திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க , இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் அறிவுறுத்தல் படி பரமக்குடி நகர் 23 வது வார்டு பொது மக்களுக்கு பரமக்குடி நகர் செயலாளர் சேது.கருணாநிதி கபசுர குடிநீர்,வழங்கினார்.
Category:
மாவட்ட செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி தூய்மை காலலர்களுக்கு பாஜக., சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜெயபிரகாஷ் நட்டா உத்தரவு படி,மாநில தலைவர் எல்.முருகன் அறிவுறுத்தல் படி, இராமநாதபுரம் மாவட்ட தலைவர் கே.முரளிதரன் வழிகாட்டுதல் படி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி தூய்மை காலலர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.மண்டபம் கிழக்கு ஒன்றிய பாஜக., தலைவர் எம்.வி.கண்ணன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பி.பாலசுப்ரமணியன், மூத்த உறுப்பினர்கள் என்.ஞானகுரு ( மக்கள் நல்வாழ்வு மன்ற செயலாளர்), பி.முத்துக்குமார் (மண்டபம் கிரிக்கெட் கிளப் அணி தலைவர்), நகர் நிர்வாகிகள் ஏ.ரவி, எஸ்.ஞானசங்கர், எம்.ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு வழங்கினர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பட்டினியையும், சுகாதாரப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டிருந்த 1,75,000 பிராய்லர் கோழிகள் மதுரை மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளன.
by mohan
written by mohan
மதுரை மாவட்டத்தில் உள்ள 119 கோழி பண்ணைகளில், பணியாற்றி வந்த 17 களப்பணியாளர்கள் உடன் பணிக்கு திரும்பிட, மாவட்ட நிர்வாகம் மூலம் துரித, உரிய மற்றும் உரித்த நேர நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் பட்டினியையும், சுகாதாரப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டிருந்த, 175,000 பிராய்லர் கோழிகள் காப்பாற்றப்பட்டன.
வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி அருகே ஊரடங்கால் உணவின்றி தவித்த குரங்குகளுக்கு தான் சோ்த்து வைத்த சிறுசேமிப்பில் உணவு வாங்கி அளித்த 4வயது சிறுமி
by mohan
written by mohan
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 144தடை உத்தரவு பிறப்பிக்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.மனிதா்களுக்கு உணவளிக்க அம்மா உணவகம் அரசு மற்றும் தன்னாா்வலா்கள் இருந்த போதும் விலங்குகளின் பாடு திண்டாட்டம்தான்.குறிப்பாக மலை அடிவாரத்தில் மனிதா்களை மட்டும் சாா்ந்து வாழும் குரங்குகள் கஷ்டப்பட்டு வருகின்றன.இதே போல் தான் மதுரை தேனி தேசியநெடுஞ்சாலையில் செட்டியபட்டி அருகே கணவாய்கேட் மலையடிவாரத்தில் சாஸ்தா கோவில் அமைந்துள்ள பகுதியில் 100க்கணக்கான குரங்குகள் உள்ளன.இக் கோவிலுக்கு வருவோா் அளிக்கும் உணவைச் சாப்பிட்டு இக்குரங்குகள் வாழ்ந்து வந்தன.இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் சாஸ்தா கோவில் புட்டப்பட கடந்த 20 நாட்களாக உணவின்றி தவித்து வந்தன குரங்குகள்.
இதனைப் பற்றி தன் தந்தை மூலம் அறிந்த செட்டியபட்டியைச் சோ்ந்த ஷஷ்டிகாஸ்ரீ என்ற ஒச்சாயிஎன்ற எல்.கே.ஜி படிக்கும் 4 வயது சிறுமி தனது சிறுசேமிப்பு பணத்தைக்கொண்டு உணவு கிடைக்காமல் போராடி வரும் விலங்கினங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்ற கூறியதன் அடிப்படையில் சிறுமி சேமித்து வைத்த பணம் ரூ: 1,800- ஐ-கொண்டு சாஷ்தா கோவிலில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கும் கடந்த 2 நாட்களாக உணவு வழங்கினாா்.இந்த உணவை தன் அப்பாவுடன் சென்று தானே குரங்குகளுக்கு வழங்கி விட்டு வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சிறுமியின் செயலைக் கண்டு பலரும் பாராட்டிவருகின்றனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தாரமங்கலத்தில் கொரானா வைரஸ் போன்ற ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்..
by Askar
written by Askar
தாரமங்கலத்தில் கொரானா வைரஸ் போன்ற ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்..
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் கொரோனா ஓவியத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமூக சேவையில் களமிறங்கிய ஓவியர்களை காவல்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை , வருவாய்த்துறையை சேர்ந்த வர்கள் பாராட்டினர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு 144 தடை உத்தரவு அறிவித்துள்ள நிலையில் இதன் முக்கிய அம்சமாக மக்கள் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியேறுவதை தடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில் சேலம் மாவட்ட ஓவியர்கள் தங்களின் பங்களிப்பாக மக்கள் அதிகம் கூடும் சாலைகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் மற்றும் வாசகங்களை எழுதி வருகின்றனர். அதன்படி தாரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் கொரோனா வைரஸ் ஓவியம் வரைந்து அதில் விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு என்ற விழிப்புணர்வு வாசனங்களை எழுதியுள்ளார். இதற்கான ஏற்பாட்டினை தாரமங்கலம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் செய்திருந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்கள் நல பாதுகாப்புக்கழகம்,கீழை நியூஸ், சத்திய பாதை மாத இதழ் மற்றும் சமூக அமைப்புக்கள் சார்பாக தொடரும் மனித நேய பணி…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தற்போது கொரோன பாதிப்பால் உலகெங்கும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.தற்போது நிலவும் ஊரடங்கு உத்தரவு மற்றும் மக்கள் வெளியில் சென்று பொருளூட்டும் அசாத்திய நிலையில் எண்ணற்ற ஏழை மக்கள் கஷ்டம் அடைந்து வருகின்றார்கள்.இந்த நிலையில் அரசு, சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.
இந்த நிலையில் கீழக்கரையில் வறுமையில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல சமூக அமைப்பினர் உணவு பொருள்களை மனமுவந்து வழங்கி வருகின்றார்கள். இந்த வரிசையில் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், கீழை நியூஸ், சத்திய பாதை மாத இதழ் நிர்வாகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம், இஸ்லாமிய கல்விச் சங்கம், மஜ்மாவுல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக வறுமையிலும், அன்றாட பிழைப்பின்றி வாழும் ஏழைகளை கண்டறிந்து உதவி வழங்க வேண்டும் என்ற திட்ட வடிவினை உருவாக்கியதோடு,இந்த தகவலை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
இந்த அடிப்படையில் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், கீழை நியூஸ், சத்திய பாதை மாத இதழ் நிர்வாகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம், இஸ்லாமிய கல்விச் சங்கம், மஜ்மாவுல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக இது வரை ஐநூறுக்கும் அதிகமான ஏழை மக்களை கண்டறிந்து அரிசி, சமையல் பொருள்கள் மற்றும் உதவி தொகை வழங்கி இருக்கின்றார்கள்.
இது சம்பந்தமாக கீழை நியூஸ்,சத்திய பாதை மாத இதழ் சட்ட ஆலோசகர் சாலிஹ் ஹுசைன் கூறுகையில், “தற்போது நிலவும் இந்த அசாதாரண சூழ்நிலையில் ஏழை மக்களின் நலன் கருதி சமூக அமைப்புக்கள்,தொண்டு நிறுவனங்கள், தன்னார்வவர்கள், மற்றும் வசதி படைத்த நல்ல உள்ளங்கள் உதவி செய்ய முன்வரவேண்டும்“ என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மகுடஞ்சாவடியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் , காவலர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டது..
by Askar
written by Askar
மகுடஞ்சாவடியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் , காவலர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டது..
கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அதன் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பணியாளர்களான மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் , காவலர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.இதில் சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மகுடஞ்சாவடி, நடுவனேரி , கனககிரி உள்ளிட்ட ஊராட்சிமன்ற தூய்மைப் பணியாளர்கள், மகுடஞ்சாவடி காவல்நிலைய போலீசாருக்கும் சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் முகக்கவசங்கள், கையுறைகள், சேனிடைசர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி. எம். செல்வகணபதி கலந்துகொண்டு உபகரணங்களை நேரில் சென்று வழங்கினார். இதில், முன்னாள் எம்எல்ஏ காவேரி, பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர்கள் கமலக்கண்ணன் , மகேந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் மாணிக்கம், நாகேந்திரன் காக்காபாளையம் சரவணன், சுரேஷ்குமார், திருநாவுக்கரசு, வேல்முருகன் ராஜ்குமார், தப்பக்குட்டை சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட R, N. பாளையத்தை சேர்ந்த 37 வயது மதிக்கதக்க பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனாவார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் தொகுதியில் ஏழைகள் 1,000 பேருக்கு எம் எல் ஏ நிவாரண பொருட்கள் வழங்கினார்.
by Askar
written by Askar
செங்கம் தொகுதியில் ஏழைகள் 1,000 பேருக்கு எம் எல் ஏ நிவாரண பொருட்கள் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியில் 144 ஊரடங்குயோட்டி ஆதரவற்ற முதியோா், ஏழைகள், மூட்டை தூக்கும் தொழிலாளிகள் உள்பட 1,000 பேருக்கு ரூ.5 லட்சத்திலான சமையல் பொருள்களை எம்.எல்.ஏ. மு.பெ.கிரி வழங்கினாா்.
மேலும், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மருத்துவம், அரசு சாா்ந்த உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தன்னை நேரடியாகத் தொடா்பு கொள்ளலாம் என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் பிரபாகரன், செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் அன்பழகன், வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் முருகன், மாவட்டக் கவுன்சிலா் செந்தில்குமாா், நகரச் செயலா் சாதிக்பாஷா, திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் செந்தில், முன்னாள் தலைவா் பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேக்கரி கடைகளில் ரொட்டி மட்டுமே விற்க அனுமதி. இனிப்பு, காரம் விற்க தடை – எஸ்.பி. மயில்வாகனன்
by mohan
written by mohan
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 12-ம் தேதி முதல் தனி மனித இடைவெளியுடன் பேக்கரி கடைகள் இயங்க அனுமதி. பேக்கரி கடைகளில் பிரெட் மட்டுமே அனுமதி. இனிப்பு, கார வகைககள விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை என்று மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் தெரிவித்து உள்ளார்
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அன்றாட வாழ்வாதரத்திற்காக பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். இதை கருத்தில் கொண்டு பல்வேறு சமூக நல அமைப்புகள் நிவாரண பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கீழக்கரை வடக்குத் தெரி சமூக நல அமைப்பு (NASA) உறுப்பினர்கள் கீழக்கரை மற்றும் அதன் சுற்றிவட்டார மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் 300கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படும் வகையில் உணவு பொருட்கள் மற்றும் அத்யாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராணிப்பேட்டை மாவட்டம் ஆர்க்காடு அடுத்த இந்திரநகர் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆர்க்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி வார்டு உறுப்பினர்களுக்கு முன் உதாரணமாக திகழும் வார்டு உறுப்பினர்…..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கரோனா தாக்கத்தால் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து துப்புரவு பணியாளர்களும் கரோனா பரவாமல் இருக்கா கிருமிநாசினி அடிக்கும் வேலையில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற கரனத்தினால் சில ஊர்களில் குப்பைகள் ஆங்காங்கே காற்றில் பறந்து வந்து கிடைக்கின்றன.
இதை அறிந்த இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட 5வது வார்டு சிவகாமிபுரத்தில் வார்டு உறுப்பினர் பா.பாக்கியராஜ்
ஊர் இளைஞர்களை சேர்ந்து அரசின் சமூக இடைவெளியை கடைப்பிடித்து. அப்பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றி அங்கு மரக்கன்றுகள் நட்டு வருகினலறனர.
இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது “ஊர் என்பது நம் வீடு போன்று அதை நாம் தினமும் சுத்தம் செய்யவேண்டும் சுகாதாரத்தை நாம் என்றும் பேணிக்காக்க வேண்டும்“ என்று கூறினார்.
கீழை நியூஸ்
SKV சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உதவி செய்வதில் என்றும் முன்னுதாரணமாகத் திகழும் மாசா (MASA).. அரச மருத்துவமனைக்கு சலவை இயந்திரம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு தலைமை மருத்துவமனையில் சலவை பணியிடம் கிடையாது. இதனால் நோயாளிகளின் படுக்கை துணிகள் போர்வைகள் ஆகியவை வெளியில் கொடுத்து துவைத்து சுத்தம் செய்யப்பட்டு வாங்கப்பட்டு வந்தது.
தற்போது கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக144 தடை உத்தரவினால் நோயாளிகளின் படுக்கை போர்வை போன்றவற்றை வெளியில் துவைக்க கொடுக்க இயலவில்லை இதனை தெரிந்துகொண்ட கீழக்கரை MASA மஹ்தூமியா சமூக நல அமைப்பு இன்று காலை துணி துவைக்கும் இயந்திரம் (வாஷிங் மெஷினை) கீழக்கரை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கியது. இந்நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், சிவலிங்கம், MASA மஹ்தூமியா சமுக நல அமைப்பு தலைவர் அகமது முகைதீன் மற்றும் நிர்வாகிகள் ஹாஜா,சிபாய்,பாசித்,சாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸ்..SKV சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி சாலையோர பஸ் நிலையம் அருகே சுகாதாரமின்றி1000 ரூபாய்க்கு விற்கப்படும் ஆட்டு இறைச்சி! தொற்றுநோய் பரவும் அபாயம்; மற்றும் கூடுதல் விலை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
by Askar
written by Askar
வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி சாலையோர பஸ் நிலையம் அருகே சுகாதாரமின்றி1000 ரூபாய்க்கு விற்கப்படும் ஆட்டு இறைச்சி! தொற்றுநோய் பரவும் அபாயம்; மற்றும் கூடுதல் விலை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டியில் தொற்றுநோய் பரவும் அபாயம் எந்தவிதமான அடிப்படை சுகாதாரமும் சமூக இடைவெளியின்றியும் முகத்தில் மாஸ்க் அணியாமலும் நெடுஞ்சாலை பஸ்நிலைய மரத்தடியில் ஆட்டு இறைச்சி கடை அமைப்பு. பொதுமக்கள் அதிகம் கூடும் வண்ணம் கூட்டமாக தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏதுவாக இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மக்கள் அன்றாட உணவிற்கே சிரமப்படும் நிலையில் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தரமில்லாத ஆட்டிறைச்சியை சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது…
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் சாலையோர வெட்டவெளியில் எந்தவிதமான சுகாதாரமும் இன்றி தொற்றுநோய் பரவும் விதமாக இச்சந்தர்பத்தை பயன்படுத்தி கூடுதல் விலையும் சுகாதாரமும் இன்றி இறைச்சி விற்பனை செய்வோர் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலவசமாக பணம் தேவையில்லை! வங்கிகள் மூலம் நபர் ஒருவருக்கு 50,000 ரூபாய் கடன் வழங்க வேண்டும்:- இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாநில அரசுக்கு கோரிக்கை..
by Askar
written by Askar
இலவசமாக பணம் தேவையில்லை! வங்கிகள் மூலம் நபர் ஒருவருக்கு 50,000 ரூபாய் கடன் வழங்க வேண்டும்:- இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாநில அரசுக்கு கோரிக்கை..
பிரதமர் மோடி அவர்களின் உத்தரவை ஏற்று 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை தமிழகத்தில் நடைமுறை படுத்தப்பட்டது இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்ததே.
இந்த ஊரடங்கு உத்தரவால் ஏழைகள் மட்டும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் அரசோ அல்லது சில தனிநபர்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வரும் உணவு மற்றும் ரேஷன் பொருட்களை ஏழை மக்கள் வாங்கி கொண்டு வருகின்றனர் அதே நேரத்தில் நடுத்தர குடும்பத்தினர் இது போன்ற உதவிகளை வரிசையில் நின்று பெற முடியாத சூழ்நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஆகையால் தமிழக அரசு இலவசமாக பணமோ அல்லது ரேஷன் பொருட்களோ கொடுப்பதை விட்டு விட்டு வங்கியின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 50,000 வட்டி இல்லாத கடனாக கொடுக்க வேண்டும் இந்த பணத்தை பெற ரேஷன் கார்டு , ஓட்டுநர் உரிமம் , ஆதார் அட்டை , பான் கார்டு , ஓட்டர் ஐடி போன்ற எதாவது ஒரு அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு கடன் கொடுக்க வங்கிகளுக்கு தமிழக அரசு உத்தரவு போட வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம்.
அன்புடன்
தடா ஜெ அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
100 எண்ணை அழைத்த பார்வையற்ற இளைஞர்.. வீட்டிற்கே பொருளை சேர்த்த காவல்துறை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை மாவட்டம் மேலவளவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேக்கிபட்டி கிராமம் உடப்பன்பட்டியை சேர்ந்த கண் பார்வையற்ற இளைஞர் சத்தியராஜ் என்பவர் அவசர எண்.100ஐ அழைத்து, வயதான தாய் தந்தையுடன் உணவு சமைக்க அத்தியாவசிய பொருட்கள் ஏதுமின்றி மிகவும் சிரமபடுவதாக கூறினார்.
மதுரை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனே, மேலவளவு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி சத்தியராஜ் வீட்டிற்கு நேராக சென்று, அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்தனர்.
ஆபத்துக்கு மட்டும் உதவுவது காவல்துறை அல்ல பசியில் வாடும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவுமென எடுத்துக்காட்டாக காவல்துறை செய்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அவசர ஊர்தியை அனுப்ப மறுத்ததால் 3 வயது குழந்தை உயிரிழந்த பரிதாபம்-சாலையில் குழந்தையை தாயே தூக்கிச் சென்ற அவலம்..
by Askar
written by Askar
அவசர ஊர்தியை அனுப்ப மறுத்ததால் 3 வயது குழந்தை உயிரிழந்த பரிதாபம்-சாலையில் குழந்தையை தாயே தூக்கிச் சென்ற அவலம்..
பீகாரில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உயிரிழந்த 3 வயது குழந்தையின் உடலை தாயே சுமந்த சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சரியான நேரத்தில் வாகனம் கிடைக்காததாலும், ஆம்புலன்ஸ் கிடைக்காததாலும் உயிரிழந்த 3 வயது குழந்தையின் உடலை தாயே கையில் சுமந்த சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் மத்திய பகுதியான ஜெகனாபாத்தைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் தர அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மற்ற வாகனங்களையும் தேடியுள்ளனர். ஊரடங்கால் எந்த வாகனமும் கிடைக்காத நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை தாயே தூக்கிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது செல்லும் வழியிலேயே குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. எப்படியாவது குழந்தையைக் காப்பாற்றவேண்டும் என தாய் தனது மார்போடு அணைத்தபடி கண்ணீருடன் அழுதுகொண்டே குழந்தையை சாலையில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், குழந்தையை கையில் ஏந்தியபடி செல்லும் அந்தத் தாய், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததே தனது குழந்தையின் இறப்புக்கு காரணம் என்று கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.
இந்த சம்பவத்தை அடுத்து இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெகனாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட், இது குறித்த உண்மை நிலை எனக்கு தெரியவில்லை. உரிய விசாரணையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 9,338 பேருக்கு உதவித்தொகை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
by mohan
written by mohan
இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பிற மாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் இன்று (11.04.2020) அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கினார். அவர் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4,777 பேர் திரும்பியுள்ளனர். இவர்களில்1,190 பேர் அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 3,64,874 குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித் தொகையாக ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. ஏப். 2 தொடங்கிய பணிகள் 98 சதவீதம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மாவட்டத்தில் பதிவு பெற்ற அமைப்பு சாரா கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் நலனுக்காக 9,338 பேருக்கு உதவித் தொகையாக தலா ரூ.1,000 மற்றும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. அமைப்புசாரா தொழில் ஓய்வூதியர்கள் 403 பேருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள 15 அமைப்புசாரா தொழிலாளர் வாரியங்களில் பதிவுபெற்றுள்ள 18,634 தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படவுள்ளது.விதிமீறல் தொடர்பாக இதுவரை 1,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,729 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்தகைய விதிமீறல்களை முற்றிலுமாக தவிர்த்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பி.சங்கர், இராமநாதபுரம் வட்டாட்சியர் வா.முருகவேல் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பாம்பன் உதவும் நண்பர்கள் குழு சார்பாக 30 கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியயோருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.
You must be logged in to post a comment.