திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒத்தகடை, சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மதுரை மேலூரை சேர்ந்த ஸ்டாலின் (25) பெரியசாமி (23) ஆறுமுகம் (20) அஜய் (22) சுதா (22) முனுசாமி (17) ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
சாணார்பட்டி சார்பு ஆய்வாளர்கள் சேக்அப்துல்லா, காதர் மைய்தீன் மற்றும் காவலர்கள். ஆறு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 30 செல்போன் மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள ட்ரோன் (பறக்கும்கேமரா) ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.