முஸ்லீம் ஆட்சியாளர்களால்
உலகில் ஏராளமான நன்மைகள் ஏற்படப்போவதை அது முன்னறிவிப்பதாக இருந்தது.
மத்திய தரைக்கடலில்
முஸ்லீம்களின் கடற்படை பிரமாண்டமான கப்பல்களுடன்
அணிவகுத்து
சென்றது.
நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து சென்றன.
பலவகையான கப்பல்கள் முஸ்லீம்களின் கடற்படை வலிமையை பறைசாற்றுகிறது.
கப்பல்படைகளின் மையப்பகுதியில் அந்த பிரமாண்டமான இரண்டடுக்கு கப்பல் விர்ரென நீரை கிழித்துக்கொண்டு மிதந்து சென்றது.
கப்பலின் உச்சியில்
முஸ்லீம் ஆட்சியாளர்களான
உமைய்யாக்களின் கொடி காற்றில் படபடத்து பறந்தது.
கப்பலின் முதல் தளத்தில் முன்வலது பகுதியில் இருந்த
அந்த பெரிய அறையில் இரவுத்தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
முஆவியா (ரலி) அவர்களின் நம்பிக்கைக்குரிய
தளபதி உக்பத் இப்னு நாபீ அவர்கள் இமாமாக தனது படைத்
தலைவர்களுக்கு
தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்.
நூறு கப்பல்களின் தளபதிகளும் உபதளபதிகளும் தளபதியின் கப்பலுக்கு வருகைதந்து இருந்தனர்.
ஆப்பிரிக்க,
ஐரோப்பிய நாடுகளை வெற்றிகொண்டு இறுதியாக அட்லாண்டிக் கடல் வரை சென்று இஸ்லாமியர்களின்
கொடியை ஏற்றவேண்டும் என்று
மிகுந்த திட்டமிடலோடு
பயணிக்கிறது
அந்தப் படை.
அன்று இரவு ஆலோசனைகள் நடைபெறப்போகிறது.
அதில் முக்கிய போர் திட்டங்களை
வியூகங்களை கலந்துபேசி இறுதியில் தளபதி உக்பா அவர்களின் முடிவுப்படி திட்டங்கள்
செயல்படுத்தப்படும்.
இறைச்சியின் மணங்கள் காற்றில் மிதந்து வருகிறது.
இருப்பினும் எளிமையான உணவுகள்.
இறைச்சி மட்டுமே அந்த உணவில் ஆடம்பரம்.
முதல் தளத்தின் வெளிப்பகுதியில்
விரிக்கப்பட்டிருந்த
சாதாரண விரிப்புகளில்
தளபதிகளும் உபதளபதிகளும் அமர்ந்து கொண்டனர்.
தொழுகை முடித்து இறுதியாக வந்த தளபதி உக்பத் இப்னு நாபீ என்ற உக்பா அவர்கள் தளபதிகளுக்கு தங்கள் கைகளாலேயே பரிமாறினார்கள்.
இறுதியாக முழங்காலிட்டு இஸ்லாமிய மரபுப்படி அமர்ந்து உணவை அருந்தி முடித்து இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு,
ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் கூடத்திற்குள் நுழைந்தார்.
ஆலோசனை கூடத்தில் ஜன்னல்கள் வழியாக தூரத்தில் சிறிதாக தெரிந்த வெளிச்சப் புள்ளிகள் சிறிது நேரத்தில் வெளிச்சம்
பெரிதாக..அது ஒரு கப்பல் படை அணிவகுப்பு என்று புரிந்து போனது..
திடீரென நெருப்புபொறிகள்
முஸ்லீம்களின் கப்பல்களை நோக்கி பறந்து வந்தன.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு வலியுறுத்தி தர்ணா போராட்டம்
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்காரத்தெரு பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு வங்கியில் பணியாற்றும் 20-க்கும் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுற வங்கிகளை இணைத்து *தமிழ்நாடு வங்கி* என உருவாக்கப்பட வேண்டும் மாநில அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டது ஆனால் கூட்டுறவு ஊழியர்களுக்கு 10% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள 10% போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கியின் முன்பு மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுற்றுச்சூழல் கல்வி பயிற்சி பட்டறையில் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம், ஜன.6 – மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை, தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி தொடர்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறை ராமநாதபுரத்தில் நேற்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தலைமை வகித்தார்.
இதில் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாசிரியர்கள், மாணவர்களுக்கு
ஆரோக்கிய வாழ்வியல் குறித்து செயல் விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. மஞ்சள் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேவிபட்டினம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முதல்வர் தீனதயாளன், முஹமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் ஏற்பாடு செய்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம் – காரேந்தல் (நியாயவிலைக்கடை) / இராமேஸ்வரம் வட்டம் பாம்பன் – (அரசு உயர்நிலைப் பள்ளி) / திருவாடானை வட்டம் – கருங்காலகுடி (நியாய விலைக்கடை) / பரமக்குடி வட்டம் கங்கைகொண்டான் (நியாயவிலைக்கடை ) முதுகுளத்தூர் வட்டம் அலங்கானூர் (நியாயவிலைக்கடை கட்டிடம்) / கடலாடி வட்டம் ஓரிவயல் (நியாயவிலைக்கடை கட்டிடம்)/ கமுதி வட்டம் கேரிசல்குளம் (நியாயவிலைக்கடை), கீழக்கரை திருப்புல்லாணி வட்டம்- திருப்புல்லாணி (நியாயவிலைக்கடை) / ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் ஆய்ங்குடி (நியாயவிலைக் கடை) ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/ மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நியாயவிலைக்கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்துதீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 09 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எதிர் வரும் 13.01.2024 (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.