சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.13 மற்றும் 14-ந்தேதிகளில் தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.15-ந்தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.16-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:இன்று முதல் 14-ந்தேதி வரை: அடுத்த ஐந்து தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.இன்று மற்றும் நாளை: அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°-40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33°-37° செல்சியஸ் இருக்கக்கூடும்.ஈரப்பதம்:இன்று மற்றும் நாளை: அடுத்த இரண்டு தினங்களுக்கு காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
Category:
மாநில செய்திகள்
தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், தென்காசி பாறையடி தெரு, காயிதே மில்லத் நகரில் வைத்து, நோன்பு பெருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிஸான் அணி மாநிலச் செயலாளர் தென்காசி முகம்மது அலி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்பதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், மின்சார வாரிய செயற்பொறியாளர் ரபீக் பின் உசைன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் வரவேற்றார். மீரான் மருத்துவமனை மருத்துவர் அப்துல் அஜீஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அசாருதீன் நன்றி கூறினார். துபாய் ஷேக், கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நூறு நபர்களுக்கு அரிசி, கைலி, சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..
கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டியில் காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். திமுக கிளைச் செயலாளர் நவாஸ்கான் தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு, திமுக கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும், கடையம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவருமான மகேஷ் மாயவன், ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் கட்டி அப்துல் காதர், திமுக மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மற்றும் முஸ்லிம் லீக் தொண்டர்கள் முதலியார்பட்டி, காந்திநகர் இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதில் திமுக சிறுபான்மை அணி ஒன்றிய செயலாளர் செய்யது அலி, வார்டு பொறுப்பாளர் மாரியப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தொழிலாளர் அணி துணைத் தலைவர் காதர் மைதீன், முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயலாளர் ரிபாய், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி..
written by Abubakker Sithik
தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி..
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கடையநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் நெல்லை ராணி அண்ணா கல்லூரியை போன்ற மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன் என தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி அளித்தார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையில், தொகுதி பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம், நகரச் செயலாளர் அப்பாஸ், ஒன்றிய செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கடையநல்லூர் ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதியில் பிரசாரம் செய்தார்.
புன்னையாபுரம் பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், சிங்கிலி பட்டி, சொக்கம்பட்டி, திரிகூடபுரம், முத்துச்சாமிபுரம், குமந்தபுரம், கடையநல்லூர் நகராட்சி பகுதி ,கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், மெயின் பஜார், பேட்டை, ரஹ்மானியாபுரம், மேலக் கடையநல்லூர், அதனைத் தொடர்ந்து ஒன்றிய பகுதிகளான காசி தர்மம், இடைகால், கண்மணியாபுரம், வலசை, புதுக்குடி, மங்களாபுரம், வேலாயுதபுரம், ஊர்மேல் அழகியான், கள்ளம்புளி அச்சம்பட்டி, இடைகால், நயினாரகரம், சின்னத்தம்பி நாடாரூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். அப்போது வழி நெடுகிலும் தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் மற்றும் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகிய இருவருக்கும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் நகர்மன்ற உறுப்பினருமான ஆர் முருகன் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். மாவடிக்கால் பகுதியில் பெண்கள் வீட்டின் மேல் மாடிகளில் இருந்து வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
கடையநல்லூர் நகர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பேசியதாவது, தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராக இருந்த காலஞ்சென்ற மரியாதைக்குரிய அருணாசலம் அவர்களுக்கு பிறகு இதுவரை இந்த தொகுதியில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த யாரும் நாடாளுமன்ற உறுப்பினராக வந்ததில்லை. முதல் முறையாக இந்த தொகுதியில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன். எனவே புதிதாக தொடங்கப்பட்ட இந்த மாவட்டத்திற்கு தேவையான பொறியியல் கல்லூரி, அரசு பெண்கள் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை தொடங்குவதற்கு பாடுபடுவேன். மேலும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு உயிரிழப்பு மற்றும் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் அவர்களை விரைவாக தொடர்பு கொள்ள கடையநல்லூரில் வெளியுறவுத்துறை சார்பில் தகவல் தொடர்பு மையத்தை ஏற்படுத்துவேன். திருநெல்வேலியில் செயல்படுவது போல் பாஸ்போர்ட் சேவா கேந்திரா, பாஸ்போர்ட் சேவை மையத்தை தென்காசியில் அமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இப்பகுதியில் ஏராளமான தென்னை மற்றும் எலுமிச்சை சார்ந்த விவசாய நிலங்கள் உள்ளது. தென்னை மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவற்றிற்கு மதிப்பு கூட்டும் தொழிற்சாலை உருவாக்கப்படும் அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கப்படும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் வராமல் இருப்பதற்கு நவீன முறையில் ஸ்ப்ரிங் டைப் சோலார் மின் வேலி அமைத்துக் கொடுக்கப்படும் மற்றும் யானைபுகா அகழி தோண்டப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளை பாதுகாப்பாக வைத்திருக்க குளிர் பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். செங்கோட்டை விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு பணிகளுக்கு மாணவ மாணவிகளை தயார்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் கோச்சிங் சென்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்த போது கடையநல்லூர் முன்னாள் நகர்மன்ற தலைவரும் மக்கள் மருத்துவருமான டாக்டர் சஞ்சீவி, நகர திமுக அவைத் தலைவர் முருகையா, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், துணைத் தலைவர் ராஜையா, மாவட்ட பிரதிநிதிகள் தம்புராஜ், சிட்டி திவான் மைதீன், ராமச்சந்திரன், நகர பொருளாளர் நெடுமாறன், மாவட்ட பிரதிநிதி தம்பு, புளியங்குடி பணிமனை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொ.மு.ச. செயலாளர் ஷார்ப் கணேசன், துணைச் செயலாளர் காசி நல்லையா, இளைஞரணி இத்தாலியின் பீர்முகம்மது (எ) பீரப்பா, ஒன்றிய குழு துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், கடையநல்லூர் வார்டு செயலாளர்கள் நகர கழகம் மற்றும் வார்டு கழக பிரதிநிதிகள் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூ இ.கம்யூ, ம.தி.மு.க, மனித நேய மக்கள் கட்சி, ஆதி தமிழர் பேரவை மாவட்ட மற்றும் நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி..
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல், ஆகியவற்றை வலியுறுத்தி ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து 09.04.2024 அன்று கீழப்பாவூர் பேருந்து நிலையத்திலும், கீழப்பாவூரில் உள்ள தனியார் பேருந்துகள், கார் மற்றும் தனியார் ஆட்டோக்களில் தேர்தல் திருவிழா-தேசத்தில் பெருவிழா. என் வாக்கு என் உரிமை. என் வாக்கு விற்பனைக்கு அல்ல. 100 சதவீதம் வாக்களியுங்கள்.
நேர்மையாக வாக்களியுங்கள். வாக்களிப்பதில் பெருமை கொள்வோம். இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் சிவக்குமார், மாரீஸ்வரன், கீழப்பாவூர் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் ஜேசுமரியாள், வட்டார இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மணிமேகலை, பிரியா, குமுதவள்ளி, சாந்திமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செய்திகள்கவுன்சிலர்கீழக்கரை செய்திகள்கீழக்கரை மக்கள் களம்நகராட்சிநிர்வாகம்பிரச்சனைமாநில செய்திகள்மாவட்ட செய்திகள்
கீழக்கரை மூணாவது வார்டு பகுதியில் மின் விளக்கு எரியாமல் பொதுமக்கள் அவதி ! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய ஒளி மின்விளக்கு பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது . கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி மக்கள் பயன்படும் வகையில் அப்பகுதியில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அதிகாலையில் கோர விபத்து; பேருந்து லாரி மீது மோதியதில் நடத்துனர் உயிரிழந்த சோகம்..
written by Abubakker Sithik
கடையநல்லூர் அருகே அதிகாலையில் கோர விபத்து; அரசு பேருந்து லாரி மீது மோதி நடத்துனர் உயிரிழந்த சோகம்..
கடையநல்லூர் அருகே அரசு பேருந்து நினாறு கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் நடத்துனர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் இடைகால் இடையே சையது காட்டன் மில்ஸ் அருகில் அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. திருப்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை சுந்தர பாண்டியபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் செங்கோட்டை மேலூரைச் சார்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்துனராக உள்ளார். அதிகாலை நேரம் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சையது காட்டன் மில்ஸ் முன்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது செங்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் பேருந்தின் நடத்துனர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிக அளவு காயம்பட்டிருந்த பொட்டல்புதுரைச் சார்ந்த பிர்தவுஸ் மற்றும் தென்காசி மேலகரத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சிறு சிறு காயங்களுடன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புதிய வாக்காளர் பட்டியல்: வயது வாரியாக, வாக்காளர் எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
by Askar
written by Askar
தமிழகத்தில் நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில் பங்கேற்கத் தகுதி உடைய புதிய வாக்காளர் பட்டியலை சமீபத்தில் இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
அதன்படி மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793 பேர் ஆண்கள்; 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665 பேர் பெண்கள்; 8,467 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
முதல்முறை வாக்காளர்களின் (18 முதல் 19 வயது வரை) எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420. அவர்களில் 5 லட்சத்து 85 ஆயிரத்து 153 பேர் ஆண்கள். 5 லட்சத்து 7 ஆயிரத்து 113 பேர் பெண்கள். 154 பேர் மூன்றாம் பாலினத்தவர். இந்த வயதினர் மற்றும் 110-119 வயதினரில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை (78 ஆயிரத்து 40 பேர்) அதிகமாக உள்ளது.
20-29 வயதுடையவர்கள் 1.10 கோடி; 30-39 – 1.29 கோடி; 40-49 – 1.38 கோடி; 50-59 – 1.10 கோடி; 60-69 – 71.64 லட்சம்; 70-79 – 38.66 லட்சம்; 80-89 – 12.38 லட்சம்; 90-99 – 2.01 லட்சம்; 100-109 – 5,368; 110-119 – 114 (58 ஆண்கள், 55 பெண்கள், 1 மூன்றாம் பாலினத்தவர்); 120 வயதுக்கு மேற்பட்டோர் 55 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் சார்பாக ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வீட்டில் உபயோகம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னால் நகர்மன்ற உறுபினர் மற்றும் தெற்குத்தெரு ஜாமாத் முன்னால் செயலாளர் லாஹிதுகான் , முன்னால் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆனா மூனா காதர் சாகிப் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன் ஹபீப் மரைக்கா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் தலைவர் ஜாஃபர் ஜலாலுதீன் நன்றி தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி! சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஏப்ரல் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது..
by Askar
written by Askar
பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. சொந்த ஊரில் இருந்து பலர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்கவும், வாக்களித்த பின்னர் மீண்டும் வேலை செய்யும் இடத்திற்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 7154 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பிற ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2 நாட்களுக்கு 3,060 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.ஏப்ரல் 20 மற்றும் 21-ந்தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 6,009 பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதேபோல் ஏப்ரல் 20 மற்றும் 21-ல் பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு திரும்ப 2,295 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மொத்தம் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை சோழவந்தான் அருகே மு.க.அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி! போலீசார் விசாரணை..
by Askar
written by Askar
மதுரை சோழவந்தான் அருகே மு. க. அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி! போலீசார் விசாரணை..
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் விக்கிரமங்கலம் ரோட்டில் நாகமலை அடிவாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு சொந்தமான 24 ஏக்கர் தென்னந்தோப்பில் பங்களா உள்ளது. விசேஷ நாட்களில் மற்றும் வார இறுதி நாட்களில் மு. க. அழகிரி குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். மேலும் முக்கிய தினங்களிலும் குடும்பத்துடன் இங்கு வந்து பொழுதை கழித்து செல்வார். இந்த நிலையில் நேற்று இரவு பங்களாவில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள அறைகளின் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளதாக தெரிகிறது. இரவு காவலர் பணியில் இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பண்ணை வீட்டின் மேலாளர் குட்டி என்பவர் காடுபட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும்; கவிஞர் பேரா பேச்சு..
written by Abubakker Sithik
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என நெல்லை இலக்கிய விழாவில் கவிஞர் பேரா பேசினார். நெல்லையில் 07.04.2024 அன்று பொருநை இலக்கிய வட்டத்தின் 2059-ஆவது வார நிகழ்வு நடந்தது. இலக்கிய ஆர்வலர் நசீர் தலைமை வகித்தார். மீனாட்சிநாதன் இறைவணக்கம் பாடினார். பொருநை இலக்கிய வட்ட இளைய புரவலர் தளவாய் இரா.திருமலையப்பன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கோதைமாறன், சண்முகசுந்தரம், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி, முத்துகுமாரசாமி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா பேசினார். அவர் பேசுகையில் “நடக்க இருக்கும் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகளைக் கடந்து நேர்மறைச் சிந்தனையோடு வாக்களிக்க வேண்டும். படித்தவர்கள் மத்தியில் வாக்களிக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் இவர்களின் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே இருப்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்த நிலை வருத்தமாக இருக்கிறது. அதுபோல கிராம மக்களை விட நகர மக்களின் வாக்குப் பதிவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக நகரங்களின் விரிவாக்கப் பகுதியில் வாக்குப் பதிவு குறைவாகவே இருக்கிறது. இந்நிலை மாறிட அனைவரும் வாக்களிப்போம். வாக்களிக்க வைப்போம் என்று பேசினார். நிகழ்ச்சியில் 80-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கோதை மாறனுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கவிஞர் பாமணி நன்றி கூறினார். நிகழ்வில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் தீவிர சோதனை..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல் துறையினர் தீவிர சோதனை..
நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை கருத்தில் கொண்டு பொது இடங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள், அதிகம் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் உள்ளூர், வெளியூர் வாகனங்களை தேர்தல் தனிப்படை அமைத்து வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு சோதனை செய்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு..
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தேர்தலில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024. ஐ முன்னிட்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பணிபுரிய உள்ள 1820 தலைமை வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Presiding officer), 1820 முதல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 1), 1820 இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 2), 1820 மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer 3), 190 நான்காம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் (Polling officer-4) வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 07.04.2024 அன்று 37-தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரியிலும், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு பி.ஏ. சின்னராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியிலும்,
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு புளியங்குடி வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரியிலும், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு தென்காசி எம்.கே.வி.கே மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்!- எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..
by Askar
written by Askar
திருவள்ளூர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;
பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாநில கட்சிகளை புறக்கணிக்கின்றன. தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதனால், ஓட்டுபோட்ட மக்களுக்கு விசுவாகமாக இருந்து நாடாளுமன்றத்தில் செயல்படுவதற்கு, தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்கு, தேவையான திட்டங்களை பெறுவதற்கு, நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக நமது கருத்துக்களை எடுத்து சொல்வதற்கு நாம் கூட்டணியில் இருந்து விலகி வந்து அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்.
2019- நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். திமுக கூட்டணியில் உள்ள 38 எம்.பி.க்கள் தமிழகத்திற்காக ஒன்றும் செய்யவில்லை. தான் முதல்-அமைச்சராக இருந்து செயல்படுத்தியதை கூறி மக்களிடம் ஸ்டாலின் வாக்கு கேட்க வேண்டும். ஆனால் பிரசாரத்தில் என்னைப் பற்றியே அதிகம் பேசுகிறார். என்னைப்பற்றி பேசி என்ன கிடைக்கப்போகிறது.
நீட் தேர்வை திமுகவும் காங்கிரசும் கொண்டுவந்தது. இன்று ரத்துசெய்வோம் என்று சொல்வதும் காங்கிரசும் திமுகவும் தான். இது வேடிக்கையாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்.” இவ்வாறு அவர் பேசினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாஜக வேட்பாளர்களில் 4-ல் ஒருவர் வேறு கட்சியின் இருந்து பாஜகவுக்கு வந்தவர்கள்;!வெளிவந்த அதிர்ச்சி தகவல்..
by Askar
written by Askar
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், பாஜக அறிவித்த சில வேட்பாளர்கள் போட்டியிட மறுத்து விலகினர். இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதுவரை பாஜக அறிவித்துள்ள 417 வேட்பாளர்களில் 116 வேட்பாளர்கள் வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாஜகவின் வேட்பாளர்களில் 4-ல் ஒருவர் பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவர்கள்.
பாஜக ஆட்சிக்கு வந்ததும் புலனாய்வு அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ, எம்.பி.களை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது. அதன் பின்னர் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி அந்த பகுதியில் தங்கள் செல்வாக்கை அதிகரித்து வருகிறது.
அதிலும் நாடு முழுவதும் செல்வாக்கை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் 37 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற 6 பேருக்கு சீட் வழங்ப்பட்டுள்ளது. இதன் மூலம் பிறரின் செல்வாக்கிலே பாஜக இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும், அவருடன் நெருக்கமாக உள்ள உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனையிட வேண்டும்!-சிபிஐஎம் அறிக்கை..
by Askar
written by Askar
தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதா எனத் தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
இதனிடையே இன்று காலை சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 3 பேரிடம் ரூ.4 கோடி ரொக்கப் பணமும், அவர்கள் மூவரும் பா.ஜ.க உறுப்பினர் என்பதற்கான அட்டையும் சிக்கின. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மற்றும் அவரின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில், பல லட்சம் மதிப்புடைய கணக்கில் வராத பணமும், பரிசுப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என CPIM கட்சி கூறியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக அவரது ஊழியர்கள் – உறவினர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக சுமார் ரூபாய் 4.5 கோடி பணத்தை நேற்று (06.04.2024) நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச் சென்றுள்ளனர். தேர்தல் அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
பிடிபட்ட மூன்று நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நெருங்கிய உறவினர் எனவும் அப்பணத்தை திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றோம் என கூறியுள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமின்றி, சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படுவதாக பல இடங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
உதாரணமாக, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்ட போது பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதுடன் தரக்குறைவாக பேசியுள்ளார். இச்சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாஜக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அண்டை மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.எனவே, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும், அவருடன் நெருக்கமாக உள்ள உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனையிட வேண்டும்.
நயினார் நாகேந்திரன் மீது உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இதேபோன்று பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண முறைகேடுகள் நடைபெறா வண்ணம் உரிய தலையீடு செய்வதுடன், ஜனநாயகப் பூர்வமான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரம் சின்ன கடை தெரு பகுதியில் அமைந்துள்ள அல் சுமத் அறக்கட்டளை மற்றும் சின்ன கடை சஹர் கமிட்டி சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறந்து மகிழ்ச்சி அடைந்தனர்.நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் பாரூக் டாக்டர் நசார், தொழிலதிபர் அரபாத் தலைமை இமாம் அப்துல் காதர் சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் அப்சல் ஹயாத் செயலாளர் கதியதுல்லா பொருளாளர் சதா தௌபிக் ஆகியோர்கள் செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் உரிமம் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ! இரவு முழுவதும் ரோந்து பணியில் கீழக்கரை காவலர்கள் !!
by Baker BAker
written by Baker BAker
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் சிறுவர்கள் அதிகமாக இரு சக்கர வாகனங்களில் செல்வதாகவும் , அதிக சத்தம் கொண்ட வாகனத்தை இயக்குவதாகவும் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்: அதனைத் தொடர்ந்து கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு அனைத்து இருசக்கர வாகனங்களையும் சோதனை செய்யப்பட்டதில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களையும் முறையாக ஆவணங்கள் இல்லாத வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு சென்றனர். மேலும் இளைஞர்கள் அதிகமானோர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருவதாகவும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் அரசு விதித்த விதிமுறைகள் படி நம்பர் பிளேட் பயன்படுத்தாமல் செயல்பட்டு வருவதாகவும் காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார் . மேலும் சட்ட விரோதமான செயலில் ஈடுபடுபவர்கள் தான் இது போன்ற தவறுகளை செய்வார்கள் என்றும் பெற்றோர்கள் இன்றைய இளைஞர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இரவு 12 மணிக்கு மேல் இளைஞர்கள் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். கீழக்கரை காவல் நிலைய காவலர்கள் செயல்பாடுகளை கண்டு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எடப்பாடி பழனிச்சாமி யாருக்கு ஓட்டு கேட்கிறார்?அவர் ஒரு தலை இல்லாத முண்டம்! வயல்வெளிகளில் வைக்கப்படும் தலை சட்டி இல்லாத சோளக்காட்டு பொம்மை!-நடிகர் கருணாஸ் கடும் விமர்சனம்..
by Askar
written by Askar
தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் முக்குலத்தோர் புலி படை கட்சித் தலைவர் நடிகர் கருணாஸ் பரப்புரை..
அப்போது அவர் பேசியதாவது;
நாய்க்கு இருக்கும் நன்றி கூட இல்லாத நன்றி கெட்ட துரோகி எடப்பாடி பழனிச்சாமி. அரசியலில் துரோகம் என்பது நடக்கும். ஆனால் இப்படிப்பட்ட துரோகத்தை செய்வதற்கு ஒரு மனசு வேண்டும்.
ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்கிறார். காவி கூட்டம் தமிழை அழித்து ஹிந்தியை புகுத்த தயாராக இருக்கிறோம், அதற்கு மோடியை பிரதமர் ஆக தேர்வு செய்யுங்கள் என்கிறார்கள்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எடப்பாடி பழனிச்சாமி யாருக்கு ஓட்டு கேட்கிறார். அவர் ஒரு தலை இல்லாத முண்டம். வயல்வெளிகளில் வைக்கப்படும் தலை சட்டி இல்லாத சோளக்காட்டு பொம்மை அவர். அவர் கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர். வேட்பாளரே தெரியாத ஒரு கட்சிக்கு பொதுமக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்.
திட்டமிட்டு ஓட்டு போட்டாலும் தென்காசியில் உதயசூரியனை தோற்கடிக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா கையில் அதிமுக இருந்த போது அனைத்து தரப்பட்ட மக்களுக்குமான விளிம்பு நிலை மக்களுக்கான கட்சியாக இருந்ததால் நமது தந்தையர் தாத்தா பாட்டி அந்த கட்சிக்கு வாக்களித்தனர்.
ஆனால் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு அபகரித்த பின்னர் அதிமுக கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கட்சியாக சுருங்கி விட்டது. ஜாதி கட்சியாக மாறிவிட்டது. ஜாதி மதம் ரீதியாக யார் ஒருவர் அரசியல் செய்ய நினைக்கிறாரோ அவன் இந்த நாட்டின் படுபாதகன் என பசும்பொன் தேவர் சொல்லி இருக்கிறார். இறுதிவரை கடவுள் மறுப்பு கொள்கை, பிராமண மறுப்பு கொள்கையில் உறுதியாக இருந்த தந்தை பெரியார் கூட சுத்த பிரம்மச்சாரியத்தை தனியாக கடைபிடித்த ஒருவர் என்றால் அது பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தான் என்று கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட தலைவர்களை பார்த்த நமது மண்ணில் மோடி போன்றவர்கள் மீண்டும் பிரதமராக வந்து விட்டால் ரஷ்யாவைப் போல் துண்டு துண்டாக இந்தியா மாறிவிடும். எச்சரிக்கையாக இருங்கள். எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்து விட்டது. அதிமுக ஜாதி கட்சியாக மாறிவிட்டது.
சாமிக்காக அரசியல் செய்யும் சனாதான கூட்டத்தை புறந்தள்ளி பூமிக்காக அரசியல் செய்யும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.