ஆசியன் பாரா பேட்மிட்டன் வரலாற்றில் தமிழக வீரர்கள் தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்கள் வென்றது முதல் முறை..பஹ்ரைனில் நடைபெற்ற பாரா ஆசிய இளைஞர் போட்டியில் சுமார் 30 நாடுகள் கலந்து கொண்டன. தடகளம் நீச்சல் பளு தூக்குதல், பாரா பேட்மின்டன் பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன.இந்திய பாரா பேட்மின்டன் அணி சார்பில் பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசியன் போட்டியில் 13. பேர் கலந்துகொண்டனர். தமிழகத்தை சேர்ந்த 6 பேர் கலந்துகொண்டனர். இதில் 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் பெற்று புதிய சாதனை படைத்தனர்.இந்திய பேட்மிட்டன் 15 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி விளையாட்டுவீரர்களாக சென்ற தமிழக பாரா பேட்மின்டன் பயிற்சியாளர் பத்ரி நாராயணன் தலைமையில் தமிகக வீரர், -வீராங்கனைகள், தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் உள்ளிட்ட 7 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை.08-12-21 அன்று மதுரை திரும்பிய பாரா பேட்மின்டன் பயிற்சியாளர் பத்ரி நாராயணனுக்கு திண்டுக்கல் பி. எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி நிர்வாகம் மற்றும் ஜோதிபாஸ்’ விளாட்டு ஆர்வலர்கள்கள் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.