புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி தமிழாய்வுத் துறையில்மகாகவி பாரதியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். திருச்சி தேசியக் கல்லூரி தமிழாய்வுத் துறைப் பேராசிரியர் முனைவர் இரா. பத்மா அவர்கள் நடுவராக பொறுப்பேற்று வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து சிறப்புரை வழங்கினார். மதியம் 2 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழாய்வுத் துறைப் பொறுப்பாளர் முனைவர் சி. பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா. பொன் பெரியசாமி அவர்கள் தலைமை உரையாற்றினார். தலைமை உரையில்காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமாலை முழுதும் விளையாட்டு-என்றுவழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பாஎன்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எடுத்துரைத்தார்.கல்லூரி தலைவர் திரு .பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழாய்ந்த தலைவர்களின் பிறந்த நாளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துவதன் மூலம் மாணவர்களின் தனித்திறனை அறிய முடியும் என வாழ்த்துரை வழங்கினார். மேலும் நிகழ்வில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சுந்தரம்கல்லூரி தலைவர் அவர்களின் தவப் புதல்வர் பா. சூரியா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தமிழாய்வுத் துறை பேராசிரியர் அ. சசிகலாதேவி நன்றியுரை கூறினார். தமிழாய்வுத் துறை மாணவர்கள் செ.கன்னிகா ரெ. சௌந்தர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
Category:
மாவட்ட செய்திகள்
வான் டி கிராப் ஜெனரேட்டரை (மின்னியற்றி) உருவாக்கிய ராபர்ட் ஜெ. வான் டி கிராப் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 20, 1901).
by mohan
written by mohan
ராபர்ட் ஜெ. வான் டி கிராப் (Robert Jemison Van de Graaff) டிசம்பர் 20, 1901ல் அலபாமாவின் டஸ்கலோசாவில் உள்ள மாளிகையில் பிறந்தார். அவரது தந்தை டச்சு வம்சாவளியைச் சேர்ந்தவர். டஸ்கலோசாவில், ராபர்ட் தனது பி.எஸ் மற்றும் தி காஸில் கிளப்பில் உறுப்பினராக இருந்த அலபாமா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். அலபாமா பவர் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றிய பிறகு, வான் டி கிராஃப் சோர்போனில் படித்தார். 1926 ஆம் ஆண்டில், அவர் இரண்டாவது பி.எஸ். ரோட்ஸ் ஸ்காலர்ஷிப் மூலம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தனது டி.பில் முடித்தார். வான் டி கிராஃப் ஜெனரேட்டரின் கண்டுபிடிப்பாளராக இருந்தார். இது அதிக மின்னழுத்தங்களை உருவாக்கும் சாதனமாகும். 1929 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் ஜெனரேட்டரை (மின்னியற்றி) உருவாக்கி, 80,000 வோல்ட் உற்பத்தி செய்தார். 1933 வாக்கில், அவர் 7 மில்லியன் வோல்ட் உற்பத்தி செய்யும் ஒரு பெரிய ஜெனரேட்டரைக் கட்டினார்.
வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட இன்சுலேடிங் (ரப்பரால்) பெல்ட்டைப் பயன்படுத்துகின்றன. உயர் மின்னழுத்த மூலத்திலிருந்து பெல்ட்டின் ஒரு முனையில் மின் மின்னூட்டங்களை மறு முனையில் ஒரு உலோகக் கோளத்தின் உட்புறத்தில் நடத்துகின்றன. மின்னூட்டம் கோளத்தின் வெளிப்புறத்தில் இருப்பதால், இது முதன்மை உயர் மின்னழுத்த மூலத்தை விட மிக அதிகமான மின்சார ஆற்றலை உருவாக்குகிறது. நடைமுறை வரம்புகள் பெரிய வான் டி கிராஃப் ஜெனரேட்டர்களால் உற்பத்தி செய்யப்படும் திறனை சுமார் 7 மில்லியன் வோல்ட்டுகளாக கட்டுப்படுத்துகின்றன. வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் முதன்மையாக அணு இயற்பியல் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் நேரியல் அணு துகள் முடுக்கிகளுக்கு D.C மின்சாரம் வழங்கப்படுகின்றன. டேன்டெம் வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் அடிப்படையில் இரண்டு ஜெனரேட்டர்கள், மேலும் அவை சுமார் 15 மில்லியன் வோல்ட் உற்பத்தி செய்ய முடியும்.
வான் டி கிராஃப் ஜெனரேட்டர் ஒரு எளிய இயந்திர சாதனம். சிறிய வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் பொழுதுபோக்கு மற்றும் விஞ்ஞான எந்திர நிறுவனங்களால் கட்டப்பட்டுள்ளன. மேலும் அவை உயர் D.C ஆற்றல்களின் விளைவுகளை நிரூபிக்கப் பயன்படுகின்றன. சிறிய பொழுதுபோக்கு இயந்திரங்கள் கூட பல சென்டிமீட்டர் நீளமுள்ள ஈர்க்கக்கூடிய தீப்பொறிகளை உருவாக்குகின்றன. வான் டி கிராஃப் அவர்களால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய காற்று காப்பிடப்பட்ட வான் டி கிராஃப் ஜெனரேட்டர் செயல்பட்டு வருகிறது. போஸ்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் ஆர்ப்பாட்டங்கள் ஒரு பிரபலமான ஈர்ப்பு நவீன வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் அழுத்தப்பட்ட மின்கடத்தா வாயுவால் (ஃப்ரீயான் அல்லது சல்பர் ஹெக்ஸாஃப்ளூரைடு) காப்பிடப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் மெதுவாக திட-நிலை டிசி மின்சாரம் மூலம் பாகங்கள் நகராமல் மாற்றப்பட்டுள்ளன. வான் டி கிராஃப் அணு துகள் முடுக்கிகள் தயாரிக்கும் ஆற்றல்கள் சுமார் 30 MeV ஆக வரையறுக்கப்பட்டுள்ளன. டேன்டெம் ஜெனரேட்டர்கள் இரட்டிப்பாக சார்ஜ் செய்யப்பட்ட (ஆல்பா) துகள்களை துரிதப்படுத்துகின்றன.
வெவ்வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் நவீன துகள் முடுக்கிகள் அதிக ஆற்றல்களை உருவாக்குகின்றன. இதனால் வான் டி கிராஃப் துகள் முடுக்கிகள் பெரும்பாலும் வழக்கற்றுப் போய்விட்டன. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டதாரி மாணவர் ஆராய்ச்சிக்காகவும், அதிக ஆற்றல் வெடிப்பிற்கான அயனி ஆதாரங்களாகவும் அவை இன்னும் ஓரளவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. வான் டி கிராஃப் ஒரு தேசிய ஆராய்ச்சி உறுப்பினராக இருந்தார. மேலும் 1931 முதல் 1934 வரை மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி கூட்டாளராக இருந்தார். அவர் 1934 இல் இணை பேராசிரியரானார். அவருக்கு 1936 இல் எலியட் க்ரெஸன் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, வான் டி கிராஃப் உயர் மின்னழுத்த ரேடியோகிராஃபிக் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அவர் உயர் மின்னழுத்த பொறியியல் கழகத்தை (எச்.வி.இ.சி) ஜான் ஜி. டிரம்புடன் இணைந்து தொடங்கினார். 1950 களில் அவர் இன்சுலேடிங்-கோர் டிரான்ஸ்பார்மரைக் கண்டுபிடித்தார்.
உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்டத்தை உருவாக்கினார். டேன்டெம் ஜெனரேட்டர் தொழில்நுட்பத்தையும் உருவாக்கினார். எலக்ட்ரோஸ்டேடிக் முடுக்கிகளின் வளர்ச்சிக்காக அமெரிக்க இயற்பியல் சங்கம் அவருக்கு டி. பொன்னர் பரிசை (1965) வழங்கியது. வான் டி கிராப் ஜெனரேட்டரை (மின்னியற்றி) உருவாக்கிய ராபர்ட் ஜெ. வான் டி கிராப் ஜனவரி 16, 1967ல் தனது 65வது அகவையில் மாசசூசெட்ஸின் பாஸ்டனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சந்திரனின் வெகு தொலைவில் உள்ள ஒரு பள்ளம் அவருக்கு பெயரிடப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்.
by mohan
written by mohan
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.மாநில கெளரவத் தலைவர் சி.ராஜவேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கே.தொல்காப்பியன், தேர்தல் அலுவலர் கோபாலரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பொருளாளர் இ.ஜோதிராமலிங்கம், துணைத்தலைவர் எம்.மாயன், மாவட்ட தலைவர் கே.விஜயகுமார் பொருளாளர் ஏ.மணி, மாவட்ட இணை செயலாளர்கள் ஜெயராமன், முத்துச்சாமி, மாவட்ட கெளரவத் தலைவர் தாண்டவ மூர்த்தி, பொன்.வெங்கடேசன், பிரச்சார செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.7-வது ஊதியக்குழு நிலுவை தொகை, வருங்கால வைப்புதொகை முன்புபோல் பிடித்தம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியதிட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.பேரூராட்சி, தோட்டக்கலை பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலிகளை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்,
மாநில நிர்வாகிகள் வரும் ஜனவரியில் தமிழக முதல்வர், உள்ளாட்சி அமைச்சர்களை சந்திப்பது, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட அலுவலகங்கள் மற்றும் அதற்கான பதவிகளை உருவாக்குவதற்கு தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
NASA அறக்கட்டளை நடத்திய TNPSC தேர்வு வழிகாட்டுதல் & மாணவர் கையேடு வெளியீட்டு விழா!!
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை வடக்குத்தெரு சமூகநல தர்ம அறக்கட்டளை-NASA சார்பாக TNPSC தேர்வு வழிகாட்டுதல் மற்றும் மாணவர் கையேடு வெளியீட்டு விழா 18.12.2021 அன்று வடக்குத்தெரு தைக்கா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கீழக்கரை அல் மதரஸத்துல் முஹம்மதியாவின் மாணவர் ஃபரூஸ் இப்னு துல்கருணை கிராஆத் ஓதி ஆரம்பம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபையின் தலைவர்K.S. ரெத்தின முஹம்மது தலைமை தாங்கினார். கீழக்கரை முஹைதீனியா கல்வி குழுவின் துணை தலைவர் M.M.S. முஹைதீன் இப்றாஹிம் முன்னிலை வகித்தார்.
TNPSC மாணவர் கையேடு வின் முதல் பிரதியை வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபையின் தலைவர் வெளியிட முஹைதீனியா பள்ளி மாணவர் முஹம்மது இர்ஃபான் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை முஹைதீனியா கல்வி குழுவின் துணைதலைவர் வெளியிட கல்லூரி மாணவர் ஹஸன் நஷிர் பெற்றுக் கொண்டார்
NASA அறக்கட்டளையின் அறங்காவலர் ஜனாப். பஷிர் அவர்கள் வெளியிட அல் மதரஸத்துல் நிஸ்வானிஸ் ஸாலிஹாத் மதரஷாவின் பிரதிநிதி நவீத் பெற்றுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி பைத்துல் ஹிக்மா, மகாத்மா காந்தி ஸ்கூல் ஆஃப் சிவில் சர்வீஸின் ஒருங்கிணைப்பாளர் S.S.M. சிக்கந்தர் அலி உரையாற்றினார். TNPSCன் அனைத்து விதமான சந்தேகங்களை கேட்டுப்பெறவும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது..
மற்றுமொரு சிறப்பு விருந்தினராக கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் S.M.N. அஹமது ஹுசைன் ஆசிஃப் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நன்றியுரையாக NASA அறக்கட்டளையின் தலைவர் நல்ல இப்றாஹிம் அவர்கள் உரையாற்றினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குளிக்கும்பொழுது டிரைவ் அடித்த முதியவர் பலி.
by mohan
written by mohan
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர்.ஆறுமுகம்(60) இவர் தனது நண்பர்களுடன் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிவித்து ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில் இன்று காலை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது மூன்றாவது படிக்கட்டில் இருந்து தலைகீழாக டைவ் அடித்து உள்ளார் அதற்குக் கீழ் படி இருப்பதை அறியாததை ஆறுமுகம் படியில் தலைப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயமடைந்த நிலையில் இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்சரிக்கை பலகை வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.. அதிக அளவு ஐயப்ப பக்தர்கள் திருப்பரங்குன்றம் வருவதால் சரவணப்பொய்கையில் புனித நீராடி சென்று வருகின்றனர் இதன் ஆழம் மற்றும் படிக்கட்டுகள் எத்தனை இருக்கிறது என்று அறியாததால் உயிர் பலியை தடுக்க. எச்சரிக்கை பலகை ஒன்று வைக்க வேண்டும் என்பது பொதுமக்களும் சமூக ஆர்வலராக உள்ளது கோவில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கைத்தறி துறை நடத்தும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,அரசு சிறப்பு தள்ளுபடி பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும்விற்பனையினை இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர துவக்கி வைக்கப்பட்டது.கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டுஜவுளி இரகங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையினை மேம்படுத்தி தொடர் வேலைவாய்ப்பின் மூலம் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் பொங்கல்-2022 பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் கைத்தறி துறையின் சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை எல்.என்.எஸ். இல்லம், 24 ஜடாமுனி கோவில் தெரு, மதுரையில் 17.12.2021 முதல் 30.12.2021 முடிய நடத்தப்படவுள்ளது.இக்கண்காட்சியில் காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோவை திருப்பூர் மற்றும் இராசிபுரம் மென்பட்டு சேலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் நுகர்வோர்கள் வாங்கிப் பயன்பெறும் வகையில், பட்டு இரகங்களுக்கு 10 முதல் 65 வரை சிறப்பு தள்ளுபடி மற்றும் அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு பொங்கல் 2021 கைத்தறி சிறப்பு பட்டு கண்காட்சியில் ரூ.144.05 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு விற்பனை குறியீடு ரூ.200.00 இலட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டு வாங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வடக்கு பகுதியான எர்ரம்பட்டி பகுதியில், தைப் பொங்கலுக்காக, இப் பகுதி விவசாயிகள், மஞ்சள் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விரைவில், சாகுபடியான மஞ்சள் ஆனது, தைப் பொங்கலுக்கு சில நாள்களுக்கு முன்பு அறுவடை செய்யபட்டு, நகர் பகுதிகளில் விற்பனைக்காக, வாகனங்களில் விவசாயிகள் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது.மேலும், மழையால் இந்த ஆண்டு மஞ்சள் சாகுபடி பெருகி உள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.மஞ்சள்கிழங்குங்கு நல்ல விலை கிடைக்குமா?என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும்மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தியமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்,616 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்,பி.மூர்த்தி வழங்கினார்.மதுரை மாவட்டம், திருப்பாலை யாதவா மகளிர் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு சிறப்பு முகாமில் 616 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி, வழங்கினார்.இம்முகாமில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், தெரிவிக்கையில்:-அரசுத்துறையில் உள்ள பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வரும் நிலையில் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் வகையில், இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.மதுரை மாவட்டத்தில் இன்று திருப்பாலை யாதவா மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், சுமார் 140 நிறுவனங்களைச் சார்ந்த வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர், அறிவித்திருந்தார்கள்.இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித் தேர்வு மூலம் அரசு வேலைவாய்ப்புப் பெற ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் தன்னார்வப் பயிலும் வட்டம் தொடங்கப்பட்டு போட்டித் தேர்வகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு முக்கிய துறைகளான மோட்டார் வாகனம் கட்டுமானம் தோல் ஜவுளித் துறை வங்கி நிதி சேவை மருத்துவப் பணி பாதுகாப்பு சேவைகள்இ வாகனம் ஓட்டுதல் விருந்தோம்பல் தொலைதொடர்பு ஊடகத்துறை மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகியவற்றில் திறன் எய்தும் பயிற்சிகள் இலவசமாக வழங்கபப்டுகின்றன.இன்றைய சூழ்நிலையில் திறன் மேம்பாடு என்பது வேலைவாய்ப்ப பெற மிக முக்கிய தேவையாக இருப்பதால் இத்துறையின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாகப் பெற்று தங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு தமது திறனுக்கேற்ற வேலைவாய்ப்புகளைப் பெற்று வளமான எதிர்காலத்தை உருவாக்கி கொள்ள வேண்டுமென, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.பி.மூர்த்தி,தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்மு.பூமிநாதன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்சூரியகலா,மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு)வெ.சுப்பிரமணியன் துணை இயக்குநர்(மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்)என்.மகாலெட்சுமி,யாதவா மகளிர் கல்லூரி (முதல்வர்) முனைவர்.இ.எம்.ஜி.எஸ்.புஷ்பலதா, யாதவா மகளிர் கல்லூரி (தலைவர்) முனைவர்.இ.எம்.ஜி.எஸ்.போத்திராஜா, மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
வே.செந்தில்நாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விளாச்சேரியில் ஆட்டோ டிரைவர் மின்சாரம் தாக்கி பலி; போலீசார் விசாரணை..
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா உட்பட்ட விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் காதர் உசைன் மகன் ரசூல்தீன்(40). ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணமாகி சுல்தானா என்கிற மனைவியும், பிலால் என்கிற மகனும் கோரி பீவி என்ற மகளும் உள்ளனர்.இந்த நிலையில் ரசூழ்தீன் இன்று காலை வீட்டின் மாடியில் துண்டை எடுக்க சென்றபோது எதிர்பாராத விதமாக அருகில் சாய்த்து வைத்திருந்த கம்பி மேலே இருந்த மின்கம்பியில் உரசியபடி சாய்ந்திருந்த கம்பி கீழ் பாகம் ரசூழ்தீன் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்தது.அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குடும்பத்தினர் மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லை அரசு அருங்காட்சியகமும் திருநெல்வேலி மாவட்ட சமூகநலத்துறை மற்றும் பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி துறையும் இணைந்து பெண் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கினை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடத்தினர். இக்கருத்தரங்கில் நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமையுரை ஆற்றினார். பி.எஸ்.என். கல்லூரி கணினி துறை தலைவர் முனைவர் வர்கீஸ் மற்றும் பேராசிரியர் முனைவர் நல்லசிவன் வாழ்த்துரை வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் வனிதா பெண் வன்கொடுமை பற்றியும், அவற்றை துணிச்சலுடன் எதிர்கொள்வது தொடர்பான சட்ட மசோதாக்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறையில் அளிக்கப்படும் திட்டங்கள் பற்றியும் மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். நிகழ்வில் பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலை ஆசிரியை சொர்ணம் மற்றும் கவிஞர். சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் வருகின்ற 20.12.2021 திங்கள்கிழமை அன்று பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர்ராஜ் அவர்களால் 18.12.2021 சனிக்கிழமை குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் நேரடியாக தல ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி அருவிப்பகுதிகளில் இயற்கை சீற்றத்தின் காரணமாக உருவான கடும் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்திட அறிவுறுத்தியபடி ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. மேற்காண் நிறைவு பெற்றுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ், தென்காசி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மணிமாறன், உதவி பொறியாளர் எம்.எம்.முகைதீன் மற்றும் சுகாதார அலுவலர் இரா.இராஜகணபதி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் வேதியியல் ஆராய்ச்சி துறை சார்பில் “வேதியியல் மன்ற துவக்க விழா” 18/12/2021 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இவ்விழாவின் துவக்கமாக வரவேற்புரையை துறைத்தலைவி முனைவர் அ.கஸ்தூரி அவர்கள் வழங்கினார்கள். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் வேதிப்பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் பதிவாளருமான முனைவர் M.அறிவழகன் அவர்கள் வேதியியல் மன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் மாசு கட்டுப்பாடு, ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சியில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் எடுத்து கூறினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் A.R.பொன்பெரியசாமி அவர்கள் தலைமையுரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் Er.பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் வேதியியலின் அவசியம் குறித்தும் அடிப்படை பயன்பாட்டில் வேதியியல் என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சி சுந்தரம் அவர்களும் வாழ்த்துரை வழங்கி விழாவினை சிறப்பு செய்தனர். மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக முதுகலை மாணவன் S.கார்த்திக் நன்றிவுரை கூறி விழாவினை நிறைவு செய்தார். இவ்விழா சிறப்பாக நடைபெற வேதியியல் துறையின் அனைத்து பேராசிரியர்களும் மற்றும் மாணவர்களும் ஒத்துழைப்பு நல்கினர். நாட்டு வாழ்த்தோடு விழா இனிதே நிறைவுபெற்றது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட, அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர், ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 19, 1825).
by mohan
written by mohan
ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் (Albert Abraham Michelson) டிசம்பர் 19, 1852ல் போலந்து நாட்டில், பிரஷ்யாவில் உள்ள ‘ஸ்டெரெல்னோ’ என்ற ஊரில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சாமுவேல் மைக்கல்சன் ஒரு வணிகர் ஆவார். தாயார் ரோசலியா. இவர் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1855ல் இவரது குடும்பம் போலந்தை விட்டு அமெரிக்காவில் குடியேறியது. முதலில் நியூயார்க், வர்ஜினியா, நெவடா மற்றும் சான் பிரான்சிஸ்கோ என்று பல நகரங்களில் வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. இவர் யூதக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இறை இருப்பு பற்றி அறியவொணாமைவாதியாகவே(agnostic) இருந்தார். சான் பிரான்சிஸ்கோவில் இவருடைய அத்தை வீட்டில் தங்கியிருந்த போது தன்னுடைய பள்ளிப்படிப்பை அங்கு மேற்கொண்டார். பொதுப்பள்ளிகளில் சேர்ந்து தன்னுடைய கல்வியைப் பயின்றார். 1899ல் ‘எட்னா ஸ்டேன்டன்’ என்ற மங்கையை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் பிறந்தனர்.
1869ல் அமெரிக்கக் கப்பற்படை அகாதமியில் சிறப்புப்பிரிவு பணியாளராக அப்போதைய அமெரிக்கத் தலைவர் ‘யூலிசஸ் எஸ் கிராண்ட்’ என்பவரால் நியமிக்கப்பட்டார். அங்கு 4 ஆண்டுகள் பணி புரிந்த போது, இவர் சரியாகப் பயிற்சிப் பெற்றாரோ இல்லையோ, இயற்பியல் பிரிவுகளான, ஒளியியல், வெப்பவியல், பருவகால இயல் முதலிய துறைகளையும் மற்றும் சித்திரம் வரைதலையும் கற்றுத் தேர்ந்தார். 1873ல் பட்டப்படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார். அங்கேயே 1875 முதல் 1977 வரை இயற்பியல் மற்றும் வேதியல் போதிப்பவராகப் பணியாற்றினார். 1875ல் ‘கிளெவ்லாண்ட்’ என்னும் இடத்தில் அமைந்திருந்த பயனுறு அறிவியலுக்கான கேஸ் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1880-82ல் ஹெல்ம் ஹோல்ட்ஸ் என்ற அறிவியலறிஞரின் மேற்பார்வையில் பெர்லினிலும், பாரிசிலும் தன்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
1889ல் கிளார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1892ல் புதிதாக உருவாக்கப்பட்ட சிகாகோ பலகலைக்கழகத்தில் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அப்பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட இயற்பியல் துறையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பின் அதில் பணியாற்றினார். 1877ல் ‘அன்னபோலிஸ்’ என்ற இடத்தில் இருந்தபோது வகுப்பில் அறிவியல் ஆய்வு ஒன்றினைச் செய்துகொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதியாக ஒளியின் வேகத்தைக் கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டார். 1867ல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வானியலறிஞர் ‘அர்மெண்ட் பிசியூ’ விண்மீன்களின் அளவை அளவிடக் குறுக்கீட்டு மானி ஒன்றைப் பயன்படுத்த முயன்றார். ஆனால் மைக்கல்சனோ 1887ல் தொடங்கி பல ஆய்வுகளில் ஈடுபட்டுப் பல ஆடிகளையும் ஒளி ஓரளவு ஊடுருவும் கண்ணாடிகளையும் பயன்படுத்தி ஒரே மூலத்திலிருந்து வெளிவரும் தனித்தனி ஒளிக்கதிர்களை ஒன்றாக இணைப்பதற்கு ஒரு முறையை உருவாக்கினார். குறுக்கிடும் பல ஒளிக்கதிர்களை ஒருங்கிணைக்க அவை கடந்துவரும் தூரம், திசை, இவைகளைப் பொருத்தவகையில் அமையுமாறு ஒரு குறுக்கீட்டு மானி ஒன்றை அமைத்தார்.
இந்த அண்டம் முழுவதும் திரவ வாயு நிலைக்கு இடைப்பட்ட ஈதர் என்ற கண்ணுக்குப் புலனாகாத ஊடகம் விரவியுள்ளதாக அறிவியலறிஞர்கள் கருதினர். இதன் வழியாகத்தான் ஒளி ஊடுருவிச் செல்வதாகவும் கூறினர். மைக்கல்சன், மார்லி என்பவரோடு இணைந்து L வடிவக் கருவி ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒரே நீளமுள்ள வெவ்வேறு செங்குத்தான பாதைகளில் செலுத்தினார். பிறகு அவற்றை மீண்டும் ஒன்றாக இணைத்தார். ஈதர் என்ற ஊடகம் இருந்திருந்தால் அங்கங்கே அவற்றின் அடர்த்திகளுக்கேற்ப செங்குத்தான பாதைகளில் சென்று திரும்பிய ஒளிக்கதிர்கள் மீண்டும் இணையும்போது சிறிதளவு நேர மாறுபாடு இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு ஏற்படவில்லை என்பது இவர்களின் ஆய்விலிருந்து தெரியவந்தது. அவ்வாறு ஏற்படாததால் ஈதர் என்ற ஊடகம் எல்லா இடத்திலும் இல்லை என்று நிரூபித்தனர். இந்த ஆய்வு “மைக்கல்சன்-மார்லி ஆய்வு” என்று புகழ் பெற்றது.
மைக்கல்சனுக்கு முன்னால் பல அறிவியலறிஞர்கள் ஒளியின் திசைவேகத்தைக் கண்டறிவதில் ஈடுபட்டிருந்ததனர். ஆனால் அவர்கள் கண்டறிந்த அளவுகள் துல்லியமாக அமையவில்லை. மிகக்குறைந்த செலவில் வெறும் ஆடிகளை வைத்தே தனது ஆய்வினை மேற்கொண்ட மைக்கல்சன் ஒளியின் திசைவேகத்தைத் துல்லியமாகக் கண்டறிவதில் 1878ல் வெற்றிபெற்றார். தன்னுடைய ஆய்வுகளை மீண்டும் மீண்டும் பலமுறை செய்து பார்த்தார். 1920ல் வில்சன், சான் ஆன்டோனியா என்ற 22 மைல்களுக்கிடையேயான இரு குன்றுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் முற்றிலும் புதியதாக வடைவமைக்கப்பட்ட ஆடி அமைப்புகளை அமைத்து ஒளியின் திசைவேகத்தை மிகவும் துல்லியமாகக் (299,940 km/s) கண்டறிந்தார். இவருடைய குறுக்கீட்டு மானியின் உதவியால் ஆல்பா ஆரியனிஸ் என்ற வின்மீண் விட்டத்தை அளந்துகாட்டினார்.
1900 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்பியல்கழகத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1904ல் இவருடைய ஆய்வுகளின் சிறப்பறிந்து இவருக்கு மத்யூக்கி பதக்கம் வழங்கப்பட்டது. 1907ல் ஒளியியலில் இவருடைய ஆய்வுகளுக்காக, இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெறும் முதல் அமெரிக்கராக இவர் விளங்கினார். 1907ல் இவருக்கு காப்ளே பதக்கம் வழங்கப்பட்டது. 1910-11ல் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். 1918ல் சிகாகோ திரும்பினார். அந்நாட்டின் தேசிய அறிவியல் அகாதமியின் தலைவராக 1923-27 வரை பணியாற்றினார். 1912ல் பிராங்க்ளின் நிறுவனம் எலியட் கிரைசன் பதக்கத்தையும், 1916ல் தேசிய அறிவியல் கழகம், டிரேப்பர் பதக்கத்தைவழங்கியது. 1923ல் ராயல் விண்ணியல் கழகம், தங்கப் பதக்கத்தை வழங்கியது. 1929ல் இயற்பியல் கழகம் சிறப்புப் பதக்கத்தையும் இவருக்கு வழங்கி இவரைப் பாராட்டிச் சிறப்பு செய்தன.
ராயல் விண்ண்வெளிக் கழகத்தின் சிறப்பு உறுப்பினராக, லண்டன் ராயல் கழகத்தின் உறுப்பினராக அமெரிக்க ஒளியியல் கழகத்தின் உறுப்பினராக இப்படி பல சங்கங்களில் நியமிக்கப்பட்டு அவற்றின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். 1925ல் மதிப்பியல் பேராசிரியராகப் பல பல்கலைகழகங்களில் பணியாற்றினார். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் அமைந்த அறிவியல் சார்ந்த அமைப்புகள் இவரைத் தங்கள் உறுப்பினராக அறிவித்துப் பெருமைப்படுத்தின. அதே போல், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மதிப்பியல் முனைவர் பட்டங்களை வழங்கிப் பாராட்டின.
மைக்கல்சனின் ஆய்வுகள் தன்னுடைய சார்புக் கொள்கையின் முன்னேற்றத்திற்கு உதவியது என ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மனமாறப் பாராட்டியுள்ளார். 1929ல் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகி பாசதேனா என்ற இடத்தில் அமைந்திருந்த மவுண்ட் வில்சன் வானியல் ஆய்வு மையத்தில் சேர்ந்து தன்னுடைய ஓய்வுகாலப் பணியை மேற்கொண்டார். ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் மே 9, 1931ல் தனது 78வது அகவையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் நினைவு தினம் இன்று (டிசம்பர் 19, 1953).
by mohan
written by mohan
இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert A. Millikan) அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் மார்ச் 22, 1868ல் பிறந்தார். இவரது தந்தை தேவாலயத்தில் மதகுரு வாக இருந்தார். அயோவா மாநிலத்தில் உள்ள மக்கோகிடா உயர்நிலைப் பள்ளியில் மில்லிகன் பயின்றார். பள்ளிப் படிப்புக்கு பிறகு, நீதிமன்றத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார். 1891ல் ஓபர்லின் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். கிரேக்கமும் கணிதமும் இவருக்கு மிகவும் பிடித்த பாடங்களாக இருந்தன. 1893ல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1895ல் மின் ஒளிர்வு தளங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். அங்கு இத்துறையில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான்.மின்னழுத்த விளைவை விவரிக்க 1905 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய சமன்பாட்டின் சோதனை சரிபார்ப்பை 1914 ஆம் ஆண்டில் மில்லிகன் இதே போன்ற திறனுடன் எடுத்துக் கொண்டார். பிளாங்கின் மாறிலியின் துல்லியமான மதிப்பைப் பெற அவர் இதே ஆராய்ச்சியைப் பயன்படுத்தினார். 1921 ஆம் ஆண்டில் மில்லிகன் சிகாகோ பல்கலைக்கழகத்தை விட்டு கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜில் (கால்டெக்) இயற்பியலின் நார்மன் பிரிட்ஜ் ஆய்வகத்தின் இயக்குநரானார். இயற்பியலாளர் விக்டர் ஹெஸ் விண்வெளியில் இருந்து வருவதைக் கண்டறிந்த கதிர்வீச்சு குறித்து அங்கு ஒரு பெரிய ஆய்வை மேற்கொண்டார். இந்த கதிர்வீச்சு உண்மையில் வேற்று கிரக தோற்றம் கொண்டது என்பதை மில்லிகன் நிரூபித்தார், மேலும் அவர் அதற்கு “அண்ட கதிர்கள்” என்று பெயரிட்டார்.மின்சாரம், ஒளியியல், மூலக்கூறு இயற்பியல் ஆகிய துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடுகளை வெளியிட்டார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1910 முதல் 1921 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். பாடப் புத்தகங்கள் எழுதுவது, இயற்பியலை எளிமையாகக் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபட்டார். தனியாகவும் பிற வல்லுநர்களுடன் இணைந்தும் ஏராளமான புத்தகங்களை எழுதினார். ஒளிமின் விளைவு தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள், கூற்றுகள் ஆகியவை தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தன. எண்ணெய்த் துளி சோதனை மூலம் எலக்ட்ரானின் மின்சுமையை அளக்கும் ஆய்வு மற்றும் ஒளிமின் விளைவு குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக 1923ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் தேசிய ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார். அப்போது நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள், வானியல் ஆராய்ச்சிக் கருவிகளை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றினார். பல கல்வி நிறுவனங்கள், இயற்பியல் ஆராய்ச்சி மையங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஏறக்குறைய 25 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. அது மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைப்புகளிடம் இருந்து ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். அறிவியலறிஞர் மட்டுமல்லாமல் சிறந்த மதவாதியாகவும், தத்துவஞானியாகவும் விளங்கிய மில்லிகன் இறுதிமூச்சு வரை இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். டிசம்பர் 19, 1953ல் தனது 85வது அகவையில் சான் மாரினோ, கலிபோர்னியா, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அமெரிக்காவில் பல பள்ளிகள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஆணையாளர்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், உணவு விடுதி, தங்கும் விடுதி, மண்டபம், சந்தை, கேளிக்கை விடுதி, பேருந்துகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்;கடைகள், திருமண மண்டபங்கள் ஆகிய பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது எனவும், வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் வருகை குறித்து தனிப்பதிவேடு பராமரித்து அதில் தடுப்பூசி செலுத்திய விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் வரும் பட்சத்தில் அவர்களை, தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவுறுத்த வேண்டும்.தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்த பிறகே பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும்.மேலும், பொதுமக்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம், சமூக இடைவெளி, ஹேண்ட் வாஷ் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, மாநகராட்சி பகுதிகளில் 12 சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் இக்குழு ஆய்வு செய்யும். 17.02.2021 அன்று சுமார் 165 வணிக நிறுவனங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து மாநகராட்சி கண்காணிப்பு குழுக்களின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத சில வணிக நிறுவனங்களுக்கு ரூ.26400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்திக் கொள்ளுமாறும், பொது இடங்களில் முகக்கவசம், தனி நபர் இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரயில்வே மேம்பால பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு:விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் ஆலோசனை.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் சோழவந்தானில், வாடிப்பட்டி பிரதான சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலத்தின் அடியில் பேரூராட்சி சார்பாக குடிநீர் குழாய் பதித்தல் அணுகுசாலை பணிகள் உள்ளிட்டவற்றை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, பால வேலைகளை விரைவாக முடிக்க கோரி அதிகாரிகளிடம் போனில் பேசினார். கடந்த சில நாட்களாக மழை காரணமாகவும் மணல், ஜல்லி தட்டுப்பாடு காரணமாகவும் பணிகள் தாமதமாக நடைபெற்றதாகவும் தற்போது, அரசின் அனுமதி பெற்று குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளதால், விரைவில் துரிதமாக பணிகள் நடைபெற்று பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், இது சம்பந்தமாக அடிக்கடி வந்து நேரில் வந்து பார்வையிட்டு பாலம் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தன்னை அணுகி வேலையை விரைந்து முடிக்க என்ன நடவடிக்கை வேண்டுமோ அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இதில், பேரூராட்சி செயல் அலுவலர் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், திமுக தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் பசும்பொன் மாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூர் செயலாளர் முனியாண்டி நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி பேட்டை கண்ணன் இளைஞரணி வெற்றிச்செல்வன், முன்னாள் சேர்மன் ஐயப்பன், பேட்டை பெரியசாமி எஸ்.ஆர். சரவணன், கௌதம ராஜா, எஸ் எம் பாண்டியன் சங்கோட்டை சந்திரன் ஆட்டோ மார்நாடு மாரிமுத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பிஆர்சி பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம்பட்டி-சுகாதாரத்துறை சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகம்.
by mohan
written by mohan
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.மதுரை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சுகாதாரத் துறை சார்பில் நடமாடும் சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.இதன்படி சுகாதாரத்துறையினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேரையூர் ரோடு தேனி ரோடு ஆகிய பகுதிகளில் நடமாடும் வேனில் அமர்ந்து அங்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.மேலும் உசிலம்பட்டி தேவர் சிலை வளாகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்ப்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்..
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறப்பாக செயல்படும் தென்காசி மாவட்ட காவல்துறை;காவல் துறை துணைத் தலைவர் வாழ்த்து..
by mohan
written by mohan
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு IPS ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதாக வாழ்த்து தெரிவித்தார். தென்காசி மாவட்ட காவல் அலுவலகம்(DPO), தனிப் பிரிவு அலுவலகம் (Special Branch), மாவட்ட குற்ற ஆவண காப்பகம்(DCRB), நிலம் அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு(ALGSC), மாவட்ட குற்றப்பிரிவு(DCB), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு(IUCAW), தொழில்நுட்ப பிரிவு (Technical Cell), சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJ & HR), மாவட்ட கட்டுப்பாட்டு அறை (Control Room),மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு மையம் (100 – Calls), சமூக ஊடகப் பிரிவு (Social Media Cell), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மையம் (SP Grievance), நெடுஞ்சாலை ரோந்து பிரிவு(Highway Patrol), சைபர் கிரைம் காவல் நிலையம், ஆயுதப்படை போன்ற அனைத்து பிரிவுகளிலும் 17.12.2021 வெள்ளிக் கிழமை திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு IPS ஆய்வு மேற்கொண்டார். பின்னர் புதிதாக துவங்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதாக வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உடனிருந்தார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோயை தடுக்கும் விதமாக கருத்தரங்கம், விழாக்கள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவர்களும் இணைந்து கருத்தரங்கு மூலம் எய்ட்ஸ் நோய் பற்றியும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோய் குறித்த கருத்தரங்கு 17.12.21 வெள்ளிக் கிழமை நடைபெற்றது. கருத்தரங்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள், குறிப்பாக தென்காசி மாவட்ட மூத்த பொது நல மருத்துவர்கள் என சுமார் 150 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரும், அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளருமான மருத்துவர் ஜெஸ்லின் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மருத்துவர் செந்தில் சேகர்,மாவட்ட பொருளாளர் மருத்துவர் ராஜேஷ் கண்ணா, அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர்(Dph wing) மருத்துவர் முகமது இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்து சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் கலந்து சிறப்பித்த தென்காசி மாவட்ட மூத்த மருத்துவர்கள் மருத்துவர் சுகந்த குமாரி, மருத்துவர் முத்தையா, மருத்துவர் ராமகிருஷ்ணன், மீரான் மருத்துவமனை மருத்துவர் அஜீஸ், முகைதீன் அகமது ஆகியோரை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்டரங்கன், துணை இயக்குனர் காசநோய் மருத்துவர் வெள்ளைச்சாமி, ஆய்க்குடி மருத்துவர் செந்தில் குமார், தென்காசி மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விஜயகுமார், மருத்துவர் மணிமாலா, தென்காசி குழந்தைகள் நல மருத்துவர் முஸ்ஸம்மில், மருத்துவர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் உறைவிட மருத்துவர் அகத்தியன், மருத்துவர் மல்லிகா, மருத்துவர் மாரிமுத்து, புளியங்குடி அரசு மருத்துவர் ராஜ்குமார் , மருத்துவர் புனிதவதி, மருத்துவர் அனிதா பாலின், மருத்துவர் தமிழருவி, மருத்துவர் அன்ன பேபி,மருத்துவர் கிருத்திகா ஷைலினி, மருத்துவர் கார்த்திக், மருத்துவர் முத்துக்குமாரசாமி, மருத்துவர் மணிமாலா, மருத்துவர் மது, மருத்துவர் ராம்குமார், மருத்துவர் செல்வ பாலா, மருத்துவர் கீர்த்தி,மருத்துவர் தேவி உத்தமி, மருத்துவர் தயாளன், மருத்துவர் சுரேஷ் மில்லர், மற்றும் பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான (DMS wing) மருத்துவர் ஜெஸ்லின் அனைத்து பேச்சாளர்களையும் கலந்து கொண்ட அரசு டாக்டர்கள் சங்க உறுப்பினர்களையும் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் (DPH)மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் கருத்தரங்கை ஏற்பாடு செய்த தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்களுக்கும், கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும், கலந்து கொண்ட அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி கூறினார். கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் கோபிகா, மருத்துவர் ஜெரின் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர். தோல் நோய் மருத்துவ நிபுணர் மருத்துவர் கோபிகா நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும், அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திய மருத்துவர் லதா, மருத்துவர் மல்லிகா, மருத்துவர் கார்த்திக், பேச்சாளர்கள் மற்றும் கலந்து கொண்ட மருத்துவர்கள், சுமித் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக சுரண்டை நகராட்சி உருவாக்கப்படும்;முதல் ஆணையாளர் தகவல்.
by mohan
written by mohan
சுரண்டை நகராட்சி தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக உருவாக்கப்படும் எனவும், அனைத்து அடிப்படை வசதிகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்றும் சுரண்டை நகராட்சியின் முதல் ஆணையாளர் லெனின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள சுரண்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டுமென அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நலச் சங்கங்கள் பல வருடங்களாக தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தென்காசி எம்எல்ஏ வும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ் பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சில பத்மநாதன் ஆகியோர் உள்ளாட்சித்துறை அமைச்சர், மற்றும் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினர். அதை தொடர்ந்து சுரண்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் சுரண்டை நகராட்சியின் முதல் ஆணையாளராக நெல்லை மண்டல பேரூராட்சிகளின் துணை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த லெனின் நியமிக்கப்பட்டு நேற்று சுரண்டை நகராட்சியின் முதல் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் புதிதாக துவக்கப்பட்ட சுரண்டை நகராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும் எனவும், குடிநீர் சுகாதாரம் சாலை வசதி போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். முன்னதாக புதிய முதல் நகராட்சி ஆணையாளரை தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.