ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியிடம் தொலைபேசியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி உதவி திரட்டுவதாக ஓய்வு பெற்ற நீதிபதி போல் பேசி 1 லட்சம் பணத்தை பெற்று கொண்டு தப்ப முயன்ற 3 பேரை கைது செய்த காவல்துறையினர். இதுபோன்று போலியான நிதி திரட்டும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகின்றது. தாங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து உதவலாம். காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது
Category:
மாவட்ட செய்திகள்
24.வது நாளாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் பகுதியை சேர்ந்த 2 கொரானா தொற்று குறித்த மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறையார் காய்கறி மார்க்கெட் முதல் பழைய பேருந்து நிலைய சாலைகள் தடை செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகள் வழியாக வெளி நபர்கள் செல்ல தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் பெறுவதற்கு சிறமம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் கிடைக்க பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரா. யோகுதாஸ்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனோ வைரஸால் ஊரடங்கு சட்டம் பிறப்பிபத்த நிலையில் பொதுமக்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றும் வகையில் பேரூந்து நிலையங்கள் காய்கறி சந்தையாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் கீழக்கரை காய்கறி சந்தையாக செயல்பட்டு வரும் பேருந்துநிலையத்தில் மாடுகள் சுற்றி திரிவதால் வியாபாரிகளுக்கு தொல்லை ஏற்பட்டுள்ளது. மாடுகளை விரட்டுவதே வேலையாக இருப்பதால்
வியாபாரம் செய்ய முடியவில்லை என்று வியாபாரிகள் குற்றசாட்டை முன் வைக்கிறார்கள். இது சம்பந்தமாக வீரகுல தமிழ்படை ஓருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் கூறுகையில், “வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படி, மண்டபம் பேரூர் செயலர் டி.ராஜா ஆலோசனை படி மண்டபம் ஓடைத்தோப்பு, ஐஎன்பி காலனி, கோயில் வாடி பகுதி மக்களுக்குபேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளருமான என்.பூவேந்திரன் தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.திமுக., மாணவரணி நகர் துணை அமைப்பாளர் பி.நம்பு வேணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்து நிறுத்தப் பாருங்கள்”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..
by Askar
written by Askar
அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம்”
“அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்து நிறுத்தப் பாருங்கள்”
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு வேண்டுகோள்.
வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது. இவை இரண்டுக்கும் மத்தியில்தான் மக்களின் வாழ்க்கை ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து துறைச் செயலாளர், துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், அது போதாதென்று மற்றொரு அமைச்சர் ஆகியோரின் கொரோனா குறித்த பேட்டிகளுக்குப் பிறகு, அடுத்து “கிளைமேக்ஸ்” காட்சி போல, நேற்றைய தினம் (16.4.2020), தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனாவை ஒழித்துவிட்டதாக தனக்குத் தானே முதுகில் தட்டி முறுவலித்துக் கொள்கிறார்.
‘இன்னும் இரண்டு மூன்று நாளில் கொரோனாவே இருக்காது’ என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார். இதற்கு இவர் காட்டிய புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது, இவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றித் திசைதிருப்புகிறாரா, அல்லது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை.
‘நேற்றைய தினம் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள், இன்றைய தினம் 25 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியானால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகத்தானே அர்த்தம்” என்று கேட்கும் அவரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அவரே சொல்கிறார்; இதுவரை 17 ஆயிரத்து 835 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 1383 பேரின் முடிவுகள் வரவில்லை என்கிறார்.சுமார் 18 ஆயிரம் என்பது தமிழ்நாட்டு மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் என்பதை அவருக்கு அருகில் விவரம் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்ல வேண்டும்.
ஆரம்பத்திலிருந்தே உரிய கருவிகளைப் பெற்று பரிசோதனைகளை விரிவுபடுத்தி, விரைவுபடுத்துங்கள் என்று அனைவரும் திரும்பத் திரும்ப சொன்ன பிறகும், அடிப்படையான அந்த நடவடிக்கையில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டு, இப்போது திடீரென்று கொரோனாவே இல்லை என்று முதல்வர் சொல்வது, ‘பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிட்டதாக எண்ணுவதைப் போன்றது’. ஒருவேளை முதல்வர் தனது கையில் மந்திரக்கோல் ஏதாவது வைத்திருப்பாரோ என்று இந்த நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்!
மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில்தான் கொரோனா நோய்த் தாக்கம் இருக்கிறது என்று மத்திய அரசு அறிவித்தது. இப்போது 22 மாவட்டங்களுக்கு அதிகமாகப் பரவிவிட்டது என்றும், மூன்றே மூன்று மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மத்திய அரசு சொல்கிறது என்றால், இதுதான் கொரோனாவை காலத்தே கட்டுப்படுத்திய செயலா? தட்டித் தட்டி எழுப்பியும் மறுத்து, மிகவும் தாமதமாக விழித்தெழுந்துவிட்டு, மருத்துவ ரீதியாக முறையான தடுப்பு மற்றும் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களைப் பெறுவதில் அலட்சியம் காட்டிவிட்டு, இப்போது கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், தமிழக மக்கள் இதை நம்புவதற்கு என்ன இளித்த வாயர்களா?
கொரோனாவின் தாக்கம் ஜனவரி மாதம் இறுதியில் கேரளாவில் கண்டறியப்பட்டு, அந்த மாநிலம் பிப்ரவரி 4-ம் தேதி மாநிலப் பேரிடராக கொரோனாவை அறிவித்தது. ஆனால், மாநில எல்லையை மார்ச் 16-ம் தேதி மூடியதாக அதேபேட்டியில் முதல்வர் சொல்கிறார் என்றால், 46 நாட்கள் கழித்து நடவடிக்கை எடுத்ததுதான் துரிதமான நடவடிக்கையா? கொரோனாவின் தீவிரத் தன்மையை உணர்ந்த செயலா?
பிப்ரவரி மாத இறுதியிலும், மார்ச் தொடக்கத்திலும் என்ன செய்து கொண்டு இருந்தார் முதலமைச்சர்? சட்டமன்றத்தில் நான் குரல் எழுப்பியபோது, “தமிழகத்தில் ஒருவருக்குக் கூட கொரோனா வராது, வரவிடமாட்டோம்” என்று மார்தட்டினார். “70 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வருந்த வேண்டாம், அவருக்கு வந்தாலும் சிகிச்சை அளிப்போம்” என்று கொடூரமான கிண்டல் அடித்துக் குதூகலம் கொண்டார். “வயதானவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மட்டும்தான் வரும்” என்றார், அனைத்தையும் ஐயம் திரிபற அறிந்த சுகாதார அமைச்சர்!
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து ரகசியமாக வைத்திருப்பதைப் போலவும், யாருக்கு வந்தாலும் அடுத்த நிமிடமே அதை வெளியிட்டுக் காப்பாற்றிவிடுவோம், என்பது மாதிரியும் அல்லவா முதல்வரும், அமைச்சரும், கிண்டலும் கேலியும் பேசினார்கள்!
ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் மூன்றாவது இடம் தமிழகம். விலை மதிப்பில்லாத 15 உயிர்களை இழந்திருக்கிறோம்; 1264 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்; இதில் 30-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். அனைத்துக்கும் மேலாக சிகிச்சை கொடுத்து வந்த மருத்துவர்களில் பத்துப்பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். இன்னும் எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற தரவுகளே தெரியவில்லை; திரைமறைவு ரகசியமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் உண்மை நிலையை உணர்ந்து; மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையுடன், மற்றவர் உயிர்மீது நெஞ்சில் கொஞ்சம் ஈரத்துடன் செயல்படாமல், “கொரோனா இன்னும் 3 நாளில் ஒழிக்கப்பட்டு, ஜீரோவாக ஆகிவிடும்” என்று, “ஏதோ, சூ…மந்திரக்காளி“ போல, முதலமைச்சர் சொல்கிறார் என்றால்; இவருக்கு இன்னமும் நோயின் தீவிரம் புரியவில்லையா, அல்லது அருகில் இருப்போர் சரியான தகவல்களை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கவில்லையா, என்றுதான் மருத்துவ நிபுணர்கள் கேட்பார்கள்.
முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் இந்த கொரோனா நோயின் அடிப்படை குணத்தை உணர்த்துவதற்காகவும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் உரிய முறையில் சொல்வதற்காகவும்தான், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டச் சொல்லி மன்றாடினேன். அனைத்து காரியங்களிலும் பிரதமர் சொல்வதற்குத் தலையாட்டி அவரைப் பின்பற்றி நடக்கும் முதல்வர் ஏனோ இதை மறுத்துவிட்டார்!
எனவே, நேரில் சொல்லவேண்டிய ஆலோசனைகளைக் கடிதமாக அவருக்கு அனுப்பினேன். அந்த ஆலோசனைகளைத் திறந்த மனதோடு முதல்வர் பரிசீலித்திருக்க வேண்டும்; சுட்டிக்காட்டிய கருத்துகளில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்; அல்லது பதில் சொல்லாமலாவது அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், “மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார், நாடகம் ஆடுகிறார், அரசியல் செய்கிறார்” என்று என்னைத் தாக்கி அறிக்கை வெளியிடுவதில் தனி இன்பம் கண்டார். கொரோனா விவகாரத்தில், ஆரம்பம் தொட்டே அரசியல் பேசியது அவர்தானே!
அவர் எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நான் தடை போட நினைப்பதாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். இந்த அரசு எடுத்த எந்த நடவடிக்கைக்கும் நான் தடையாக இருந்தது இல்லை. “ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் உறுதுணையாக இருப்பேன்” என்றுதான் அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தால் தானே ஆதரிக்க முடியும்?அரைகுறை நடவடிக்கைகளை நான் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?
ரேப்பிட் டெஸ்ட் பரிசோதனைக் கருவிகள் மார்ச் 9-ம் தேதி வந்துவிடும் என்றார், 10-ம் தேதியே ஒரு லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்துவிடுவோம் என்றார். அப்படி எந்த பரிசோதனையும் நடக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து 13 ஆயிரம் கோடி பணம் கேட்டார். வந்ததோ வெறும் 800 கோடி. ஆனால் மத்திய அரசிடம் இருந்து பணம் பெற தைரியமும் இல்லை, தட்டிக் கேட்கும் நெஞ்சுரமும் இல்லை. இந்த கோழைத்தனத்தை மறைக்க, ‘தி.மு.க. எம்.பி.,க்கள்தானே வாதாடி வாங்கித்தர வேண்டும்? மத்திய அரசை வற்புறுத்தினார்களா? ஏதாவது ஸ்டெப் எடுத்தார்களா?” என்று வக்கணையாகக் கேட்டுள்ளார் முதலமைச்சர். தமிழக அரசு கேட்ட நிதியைத் தர வேண்டும் என்று மூன்று அறிக்கைகளை நான் வெளியிட்டுள்ளேன். பிரதமர் நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் இதனைக் கோரிக்கையாக வைத்து வலியுறுத்தினார்; எழுத்து மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளார். இதை எல்லாம் முதல்வர் மறந்துவிட்டாரா? மறைக்கிறாரா?
நோயில் நான் அரசியல் செய்வதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். அடையாளம் காணப்படாத ‘கூவத்தூர் நோயினால் நடந்த அரசியல் விபத்தால்’ முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை நாடு மறந்துவிடாது. கொரோனாவில் நான் அரசியல் செய்வதாக இருந்தால், முதலமைச்சருக்கு எந்த ஆலோசனையும் சொல்லாமல் வாய்மூடி இருந்திருக்க வேண்டும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்காமல் இருந்திருக்க வேண்டும், தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்காமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் நான் இருந்தால்தான் அரசியல் செய்வதாக அர்த்தம்.
மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கி, உதவிகள் செய்து, மத்திய அரசிடம் வாதாடுவதற்குப் பேர் அரசியல் அல்ல; அக்கறை.
தமிழ்நாட்டு மக்கள் மீதான தணியாத அக்கறையில்தான் தி.மு.க. எப்போதும் செயல்படுகிறது. அந்த நல்லெண்ணத்தையும் உயர்ந்த நோக்கத்தையும் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்றைய முதலமைச்சருக்கு இல்லை; என்ன செய்வது தமிழகம் செய்த தவப்பயன்!
ஆரம்பத்தில் இருந்தே, “தமிழகத்தில் கொரோனா நோய் இல்லை” என்று மறைக்கும் திசைதிருப்பல் அரசியலை எடப்பாடி பழனிசாமி செய்தார். பொய்யும் புரட்டும் நிறைந்த அந்த நடவடிக்கையின் விளைவுகளைத் தான் தமிழகம் இன்று கண்டு கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் எதிர்க்கட்சிகள் அந்த மாநில அரசுக்கு ஒத்துழைப்பு செய்வதாகவும், தமிழகத்தில்தான் அது இல்லை என்றும் சொல்லி இருக்கிறார் முதல்வர். மற்ற மாநில முதல்வர்கள், அனைத்துக்கட்சிக் கூட்டங்களைக் கூட்டி, அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து கலந்தாலோசனை செய்துதான் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். பிரதமரே அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்திவிட்டுத் தான் செயல்படுகிறார். ஆனால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை எல்லா வாசல்களையும் அடைத்துக் கொண்டு விட்டார்; தன்னைப் பற்றியே நினைத்து கணக்குப் போட்டுக் கொண்டு தனி அறையில் இருந்து விட்டார். எல்லாம் தனக்குத் தெரியும், தன்னால் எல்லாம் முடியும் என்ற தன்முனைப்பு கொண்டவராக மாறிவிட்டார். அதனால்தான் எதிர்க்கட்சிகள் நித்தமும் நெடுஞ்சாலைகளிலே நின்றுகொண்டு ஆலோசனைகளைச் சொல்ல வேண்டிய நெருக்கடியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
குறை சொல்வதற்காகவே, தி.மு.க.,வை நடத்துவதாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். ‘காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல’, நாங்கள் சொல்லும் ஆலோசனைகள் கூட அவருக்குக் குறைகளாகத் தெரிகின்றன. நாங்கள் இன்னும் குறைகள் சொல்ல ஆரம்பிக்கவில்லை.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலிருந்த தாமதம், மெத்தனம், அலட்சியம், அரசு நிர்வாகத்தின் மீதான புகார்கள், ஜனவரி இறுதியிலிருந்து சுகாதாரத் துறை கொள்முதல்களில் அரங்கேறிய மர்மங்கள், மத்திய அரசிடம் எதையும் வாதாடிப் பெற முடியாமல் போவதற்கான உண்மையான காரணங்கள், பலவீனங்கள்,கொரோனாவை வைத்து ஆளும் அமைச்சரவைக்குள் நடக்கும் கீழ்மையான அரசியல் எதிர்வினைகள், அவை குறித்தெல்லாம் நாங்கள் இன்னும் பேசவில்லை; எப்போதும் பேசத்தயார்! ஆனால் இப்போது வேண்டாம், அரசின் கவனத்தை திசைதிருப்பிடக் கூடாது, அதனால் ஏழை – எளியோர் பாதிக்கப்படக் கூடாது என்று அமைதி காத்து வருகிறோம்.
மீண்டும் முதலமைச்சருக்குச் சொல்வது, அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல!
நோயை மறைக்காதீர்கள்; பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிவரங்களை அள்ளிவீசாதீர்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனடியாக வாங்குங்கள். பிழையான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தராதீர்கள். எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள்.
நோயை மறைப்பது என்பது உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவதுமாகும்.
உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிறேன்.
‘கொரோனா என்பது பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது’ என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள்!
என்னுடைய இந்த விளக்கத்தைக் கண்டு பதறாமல், ‘பார் இதற்கும் பதிலளிக்கிறேன் பேர்வழி’ என்று, இருக்கும் நேரத்தையும் வீணாக்காமல்; கொரோனா தடுப்பு- உபகரணங்கள் கொள்முதல் – பரவலான பரிசோதனை – பாங்கான சிகிச்சை – சிறந்த நிவாரணம் – சீரான மறுவாழ்வு ஆகிய ஆக்கபூர்வமான அணுகுமுறைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, செம்மையாகச் செயலாற்றி, தமிழ் மக்களைப் பாதுகாத்திட வேண்டும் என்று மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படி, மண்டபம் பேரூர் செயலர் டி.ராஜா ஆலோசனை படி மண்டபம் ஓடைத்தோப்பு, ஐஎன்பி காலனி, கோயில் வாடி பகுதி மக்களுக்கு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளருமான என்.பூவேந்திரன் தலா 10 கிலோ அரிசி வழங்கினார்.திமுக., மாணவரணி நகர் துணை அமைப்பாளர் பி.நம்பு வேணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்த, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் சான் பத்தீட்டு பெரென் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 17, 1790)
by mohan
written by mohan
சான் பத்தீட்டு பெரென் (Jean Baptiste Perrin) செப்டம்பர் 30, 1870ல் பிரான்சு நாட்டில் லீல் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ஓர் இராணுவ அலுவலர். அவர் பிரெஞ்சு-புருசியப் போரில் வீர மரணமடைந்தார். எனவே இவருடைய தாயார் பெரினையும் அவரின் இரண்டு சகோதரிகளையும் வளர்த்து ஆளாக்க மிகவும் துன்புற்றார். பெரென் உள்ளூரிலுள்ள பொதுப்பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். பின்னர் பாரிசில் ‘லைசி ஜேன்சன் டி செய்லி’ என்ற கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். கட்டாய இராணுவ சேவை காரணமாக 1891ல் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இப்பயிற்சியின் போதுதான் இவருக்கு இயற்பியலில் ஆர்வம் ஏற்பட்டது. 1897ல் என்றியட் டுபோர்டல் என்ற பெண்னை பெரின் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் பிறந்தனர்.
1894-97 ஆண்டுகளில் பெரென் ஈகோல் நார்மலே என்ற இடத்தில் இயற்பியல் ஆய்வு உதவியாளராகச் சேர்ந்து பணிகளில் ஈடுபடார். அப்பொழுது, எதிர்மின் கதிர்கள், எக்ஸ் கதிர்கள் இவற்றைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அவற்றையே ஆய்வறிக்கையாக அளித்து இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றர். அப்பொழுது வெற்றிடக் குழாயில் மின்னிறக்கம் செய்யும்போது எதிர்மின் வாயிலிருந்து எதிர்மின் கதிர்கள் தோன்றுகின்றன என்பதை அறிவியலறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இக்கதிர்கள் எதிர்மின் துகள்களால் ஆனவை. அவை அலை வடிவாக வெளியிடப்படுகின்றன என்பதிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. 1895ல் பெரென் ஆய்வுகளில், எதிர்மின் கதிர்கள் காந்தப்புலத்தில் விலகலடைகின்றன என்பது மிக முக்கியமான முடிவாகும். இவை எதிர் மின்தன்மை உடையவை. இத்துகள்களின் மின்னூட்டம்-நிறை இவற்றுக்குள்ள விகிதத்தைக் கண்டறிய முற்பட்டார். ஆனால் ஜெ. ஜெ. தாம்சன் இவருக்கு முன்னால் அதைக் கண்டறிந்தார்.
1901ல் இயல்வேதியலில், பிரௌனியன் இயக்கம் மற்றும் மூலக்கூறு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். 1928ல் இராபர்ட் பிரௌன் என்பவர் ‘நீரில் மூழ்கியுள்ள மகரந்தத்துகள்கள் தொடர்ந்து இங்குமங்குமாக ஒழுங்கின்றி இயங்குகின்றன.’ என்று கூறினார். 1905ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதற்கான விளக்கத்தை துகள்கற்றை இயற்பியலின் அடிப்படையில் தந்தார். ‘நீர்மூலக்கூறுகளினால் இத்துகள்கள் இயக்கப்படுகின்றன. ஒரு துகளினால் கடத்தப்படும் தூரம், அவற்றிற்கு இடைப்பட்ட நேரத்தின் வர்க்கத்திற்கேற்ப அதிகரிக்கிறது. எனக் குறிப்பிட்டார். வெப்பநிலை, துகள்களின் அளவு, இயங்குகின்ற திரவம் இவற்றில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் துகள்கள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை ஐன்ஸ்டீன் தெளிவாக விளக்கினார். 1908ல் ஐன்ஸ்டீனின் கருத்துகளை ஆய்வுகளின் மூலம் பெரின் மெய்ப்பித்தார்.
ரிச்சர்ட் சீய்க்மாண்டி(Richard Zeigmandy), ஹென்றி சீடண்டாப் (Henry Siedentop), என்ற அறிவியலறிஞர்கள் 1903ல் உருவாக்கிய நுட்பமான நுண்ணோக்கிகள் இந்த ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவின. ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளைப் பயன்படுத்தி, நீர் மூலக்கூறின் அளவு மற்றும் அவகாட்ரோ எண்ணிற்கான திடமான மதிப்பையும் கணக்கிட்டார். இந்த ஆய்வுகளுக்காக இவருக்கு 1926ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1913ல் அணுக்கள் என்ற தலைப்பில் இவர் ஒரு நூலை வெளியிட்டார். இவருடைய ஆய்வு விளக்கங்களாக மட்டுமன்றி இந்நூல் கதிரியக்க வேதியல், கரும்பொருள் கதிரியக்கம், மூலக்கூறுகளின் முழுத்தன்மையையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. 1936க்குள் இது பல பதிப்புகள் அச்சிடப்பட்டு சுமார் 30,000 பிரதிகள் விற்பனையாயின. பல மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது. இது போல் பல நூல்களை பெரின் வெளியிட்டார். ஜெ. ஜெ. தாம்சன் இவருடைய கருவிகளைப் பயன்படுத்தியே தன்னுடைய முடிவுகளை வெளியிட்டார். சார்போனில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இயல் வேதியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பிறகு அத்துறையின் தலைவரானார்.
1896ல் ராயல் கழகத்தின் ஜூல் பரிசு, 1911ல் ராயல் கழகத்தால் மத்யூக்கி பதக்கம், 1912ல் போலோக்னாவின் வல்லௌரி (Vallauri) பரிசு, 1914ல் பாரிசின் அறிவியல் கழகத்தினால் லா கேசு (La Caze)பரிசு போன்ற பரிசுகள் பெற்றார். பிரசல்சு,லைகே, கெம், கொல்கத்தா, நியூயார்க்,பிரிசுடன்,மான்செசுடர் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்பியல் முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தன. ராயல் கழகம், மற்றும் பெல்சியம், சுவீடன், பிரேக், உருமானியா போன்ற நாடுகளில் உள்ள அறிவியல் கழகங்கள் இவரை உறுப்பினராக ஏற்றுக் கொண்டன. இங்கிலாந்து, பெல்ஜிய அரசுகளின் மதிப்புமிக்க பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன. அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்வதற்கென பிரெஞ்சு நாட்டில் தேசிய மையம் ஒன்றை அமைக்க இவர் பெரு முயற்சி எடுத்துக்கொண்டார்.
1914-18 ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் போது பொறியாளர் படைக்குத் தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார். 1040ல் ஜெர்மானியர் ஊடுருவியபோது இவர் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். ஆல்பர்ட் ஐன்சுடீனின் விளக்கத்தையும் மெய்ப்பித்து, பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்த சான் பத்தீட்டு பெரென் ஏப்ரல் 17, 1942ல் தனது 71வது அகவையில் நியூயார்க், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1948ல் போருக்குப் பின் இவருடைய பொருள்கள் சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன. இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நடத்திய தேர்த்திருவிழா; உறங்கும் அரசாங்கமும், காணாமல் போன மீடியாக்களும்..
by Askar
written by Askar
ஆயிரக்கணக்கோனோர் ஒன்று திரண்டு நடத்திய தேர்த்திருவிழா; உறங்கும் அரசாங்கமும், காணாமல் போன மீடியாக்களும்..
பாஜக ஆளும் கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் பலருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கலாபுராகி மாவட்ட சித்தாபூர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கோவில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது.
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சித்தலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த செய்தியை மோடியாக்கள் மக்கள் வரை கொண்டு சேர்க்கவில்லை. நாம் அறிந்தவரை இந்தியாவின் தொலைக்காட்சி ஊடங்கங்களில் இந்த செய்தி வெளியாகவே இல்லை. ஒன்று கூடியவர்கள் தப்லீக் ஜமாத்தினர் இல்லை என்பதால் கூட அவர்கள் செய்தி வெளியிடாமல் இருந்து இருக்கலாம்.
மார்ச் மாத தொடக்கத்தில், இந்தியாவின் முதல் கோவிட் -19 நோய் தொற்று ஏற்பட்டு மரணித்தவர் இதே கலாபுராகி மாவட்டத்தை சேர்ந்தவரே, அப்படி இருந்தும் கூட ஆளும் பாஜக அரசு மக்கள் கூடுவதை தடை செய்யாமல் இருந்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
லாக்டவுன் வழிகாட்டுதல்கள் பகிரங்கமாக மீறப்பட்டிருந்தும் கூட அதை உள்ளூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தடுக்காமல், ஊமை பார்வையாளராக வேடிக்கை பார்த்ததற்காக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றது.
முன்னதாக கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ ஊரடங்கு உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தினார். அதே போல உபி முதல்வரும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், மத நிகழ்ச்சிகளுக்கு தடை இருந்ததும் கூட அயோத்தியில் கூட்டமாக பூஜையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை MASA – சமூக நல அமைப்பு சார்பில் துப்புரவு பணியாளர்களை கௌரவப் படுத்தி நலத்திட்ட உதவி……
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு தொழில் செய்யும் துப்புரவு பணியாளர்களை மாசா சமூக நல அமைப்பு சார்பில் பொன்னாடை அணிவித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளான அரிசி, பருப்பு, கோதுமை மாவு, எண்ணெய், ரவை, சீனி, போன்ற உணவு பொருட்களை வழங்கினார்.
இதில் மாசா சமூக நல அமைப்பு தலைவர் அகமது முகைதீன். செயலாளர் சிராஜ், மற்றும் உறுப்பினர்கள் சாதிக் அலி, மன்சூர், ருசைக், சுலைமான், லுக்மான், ஆகியோர் கலந்து கொண்டார்கள். மனிதநேயமிக்க இச்செயலை கீழக்கரையை சார்ந்தவர்கள் அனைவரும் போற்றினார்கள்.
கீழை நியூஸ் SKV சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குள்ள கிராமங்களில் தண்டோரா மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் வீ.வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர்போலீஸ் படையுடன் முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கிருந்த மூன்று பேர் தப்பி ஓடினர். அதில் நெறிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த முத்து பெருமாள் மகன் சதீஷ்குமாரை (29) போலீசார் பிடித்தனர். மேலும் அங்கிருந்த கள்ளச்சாராய பாட்டில்கள் மற்றும் 40 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர். இதுகுறித்து இளம்செம்பூர் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, சதீ்ஷ்குமாரை கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மன்னார்குடியை சேர்ந்த சிலர் வீட்டு வேலைக்காக ஜித்தா வந்த நிலையில் வேலையும் இல்லாமல் சம்பளமும் கிடைக்காத நிலையில் தற்போதய ஊரடங்கால் அன்றாட தேவைகளுக்கு வழி இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
சம்பந்தப்பட்டவர்களின் தகவலை அறிந்த ஜித்தா தமுமுக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை மற்றும் அத்யாவசிய பொருட்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக சுகாதாரத்துறைக்கு கோரிக்கை! மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டவர்களின் முழு விபரங்களை வெளியிட சட்டம் அனுமதிக்கிறதா?? ஏன் மக்கள் மீது காழ்புணர்ச்சி…உணர்வுக்கு மதிப்பளிப்பார்களா?? அதிகாரிகள் சிந்திப்பார்களா??..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தமிழக சுகாதாரத்துறைக்கு கோரிக்கை!
தற்போது நாடு முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயல்படும் விதம் குறித்து பாராட்டுகிறேன்.
கொரோனா தொற்றுள்ள நபர் என்று அடையாளம் காட்டப்படுபவர்களை தனிமைப்படுத்துவதையோ? அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதையோ? யாரும் குறை சொல்லாத நிலையில் அவர்களின் பெயர்,அலைபேசி எண், விலாசம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொது மக்களின் பார்வைக்கு கொடுப்பது ஏற்புடையது தானா? என்பதை அதிகாரிகளின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.
கொரோனா தொற்றுள்ளவர்களின் நோயை குணப்படுத்துவதில் காட்டும் அக்கறையை விட அவர்களை பொது சமூகத்தில் அடையாளம் காட்டும் அக்கறை மிகைத்து விட்டதாக பலரும் வேதனைப்படுகின்றனர். இதன் பாதிப்பு நோயாளிகள் குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பும் போதும் எதிரொலிப்பதை காணமுடிகிறது. இவர் கொரோனா நோயாளியாம்னு குணமடைந்த பின்னரும் அவரை விலக்கி வைத்து பார்க்கும் தீண்டாமையை நினைத்து பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் துளிகள் சாப மழையாய் மாறி விடக்கூடாது என அஞ்சுகிறேன்.
நோயாளிகளின் எண்ணிக்கையை சொல்வதில் தப்பில்லை, அதை மாவட்ட ரீதியிலான எண்ணிக்கையாகவே வெளிப்படுத்த வேண்டுமே தவிர ஒவ்வொரு குக்கிராமம் வரை பெயரை குறிப்பிட்டு நோயாளிகளின் முழு விபரத்தையும் பொதுவெளியில் விளம்பரப்படுத்துவதை ஏற்க முடியவில்லை. இதுவும் ஒருவகையில் தீண்டாமை மற்றும் தனி மனித உரிமை மீறல் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
நோயாளிகள் குறித்த முழு விபரமும் அரசு நிர்வாகத்திற்கானதே தவிர பொதுவெளியில் விளம்பரப்படுத்திடுவதற்கல்ல, என்பதை புரிந்து இனிவரும் காலத்தில் நோயாளிகள் குறித்த முழு விபரத்தையும் பொதுவெளியில் பகிர வேண்டாமென்று அரசையும் அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.
கீழை ஜஹாங்கீர் அரூஸி
முன்னாள் கவுன்சிலர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நோன்பு கஞ்சிக்கு பதிலாக நோன்பாளிகளின் வீடுகளில் அரிசி வழங்கப்படும்:- தலைமை செயலாளர்.
by Askar
written by Askar
நோன்பு கஞ்சிக்கு பதிலாக நோன்பாளிகளின் வீடுகளில் அரிசி வழங்கப்படும்:- தலைமை செயலாளர்.
ரமலான் நோன்பு குறித்து இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
கொரானா பரவலை தடுக்க ஊரடங்கு உள்ள நிலையில் ரமலான் நோன்பு குறித்து இஸ்லாமிய அமைப்பினருடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
அதில் ஊரடங்கு உள்ளதால் பள்ளிவாசலில் வைத்த நோன்பு கஞ்சி காய்ச்சி வழங்குவது மிகுந்த சிரமம் உள்ளது.
எனவே ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை நோன்பாளிகளின் வீடுகளில் மசூதி நிர்வாகிகள் வழங்குவர் என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
அரசு அளிக்கும் அரிசியை ஒவ்வொரு மசூதியில் இருந்தும் வீடுகளுக்கு ஜமாத் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்.19-க்குள் பள்ளிவாசல்களுக்கு நோம்புக்கஞ்சிக்கான அரிசி வழங்கப்படும். தகுதியான குடும்பங்களுக்கு தேவையான அரிசியை மசூதி நிர்வாகிகள் வழங்குவர் எனவும் கூறியுள்ளார்.
இந்த மாத இறுதியில் ரமலான் நோன்பு ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை(KECT) மற்றும் இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 2014-2015 ஆண்டு முன்னாள் மாணவர்கள் இணைந்து பட்டினி இல்லா கீழக்கரை திட்டம் எனும் தேவையுடையோருக்கு உதவும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
இத்திட்டத்தில் தாங்களும் பங்கெடுக்க கீழே உள்ள வங்கி கணக்கிற்கு உங்கள் உதவி தொகையை அனுப்பலாம்.
Kilakarai Educational & Charitable Trust*
Bank: INDIAN BANK
Account No. *536484855*
IFS Code : IDIB000K158.
Branch : Keelakarai.
GOOGLE PAY, PHONEPE,PAYTM
+91 9894054547
Mohamed Nafeel bin Sathak
மேலும் இது தொடர்பாக இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் MMK முகைதீன் இப்ராகிம் மாணவர்களின் இந்த முயற்சிக்கு ஆதரவும் தெரிவித்ததோடு ஒரு தொகையையும் நன்கொடையாக கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.
இதை போல் அனைத்து ஆண்டு மாணவர்களையும் தாங்கள் இணைத்துக் கொள்ள விரும்புவதாக 2014- 2015 ஆண்டு முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா தடுப்பு பணிகளில் தூய்மை பணியாளர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்-நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கி தென்காசி எம்எல்ஏ பேச்சு…
by Askar
written by Askar
கொரோனா தடுப்பு பணிகளில் தூய்மை பணியாளர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்-நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கி தென்காசி எம்எல்ஏ பேச்சு…
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டை டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு முககவசங்கள், மற்றும் நிவாரண பொருட்களை தென்காசி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழங்கி சுகாதார பணியாளர்களிடையே பேசினார். அதில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகளில் தமிழக அரசு முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வழிகாட்டுதல்படி சிறப்பாக செயல்படுகிறது. இந்த பணியில் தூய்மை பணியாளர்கள் பங்கு மிக முக்கியமானதாகும்.
தூய்மை பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் படி செயல்பட வேண்டும். இன்னும் விழிப்புடன் பணியாற்றி கொரோனாவை தடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் பணி அளப்பறியது என்று கூறிய அவர் தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் குணம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ், நகர அவைத்தலைவர் முருகையா, கோபால், கீழச்சுரண்டை மாரியப்பன், சங்கர், ஜவஹர் தங்கம், சிவா, ஜெயசந்திரன், சிவசங்கர், ஞானசேகர், நல்லசிவன், முருகன், பழனி, வெள்ளைத் துரை, திருமலை முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காங்கிரஸ் திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கல்..
காங்கிரஸ்,திமுக சார்பில் கொரொனா நிவாரண உதவி வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார் ஆலோசனையின் படி கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 100 எளிய குடும்பங்களுக்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர்
பால் எ சண்முகவேல், முன்னாள் கவுன்சிலர் அருணா டெய்லர், ஊடக பிரிவு சிங்கராஜ், மோகன்ராஜ், டயர் செல்வம், டூவின்ஸ் கோபால், செல்வம்,
செல்லப்பா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக வழங்கி நிவாரண உதவி அளித்ததோடு கொரோனாவை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்கவும், முக கவசம் அணியவும், கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக இருந்திடவும் அறிவுறுத்தினர்.
மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், சுகாதார அலுவலர்கள், ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்படும் எளிய மக்களுக்கு உதவி செய்ய திமுக தலைவர் ஸ்டாலினின் அறிவுறுத்தியதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாபன் ஆலோசனையின் படி ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் சுரண்டை பகுதியில் கொரோனா நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறி, பருப்பு, எண்ணெய், உணவு பொட்டலங்கள், மாஸ்க், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
இதில் ஆறுமுகசாமி, கணேசன், ஜெயராஜ், ஐயப்பன், மனோகர், உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நமது ஊருக்கு தேவை மருத்துவமனை மட்டும்தானா?.. அதையும் தாண்டி… கீழக்கரை பெண்மணியின் தொலைநோக்கு யதார்த்த சிந்தனை… நாமும் சிந்திப்போம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நமது ஊர் கீழக்கரையில் வரும் காலங்களில் மருத்துவமனைகளை மேம்படுத்தவும் புதிய மருத்துவமனைகள் ஏற்படுத்தவும் பலர் கோரிக்கை விடுப்பதும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வரும் செய்திகள் மிகுந்த பாராட்டுக்குறியது. காலங்காலமாக நம்பி சென்ற மருத்துவமனைகள் இந்த பேரிடர் காலத்தில் கைவிட்டதால் ஏற்பட்ட மாற்றம் வரவேற்புக்குறியதே. ஆனால் உண்மையில் மருத்துவமனைகள் ஏற்படுத்துவதால் மட்டும் ஊர் வளர்ச்சியை எட்டிவிடுமா?
40,000 மக்கள் தொகை கொண்ட கீழக்கரையில் கல்வியறிவு சதவிகிதம் 93.31%. தேசிய அளவில் தமிழகத்தின் சதவிகித்தை காட்டிலும் அதிகம். 96.24% ஆண்களும் 90.20% பெண்களுக்கு கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். 150 ஆண்டுளுக்கு முன்னமே பள்ளி ஆரம்பித்த ஊர் இந்த நிலையை அடைந்ததில் ஆச்சரியம் அல்ல.
ஆனால் நம்மில் எத்தனை மருத்துவர்கள், காவலர்கள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள்,? விரல்விட்டு எண்ணிவிடலாம்.
கடல்சார் வளங்களையும் தொழிலையும் பிராதனமாக கொண்டுள்ள கீழக்கரையில் அதிகளவிலான பொறியாளர்கள் உள்ளபோதும் கடல்சார் பொறியாளர்கள் மிக குறைந்த அளவிலேயே இருக்கின்றனர். தளவாடங்கள், கப்பல் வாணிபம் போன்ற துறைகளில் உள்ள பட்டப்படிப்புகளை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்பது கூட இல்லை.
இங்கே கல்வி என்பது ஆண்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி சீட்டாகவும், பொருளாதார ஈட்டும் வழியாகவும் மட்டுமே கற்றுக்கொடுக்கப்பள்ளது. இவற்றை தாண்டிய விசாலமான பார்வை நமது ஊர் மாணவர்களிடம் மிக குறைவாகவே உள்ளது.
ஆண்களுக்கே இந்த நிலைமை என்றால் பெண்களின் நிலை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பெயருக்கு பின்னால் போட்டு கொள்வதற்கும் வீட்டில் பாடம் சொல்லி கொடுப்பதற்காத்தான் கல்வி என்ற மனநிலையிலேயே பெரும்பாலான பெண்கள் வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இங்கு பெண்கள் அதிகபட்சமாக அனுமதிக்கப்படுவது ஆசிரியைப் பணிசெய்யவதற்கு தான். சில துறையில் சாதித்துள்ள நமது ஊர் பெண்களை நீங்கள் எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் போராடியே இந்த நிலைமையை அடைந்துள்ளனர். பெற்றோர் அனுமதி கிடைக்காமலும், குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாததாலும் நம்மிடையே பலர் தங்கள் திறன்களை மறைத்தும், மறந்தும் காலத்தை வீணாக்கிகொண்டிருக்கிறார்கள்.
// இந்த நிலைகளை மாற்ற வேண்டியதுதான் நமது முதல் படியாக இருக்க வேண்டும்….
முதலில் நமது சமுதாய மக்களின் மனநிலையில் மாற்றங்கள் தேவை….//
பள்ளிபடிப்பும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கல்லூரி படிப்பு மட்டும் போதுமானதாக எண்ணாமல் அந்தந்த துறை சார்ந்து மேற்படிப்பு கற்க விரும்பும் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.இது பெண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.
பெண்கள் வெளியூர் சென்று படிப்பதையும் பணிக்கு செல்வதையும் கௌரவ குறைச்சலாக, அப்பெண்களை குற்றவாளிகளைப் போல் பார்க்கும் மனநிலை அடியோடு ஒழிய வேண்டும்.
பெற்றோர்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு நம்மிடையே இருக்கும் கல்வி நிறுவனங்களுக்கே அதிகம் உள்ளது.
என் பள்ளிப்பருவத்தில் ஆங்கில மொழித்திறனை பெற்றிருப்பதும் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதுமே வெற்றியாக கருதப்பட்டது. அதை நமது ஊரின் பல பள்ளிகள் சிறப்பாகவே செயல்படுத்தின. ஆனால் இன்று காலம் மாறுகிறது அதற்கேற்றார் போல் மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.
மருத்துவம், பொறியியல், கணிணி போன்ற துறைகளோடு இன்னும் பலதுறை சார்ந்த கல்வியை பற்றிய விசாலமான பார்வையை உருவாக்க வேண்டும்.
பாடம் கற்பிப்பதோடு மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்கள் குறிக்கோள்களை அடைய தேவையான ஆலோசனைகளை வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
உலக அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் தளங்கள், கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்களின் வழிகாட்டுதல் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.
இப்போது பல பள்ளிகள் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இருப்பினும் இவற்றை வலுப்படுத்தி இவற்றில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்.
ஊரில் நூலகம் அமைப்பது, படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் திறன்வாய்ந்த மாணவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்வதற்கு ஊரின் முக்கியஸ்தர்கள், வசதி பெற்றவர்கள் முன் வர வேண்டும்.
கல்வியாளர்கள், ஊர் தலைவர்கள், நமது ஊரை சார்ந்த பல துறை வல்லுனர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்திட்டங்கள் வகுத்து நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இது ஓரீரு ஆண்டுகளில் கிட்டகூடிய வெற்றியல்ல. தேவையான ஆய்வுகளையும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் அவசியமான மாற்றங்களையும் இப்பொழுது இருந்தே செயல்படுத்த தொடங்கினால் இறைவனின் கிருபையால் நிச்சயம் வருங்காலத்தில் சிறந்த சமூகமாக நாம் உருவாக இயலும்.
”தீர்க்கமாக நாமும் இணைந்து சிந்திப்போம்… அழகிய விடை காண்போம்..”
கட்டுரையாளர் : பஹ்ஜத் குபுரா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டத்திலும் நாளை (17/04/2020) முதல் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என ஆட்சியாளர் உத்தரவு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சென்னை கோவை சேலம் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மதுரையில் நாளை (17/04/2020) முதல் கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்
இதை மீறி கவசம் அணியாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் நாளை (17/04/2020) முதல் வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகரில் ரெட்அலர்ட் பகுதியில் பணியாற்றும் காவல்துறைக்கு முதல் மரியாதை….
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கொரோனா பாதிக்கப்பட்டு தமிழகத்திலேயே முதன்முறையாக உயிரிழந்த மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.்மேலும் மதுரை மாவட்டத்தில் 41 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மதுரை மாநகர் பகுதியில் 34 இடங்களை ரெட்அலட் பகுதியாக அரசு அறிவித்துள்ளது.
கொரானாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறை யினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இரவு, பகல் பாராது பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களை கவுரவப்படுத்தும் விதமாக மதுரையைச் சேர்ந்த விஜயபாரதி என்ற பெண், தனது குடும்பத்தினருடன் வந்து காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர்கள் பெண் காவலர்கள் என இன்று காலை காவலர்கள் பணியில் இருக்கும் இடத்திற்கு சென்று பாதப் பூஜை செய்து, பொன்னாடை போர்த்தி, பழங்கள் வெற்றிலை பாக்கு என அனைத்தும் தாம்பூலத்தில் வைத்து வழங்கி கௌரவப்படுத்தினர். நகர், மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சென்று கவுரவப்படுத்தி வருகிறார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் போலீசார், தாலுகா ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவை ஒன்றிய அதிமுக (மே) செயலாளர் KMI சீனிவாசன் வழங்கினார். உடன் காவல் ஆய்வாளர் (பொ) ராணி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் VAO ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.