திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.வி.அம்பேத்குமார் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் “ சட்டமன்றத்தில் பேரவை தலைவரால் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழுக்கள் கூட்டம் குறித்த காலக்கெடுக்குள் நடைபெறுவதும் இல்லை, ஆய்வு மேற்கொள்வதும் இல்லை” என்று கூறியிருந்தனர்.
பின்னர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, ‘ஜல்சக்தி அபியான்’ திட்டத்தின் மூலமாகவும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள பணிகளின் விவரங்களை கேட்டறிந்து உள்ளோம். அதேபோன்று சட்டமன்றத்தில் பேரவை தலைவரால் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுக்கள் இதுவரை இந்த மாவட்டத்தில் எந்தெந்த பணிகளை ஆய்வு செய்துள்ளார்கள் என்ற விவரத்தையும் கலெக்டரிடம் கடிதம் மூலமாக விவரங்கள் கேட்டுள்ளோம். இதுவரை மக்கள் நலப்பணிகளை ஆய்வு மேற்கொள்ள எந்த குழுவும் வரவில்லை என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் எங்களிடம் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் என்னென்ன செயல்பட்டு வருகிறது என்ற விவரத்தை தெரிந்து கொண்டதோடு, பொதுமக்கள் எங்களிடம் கொடுக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம்.
நமது மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொண்டு செயல்படும் குழுக்கள் எவை? அந்த குழுக்களில் யார், யார் இடம் பெற்றுள்ளார்கள் என்ற விவரத்தையும் கலெக்டரிடம் கேட்டுள்ளோம். விரைவாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு கூட்டம், ஆய்வு பணிகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழக அரசு குடிமராமத்து என்ற பெயரில் பொதுமக்கள் பங்கேற்புடன் பணி செய்வதாக சொல்லி அரசின் பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை, பொதுமக்களை கொண்டு செய்யாமல் அ.தி.மு.க.காரர்களும், அ.தி.மு.க.வை சார்ந்த ஒப்பந்ததாரர்களும் பணிகள் செய்வதால் பல இடங்களில் உள்ளூர் மக்கள், மக்கள் பிரதிநிதிகளான எங்களிடம் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் முறையாக அப்பணிகள் பொதுமக்களை கொண்டு சிறப்பாக நடைபெற வேண்டும் என்று கலெக்டரிடம் கேட்டுக்கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்
உசிலம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
உசிலம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், அறிவுரை மற்றும் ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் பானுகோபன் தலைமையில் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடுவதற்கும் , அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் விழா கமிட்டியினர், பொதுமக்கள், இளைஞர்களிடம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் விதம், சிலைகள் வைக்கும் இடம், வெடி வெடிப்பது, ஒலி பெருக்கி உபயோகிப்பது, சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வது போன்ற பல்வேறு கட்டுபாடு, விதிமுறைகளை உசிலம்பட்டி கோட்டாட்சியர் பானு கோபன் எடுத்து கூறினார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உசிலம்பட்டி காவல் துணை கண்கானிப்பாளர் ராஜா, வட்டாட்சியர் செந்தாமரை, எஸ்ஐ சிவபாலன், மனிமொழி, விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறையினர், அனைத்து கிராம விஏஓக்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை ஒன்றியம், சு. பாப்பம்பாடி கிராமத்தில் 100 நாள் வேலை கேட்டு 200க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சு.பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த கிராமத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, இதுநாள் வரை 100 நாள் வேலை வழங்கவில்லை என இப்பகுதி கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். புதன் அன்று, மக்கள் ஒன்றுதிரண்டு அனைவருக்கும், வேலை வழங்கிட கேட்டு, அகில இந்திய வி. தொ. ச வட்டார செயலாளர் ஜெயராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகலநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் பாரி,தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.கே வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் கே.வெங்கடேசன் நிர்வாகி சிவா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . தொடர்ந்து கோரிக்கை மனுவை வட்டர வளர்ச்சி அலுவலரிடம் அளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் பேரூராட்சி சார்பாக கடைகளில் தடை செய்யப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் அபராத தொகையாக 5300 ரூபாய் வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்டது, திடீர் ஆய்வால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனா்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பொரசப்பட்டு கிராமத்தில் அனுமதியின்றி இரவு நேரங்களில் 20க்கு மேற்பட்ட டிராக்டர்களில் செங்கல் சூலைகளுக்கு ஏரியில் இருந்து செம்மண் கொள்ளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனா். தொடர் கொள்ளை சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு தொிவித்தனா்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக முதல் அமைச்சரின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகின்றது.இந்த முகாம் கீழக்கரை குரூப் கிராம நிர்வாக அலுவலத்தில் கீழக்கரை மண்டல துணை வட்டாச்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.இந்த முகாமில் உத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் ஹேமா,கீழக்கரை குரூப் கிராம நிர்வாக அலுவலர் ஆதிலெட்சுமி,கீழக்கரை நகராட்சி தலைமை எழுத்தர் தமிழ்செல்வன்,கீழக்கரை குரூப் தலையாரி சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.இந்த முகாமில் மக்கள் டீம் அப்துல் காதர் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்தார்.இந்த முகாம் இன்று29.08.19 பகல் இரண்டு மணி வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
இராமநாதபுரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும்
அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ராமநாதபுரம் ஜாஸ் கேட்டரிங் கல்லூரி முன் துவங்கிய பேரணியை ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா தொடங்கி வைத்தார்.போதை பொருள் நுண்ணறிவு குற்ற புலனாய்வு ஆய்வாளர் முத்துக்கண்ணு, அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் அ.முகமது சலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மன நல மருத்துவர் பெரியார் லெனின், அறக்கட்டளை சட்ட ஆலோசகர் எஸ்.ஜே.ஷேக் இபுராஹிம் ஆகியோர் பேசினர். ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அரண்மனை வாசல் பகுதியில் நிறைவடைந்தது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்குகள், சமுதாய சீரழிவு, நன்னடத்தை பாதிப்பு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. போதை பொருள் நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் தங்க முனியசாமி, தலைமை காவலர்கள் செல்வம், முத்துராமலிங்கம், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் போதைப்பொருட்களை ஒழிக்கும் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனை செய்தபோது TVS ஜூபிடர் வாகனத்தில் மூன்று நபர்கள் 23.5 கி. கி கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பல்வேறு துறை அரசு வாகன ஓட்டுநர்களுக்கு முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை சார்பாக ராஜ்குமார் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அம்மா ஓட்டுநர் புத்துணர்வு பயிற்சி பள்ளியில் பல்வேறு துறை அரசு வாகன ஓட்டுநர்களுக்கு முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது ..முதலுதவி அவசியம் குறித்தும் வாகன ஒட்டுநர்கள் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றியும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியன் சோஷியல் ஃபோரம் உதவியால் பாம்பனை சேர்ந்த செய்யது உமர்கான் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தைக்கா தெருவைச் சேர்ந்த செய்யது உமர்கான்( 64) சவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 15.07.2019 அன்று மரணமடைந்தார்.தகவல் அறிந்த அவரது குடும்பத்தார் துபாயில் இருந்து விடுமுறைக்கு ஊர் வந்த சோஷியல் ஃபோரம் உறுப்பினர் சதாமிடம் தகவல் கொடுக்கவும் அவர் உடனடியாக சவூதி அரேபியா அல்கோபார் ரிஸ்வான் மூலம் ஜமீலுக்கு தெரிவித்து ஜமீல்இந்தியன் சோஷியல் ஃபோரம் அல்ஹஸ்ஸா கிளை தலைவர் ஜின்னாவை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை அங்கேயே நல்லடக்கம் செய்யுமாறு இறந்தவரின் குடும்பத்தார் கேட்டுக் கொள்வதாக கூறினார்.
இறந்தவரின் மனைவி லத்தீபா பீவி மற்றும் ரியாதில் இருக்கும் அவரது மூத்த மகன் சகுபர் சாதிக் மற்றும் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய தூதரகத்தின் வழி காட்டுதலோடு இறந்தவரின் உடலை பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் சட்ட ரீதியாக மேற்கொண்டார் ஜின்னா.சவூதி அரசின் அனைத்து வகையான சட்ட பணிகளும் நிறைவு பெற்று இன்று மாலை இறந்தவரின் உடலை இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர் அதிகாரிகள்.
இன்று(28.08.2019) மாலை 7 மணிக்கு அல்ஹஸ்ஸாவில் உள்ள சல்ஹியா பள்ளி மையவாடியில் செய்யது உமர்கான் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது; இந்நிகழ்வில் இறந்தவரின் மூத்த மகன் சகுபர் சாதிக் மற்றும் அல்ஹஸ்ஸா கிளை இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னாருக்கு துஆ செய்தனர்.கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து முயற்சித்து இறந்தவரின் உடலை பெற்று நல்லபடியா அடக்கம் செய்துள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் கிளைத்தலைவர் ஜின்னா மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் இறந்தவரின் மூத்த மகன் சகுபர் சாதிக் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபோரம் மத்திய,மாநில நிர்வாகிகள் பாராட்டும்,நன்றியும் தெரிவித்தனர்.
தகவல்: கீழை ஜஹாங்கீர் அரூஸி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமேஸ்வரம் வட்டார அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவியருக்கான கபடி, கோகோ, வாலிபnல் வலை பந்து போட்டிகள் பனைக்குளம்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி துவக்கி வைத்தரர். தேவிப்பட்டினம் சnர்பு ஆய்வnளர் சுல்தான் இபுராஹீம், தலைமை ஆசிரியை விஜி முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர்கள் கண்ணதாசன், சசிகுமார், உடற்கல்வி ஆசி ரியர்கள் ஜெரோம் வில்லியம் ஜெயகுமார், ரமேஷ். இருதயராஜ், கிறிஸ்டோபர், மருதசாமி, நெடுஞ்செழியன், சந்திரசேகர், முத்து முருகன்,முரளி ஈஸ்வரன்,அருள் ஜான்,உடற்கல்வி ஆசிரியைகள்கோபிலெட்சுமி, லூர்துமேரி சசிரேகா கவிதா மகேஸ்வரி ,முத்தமிழ்செல்வி ஆகியோர் நடுவாகளாக பணியாற்றினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் மேல்பாலானந்தல் கிராமத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.மொத்தம் 211 கோரிக்கை மனுக்களை மேல்பாலானந்தல் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களிடம் கொடுத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இதுவரை நடைபெற்றுள்ள முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 419 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திட்டம் இன்று துவங்கி வருகிற சனிக்கிழமை வரை நடைபெறும்.நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் , கிராமப்பகுதியில் உள்ள மக்களிடம் முன்னறிவிப்பு செய்து விட்டு மனுக்களை பெறுவதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் அலுவலர்களும் செயல்பட்டு வருகின்றனர்.பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி மனு பெற அவரு மனிதர்களிடம் கொடுத்து தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு, டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிடை கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அரசு டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் டாக்டர் நந்தினி தலைமையில் அனைத்து டாக்டர்களும் ஒட்டுமொத்தமாக அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களுக்கு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, நேற்று டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் அவர்கள் சிகிச்சை பெறுவது பாதிக்கப்பட்டது. வெகுநேரமாக காத்திருந்த நோயாளிகள் டாக்டர்களை சந்தித்து சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டபோது அவர்கள் மறுத்து விட்டனர்.
உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளில் டாக்டர்கள் ஏற்கனவே வழங்கிய ஆலோசனைப்படி செவிலியர்கள் ஊசி போட்டு மருந்துகள் வழங்கி சிகிச்சை அளித்தனர். அவசர பிரிவில் வந்த நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை வழங்கினர். அதுவும் வழங்கக்கூடாது என டாக்டர்கள் எச்சரித்ததாகவும் மருத்துவமனை அலுவலகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்ளும் நோயாளிகள் மருந்து, மாத்திரைகள் வாங்க மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே மாத்திரை, மருந்துகள் வழங்கப்படும். டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் அவர்களும் மருந்து, மாத்திரைகள் வாங்க முடியாமல் தவித்தனர்.
செய்யாறில் திருவண்ணாமலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் புறநோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச்சென்றனர். எனினும் அவசர சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் சிகிச்சை அளித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி அருகே உள்ள இருவேலி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வட்டாட்சியர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைகளின் சார்பில் 54 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது .இதில் வட்டாட்சியர் செல்வராஜ் சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மண்டல துணை வட்டாட்சியர் இந்திரஜித் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நாகை மாவட்டம் வேதாராண்யத்தில் அம்பேத்கார் சிலை உடைப்பை கண்டித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலையத்திலும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வலையாம்பட்டிலும் விசிகவினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
கே .எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், உத்தரவின் பேரில் உசிலம்பட்டி தாலுகா கா.நி சரகத்தில் 4.5 kgs. எழுமலை கா.நி சரகத்தில் 2.200 Kgs. சேடப்பட்டி கா.நி சரகத்தில் 400 gms.மொத்தம் 7.100 கி.கி கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த 8 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவில்பட்டி நகராட்சியில் சொத்து வரி உயர்வு பிரச்சனை பேச்சுவார்த்தையில் உடன்பாடு – இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் வாபஸ்
கோவில்பட்டி நகராட்சியில் சொத்துவரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை மறு சீராய்வு செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், நகர செயலாளர் சரோஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வீட்டு வரி உயர்வு சம்பந்தமாக அரசு ஆணைப்படி வரி உயர்வு செய்யப்பட்டது தொடர்பாக மாலைக்குள் நகராட்சி அலுவலகம் முன்பு விளம்பர பலகை வைக்கப்படும். இதுதொடர்பாக 3 நாட்களுக்கு ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்படும். திடக்கழிவு மேலாண்மை வழிகாட்டுதலின்படியே கட்டணம் வசூல் செய்வது, இது சம்பந்தமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் பின் வரும் காலங்களில் ஈடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய குடிநீர் திட்டம் நிலுவையில் உள்ள 2 நீர்த்தேக்க தொட்டிகளின் கட்டுமான பணிகள் செப்.15-ம் தேதிக்குள் முடித்து பயன்பாட்டுக்கு விடப்படும். டிச.31-ம் தேதிக்குள் வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் 100 சதவீதம் வழங்கப்படும். குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட தெருக்களில் புதிதாக சாலை அமைக்கும் பணிக்கு நிதி அனுமதி பெற்று உடனுக்குடன் செய்யப்படும்.தனித்தனி குடிநீர் குழாய் இணைப்புகள் அரசால் அனுமதிக்கப்பட்ட முறையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இந்த பணியை குடிநீர் வடிகால் வாரியம் செய்யும்பட்சத்தில், அதனை நகராட்சி பொறியியல் பிரிவு மூலம் கண்காணிக்க வேண்டும். குடிநீர் இணைப்பு பணிகளை கண்காணிக்க சர்வ கட்சி பிரதிநிதிகளை கொண்ட குழு அமைப்பது தொடர்பாக அரசிடம் அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன” – கனிமொழி
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன” என தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கூறினார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “கடந்த 45 வருடங்களாக இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சியை பார்க்கமுடிகிறது. வேலை இல்லா திண்டாட்டம் மக்களை பாதித்துள்ளது. இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளது
கடந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த போதும் அப்போதைய மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுத்து, இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.தற்போது மத்திய அரசு எந்தவித வளர்ச்சிதிட்டங்களையும் மேற்கொள்ளாமல்,திட்டங்களில் தொலைநோக்கு பார்வையில்லாமல் ஆட்சி செய்து வருகிறது.மத்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் , இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.
எனவே இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்துவது மிகப் பெரிய பிரச்சனையை உருவாக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும், இந்திய அளவில் உள்ள பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துவரும் திமுக தலைவர் ஸ்டாலின் பணிகளை பார்த்து பெருமைப்படுகிறேன் என்றார்.மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் பல பொருளாதார மாநாடுகளை நடத்தி ஒன்றும் செய்ய முடியாத தமிழக முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.
பேட்டியின் போது அவருடன் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் திமுக வடக்கு மாவட்ட பொருப்பாளர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் N.P. ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மாணவரணி துணை செலாளர் உமரி சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் முதலமைச்சரின் குறை தீர்க்கும் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். முகாமில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம் மனுக்களைப் பெற்றார். மற்றும் பாப்பரப்பட்டி பேரூராட்சி செயலாளர் நந்தகுமார். பேரூராட்சித் தலைவர் பாபு. நகர செயலாளர் வேலுமணி. ஆகியோர் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கன்னியாகுமரி மாவட்டம் , விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் (42) இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரெஜி(33) என்பவருக்கும் பெண்களை கேலி செய்வது சம்பந்தமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. 5.07.2014 அன்று இவர்களுக்குகிடையே ஏற்பட்ட தகராறில் ரெஜி, அவரது மனைவி அஜிதா மற்றும் ரெஜியின் சகோதரர் ஷாஜி (34) ஆகியோர் சேர்ந்து ராஜனை தாக்கி கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 5000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
செய்தி வி காளமேகம்
You must be logged in to post a comment.