இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்காக நீர், மோர், தர்பூசனி பழம் உட்பட தாகம் தீர்க்கும் வகையில் பந்தல் திறக்கப்பட்டு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி தலைவர் தளபதி தமீம், பரமக்குடி நகர் நிர்வாகிகள் அர்ஜீன், துரை மருது, பார்த்திபன், சுரேஷ், இராமேஸ்வரம் நகர்தலைவர் கோவிந்தராஜ் நகர்செயலாளர் கோபிசாரதி நகர் பொருளாளர் கோபிகிருஷ்ணா இளைஞரணி பொருளாளர் ஸ்டீபன் , நகர் இளைஞரணி செயலாளர் ராஜிவ்(எ)நாகேஸ்வரன் நகர் இணை செயலாளர் கர்ணன் நகர் மாணவரணி செயலாளர் கதிரவன் நகர் இளைஞரணி பாலா வெங்கடேஸ்வரன் , நகர் மகளிரணி தலைவி அருணகிரி, ராமலட்சுமி செயலாளர் சங்கீதா பொருளாளர் அட்சயா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Category:
மாநில செய்திகள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி வெள்ளரி மற்றும் பழரசம்,மோர் பானங்களை வழங்கினார்.இதில் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார் மாவட்ட துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ நகரச் செயலாளர் பெரி பாலமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலங்கைக்கு கடத்த இருந்த 12 லட்சம் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் ஒருவர் கைது !
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த பெரியபட்டினம் கடல் பகுதியில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்துவதற்கு வாகனத்தில் கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் OCIU பிரிவினர் திருப்புல்லாணியை அடுத்த ஆனைகுடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த TATA AC வாகனத்தை சோதனை செய்தனர் சோதனையில் 11,88,000 லட்சம் மதிப்பிலான PREGAP Capusules எனும் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதை கண்டதும் அதனை பறிமுதல் செய்த போலீசார் வாகன ஓட்டுனரான திருப்புல்லாணி நம்பியான் வலசை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(20) என்பவரை பிடித்து திருப்புல்லாணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் தேனியில் அதிரடி கைது! கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை! கோவை அழைத்து வரும்போது விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்..
by Askar
written by Askar
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் தேனியில் அதிரடி கைது! கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை! கோவை அழைத்து வரும்போது விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்..
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கருக்கு என்று ரசிகர் பட்டாளேமே இருந்து வருகிறது. அரசியல் விமர்சகரான இவர் தொடர்ந்து ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக தாக்கி பேசிவந்தார். கடந்த ஆண்டு நீதிபதியை விமர்சனம் செய்த காரணத்தால் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அப்படி இருந்த போதிலும் திமுக அரசின் செயல்பாடுகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை குறிவைத்து சவுக்கு சங்கர் தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் தினமும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அரசியல் ரீதியாக பேசும் சவுக்கு சங்கர் சில நேரங்களில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில், காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவை அழைத்து வருகின்ற நிலையில் காவல்துறை வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது.காலில் லேசான காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32பேர் படுகாயம் ! சிறுவன் பலி !!
by Baker BAker
written by Baker BAker
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைச்சாலையில் குஞ்ச பண்ணை அருகே உதகைக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தததாகவும் சிறுவன் பலியானதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சென்னை வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு குழுவாக 16 பெரியவர்கள் 15 குழந்தைகள் மற்றும் என 31 பேர் கடந்த 30 ஆம் தேதி நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு 1 ம் தேதி மேட்டுப்பாளையம் வந்தடைந்துள்ளனர். பின்னர் ஏற்கனவே ஆன்லைன் மூலம் பதிவு செய்த சுற்றுலா வாகனத்தில் (மினி பேருந்து) உதகைக்கு சென்றுள்ளனர். ஊட்டியை சுற்றிப் பார்த்து விட்டு மாலை 5 மணியளவில் ஊட்டியில் இருந்து தாங்கள் வந்த சுற்றுலா வாகனத்தில் மேட்டுப்பாளையம் திரும்பியுள்ளனர். சுமார் 7 மணியளவில் வாகனம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் பவானிசாகர் அணை காட்சி முனை அருகே வந்த போது சுற்றுலா வாகனம் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இதில் வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உள்பட 32 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். படுகாயமடைந்த 6 பேருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள குழந்தைகள் பெண்கள் உட்பட இருபத்தைந்திற்கும் மேற்பட்டோருக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்ததாக தகவல் அறிந்தவுடன் கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை அனுப்பி வைத்தவுடன் நேரில் வந்து பாதிக்கப்பட்டுள்ளவனுக்கு சிகிச்சை அளித்தார். மேலும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே செல்வராஜ் மேட்டுப்பாளையம் நகர மன்ற உறுப்பினர் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அஷ்ரப் அலி உள்ளிட்ட மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்கள் அண்மையில், ஏற்காட்டில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், தற்போது கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலை, பரமக்குடி மகளிர் தனிச்சிறைச்சாலை மற்றும் முதுகுளத்தூர் சிறைச்சாலையில் கைதிகள் அறை, சமையல் கூடம், குளியல் அறை, குடிநீர், நூலகம், பார்வையாளர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஷ் ஆகியோர் இன்று (03.052024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை, குற்றங்களுக்கான காரணங்கள், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர்கள் சுவாமிநாதன் (இராமநாதபுரம்), கார்த்திகேயன் (திருவாடானை), சாந்தி (பரமக்குடி), சடையாண்டி (முதுகுளத்தூர்) தலைமை நீதித்துறை நடுவர் கே.கவிதா, இலவச சட்ட உதவி மைய செயலர் கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கோவில் திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் மாவட்ட எஸ்பியிடம் கோரிக்கை !
by Baker BAker
written by Baker BAker
இராமநாதபுரம் அருகே உள்ள தேர்போகி கிராமத்தில் 150 குடும்பங்கள் இருந்து வருவதாகவும் இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக சுடலைமாடசாமி என்ற ஆலயம் ஒன்று அமைத்து காலங்காலமாக வழிபட்டு வந்துள்ளனர் . இந்த சூழ்நிலையில் அங்கு பூசாரியாக இருந்தவரை பணி நீக்கம் செய்ததை தொடர்ந்து அவர் கிராமத்திற்கு எதிராக தனியாக ஊருக்கு வெளியே இந்தக் கோயில் போன்று சிலைகள் அமைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த சென்றதாகவும் அதனை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தற்போது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் அந்த கோவிலில் வருகிற 10-ம் தேதி திருவிழா நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த திருவிழா நடந்தால் இரு தரப்புக்கும் இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி தேர்போகி கிராமத்தைச் சேர்ந்த தலைவர் தலைமையில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனியில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது! 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு மோர் வழங்க திட்டம்..
by Askar
written by Askar
பழனியில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது! 15 நாட்களுக்கு பொதுமக்களுக்கு மோர் வழங்க திட்டம்..
பழனி காந்தி மார்க்கெட்டில் நேதாஜி நற்பணி மன்றம் சார்பில் தண்ணீர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். காந்தி மார்க்கெட் வழியாக தினமும் வரக்கூடிய மக்களுக்கு மோர் வழங்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் வேலுமணி, நேதாஜி நற்பணி மன்ற தலைவர் முருகானந்தம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு மோர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து 15 நாட்களுக்கு கோடை வெப்பம் தனியும் வரையில் மோர் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
பழநி- ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கண்டித்த தாத்தாவை பூச்சி மருந்து கலந்த சிக்கன் கொடுத்து கொன்று நாடகமாடிய பேரன் கைது..
by Askar
written by Askar
கண்டித்த தாத்தாவை பூச்சி மருந்து கலந்த சிக்கன் கொடுத்து கொன்று நாடகமாடிய பேரன் கைது..
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த |வழக்கில் திடீர் திருப்பமாக அவரது பேரன் பகவதி கைது. நடத்தையை கண்டித்ததால் தாய் மற்றும் தாத்தாவுக்கு பூச்சி மருந்து கலந்து சிக்கன் ரைஸ் தந்தது அம்பலம்.
சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தாய், தாத்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் பகவதி புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணையில் உண்மை வெளியே வந்துள்ளது. தாய் நித்யா தீவிர சிகிச்சையில் உள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு..
by Askar
written by Askar
விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு..
கஸ்தூரி தவறி விழுந்ததும் உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்தபோது அபாய சங்கிலி வேலை செய்யாததால் 8 கி.மீ. தள்ளி ரயில் நின்ற இடத்தில் கர்ப்பிணியை தேடினர்
சுமார் 10 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டு தவறி விழுந்த கஸ்தூரியை தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை.
2 மணி நேர தேடலுக்குப் பின் உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி கஸ்தூரி சடலமாக மீட்கப்பட்டார்.
சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி கஸ்தூரி வளைகாப்பிற்காக ரயிலில் பயணித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இணைய வழி சூதாட்டத்தை ஊக்குவித்தால் ஒரு ஆண்டு சிறை: தமிழக அரசு கடும் எச்சரிக்கை..
by Askar
written by Askar
இணைய வழி சூதாட்டத்தை ஊக்குவித்தால் ஒரு ஆண்டு சிறை: தமிழக அரசு கடும் எச்சரிக்கை..
இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது துாண்டும் நபர்கள், நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணைய வழி சூதாட்டத்தால், ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்றவற்றை விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இணையவழி சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது துாண்டும் நபர்கள், நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது ஆகிய இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
அதே குற்றத்தை மீண்டும் செய்தால் 1-3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பகிர விரும்புவோர் அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்க விரும்புவோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் https://www.tnonlinegamingauthority.tn.gov.in/ords/r/wstnoga/tnoga112/home என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அருப்புக்கோட்டையில், சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற சன் டிவி செய்தியாளர் உயிரிழப்பு: “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” குழுமத்தின் ஆசிரியர் இரங்கல்.
by Askar
written by Askar
அருப்புக்கோட்டையில், சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற சன் டிவி செய்தியாளர் உயிரிழப்பு: “கீழை நியூஸ்” மற்றும் “சத்திய பாதை” குழுமத்தின் ஆசிரியர் இரங்கல்.
இது சம்பந்தமாக கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் ஆசிரியர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை சன் டிவி செய்தியாளர் ராஜா சங்கர் இன்று மே 2 காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சென்று செய்தி சேகரித்துவிட்டு உடல் சோர்வடைந்த நிலையில், மீண்டும் அருப்புக்கோட்டைக்கு வந்த உடனே உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் அறிந்து தாங்கா துயரம் அடைந்தோம்.
கடுமையான சவால்கள் நிறைந்த பணிபுரியும் செய்தியாளர்களுக்கு, ஊதியம் என்னவோ குறைவுதான்! சமூக அக்கறையோடு செய்திகளை தந்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும், புலி வாலைப் பிடித்த கதையாக கௌரவத்திற்காக இங்கே பத்திரிகை பணியில் பலர் உள்ளனர். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது கிடைக்கும் ஊதியத்தை விட மிக குறைவான ஊதியம் பெறும் செய்தியாளர்கள் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.
அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், அவர்களது குடும்பம் அந்த கணமே நடுத்தெருவுக்கு வந்துவிடும் சூழல்தான் நிதர்சனம். எனவே, பணியின் போது உயிரிழந்த சன் டிவி செய்தியாளர் அவர்களின் குடும்பத்திற்கு, சன் டிவி நிறுவனம் உடனடியாக தகுந்த நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு கருணை உள்ளத்தோடு நிதி உதவியும், வாய்ப்பிருப்பின் அவரது குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 192 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! சுமார் நூறு பயணிகளின் உடைமைகளை விட்டுச் சென்றது..
by Askar
written by Askar
மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 192 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! சுமார் நூறு பயணிகளின் உடைமைகளை விட்டுச் சென்றது..
துபாய் செல்லும் விமானத்தின் மொத்த எடை அளவு
அதிகமானதால் பயணிகளின உடமைகள் நாளை கொண்டு செல்லப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு செல்ல தினமும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை செயல்பட்டு வருகிறது. துபாயிலிருந்து 188 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று பகல் 12:30 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.மீண்டும மதுரை விமான நிலையத்தில் இருந்து 192 பயணிகளுடன் துபாய் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் பயணிகளின் மொத்த இருக்கை 180 அளவில்
இருந்தும் குழந்தைகள் உள்பட 192 பயணிகள் மதுரையில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர். இதில் அதிக எடை காரணமாக 92 பயணிகளின் உடமைகள் மட்டும் விமானத்தில் ஏற்றப்பட்டது 100 பயணிகளின் உடைமைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டு செல்லப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். உடைமைகள் இல்லாமல் தற்போது துபாயிக்கு பயணம் சென்ற பயணிகள் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர் வி காளமேகம்
.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வரக்கூடிய 5 ம் தேதி, வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தேடியும், மழை வேண்டியும் 3 இடங்களில் சிறப்பு தொழுகை..
by Askar
written by Askar
திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வரக்கூடிய 5 ம் தேதி, வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தேடியும், மழை வேண்டியும் 3 இடங்களில் சிறப்பு தொழுகை..
தமிழ்நாட்டில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே அதாவது கடந்த 3 மாதங்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வெப்ப அலை வீசிக்கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டுகளில் சில நாட்கள் மழை பெய்து வெப்பத்தை தணித்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மழை கடுகளவும் பெய்யாததால் வெப்பத்தின் தாக்கத்தில் பொதுமக்கள் நிலைகுலைந்து உள்ளனர். ரோட்டில் நடமாடவே முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் உமர் பாரூக் மழாஹிரி, செயலாளர் அபுதாஹிர் நூரானி, பொருளாளர் சபியுல்லாஹ் தாவூதி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான வறட்சி காலங்கள் மற்றும் மழை இல்லாத நேரத்தில் ஒரு பெரிய திடலுக்குச் சென்று மழை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் திருப்பூர் உள்பட தமிழகம் எங்கும் மழையின்றி வெப்பம் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து வரும் இச்சூழலில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தேடியும், அல்லாஹ்வின் கோபத்தை விட்டு பாவ மன்னிப்பு கேட்டு, மழை வேண்டி பிரார்த்திக்கும் விதமாக திருப்பூர் வட்டார ஜாமாஅத்துல் உலமா சபை சார்பில் வரும் 5 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு காங்கேயம் ரோடு, சி.டி.சி டெப்போ அருகில் உள்ள அல்-அமீன் பள்ளி வளாகம், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஜன்னத்துல் பக்கி கபர்ஸ்தான் பள்ளிவாசல், மங்கலம், எம்.எஸ்.ஜெ.எம் திருமண மஹால் ஆகிய 3 இடங்களில் மழை தொழுகை நடக்க உள்ளது.
அதனால் முஸ்லீம் பெருமக்கள் மஹல்லா வாசிகள், மதரஸா மாணவர்கள், சிறுவர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொண்டு மழை தொழுகைக்கு வரவேண்டும். தொழுகைக்கு வரும் முன் நபிலான தான தர்மங்கள் செய்துவிட்டு வரவும். வீட்டிலேயே ஒழு செய்துவிட்டு தொழுகைக்கான விரிப்புகளை கொண்டு வரவேண்டும். தொழுகை முடிந்தவுடன் அழுது பிராத்தனை செய்யப்படவுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சேலம் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு.
by Askar
written by Askar
சேலம் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினரை கோயில் திருவிழாவில் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம்; கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு. கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு என அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இன்று மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலில் வாக்குவாதம்க் ஏற்பட்ட பிரச்சனை, பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இந்த மோதலின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கோவில் திருவிழா நடைபெறும் இடத்தின் அருகே உள்ள கடைகள் மற்றும் வாகனங்களுக்கு மோதலில் ஈடுபட்டவர்கள் தீ வைத்ததால் அப்பகுதி கலவரம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது காவல்துறையினர் மீதும் கல் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தீவட்டிப்பட்டி முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். மோதலின் காரணமாக கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
107 டிகிரி கொளுத்திய வெயில்! சிறிது நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழை! மகிழ்ச்சியில் வேலூர் மக்கள்..
by Askar
written by Askar
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டியுடன் பெய்த கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.
வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவான நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்து சற்று வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்..
கனிமவளங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அம்பை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறைப்படுத்தவும் இன்று முதல் தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் இருந்து தென்காசி, நெல்லை, குமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனிம வளங்கள் கனரக வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்தால் திருவனந்தபுரத்திற்கு அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.
அதேபோல் இந்த கனரக வாகனங்களின் போக்குவரத்து நெரிசலால் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் விமானங்களை தவற விட்டு தவிக்கும் அவலமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கனிம வளங்களை எடுத்துச் செல்ல முறையான அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்த போதிலும், முழுமையான விபரங்கள் இல்லாமல் கனிமவளத்துறை உதவி இயக்குனரின் கையொப்பத்துடன் வெற்று அனுமதி சீட்டுகளோடு வாகனங்கள் சென்று வருகிறது. அதில் வாகனங்கள் எங்கிருந்து எங்கு செல்கிறது, யாருக்கு அவை கொண்டு செல்லப்படுகிறது? எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற விவரங்கள் இல்லை. இதனால் போலி பாஸ் உள்ளிட்ட பலவிதமான முறைகேடுகள் நடந்து அரசுக்கு தினமும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க சுற்றுலா தலங்களுக்கு வழங்கப்படுவது போல் கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் இரவு பகலாக 24 மணி நேரமும் தீவிரமாக இயங்கும் அலுவலகம் கனிமவளத்துறை அலுவலகம் மட்டுமே. தற்போதுள்ள நடைமுறையை மாற்றி இ- பாஸ் வழங்குவதன் மூலம் எத்தனை வாகனங்கள்? எவ்வளவு கனிமங்களை கொண்டு செல்கிறது? எந்த ஊருக்கு? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்ற விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்த நடைமுறையால் எந்த வித முறைகேடுகளுக்கும் இடமில்லாமல் போய்விடுவதால் அரசுக்கும் வருவாய் அதிகரிப்பு ஏற்படும். மேலும் இ – பாஸ்களில் பயண நேரம் குறிப்பிட்டு வழங்குவதன் மூலம் போக்குவரத்தையும் முறைப்படுத்தி நெரிசலை தவிர்க்க இயலும். ஆகவே கனிம வள வாகனங்களுக்கு இ- பாஸ் கட்டாயம் என்ற நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது..
by Askar
written by Askar
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.
நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல இடங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், இந்தியாவில் இன்றைய தினம் பீகார், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜார்க்கண்ட், ஒடிசா, தெலங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் வெப்ப அலை வீசி உள்ளது . இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை ஒட்டி வெயில் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த 19 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.
1.) சென்னை – 39°C / 102.20°F
2.) திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் – 40.9°C / 105.63°F
3.) காஞ்சிபுரம் – 40.7°C / 105.26°F
4.) விழுப்புரம் மாவட்டம் மயிலம் – 38.9°C / 102.02°F
5.) ராணிப்பேட்டை மாவட்டம் கலவை – 40.5°C / 104.90°F
6.) வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் – 41.8°C / 107.24°F
7.) திருப்பத்தூர் – 40.2°C / 104.36°F
8.) திருவண்ணாமலை – 39.8°C / 103.64°F
9.) கள்ளக்குறிச்சி – 40.8°C / 105.44°F
10.) கடலூர் மாவட்டம் சிதம்பரம் – 40.7°C / 105.26°F
11.) திருவாரூர் – 39.1°C / 102.38°F
12.) புதுக்கோட்டை மாவட்டம் வாம்பன் – 40.2°C / 104.36°F
13.) கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா அலுவலகம் – 40.3°C / 104.54°F
14.) திருச்சி மாவட்டம் சிறுகமணி – 39.7°C / 103.46°F
15.) சேலம் மாவட்டம் சந்தியூர் – 40.6°C / 105.08°F
16.) ஈரோடு 41.5°C / 106.70°F
17.) கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் – 38.9°C / 102.02°F
18.) திருப்பூர் – 40.1°C / 104.18°F
19.) கோவை – 38.1°C / 100.58°F
20.) சிவகங்கை – 40.5°C / 104.90°F
21.) விருதுநகர் 41.6°C / 106.88°F
22.) தென்காசி – 37.9°C / 100.22°F வெப்பம் பதிவாகி உள்ளது…
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலை: தினசரி ரூ.5 லட்சம் தங்கத்துகள்கள் வெளியேற்றம்..
by Askar
written by Askar
அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலை: தினசரி ரூ.5 லட்சம் தங்கத்துகள்கள் வெளியேற்றம்..
அண்டார்டிகா: எரிமலைகள் என்றாலே லாவா குழம்புகள் தான் வெளியேறும். ஆனால் எரிமலையில் இருந்து தங்க துகள்கள் வெளியேறுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. முழுக்க பனி பாறைகளால் சூழப்பட்டுள்ள கண்டம் என்றாலும், அண்டார்டிகாவிலும் நெருப்பை கக்கும் 138 எரிமலைகள் இருக்கின்றன. இவற்றுள் 8 எரிமலைகள் அவ்வப்போது லாவா குழம்பை வெளியேற்றி உயிர்ப்புடன் இருப்பவை. அதில் ஒன்றுதான் ரோஸ் தீவில் உள்ள மவுண்ட் எரிமலை. 1972ம் ஆண்டு முதல் நெருப்பு குழம்பை வெளியேற்றி வரும் இந்த எரிமலை பகுதியில் ஆய்வகம் ஒன்றையே அமைத்து ஆய்வு செய்து வருகிறது அமெரிக்கா.
இந்த எரிமலை செயற்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகளை ஆச்சரியத்தின் உச்சிக்கே அழைத்து சென்றுள்ளது அவர்கள் கண்டறிந்த ஒரு அரிய தகவல். வாயு மற்றும் தூசு துகள்களுடன் தங்க துகள்களையும் எரிமலை வெளியேற்றி வருவதே அதற்கு காரணம். ஒன்றல்ல இரண்டல்ல ஒவ்வொரு நாளும் 5 லட்சம் மதிப்பிலான தங்க துகள்களை இந்த எரிமலை வெளியேற்றி வருகிறது என்றால் நம்பமுடிகிறதா. எரிமலை கக்கும் போதெல்லாம் 20 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவிலான தங்க துகள்களும் வெளியேறி வருகின்றன.
இதனால் எரிமலையை சுற்றி 1000 கிலோ மீட்டர் வரை தங்க மழை போல தங்க துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன. எரிமலை பாறைகளில் தங்க படிமங்கள் இருக்கலாம் என்றும் எரிமலை சீற்றத்தின் போது லாவா குழம்புடன் துகள்களாக தங்கம் வெளியேறி வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் செயற்கை கோள்களை ஆய்வு செய்த போது எரிமலையின் உச்சியில் லாவா குழம்பால் மிகப்பெரிய ஏறி உருவாகி இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு..
by Askar
written by Askar
10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு..
தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் பல்வேறு பாடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை. அதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை துணை தேர்வின்போது தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களையும், தேர்வு எழுதாத மாணவர்களையும் இணைத்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பின்னர் அனைவரையும் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.