தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைப்பெற்றது இதில் மாரண்டஅள்ளி வருவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா , முதியோர் உதவித் தொகை நில அளவை உள்ளிட்ட 96 மனுக்கள் பெறப்பட்டு விசாரனை மேற்கொள்ளப்பட்டது.இம்முகாமிற்க்கு தர்மuரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அய்யப்பன் தலைமை வகித்தார் வட்டாட்சியர் ராஜா மாரண்டஅள்ளி வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலன் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
Category:
மாவட்ட செய்திகள்
இந்தியை மட்டுமில்லாமல் சமஸ்கிருதத்தையும் புகுத்தி, நமது கலாச்சாரத்தை அழிக்க நினைகின்றனர் என முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி அவர்களின் 96வது பிறந்தநாள் மற்றும் வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.அப்போது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை உலகிற்கு தெரிந்ததே தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் சட்டமன்றத்தில் பேசியதில் தான். தேர்தலுக்கு முன்பு தமிழ் நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது என்று எல்லா தொலைக்காட்சியிலும் பேசினர். இந்த நேரத்தில் சினிமாவில் இருந்தவர்கள் எல்லாம் புகுந்து விட்டனர். அவர்கள் வெற்றிடத்தை நிரப்பினார்களா? என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகும் அமைச்சர்கள் சட்டமன்றத்தில் அம்மா விற்கு லாலிபாடுகின்றனர் என்றார். நமது கலாச்சாரத்தை அழிக்க இந்தியை கொண்டு வருகின்றனர் நமக்கு தெரியாமல் நவோதயா பள்ளி,கேந்திரவித்தியாலயம் மூலம் சமஸ்கிருதத்தை புகுத்துகின்றனர். சமஸ்கிருதத்திற்க்கு இப்போது என்ன அவசியம். 37 பேர் டெல்லி போய் என்ன செய்ய போகிறார் என பலர் கேட்கின்றனர் இந்த பிரச்னை பற்றி கேட்க தான் கனிமொழி டெல்லி சென்றிருக்கிறார் என்றார்.இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம் எல் ஏ, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், நிர்வாகிகள் உள்பட திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பள்ளிப்பட்டிபஞ்சாயத்து கரியாபனஹள்ளி கிராமம் ராஜி கவுண்டர் தந்தை அப்பு கவுண்டர் என்பவர் விவசாய நிலத்தில் கடந்த 6 மாதமாக மின் கம்பம் பழுதடைந்து உடைந்து விவசாய நிலத்தில் கீழே விழும் நிலையில் உள்ளது .இதனால் விவசாயிகள் உயிருக்கு பயந்து நிலத்தில் விவசாயம் செய்யாமல் இருந்து வருகின்றனர். மின் கம்பம் பழுதடைந்து சாய்ந்து இருக்கும் பகுதியில் கரியாபனஹள்ளி அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப் பள்ளி மாணவ மாணவிகள் அப்பகுதியில் பள்ளிக்குச் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளர் ராஜ் கவுண்டர் பாப்பாரப்பட்டி மின்சார நிலையத்தில் பலமுறை நேரில் சென்று பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றச் சொல்லியும் பாப்பாரப்பட்டி மின்சார நிலையம் அலுவலர் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கில் உள்ளனர். பழுதடைந்து மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி :புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி – 2019 நிகழ்ச்சி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, துவக்கி வைத்தார்.
எதிர்கால விஞ்ஞானிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஓர் முயற்சியாகவும், மாணவ/மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களின் படைப்பை உலகறியச் செய்வதற்காகவும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியை இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, துவக்கி வைத்தார்,பின்னர் மாணவ, மாணவிகளின் விஞ்ஞான ரீதியான அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு அதற்கான விளக்கங்களையும் கேட்டறிந்து, அவர்களை பாராட்டி ஊக்குவித்தார்.இந்நிகழ்ச்சியில் புதிய தலைமுறை வார இதழ் ஆசிரியர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். சாண்டி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சத்திய நேச குமார் வரவேற்றார். சாண்டி குழும நிறுவனத்தலைவர் செல்வராஜ், அதன் துணைத் தலைவர் சாண்டி தலைமை விருந்தினராகவும், புதிய தலைமுறை முதுநிலை மேலாளர் ராஜா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதிகளை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்ட தங்களது படைப்புக்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.இயற்கை சுத்திகரிப்பு, தண்ணீர் மேலாண்மை, குப்பைகளை கையாள்வது, இருச்சக்கர வாகனத்தை குடிபோதையில் இயக்க இயலாதது, அடுக்குமாடி குடியிருப்பு வீட்டு தோட்டத்தில் வளரும். செடிகளை சென்சார் மூலம் கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர், இது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுஇன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பத்திரிகையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
by mohan
written by mohan
தூத்துக்குடி பாலிமர் தொலைக்காட்சி ஸ்ரீவைகுண்டம் தாலுகா செய்தியாளர் காவல்துறை ஆய்வாளர் தூண்டுதலின் பேரில் காவல்துறை அதிகாரியும் ரவுடிகளும் இணைந்து கை கோர்த்து ரவுடிகளால் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் சங்க செயலாளர் காசிலிங்கம், தலைவர் ஜெகந்நாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் பேசிய செயலாளர் காசிலிங்கம் தமிழகத்தில் தொடர்ந்து செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் காவல் துறையினரால் குறிப்பாக காவல்துறை ஆய்வாளரால் ரவுடிகளால் அரசியல்வாதிகளால் தாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.இது வருத்தத்தையும் மிகுந்த சோகத்தையும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.காவல் துறையே அதிகாரியே செய்தியாளர்களை அடியாட்களை வைத்து வெட்ட சொல்வது அடிக்க விடுவது மிகவும் கண்டிக்கதக்கது என்றார்.மேலும் தமிழக அரசு பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு உடனே வழங்கிட இந்த ஆர்ப்பாட்டம் மூலம் கோரிக்கை வைக்கிறோம் என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக சட்டசபை வருகின்ற 28ந்தேதி காலை 10மணி அளவில் கூடுகிறது. இதில், கடந்த பிப்.8ந்தேதி அறிவிக்கப்பட்ட பட்ஜெட் குறித்த மானிய கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். மேலும், திமுக கொண்டு வந்த சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த வாக்கு எடுப்பும் நடைபெறும் என தெரிகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு..ரூ 6 ஆயிரம் பெற மீண்டும் வாய்ப்பு..
by mohan
written by mohan
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000/- வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கென திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் எதிர்வரும் 21.06.2019, 22.06.2019 மற்றும் 23.06.2009 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் விவசாயிகள் தனியாக மனு எதுவும் அளிக்க தேவையில்லை.விவசாயிகள் இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு கீழ்க்கண்ட விபரங்கள் : சர்வே எண், பட்டா எண், ஆதார் எண்,
வங்கி சேமிப்புக்கணக்கு எண், குடும்ப அட்டை எண்
மொபைல் எண் போன்றவைகளை சம்பந்தப் பட்ட கணக்கெடுப்பு பணியாளர்களிடம் / கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்துப் பயன் பெறலாம்.
மேலும், விவசாயிகள் தங்களது நிலத்திற்கான பட்டா அவர்களது தாய் அல்லது தந்தை பெயரில் இருக்கும் பட்சத்தில் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளவும் மேற்படி முகாமில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் மேற்படி சிறப்பு முகாமை நல்ல முறையில் பயன்படுத்தி ரூ 6 ஆயிரம் நிதியுதவி பெறுவதற்கு தேவையான விவரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மேற்கண்ட விபரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாட்ஸ்அப் எண்: 7598866000 க்கு அனுப்பி பயன்பெறலாம் எனவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் கேட்டுக் கொண்டுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 108 அவசர கால ஊர்தி இயங்கி வந்தது.தற்போது அந்த வாகனம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது .காளவாசல் பகுதி அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி என்பதால் இந்த இடத்தில் எப்பொழுதும் ஒரு அவசர கால ஊர்தி இருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் காளவாசல் பகுதியில் மேம்பாலம் வேலைகள் நடப்பதால் அவசரத்திற்கு வாகனம் தேவைப்பட்டால் சுமார் மூன்றிலிருந்து நான்கு கிலோமீட்டர் இருந்துதான் வாகனம் வர வேண்டிய நிலை உள்ளது.வாகனம் வருவதற்கு காலதாமதம் ஆவதாகவும் விபத்தில் காயம் அடையும் நபர்கள் கோல்டன் அவர்ஸ் என்னும் நேரத்தை கடந்து ரத்தங்கள் அதிக அளவு வெளியேறி உயிர் இழக்கும் சூழ் நிலையும் ஏற்படும் அஞ்சுகிறார்கள் பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு இஎம்ஆர்ஐ 108 நிர்வாகம் மீண்டும் காளவாசல் பகுதியிலேயே அந்த வாகனத்தை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
<
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூரில் விடுதலை சிறுத்தை பிரமுகர் குடோனில் 4 டன் போதை பாக்குகள் பறிமுதல் டிஎஸ்பி பாலசுப்பிரமணி அதிரடி…
by mohan
written by mohan
சைதாப்பேட்டை பகுதியில் முகமது இப்ராகிம் என்ற விடுதலை சிறுத்தை பொறுப்பாளர் குடோனில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பாக்குகள் இருப்பதாக குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட போது சுமார் 4 டன் அளவுள்ள தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் டிஎஸ்பி பாலசுப்பிரமணியின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில்வே சந்திப்பில் தினசரி 100-க்கும் மேற்பட்ட புறநகர் மற்றும் விரைவு, அதிவிரைவு ரயில்கள் சென்று வருகின்றன. கோடை வெய்யில் அதிகமாக இருப்பதாலும் நீர் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் ரயிலை விட்டு பயணிகள் இறங்கியதும் பணம் கொடுத்து வாங்கும் குடிநீருக்காகவும் நெரிசல் ஏற்படுகின்றது.
ஐஆர்டிசி விற்பனை செய்யும் ரயில் நீர் பயணிகளுக்கு சரியாக கிடைப்பதில்லை. தென்னக ரயில்வே அனைத்து ரயில் நிலையங்களில் ரயில் நீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக யோக தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் மழை பொழிய வேண்டியும் யோகசனம் நடைபெற்றது…..
by mohan
written by mohan
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பள்ளி மைதானத்தில் உலக யோக தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் மழை பொழிய வேண்டியும் யோகசனம் நடைபெற்றது 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பு பிராத்தனை செய்தனர்.நாளை உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதையேட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பள்ளியில் மெகா யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல வண்ண ஆடைகள் அணிந்து 2000 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டு சூர்ய நமஸ்காரம், வஜ்ராஸசனம், புஜங்காசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்தனர்.
தொடர்ந்து குழுவாக சேர்ந்து பிரமிட் அமைத்து போகாசனம் செய்தல், கயறு கட்டி அதில் யோக ஆசனங்களை செய்தனர். இது பார்வையாளர்களுக்கிடையே ஆச்சர்யத்தை ஏற்பத்தியது.பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவ – மாணவிகளின் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து பங்குபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கழிவுநீரை வடிகட்டி குடிக்கும் கிராம மக்களின் அவல நிலை முறியடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தண்ணீர் பஞ்சம் குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தால் மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்
திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையங்குளம் கிராமம் உள்ளது இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இக்கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை போர்வெல் போட்டும் அன்றாடம் உபயோகிக்கும் உப்புத் தண்ணீர் கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இக்கிராம மக்கள் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் யாரும் செவிசாய்க்காமல் நடந்து கொண்டதால் இக்கிராம மக்கள் சாலையோரங்களில் கிடக்கும் கழிவு நீரை வடிகட்டி குடிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் இந்தக் கழிவு நீரை எடுப்பதற்கு கூட அரை கிலோ மீட்டர் தூரம் ஊரில் இருந்து நடந்து வந்து தண்ணீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் குடிநீருக்காக தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் நான்கு வழி சாலை அருகே உள்ள ராயபாளையம் கிராமத்திற்கு தான் செல்ல வேண்டும் இங்கு செல்ல குறைந்தபட்சம் 5 கிலோமீட்டர் தூரம் உள்ளது ஆதலால் ஆண்கள் தினந்தோறும் இருசக்கர வாகனங்களில் குடங்களை தூக்கிக் கொண்டு தண்ணீர் எடுத்து வருவதை முழுநேர வேலையாக பார்த்து வருகின்றனர் மேலும் இக் கிராமத்தில் ஆடு மாடுகள் அதிக அளவில் வளர்ப்பதால் தண்ணீருக்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர் அமைச்சர் தொகுதி என்பதால் தொகுதி மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் தீர்ந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து 22/06/2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து 22/06/2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு செய்துள்ளது.
இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிநீர் பிரச்சினைத் தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன?” “நீர் வற்றி வருகிறது என்று கடந்த ஆண்டே தெரிந்திருந்தும் அது குறித்து அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அதிமுக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியும், முதலமைச்சர் திரு பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு அடாவடியான பேட்டிகளில் ஈடுபட்டுள்ளதே தவிர- ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன் வரவில்லை. தண்ணீருக்காக காலிக்குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் பொது மக்களையும் கொச்சைப் படுத்திடும் வகையில் அமைச்சர்களும், முதலமைச்சரும் பேட்டியளித்து வருகிறார்கள். “குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி” என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி ஆணவத்துடன் பேட்டி கொடுக்கிறார்.
“எங்கோ ஓரிடத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையை பெரிதாக்கி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்” என்று முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி ஊடகங்களுக்கும் பத்திரிக்கைகளுக்குமே நேரடியாக எச்சரிக்கை விடுக்கிறார். தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியாமல் தோல்வியடைந்து நிற்பதோடு மட்டுமின்றி- துறை அமைச்சரும், முதலமைச்சரும் அளிக்கும் பேட்டிகள் “குப்புறத்தள்ளிய குதிரை குழியும் பறித்து விட்ட கதையாக” இருக்கிறது.
“உணவகங்கள் மூடப்படுவது”, “பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீரின்றி தவிப்பது”, “ஐ.டி. கம்பெனிகள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய உத்தரவிட்டிருப்பது” “பல தங்கும் விடுதிகள் மூடப்படுவது” என்று எங்கு பார்த்தாலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடி, சென்னை மாநகர மக்களும், தமிழகமெங்கும் உள்ள மக்களும் சொல்லொனாத் துயரத்திற்கு உள்ளாகி தினம் தினம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களும் வரலாறு காணாத கடும் இன்னலுக்கு உள்ளாகி- குடிநீர் இல்லாப் பிரச்சினை எதிர்காலத்தின் மீதே மக்களுக்கு ஒரு பீதியையே ஏற்படுத்தியுள்ளதை இந்த அரசு ஏற்க மறுத்து- குடிநீர் பிரச்சினையே இல்லை என்று பொறுப்பற்ற விவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. கடமை தவறிய அதிமுக அரசு கண்ணையும் மூடிக்கொண்டிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது.
ஆகவே, அதிமுக அரசின் அலட்சியத்தையும், முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாகபடு தோல்வியையும் கண்டிக்கும் வகையிலும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க உடனடியாக ஆக்கபூர்வமான, போர்க்கால நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபட வேண்டுமென வலியுறுத்தியும் வருகின்ற 22.6.2019 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கழக மாவட்டச் செயலாளர்கள் பொதுமக்களின் ஆதரவுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறவழியில் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன்.
மூத்த நிருபர்:கீழை நியூஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை நால்ரோட்டில் தஞ்சாவூரில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடை ஸ்வரர் சுப்பிரமணியனை கைது செய்த போலீசாரை கண்டித்து திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட போது மதத்திற்கு ஒரு சட்டத்தை பயன்படுத்துவதை கண்டித்தும், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இத்தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு லாவண்யா தலைமையில் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
நிலக்கோட்டை நால் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.. இந்த சாலை மறியலில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்ட செயலாளர் இந்து முன்னணி ஜெயக்குமார், நிலக்கோட்டை நகர செயலாளர் ராஜா, அம்மையநாயக்கனூர் நகரத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரதாப் கிருஷ்ணன் கோபிநாதன் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் 112 மனுக்களுக்கு உடனடி தீர்வு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி) 12ந் தேதி முதல் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் நடைபெற்று வருகிறது..
இந்த முகாமில் நிலக்கோட்டை, கொடைரோடு, விளாம்பட்டி, அணைப்பட்டி, சிலுக்குவார்பட்டி, பிள்ளையார் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை (நேற்று) சுமார் 1342 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களில் பட்டா மாறுதல் மற்றும் முதியோர் உதவித்தொகை உட்பட 112 மனுக்களுக்கு உடனடியாக தகுதியான நபர்களுக்கு உடனடித் தீர்வாக முடிவு செய்து பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை சான்று வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை அருகே உள்ள குல்ல லக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் வயது 55 தனது மகளுடன் வந்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை அறிந்த நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உங்களுக்குரிய கோரிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுக்கள் ஆக கொடுங்கள் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரன் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கொடுத்த மனுவில் எனக்குரிய சொத்தை எனது உறவினர்கள் பறித்துக் கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். இதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து வருவாய் அலுவலர் வேலு அதிகாரிகளை அழைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை முந்தைய தன்மையை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒவ்வொரு மனுவையும் நிலுவையில் வைக்காமல் அதற்குத் தேவையான மூல ஆவணங்களை கொண்டு வரச் சொல்லியும், உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நிலப்பட்டா மற்றும் ரேஷன் கார்டுகள் வேண்டி மனு செய்தவர்களுக்கு உடனடியாக பட்டா மற்றும் குடும்பக் அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் வேலு வழங்கினார்.
அப்போது உடன் நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், மண்டலத் துணை தாசில்தார்கள் ருக்மணி, மணிமேகலை, ராமசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சரவண வாசன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே என். ஊத்து பட்டியைச் சேர்ந்த ஒச்சு மகன் மகேந்திரன் வயது (30).இவர் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான மாடுகள் நேற்று (18/06/2019) வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றது.. மேய்ச்சலுக்குச் சென்று வீடு திரும்பிய மாடுகள் ஒன்றொன்றாக கீழே விழுந்து இறந்துள்ளது.
இந்த மாடுகள் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இதே ஊரைச் சேர்ந்த ஓச்சப்பன் வயது 55. என்பவரின் ஒரு மாடு இதே மாதிரி மேய்ச்சலுக்கு சென்றது இறந்து போனது. அதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம் ஆகும்.
இத்தகவல் அறிந்த நூத்துலாபுரம் கால்நடை துறை உதவி மருத்துவர் தனசேகரன் தலைமையில் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது உடன் கிராம நிர்வாக அலுவலர் கணேசன், கால்நடை உதவியாளர்கள் முத்து, ராஜ்குமார் உள்பட பலர் இருந்தனர். மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் திடீரென மர்மமான முறையில் இறந்ததை அதைப்பார்த்த இக்கிராம மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் இராமநாதபுரத்தில் மத நல்லிணக்க பிரார்த்தனை…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ராமநாதபுரம் Je.S.ரமேஷ்பாபு தலைமையில் வழிவிடு முருகன் கோயில், மசூதி, சர்ச் ஆகியவற்றில் சர்வ மதப் பிரார்த்தனை நடந்தது. இதையத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கொடியேற்றப்பட்டது. அரசு மருத்துவமனையில 500 உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு பழம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் பை வழங்கப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லதுரை அப்துல்லா, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ். விக்டர், ஆர்ட் கணேசன், வழக்கறிஞர் அன்புச்செழியன், மாவட்டத் துணைத் தலைவர்கள் எம்.கே. முத்துகிருஷ்ணன், எஸ். வி.கணேசன் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொதுச் செயலர்கள் அழகு, மோதிலால் நேரு, முனியசாமி, சேவா தள தலைவர் காருகுடி சேகர், வட்டாரத் தலைவர்கள் கோபால், ஜோதிபாலன், சுப்ரமணிய சேர்வைக்காரர், சேதுபாண்டியன், தனசேகரன், முனீஸ்வரன், நகர் தலைவர் கோபி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆனந்த் உத்திரலிங்கம், விக்னேஷ்வரன், மற்றும் பாஸ்கரசேதுபதி, முகமது யூசுப், செய்யது அப்தாகீர், கார்மேகம், பாபு, பாண்டியன், ஜபருல்லாகான், சுப்ரமணியன், மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று (19/06/2019) அமீரக காங்கிரஸ் கமிட்டி இந்திய எழுச்சி தினமாக கடைப்பிடித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக இன்று பிற்பகல் அமீரக காங்கிரஸ் கமிட்டி சார்பாக பொதுச் செயலாளர் அபூபக்கர், பொருளாளர் கீழை ஜமீல், சிறுபான்மைத் துறை தலைவர் ஜுனைத் ஆகியோர் சாக்லெட், பழச்சாறு பக்கெட்களை தமிழக, கேரள, வட இந்திய மக்களுக்கு மகிழ்வுடன் வழங்கினர்.
இந்த நிகழ்வை சாதாரணமாக கொண்டாடும் நிகழ்ச்சியாக இல்லாமல் அனைவரும் பயன்தரும் வகையில், பெரும்பாலும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று பொருட்கள் வழங்குவதை அனைவரும் வரவேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து முகிலன் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை ஒருநபர் கமிஷனின் 12வது கட்ட விசாரணையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் அளித்தனர்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. தற்போது இந்த விசாரணை கமிஷனின் 12-வது கட்ட விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 11 கட்ட விசாரணையில் பொதுமக்கள், காயம்பட்டோர்,கலவரத்தில் உயிர் இழந்தவர்கள் உறவினர், குடும்பத்தினர் என மொத்தம் 329 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
12- வது கட்ட விசாரணையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான சிலர் கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட கலவரம் திட்டமிட்ட சதி என்பதை நிருபிக்கும் வகையில் வீடியோ ஆதாரத்தை சமூக ஆர்வலர் முகிலன் வெளியிட்டார். அந்த ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை நாங்கள் விசாரணை கமிஷனில் சமர்ப்பித்தனர். முகிலனை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரு நபர் கமிசனில் புகார் அளித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நமது இணையதள செய்திகள் மதுரை எல்லீஸ் நகர் சர்வோதயா நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது என செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன் அடிப்படையில் நேற்று (18/06/2019) இரவோடு இரவாக அந்த பாதாள சாக்கடை பழைய மூடியை அகற்றி விட்டு புதிய மூடி பொருத்தி உள்ளார்கள். செய்தி வெளியிட்ட கீழை நியூஸ் நிர்வாகத்துக்கும் (சத்திய பாதை மாத இதழ் நாளிதழுக்கும்) பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
நீக்கப்பட்ட பழைய மூடியையும் உடனே அப்பகுதியில் இருந்து நீக்கினால் நல்லது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.