இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (செப்.26) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காஞ்சிரங்குடி மின் பாதையில் வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல் நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம் பஜார், சங்குவெட்டி தெரு, இந்து பஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழைய மீன் மார்கெட், பைத்துமால், சின்ன மாயாகுளம் மின் பாதையில் 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மாயாகுளம், மாவிலா தோப்பு,
கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மயாகுளம் விவேகானந்தபுரம், அலவாய்கரவாடி பீடரில் அலவாய்கரவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல் புதிர், கிழக்கு தெரு, புது கிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டாணி அப்பா, பெத்தரி தெரு, ஸ்ரீ நகர், 21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர்,
உத்திரகோசமங்கை பீடரில் பாளையரேந்தல்,. சின்ன பாளையரேந்தல், பனையங்கால், ஆனைகுடி, மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், வெள்ளா, எக்ககுடி, நல்லாங்குடி பகுதிகளில் இன்று செப்டம்பர் 26 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது
தேசிய செய்திகள்
மதுரை வைகையாற்றில் அடையாளம் தெரியாத நபரை கொலை செய்தவர்களுக்கு போலீசார் வலை வீச்சு..
மதுரையில் கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முகம், கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து கரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவத்திற்கு வந்த கரிமேடு போலீசார் இறந்து கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தி பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து கிடந்த நபர் வகையாற்று பகுதியில் நேற்று இரவு மது அருந்துவதற்காக வந்திருக்கலாம் எனவும் அங்கு சில மர்ம நபர்களுடன் ஏற்பட்ட தகராறு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது நிலையில் போலீசார் விசாரணையை துரிதிபடுத்தி உள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசியில் கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் ஓட்டப்போட்டி; பரிசுகள் வழங்கல்..
தென்காசியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிற்றாற்றின் தூய்மையை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டப் போட்டி நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர் மன்ற தலைவர் சாதிர் பரிசுகளை வழங்கினார். தென்காசி நகர திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாரத்தான் ஒட்டப் போட்டிகள் செப்.24 ஞாயிற்றுக் கிழமை நடந்தது. தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு இருந்து புறப்பட்டு ஆயிரப்பேரி கிராமம் வரை சென்று மீண்டும் நீதிமன்றம் வரையில் 5.6 கி.மீட்டர் தூரம் வரையிலான இந்த மாரத்தான் போட்டியில் 1000 பேர் பங்கேற்றனர். இந்த மாரத்தான் ஒட்டப் போட்டியை தென்காசி நகர்மன்றத் தலைவரும், திமுக நகரச் செயலாளருமான சாதிர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரியவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தங்க நாணயம்,2ஆம் பரிசாக ரூ.2000, 3ஆம் பரிசாக ரூ.1000, 4ஆம் பரிசாக 10 பேருக்கு ரூ.500. இதே போன்று 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தங்க நாணயமும், 2ஆம் பரிசாக ரூ.1000, 3ஆம் பரிசாக ரூ 700, 4ஆம் பரிசாக 10 பேருக்கு ரூ.500 பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பெரியவர்களுக்கான போட்டியில் கண்டு கொண்டா மாணிக்கம் பகுதியை சேர்ந்த பசுபதி முதலிடத்தையும், நெல்லையை சேர்ந்த ஆனந்த் 2ஆம் இடத்தையும், தென்காசியை சேர்ந்த கண்ணன் 3ஆம் இடத்தையும், பாவூர்சத்திரத்தை சேர்ந்த அசோக்குமார் 4வது இடத்தையும் பெற்றனர். 15 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஹரி கவுசிக் முதலிடத்தையும், இராஸ் அகமது 2வது இடத்தையும், முகமது அல்தமீம் 3ஆம் இடத்தையும், வெங்கடேஷ் 4ஆம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர் மன்றத் தலைவர் சாதிர் பரிசுகளை வழங்கினார். இந்த மாரத்தான் போட்டியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பையா, காவல் ஆய்வாளர் பாலமுருகன், நகர்மன்ற உறுப்பினர் முகம்மது ராசப்பா, சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் இசக்கி ரவி, வர்த்தக சங்க செயலாளர் ராஜா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், செப்.25 – தஞ்சாவூர்- ராமேஸ்வரம் அரசு பேருந்து ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்றிரவு 8:40 மணியளவில் கிளம்பியது. இரவு 9 மணியளவில் பெருங்குளம் அருகே வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 30 மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனர். இது பற்றி தகவலறிந்த பனைக்குளம் தமுமுக நிர்வாகி பரக்கத்துல்லா, தமுமுக மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாஹ்கான் ஆகியோரின் ஆலோசனைப்படி பனைக்குளம் நகர் நிர்வாகிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உச்சிப்புளி போலீசார் உதவியுடன் மீட்கப்பட்ட பயணிகள தமுமுக ஆம்புலன்ஸ்கள் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவர் ஆனந்த் தலைமையில் முதலுதவி அளிக்கப்பட்டது. மமக மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் பாபு, நகர் தலைவர் தாஜுதீன், மமக நகர் செயலாளர் அக்பர், முஜிப் ரஹ்மான் ஆகியோர் உதவினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்த டென்மார்க் வானியலாளர் ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25, 1644)…
ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் (Ole Christensen Romer) செப்டம்பர் 25, 1644ல் ஆர்ஹஸ், டென்மார்க்கில் வணிகராகவிருந்த கிறிஸ்டென் பெடர்சன்னுக்கும் அன்னா ஓலுஃப்சுதத்தர் இசுடார்மிற்கும் மகனாகப் பிறந்தார். கிறிஸ்டென் பெடெர்சன் தமதுப் பெயரைக் கொண்ட மற்றவர்களிடமிருந்து தம்மை பிரித்துக்காட்ட ரோமர் என்ற பெயரை இணைத்துக்கொண்டார். ரோமர் எனில் டேனிய தீவான ரோமாவைச் சேர்ந்தவர் என்ற பொருளாகும். 1662ல் ஓலி ரோமர் மெட்றிக் படிப்பை முடிக்கும்வரையிலான வாழ்க்கைப்பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. ஐசுலாந்து படிகத்தினால் (கால்சைட்டு) ஏற்படும் இரட்டை ஒளிவிலகலை ரோமர் கண்டறிந்ததை கோபனாவன் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டியாக இருந்த ராசுமசு பார்த்தோலின் 1668ல் பதிப்பித்தார். இதனையடுத்து பார்த்தோலின் டைக்கோ பிராவின் வானியல் பதிவுகளைக் கொண்டு கணிதத்தையும் வானியலையும் கற்க ரோமருக்கு உதவினார்.
ரோமருக்கு பிரெஞ்சு அரசின் வேலை கிடைத்தது. லூயி XIV மன்னர் இளவரசருக்கு ஆசிரியராக நியமித்தார். மேலும் ரோமர் வெர்சாய் அரண்மனையின் அழகான நீர்த்தாரைகளை வடிவமைப்பதிலும் பங்கேற்றார். 1681ல் ரோமர் டென்மார்க்கிற்கு திரும்பினார். கோபனாவன் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் தமது வழிகாட்டி பார்த்தோலினின் மகள், ஆன் மாரி பார்தோலினைத் திருமணம் செய்துகொண்டார். வானியல் பார்வையாளராக துடிப்பாக செயலாற்றினார். பல்கலைக்கழகத்தில் இருந்த ருண்டெடாம், வட்டக் கோபுரத்திலிருந்த ஆய்வகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் தமது கவனிப்புகளை தொடர்ந்தார். தமக்கான பொறிகளை தாமே வடிவமைத்து உருவாக்கிக்கொண்டார். ஆனால், அவரது குறிப்புகள் யாவும் 1728ஆம் ஆண்டின் கோபனாவன் தீவிபத்தில் அழிந்துவிட்டன. இருப்பினும் அவரது முன்னாள் உதவியாளரான பெடர் ஹொர்ரெபோ இவற்றை விவரித்து எழுதினார்.
அரசவையில் கணிதவியலாளராக இருந்ததால் மே 1, 1683ல் டென்மார்க்கில் முதன்முறையாக எடைகளுக்கும் அளவுகளுக்கும் தேசிய அமைப்பொன்றை நிறுவினார். துவக்கத்தில் ரைன் அடி என்ற அளவை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் 1698ல் மேலும் துல்லியமான தேசிய சீர்தரங்கள் கடைபிடிக்கப்பட்டன. வானியல் மாறிலிகளைக் கொண்டு அளவுகளுக்கான வரையறைகளை நிறுவ விரும்பினார். இது அவரது மறைவிற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. டேனிய மைலை வரையறுத்ததும் இவரே. 24,000 டேனிய அடிகள் ஒரு மைலாகும் (கிட்டத்தட்ட 7,532 மீ). 1700ல் ரோமர் டென்மார்க்கு, நோர்வேயில் கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்த மன்னரின் ஒப்புதலைப் பெற்றார். முன்னதாக இதனை செயல்படுத்த நூறாண்டுகளுக்கும் மேலாக டைக்கோ பிரா எடுத்த முயற்சிகள் வீணாகியிருந்தன. ரோமர் முதலில் இயற்றப்பட்ட வெப்பநிலை ஒப்பளவுகளில் ஒன்றை வடிவமைத்தவரும் ஆவார். 1708ல் இவரைச் சந்தித்த டேனியல் பாரன்ஃகைட் இவர் உருவாக்கியிருந்த ரோமர் வெப்பளவுமானியை மேம்படுத்தி தற்போது சில நாடுகளில் புழக்கத்தில் உள்ள பாரன்ஃகைட் வெப்ப ஒப்பளவை உருவாக்கினார்.
டென்மார்க்கின் பல நகரங்களிலும் பல கடற்வழி நடத்தல் பள்ளிகளை நிறுவினார். 1705ல் கோபனாவன் காவல்துறையின் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் தனது முதல் செயற்பாடாக காவல்துறையை முழுவதுமாக கலைத்தார். காவல்துறையின் தன்னம்பிக்கை மிகவும் குன்றியிருந்ததாகக் கருதினார். கோபனாவனில் தெருவிளக்குகளை (எண்ணெய் விளக்குகள்) அறிமுகம் செய்தவரும் இவரே. பிச்சைக்காரர்கள், ஏழைகள், வேலையற்றோர், விலைமாதுக்களை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்தார். கோபனாவனில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகளை இயற்றினார். நகரின் நீர் வழங்கல், கழிவுநீர் அமைப்புக்களை சீரமைத்தார். நகரின் தீயணைப்புத் துறைக்கு புதிய கருவிகள் கிடைக்கச் செய்தார். நகரத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடைமேடைகள் அமைக்க திட்டமிடுதலில் முக்கியப் பங்காற்றினார்.
நிலப்படவியலிலும் கடல்வழிகாட்டுதலிலும் நிலநிரைக்கோட்டை தீர்மானிப்பதில் செயல்முறைச் சிக்கல்கள் இருந்தன. இதற்கு தீர்வுகாண நிலத்திலிருந்து தள்ளி உள்ள கப்பலில் இருந்து நிலநிரைக்கோட்டை தீர்மானிக்கும் வழிமுறையொன்றை கண்டுபிடிப்பவருக்கு எசுப்பானியாவின் மூன்றாம் பிலிப் பரிசுகள் அறிவித்தார். இதன் எதிர்வினையாக 1616-17ல் கலீலியோ ஒரு கப்பலில் இருந்து நேரத்தையும் நிலநிரைக்கோட்டையும் அறிய வியாழக்கோளின் துணைக்கோள்களின் ஒளிமறைப்புக்களைப் பயன்படுத்தும் முறையை நிறுவினார். இருப்பினும் துல்லியமான நேர அட்டவணைகள் 18வது நூற்றாண்டு வரை கணிக்கப்படாததாலும் கப்பல்களிலிருந்து வியாழனின் துணைக்கோள்களை கவனிப்பதில் சிக்கல்கள் நிலவியதாலும் இதை நடைமுறைப்படுத்த இயலவில்லை. 1676ஆம் ஆண்டு ரோமர் விரிவுரைத்த கட்டுரையில் உள்ள படம் ரோமர் ஐஓ துணைக்கோளின் சுற்றுப்பாதைகளின் நேரங்களை புவி வியாழனை நோக்கி நகரும்போதும் (F – G) புவி வியாழனிலிருந்து வெளியே நகரும்போதும் (L – K) ஒப்பிட்டார்.
இருப்பினும் வியாழனின் துணைக்கோள்களை நேரம் தீர்மானிக்கப் பயன்படுத்துவது நடைமுறைக்கு வந்தது. 1671ல் பல மாதங்களாக யான் பிக்கார்டும் ரோமரும் வியாழனின் ஐஓ சந்திரனின் 140 கிரகணங்களை கவனித்து பதிந்தனர். அதே காலகட்டத்தில் பாரிசில் கியோவன்னி டொமெனிகோ காசினி என்ற பிரெஞ்சு அறிவியலரும் இந்த கிரகணங்களை பதிந்து வந்துள்ளார். இருவரது நேரங்களையும் ஒப்பிட்டு பாரிசுக்கும் ரோமர் பணிபுரிந்த யுரானியன்போர்க்குக்கும் இடையேயான நிலநிரைக்கோட்டு இடைவெளி கணக்கிடப்பட்டது. 1666க்கும் 1668க்கும் இடையே காசினி வியாழக்கோள்களின் சந்திரன்களைக் கவனித்து தமது அளவீடுகளில் பிழைகள் நேர்வதைக் கண்டறிந்தார். இது ஒளிக்கு குறிப்பிட்ட வேகம் இருப்பதாலேயே இருக்க வேண்டும் என எண்ணினார். 1672ல் ரோமர் காசினியிடம் உதவியாளராக இணைந்து இவற்றைக் கவனிப்பதைத் தொடர்ந்தார். காசினியின் அறிதல்களுடன் தன்னுடைய கவனிப்புக்களையும் இணைத்து ஆய்ந்தார். புவி வியாழனின் அருகாமையில் செல்லும்போது ஐஓ துணைக்கோளின் கிரணங்களுக்கு இடையேயான நேரங்கள் புவி வியாழனிடமிருந்து தள்ளி இருக்கும் போது ஏற்படுவதைவிட குறைவாக இருந்தது.
காசினி அறிவியல் அகாதமியில் ஆகத்து 22, 1676ல் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டார்: இந்த நேர வேறுபாடுகள் ஒளி கோள்களிலிருந்து புவியை அடைவதற்கு சிலத்துளி நேரமெடுப்பதால்தான் நிகழ்கின்றன. ஒளிக்கு கோள் பாதையின் பாதி விட்டத்தைக் கடப்பதற்கு பத்து முதல் பதினோரு நிமிடங்கள் எடுப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் தமது இந்த கருதுகோளை காசினி பின்னாளில் திரும்பப்பெற்றார். ஆனால் ரோமர் இதனை மேலும் ஆராய எடுத்துக்கொண்டார். பிக்கார்டும் தாமும் முன்னரே 1671-77 காலகட்டத்தில் நிகழ்த்திய கவனித்தல்களுடன் ஒப்பிட்டு பிரான்சிய அறிவியல் அகாதமிக்கு தமது முடிவுகளைத் தெரியப்படுத்தினார். ரோமரின் தரவுகளைக் கொண்டு பலரும் ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டனர். இவர்களில் முதலாமவராக கிறித்தியான் ஐகன்சு விளங்கினார். ரோமரின் தரவுகளையும் தமது கவனிப்புக்களையும் கொண்டு ஒளி வினாடிக்கு 16 2⁄3 புவியின் விட்டத் தொலைவு செல்வதாக கணக்கிட்டார். ஒளிக்கு அளவிடக்கூடிய வேகம் உள்ளது என்ற ரோமரின் கருதுகோள் 1727ல் ஜேம்ஸ் பிராட்லி தனது அளவீடுகள் மூலம் நிருபிக்கும்வரை அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
1809ல் ஐஓ துணைக்கோளின் கவனிப்புக்களைக் கொண்டு, இம்முறை நூறாண்டுகளுக்கும் மேலான துல்லிய அளவீடுகளைக் கொண்டு, யான் பாப்டிசுட்டு யோசஃப் டெலம்பர் சூரியனில் இருந்து ஒளி புவியை அடைய 8 நிமிடங்களும் 12 வினாடிகளும் ஆவதாகக் கணக்கிட்டார். இதனைக்கொண்டு ஒளியின் வேகம் வினாடிக்கு 300,000 கிலோமீட்டர்களை கணக்கிட்டார். தற்போது இது திருத்தப்பட்டு சூரியொளி புவியை அடைய 8 நிமி 19 வினாடிகளாவதாகவும் ஒளியின் வேகம் வினாடிக்கு 299,792.458 ஆகவும் கணகிடப்பட்டுள்ளது. ரோமர் பணிபுரிந்த பாரிசிலுள்ள வான்வெளி ஆய்வகத்தில் ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்தவராக ரோமருக்கு நினைவுப்பட்டயம் வைக்கப்பட்டுள்ளது. ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்த டென்மார்க் வானியலாளர் ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் செப்டம்பர் 19, 1710ல் தனது 65வது அகவையில் கோபன்ஹேகன், டென்மார்க்கில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், ஆக்கத்தில் உருவான “வான்” திட்டம், “ஒருங்கிணைந்த தையற் தொழில் கூடம் திறப்பு விழா”
மதுரை: உலக மக்கள்தொகையில் சரி பாதியாக பெண்கள் இடம்பிடித்துள்ள நிலையில் அவர்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார உருவாக்கம் குறித்து உலகம் முழுவதும் பரவலாகப் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆயினும்கூட, தொழில் மற்றும் வணிகத்தில் அவர்களின் பங்கு குறைவாகவே உள்ளது. அதிலும் முக்கியமாக தொழில்முனைவோரை விட தொழிலாளர் சக்தியாக கீழ் அடுக்கிலேயே பெண்கள் பெருமளவில் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்தியாவில் பண்பாடு, மரபு & சமூக-கலாச்சார சூழல் காரணமாக பெண்கள் வணிக சூழ்நிலையில் ஒப்பீட்டளவில் தாமதமாகவே நுழைந்துள்ளனர்.
இதற்கான தொலைநோக்குத் தீர்வாக, சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளித்திட அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கிட, நமது மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் தனது தொகுதியில் முன்னோடியாக ‘வான்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இத்திட்டமானது சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிரை உள்ளடக்கிய வெகுஜன தொழில்முனைவை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முயற்சியாகும்.
பெண்கள் தாங்களே ஒரு தொழிலைத் தொடங்கவும், தொழிலை வளர்த்தெடுக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், சமூகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க உதவவிட முடியும் என்பதை ஒரு நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கபட்டுள்ளது.
இதன்மூலம் மதுரை மத்திய தொகுதியில் நலிவடைந்த, வாய்ப்பற்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒவ்வொன்றும், அக்குடும்பத்தில் உள்ள பெண்களின் மூலம் மாதாமாதம் குறைந்தபட்சம் ரூ.10000 வருமானம் ஈட்டிட இத்திட்டம் வழி செய்யும். மேலும், இத்திட்டம் அவர்களுக்கு தரமான கல்வி மற்றும் சுகாதார வளார்ச்சிக்கான முன்னெடுப்பை அதிகரிப்பதற்கும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.
இந்த திட்டத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள(BPL) சமூகத்தை சேர்ந்த ஆர்வமுள்ள மற்றும் தன்னிசையாக இயங்கும் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்களின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்திற்கு ஏற்ற தொழிலில் அவர்களை ஈடுபட செய்திட ஒரு பாலமாக நாங்கள் செயல்படுகிறோம். இதன் மூலம் அப்பெண்கள், அவர்கள் பகுதியை சேர்ந்த, அதே சமூக-பொருளாதார அடுக்கை சேர்ந்த சக பெண்களுக்கு தங்கள் தொழிலில் வேலை வாய்ப்பினை வழங்கிடுவார்கள்.
முதற்கட்ட சிந்தனையிலிருந்து, இறுதி வடிவம் வரை, ஆர்ம்ப கட்ட செயல்படுத்துதல் தொடங்கி தொழில்முனைவோரை வணிக பயணத்தில் கைப்பிடித்து கொண்டுசெல்லும் வரை முழு திட்டத்தையும் மேற்பார்வையிட எங்களிடம் நிபுணத்துவம் பெற்ற குழு ஒன்றும் உள்ளது.
இதன் மூலம் மதுரை மத்திய தொகுதியில் மகளிர் சுய உதவிக் குழு ஆக்கபூர்வமாக செயல்படும் வடிவமாக மாற்றம் பெறுவதோடு, இத்தொகுதியில் வாழும் பெண்கள் சமுகம் ஒரு புத்தெழுச்சி பெற்ற சமூகமாக மாற்றம் பெற இத்திட்டம் வழிவகுக்கும்.
இதன்படி, முதற்கட்டமாக இத்திட்டம் சுந்தர்ராஜபுரம் பகுதியில் தொடங்கப்பட்டு அங்கு ஒரு பெண் தொழில் முனைவோரை உருவாக்கி அவர் சுமார் 10 பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்து கப் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்கி அதில் பிரபல நிறுவனத்திற்கு கப் சாம்பிராணி தயாரித்து கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.இன்னும் சில மாதங்களில் அவர்களுடைய சொந்த தயாரிப்பு சந்தைக்கு விறபனைக்கு வர உள்ளது.
வான் திட்டத்தின் இரண்டாவது பகுதி
தற்போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆக்கத்தில் உருவான ஒருங்கிணைந்த தையல் தொழில் கூடம் மூலம் வான் திட்டத்தின் இரண்டாவது பகுதியாக மகபூப்பாளையத்தில் மதுரை ராஜ்மஹால் நிறுவனத்தின் சி எஸ் ஆர் நிதி மூலம் 25 நவீன மின் தையல் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் தையல் தெரிந்த மகளிருக்கு சட்டை,பாவாடை,நைட்டி,துண்டுகள் ஆகியவற்றை மொத்தமாக தைத்து கொடுக்கிற அளவிற்க்கு மொத்தமாக பணி உத்தரவு பெற்று தரப்பட்டு,அவர்களின் எந்த முதலீடும் இங்கு இல்லாமல் இங்கு பணியாற்றி அதன் மூலம் பலன் பெற உள்ளனர்.இதில் மூன்று வெவ்வேறு சுயஉதவிக்குழுவில் இருந்து மகளிர் 25 பேர் இங்கு வந்து பணியாற்றுகின்றனர்.இதனை மாதிரியாக எடுத்துக்கொண்டு இன்னும் பல தொழிற்கூடங்கள் தொடங்கப்பட உள்ளன.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் 8வது வார்டு இரட்டை அஹ்ரகாரத்தில்12ம்ஆண்டு ராதாகிருஷ்ண கல்யாணம் நடந்தது …
சோழவந்தான் 8வது வார்டுக்கு உட்பட்ட இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் முன்பாக அமைந்துள்ள மேடையில் ராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்றது விழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாள் ஹரே கிருஷ்ணா நாம பாராயணம் இதைத் தொடர்ந்து அஷ்டபதி பஜனை இரவு குரு கீர்த்தனைகள் நடந்தது இரண்டாம் நாள் காலை உற்சவ விருத்தி பஜனை பெண்கள் சீர் எடுத்து வந்தனர் தொடர்ந்துராதா கிருஷ்ண கல்யாணம் நடைபெற்று ஆஞ்சநேய உற்சவம் மங்கள ஆராத்தி நடைபெற்றது இரவு சுவாமி புறப்பாடு நடந்தது திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலரும் நகர அரிமா சங்க தலைவரும் கல்வியாளரும் தொழிலதிபருமான டாக்டர் எம் வி எம்.மருது பாண்டியன் பாஜக விவசாய அணி மாநில செயலாளர்.எம் வி எம் மணி முத்தையா மற்றும் 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் மணி முத்தையா குடும்பத்தினர் செய்திருந்தனர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து அனைவருக்கும் எம் வி எம் குடும்பத்தினர் சார்பாக திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் கல்யாண விருந்து வழங்கப்பட்டது ஸ்ரீ ராதா கிருஷ்ண பக்த மகளிர் சபா மற்றும் விழா கமிட்டனர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
.செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அண்ணாநகர் பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தம்…
5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை அண்ணா நகர் பகுதியில் “WOW MADURAI” என்ற தலைப்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் வாரத்தின் முதல் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் கொண்டாடுவதற்காக மதுரை மாநகராட்சி ஏற்பாட்டின் படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறையில் உரிய அனுமதி பெற்று HAPPY STEET நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநகராட்சி எதிர்பார்த்த பொது மக்களை விட ஏராளமான மதுரை மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான இளைஞர் இளம் பெண்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்த பொது மக்களால் மதுரை அண்ணா நகர் முதல் மேலமடை வரை 50,000 மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு இருந்தனர்
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி டி ஆர் பழனி தியாகராஜன் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மேயர் துணை மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர் இதில் சிலர் பேரிக்கடை உடைந்து உள்ளே விழுந்ததால் பலருக்கும் காயம் ஏற்பட்டது கூட்ட நெருச்சலில் சிலருக்கு மூச்சுமுட்டுதல் மற்றும் மயக்கம் அடைந்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வந்தனர் முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தராமல் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் ஹாப்பி ஸ்ட்ரீட் என்று நிகழ்ச்சி ஏற்படுத்தி இருந்தது ஆனால் அவசரத்திற்காக பாதுகாப்பு கருதி 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. காவல்துறையினர் கட்டுக்கடங்காத அளவு கூட்டம் நிறைந்து இருந்ததால் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஆனது பாதிலேயே நிறுத்தப்பட்டது இதனால் பெரிய அளவு எதிர்பார்த்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், செப்.24- இராமநாதபுரம் வனக்கோட்டம் சார்பில் பசுமை தமிழ்நாடு தினம் 2023 சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து கிளம்பிய விழிப்புணர்வு நடை பயணம் அச்சுந்தன்வயல் சேதுபதி அரசு கல்லூரியில் நிறைவடைந்து.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நவாஸ் கனி எம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட வன அலுவலர்
ஹேமலதா, அச்சுந்தன்வயல் ஊராட்சி தலைவர் சகிகலா லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பசுமை தமிழக இயக்கம் மூலம் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் 5.5 லட்சம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு விலையின்றி வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக 2,500 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.
ராமேஸ்வரம் கிராம வனக்குழு மூலம் பாரையடி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு சூழல் அங்காடி ஆணை மற்றும் மாதிரி சாவி வழங்கப்பட்டது.
எம் கிருஷ்ணாபுரம் வனக்குழு சார்பில் கோகுலம் மகளிர் சுய உதவிக்குழு பனை சார்ந்த மகசூல் பொருட்கள் நடப்பாண்டு சேகரம் செய்துகொள்ள ஆணை வழங்கப்பட்டது.
மரம் நடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து பள்ளிக் குழந்தைகள் விழாவில் பங்கு பெற்ற அனைவருக்கும் விழிப்புணர்வு ஒட்டிகள் வழங்கப்பட்டது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
விளையாட்டை வளர்க்கும் வித்தையை சத்குருவிடம் கற்றுக் கொள்ளலாம்.. ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் புகழாரம்..
நம் தேசத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பாரம்பரிய கலைகளை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை சத்குருவிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்” என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் கூறினார்.
பாரத தேசத்தின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமைக்குரிய ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவின் இறுதிப் போட்டிகள் கோவை ஈஷா யோக மையத்தில் இன்று (செப்.23) மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாகூர் பரிசளிப்பு விழாவின் போது பேசுகையில், “ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை 2004-ம் ஆண்டு முதல் ஈஷா நடத்தி வருகிறது. இன்று நடக்கும் 15-வது கிராமோத்சவ விழாவில் நான் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் முழு நேர, தொழில்முறை விளையாட்டு வீரர்கள் கிடையாது. தின கூலி வேலைக்கு செல்பர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் என பல விதமான வேலை செய்பவர்கள் தான் இப்போட்டியில் வீரர்களாக களம் கண்டு வென்றுள்ளனர். இது தான் இத்திருவிழாவின் சிறப்பு.
விளையாட்டு போட்டிகள் மட்டுமின்றி இங்கு 1,200 பேர் ஒன்று சேர்ந்து கும்மியாட்டத்தையும் ஆடி காட்டியுள்ளனர். இதுதவிர பல்வேறு கிராமிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இத்திருவிழாவில் நடத்தப்பட்டுள்ளது. இதை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துள்ளீர்கள். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ள சத்குரு அவர்கள், வாழ்க்கையையே ஒரு விளையாட்டு தன்மையுடன் அணுக கூடிய கூல் குருவாக இருக்கிறார். விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைகளை வளர்க்கும் வித்தை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்” என்றார்.
மேலும், விளையாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், “இந்தாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், யோகா, களரி, மல்லர்கம்பம் உள்ளிட்ட 5 பாரம்பரிய கலைகளை கேலோ இந்தியா திட்டத்தில் சேர்த்துள்ளோம். இதேபோல், பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கும் காலமும் கூடிய விரைவில் வரும்” என்றார்.
இதை தொடர்ந்து சிறப்புரையாற்றிய சத்குரு அவர்கள் “ஈஷா கிராமோத்சவம் திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் 25,000 கிராமங்களில் இருந்து சுமார் 60,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜாதி, மதம், ஆண், பெண், வயது என எல்லா வேறுபாடுகளையும் கடந்து அவர்கள் ஒற்றுமையுடன் விளையாடி உள்ளனர்.
போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கத்திற்காக நாம் இந்த கிராமோத்சவத்தை நடத்தவில்லை. இதன்மூலம், இதில் பங்கெடுத்த வீரர்கள் மற்றும் பார்வையிட்ட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் உருவாக்க இந்த விளையாட்டு போட்டிகளை நடத்தி உள்ளோம். வாழ்க்கையில் விளையாட்டு தன்மை இல்லாமல் போனால், வாழ்க்கை பெரும் சுமையாகிவிடும். குறிப்பாக, ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புற மக்களின் வாழ்க்கை ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்க ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற அவசியம்” என்றார்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் திரு. தன்ராஜ் பிள்ளை அவர்கள் பேசுகையில், “நான் 1995-ம் ஆண்டு முதல் ஈஷாவிற்கு வந்து செல்கிறேன். 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஹாக்கி அணியுடன் ஈஷாவிற்கு வந்து 25 நாட்கள் தங்கி யோகா பயிற்சி எடுத்தேன். எனக்கும் ஈஷாவிற்குமான தொடர்பு என்பது 28 வருடங்களாக நீடித்து வருகிறது” என்றார்.
நடிகர் திரு. சந்தானம் பேசுகையில், “நான் பள்ளியில் சுமாராக படிக்கும் மாணவனாக இருந்தேன் . ஆனால், பேச்சுப் போட்டி, நாடகப் போட்டியில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. இதை கண்டறிந்த ஒரு ஆசிரியர் எனக்கு ஊக்கம் அளித்தார். அதனால் தான் நான் சினிமா துறைக்கு வந்தேன். அதேபோல், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறமையை கண்டறிந்து ஊக்குவிப்பதற்கு ஈஷா கிராமோத்சவம் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். நீங்கள் மனது வைத்தால் உங்களால் சச்சின், தோனியை போன்று வெற்றி பெற முடியும்” என்றார்.
ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கிய விளையாட்டு போட்டிகளின் இறுதிப் போட்டிகள் ஆதியோகி முன்பு இன்று நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டியில் சேலத்தை சேர்ந்த உத்தம சோழபுரம் அணி, அதே மாவட்டத்தைச் சேர்ந்த சித்தராசபுரம் அணியை வீழ்த்தி சாம்பியம் பட்டம் வென்றது. தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புள்ளா கவுண்டன் புதூர் அணி, கர்நாடகாவைச் சேர்ந்த மரக்கோடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
மேலும், தமிழ்நாடு அளவில் நடந்த கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஈரோடு அணி விருதுநகர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் ஈரோடு அணி திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியம் பட்டம் வென்றது.
வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசு தொகைகள் மற்றும் பாராட்டு கேடயங்கள் வழங்கி கெளரவித்தனர்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இப்போட்டிகளை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர். மேலும், பார்வையாளர்கள் பங்கேற்பதற்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது…
சோழவந்தான் செப் 23 மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்து 71 மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தனர். சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சந்தான லட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி தொண்டரணி அமைப்பாளர்முள்ளைரமேஷ், முள்ளிப்பள்ளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், எஸ் ஆர் சரவணன் மேலக்கால் பன்னீர்செல்வம், மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“ஒரே நாடு ஒரே தேர்தல்” என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை. -வைகோ பேட்டி..
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
தமிழக அரசுக்கு கேடு செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும், திரும்பப் பெறவேரும் என்கிற கோரிக்கையை வைத்து மதிமுக சார்பாக 57 எம்பிக்கள், 32 எம்எல்ஏக்களும், 50 லட்சம் கையெழுத்து பகுதிகளுடன் நானும் கணேசமூர்த்தியும் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் செயலாளரிடத்தில் ஒப்படைத்து இருக்கிறோம். இது சரித்திர பிரசித்தி பெற்ற கூட்டத்தொடர் ஆகும் ஏனெனில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த பாராளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது. இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அதில் தனி ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஜான் பீட்டர் என்பவரின் குடும்பத்தில் ஜெபம் செய்யக்கூடாது என்று இந்து முன்னணியினர் அவர்களை தாக்கி கலவரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அரசாங்கம் உடனடியாக அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக வேறு மதத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
*பெண்களுக்கான இட ஒதுக்கீடு மோடியால் தான் சாத்தியம் என அமித்ஷா கூறி இருப்பது குறித்த கேள்விக்கு:*
ஒன்பது ஆண்டு காலமாக என்ன செய்தார்கள், இப்போது தேர்தல் வருவதால் இதை கொண்டு வந்தார்கள் தவிர இது நீண்ட கால கோரிக்கை. ஒன்பதாண்டு கால ஆட்சியில் இது தெரியவில்லையா, இதில் அவர் பெருமை கொண்டாட முடியாது.
*ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனைக் கூட்டம் குறித்த கேள்விக்கு:*
அது நடக்கவே நடக்காது பல. மாநிலங்கள் உள்ளது. ஒரு மாநிலத்தில் ஒரு ஆட்சி, கவிலுமானால் ஆட்சி பெரும்பான்மையை இழக்குமானால் அப்போது நாடாளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்துவார்களா. எனவே பல மாநிலங்களை உள்ளடக்கிய உபகண்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வெற்று முழக்கமாக இருக்குமே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லை.
*காவிரி விவகாரத்தில் கர்நாடகா தண்ணீர் திறக்க மறுப்பது குறித்த கேள்விக்கு:*
உச்சநீதிமன்றத்தை மதிக்காத கர்நாடக அரசு சட்ட விரோதமாக செயல்படுகிறது. இன்று மத்தியில் இருக்கும் அரசு அதற்கு உரிய விதத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
*மாநாட்டில் முக்கிய அறிவிப்பு வரும் என்று கூறியது குறித்த கேள்விக்கு:*
அந்த பேச்சிலேயே இருக்கு.
வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் சர்வதேச சுவைகளுடன் “BREAK CUP” தேனீர் கடை. என புதிய தேனீர் கடை வடக்குத் தெரு பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
இங்கு ஹைதராபாதி, ஈரான்னி சாய் மற்றும் பல்வேறு சுவைகளில் தேனீர் மற்றும் திண்பண்டங்கள் கிடக்கும். இந்த கடை கீழக்கரை இளைஞர்களால் புதிய முயற்சியாக தொடங்கப்பட்டள்ளது.
இங்கு மேலும் மலாய் டீ, குளாது டீ, ஹனி லெமன் டீ போன்ற பல்வேறு வகையான டீ வகைகள், பால் வகைகள், சிற்றுண்டிகள் விற்பனைக்கு உள்ளன.
இந்நிறுவனம் பற்றிய மேல் விபரங்களுக்கு 9092437232, 7448434558 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்..
இராமநாதபுரம், செப்.22-
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுக்காதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் வகித்தார். பொதுசுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அவர் தெரிவிக்கையில், மழைக்காலங்களில் அதிகமாக பரவக்கூடிய கொடிய வைரஸ் டெங்கு காய்ச்சல் தொற்றாகும். இது ADS என்ற கொசு இனம் மூலம் மக்களிடையே எளிதாக நோயை பரப்பும் குணம் கொண்டதாக உள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளை எளிதாக தாக்கக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இத்தகைய கொடிய வைரஸ் நோய் தொற்றை தடுப்பது என்பது சுகாதாரத்துறையாக இருந்தாலும் அவர்களுக்கு பொதுமக்களும் முழுஒத்துழைப்பு கொடுத்து நோய் தொற்றை தடுக்க சுகாதாரத்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படும் பொழுது டெங்கு காய்ச்சல் என்னும் கொடிய நோய்தொற்றை முற்றிலுமாக தடுத்திட முடியும், பொதுசுகாதாரத்துறையுடன், உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து களப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை துவங்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீட்டை சுத்தமாக வைத்தாலே, தெரு சுத்தமாகிவிடும், தெரு சுத்தமாக இருந்தால் ஊர் சுத்தமாக இருக்கும் இது இயல்பு. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் பயன்பாடற்ற பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை சுத்தம் செய்து தண்ணீர் தேக்கி மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். பழைய டயர், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல் போன்றவற்றில் மழை தண்ணீர் தேங்கும். அதனால் தேங்காய் சிரட்டை, பழைய டயர் இவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வீட்டின் வெளியில் இருந்தால் மூடி வைத்து மழை தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பிரிட்ஜில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக கொசு முட்டையிட்டு 22 நாட்களில் புதிய கொசுக்கள் உற்பத்தியாகி விடுகின்றன. சுமார் 4 கிலோ மீட்டர் பறக்கும் தன்மை கொண்ட கொசு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக சென்று விடும். அதிலும் குறிப்பாக குழந்தைகளை அதிக பாதிப்படையச் செய்யும். இத்தகைய வைரஸ் கொசுவை தடுப்பதற்கு ஒவ்வொரு வீட்டிலும் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி பயன்பாடற்ற பொருளை அப்புறப்படுத்தினாலே நோய் தாக்குதலை குறைத்திட முடியும்.
மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி துறைகள் மூலம் மேல்நிலை நீர் தேக்கதொட்டிகளை குளோரிநேசன் செய்து தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். சாலைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்வதுடன் சமூக அமைப்புகளும் பொதுஇடங்களில் மழை தர்னணீர் தேங்கும் வகையில் பொருட்கள் பயன்பாடற்று கிடந்தால் அப்புறப்படுத்த முன்வர வேண்டும். தொடர்ந்து காய்ச்சல், இருமல போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவத்துறையை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. இருந்த போதிலும் அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு நோயை தொற்று தடுப்பு குறித்து விழிப்புணார்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களும் பொதுசுகாதாரத்துறைக்கு உறுதுணையாக இருந்து சுகாதாரத்துடன் இருக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று பாதிப்பு இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், பொதுசுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் அர்ஜுன் குமார், இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
டைனமோவை கண்டுபிடித்த, நவீன மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் சிறந்த சோதனையாளர், மைக்கேல் பாரடே பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 22, 1791).
மைக்கேல் பாரடே (Michael Faraday) செப்டம்பர் 22, 1791ல் தெற்கு லண்டனிலுள்ள, இன்றைய எலிபண்ட் அண்ட் காசில் என்னுமிடத்துக்கு அருகாமையிலுள்ள நியுயிங்டன் பட்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மைப் பட்ட நிலையில் இருந்தது. இவர் தந்தையான ஜேம்ஸ் பரடே ஒரு கொல்லர். பரடே தனது கல்வியைத் தானே பார்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. தனது 14 ஆவது வயதில் புத்தகம் கட்டுபவரும், விற்பவருமாகிய ஜோர்ஜ் ரீபோ என்பவருக்குக் கீழ் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். அவருடன் இருந்த ஏழு வருடங்களில், பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதன் மூலம் அறிவியலிலும், குறிப்பாக மின்னியலிலும் அவருக்கு ஆர்வம் வளர்ந்தது. இருபதாவது வயதில், புகழ் பெற்ற வேதியியலாளரும், இயற்பியலாளருமாகிய ஹம்ப்ரி டேவி அவர்களுடைய விரிவுரைகளைக் கேட்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவ்விரிவுரைகளில் தான் எழுதிய குறிப்புக்களை டேவிக்கு, பாரடே அனுப்பினார்.
சந்தர்ப்பம் வரும்போது பரடேயைக் கவனிப்பதாகக் கூறிய டேவி, அவரைப் புத்தகம் கட்டும் தொழிலைத் தொடர்ந்தும் கைக்கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிறிது காலத்தில் ஒரு வேதியியற் சோதனை ஒன்றின்போது இடம்பெற்ற விபத்தில் கண்பார்வை இழந்த டேவி, மைக்கேல் பரடேயைத் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். பின்னர் ரோயல் சொசைட்டியில் அப்போதிருந்த சோதனைச்சாலை உதவியாளர் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டபோது, அந்த வேலையை டேவி, பரடேக்குப் பெற்றுக்கொடுத்தார். அக்காலத்து வகுப்பு அடிப்படையிலான சமுதாயத்தில், பரடே ஒரு கனவானாகக் கருதப்படவில்லை. 1813 தொடக்கம் 1815 வரையிலான காலப்பகுதியில் டேவி ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருந்தார். பாரடேயும், டேவியின் அறிவியல் உதவியாளராக அப்பயணத்தில் பங்கு கொண்டிருந்தார். டேவியின் மனைவியான ஜேன் அப்ரீஸ், பாரடேயை சமமாகக் கணிக்க மறுத்து, அவரை ஒரு வேலைக்காரருக்கு ஈடாகவே மதித்து வந்தார். இதனால் பெருந் துன்பமடைந்த பரடே அறிவியல் துறையிலிருந்து முற்றாகவே விலகிக்கொள்ள எண்ணினார். எனினும் மிக விரைவிலேயே பாரடே, டேவியிலும் புகழ் பெற்றவர் ஆனார்.
மைக்கேல் பாரடே ஆரம்பகாலத்தில் ஹம்ப்ரி டேவியின் உதவியாளராக பணிபுரிந்தார். பாரடே குறிப்பாக குளோரின் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அவர் குளோரின் மற்றும் கார்பன் ஆகியவற்றை கொண்டு இரண்டு புதிய வேதியல் கலவைகளை கண்டுபிடித்தார். வாயுக்களின் பரவலைப் பற்றிய முதல் கடினமான பரிசோதனையும் அவர் நடத்தினார். இது ஜான் டால்டன் முதலில் சுட்டிக்காட்டிய ஒரு நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வின் முக்கியத்துவம் தாமஸ் கிரஹாம் மற்றும் ஜோசப் லோஸ்மிமிட் ஆகியோரால் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. பாரடே பல வாயுக்களை திரவமாக்கினார். எஃகின் உலோகக் கலவைகளை ஆய்வு செய்தார். மேலும் பல புதிய வகையான கண்ணாடிகளை ஒளியியல் நோக்கங்களுக்காக உருவாக்கினார். புன்சன் பர்னரின் ஆரம்ப வடிவத்தை பாரடே கண்டுபிடித்தார். இது உலகெங்கிலும் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் வெப்பத்தை உண்டாக்கும் வசதியான ஆதாரமாக நடைமுறை பயன்பாட்டில் உள்ளது. பாரடே வேதியியல் துறையில் விரிவாகப் பணியாற்றினார், பென்சீன் போன்ற இரசாயன பொருட்கள் (அவர் ஹைட்ரஜன் பைக்கார்புரத் என அழைத்தார்) மற்றும் குளோரின் போன்ற திரவ வாயுக்களை கண்டுபிடித்திருக்கிறார்.
வாயுக்களின் திரவமாக்குதல், வாயுக்கள் திரவங்களை மிக குறைந்த கொதிநிலை கொண்டிருக்கும் நீராவிகளாக மாற்றியமைக்க உதவியது மற்றும் மூலக்கூறு திரட்சியின் கருத்துக்கு இன்னும் திடமான அடிப்படையை வழங்கியது. கார்பன் மற்றும் குளோரின், C2Cl6 மற்றும் C2Cl4 ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட கலங்களின் முதல் தொகுப்பை பாரடே 1820 ஆம் ஆண்டில் வெளியிட்டார். மேலும் அடுத்த ஆண்டு தனது முடிவுகளை வெளியிட்டார். 1810 ஆம் ஆண்டில் ஹம்ப்ரி டேவினால் கண்டுபிடிக்கப்பட்ட குளோரின் க்ளேரேட் ஹைட்ரேட் தொகுப்பை பாரடே நிரூபித்தார். மின்னாற்பகுப்பின் விதிகளை கண்டுபிடிப்பதற்கும், நேர்மின், எதிர்மின், மின்முனை மற்றும் அயனி போன்ற சொற்களஞ்சியங்களை பிரபலப்படுத்துவதற்கும் பாரடே பொறுப்பாளியாக உள்ளார். மின்சாரம் மற்றும் காந்தவியல் தொடர்பான அவரது ஆராய்ச்சிகளுக்கு பாரடே புகழ்பெற்றவர். அவரது முதல் பதிவு செய்யப்பட்ட பரிசோதனை ஏழு நாணயங்களைக் கொண்ட ஒரு வோல்டாக் குவியலைக் உருவாக்கியதாகும், ஏழு வட்டு துத்தநாகத் துணுக்குகள் மற்றும் உப்பு நீரில் கரைக்கப்பட்ட ஆறு காகித துண்டுகளால் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தது. இந்த குவியலோடு அவர் மக்னீசியம் சல்பேட் கலந்துவிட்டார். பாரடேயின் 1831 சோதனைகள் ஒரு ஆய்வை நிரூபிக்கின்றன.
1821 ஆம் ஆண்டில், டேனிஷ் இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் மின்காந்தவியல் நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, டேவி மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானி வில்லியம் ஹைட் வொல்லஸ்டன் ஒரு மின்சார மோட்டார் வடிவமைக்க முயற்சித்தார்கள். ஆனால் அதில் தோல்வி கண்டனர். பாரடே, இருவர்களுடனான பிரச்சனையைப் பற்றி பேசினார். அவர் “மின்காந்த சுழற்சியை” என்று அழைத்த இரண்டு சாதனங்களை உருவாக்கினார். இவற்றில் ஒன்று, ஒற்றைதுருவ மோட்டார் என அழைக்கப்படும் ஒரு தொடர்ச்சியான் வட்டபாதை கொண்ட சுழற்சியை அல்லது இயக்கத்தை உருவாக்கியது. அது ஒரு காந்தத்தை வைக்கப்படும் பாதரசத்தின் ஒரு நீளத்திற்கு நீட்டிக்கப்பட்ட ஒரு வட்டத்தை சுற்றி வட்ட சுழற்சியை காந்த விசை மூலம் உருவாக்கப்பட்டது. வேதியியல் பேட்டரி மூலம் மின்னோட்டத்தை வழங்கினால், கம்பி பின்னர் காந்தத்தை சுற்றி சுழலும். இந்த சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் நவீன மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் அடித்தளத்தை அமைத்தன.
பாரடே இந்த கண்டுபிடிப்பின் உற்சாகத்தில், வொல்லஸ்டன் அல்லது டேவிடனுடன் தனது கண்டுபிடிப்பை பற்றி கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவுகளை வெளியிட்டார். ராயல் சொசைட்டிற்குள் ஏற்பட்ட சர்ச்சையால் டேவியுடனான அவரது உறவில் விரிசல் ஏற்பட்டது மற்றும் பல ஆண்டுகளாக மின்காந்தவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதைத் தடுக்க மற்ற நடவடிக்கைகளுக்கு பாரடே நியமிக்கப்பட்டிருக்கலாம். 1821 ஆம் ஆண்டில் அவரது ஆரம்ப கண்டுபிடிப்பிலிருந்து, பாரடே தனது ஆய்வகப் பணியை தொடர்ந்தார். பொருட்களின் மின்காந்த பண்புகளை ஆய்வுசெய்து தேவையான அனுபவத்தை வளர்த்துக் கொண்டார். 1824 ஆம் ஆண்டில், பாரடே, ஒரு காந்த மண்டலம் தற்போதைய ஒரு ஓட்டத்தில் மின்னோட்டத்தை ஒழுங்குபடுத்த முடியுமா என்று ஆராய ஒரு படிப்பு வட்டத்தை அமைத்தார். ஆனால் அத்தகைய உறவு எதுவும் இல்லை பல கட்ட சோதனைகள் மூலம் நிருபனமானது. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒளி மற்றும் காந்தங்கள் மூலம் நடத்தப்பட்ட இதேபோன்ற வேலைகளைத் தொடர்ந்து இந்த சோதனையும் ஒரே மாதிரியான முடிவுகளை அளித்தது.
1832 ஆம் ஆண்டில், மின்சாரத்தின் அடிப்படைத் தன்மையைப் பற்றி ஆராயும் நோக்கில் தொடர்ச்சியான சோதனைகளை அவர் நிறைவு செய்தார். மின்னாற்பகுப்பு ஈர்ப்பு, மின்னாற்பகுப்பு, காந்தவியல் ஆகியவற்றின் நிகழ்வை தயாரிப்பதற்காக “நிலையான”, பேட்டரிகள் மற்றும் “விலங்கு மின்சாரம்” ஆகியவற்றை பாரடே பயன்படுத்தினார். அவர்து காலத்தின் விஞ்ஞான அபிப்பிராயத்திற்கு மாறாக, பல்வேறு “வகையான” மின்சக்தி மாயைகளை. அதற்குப் பதிலாக பாரடே ஒரே ஒரு “மின்சாரம்” மட்டும் இருப்பதாக முன்மொழிந்தார். மேலும் அளவு மற்றும் தீவிரத்தன்மை (தற்போதைய மற்றும் மின்னழுத்தம்) ஆகியவற்றின் மாறிவரும் மதிப்பீடுகள் வெவ்வேறு குழுக்களில் நிகழ்வுகளை உருவாக்கின. அவருடைய ஆராய்ச்சிகளின் முடிவில், பாரடே, மின்காந்தவியல் விசை கடத்தி வெற்று இடம் வரை நீட்டியது என்று முன்மொழிந்தார். இந்த யோசனை அவரது சக விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டது மற்றும் பின் வந்த அறிஞர்கள் அறிவியலில் அவரது கருத்தை இறுதியாக ஏற்றுக்கொண்டதை பார்க்க அப்போது பாரடே உயிரோடுடில்லை. மின்னூட்டங்கள் மற்றும் காந்தங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் புலன் கோடுகள் மின்சார மற்றும் காந்த புலங்களைப் பார்ப்பதற்கு வழிவகுத்தன.
பாரடே சோதனைச் சாலையில் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். குறிப்பாக, மின்சாரம், காந்தம் துறைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். மின்சாரத்தின் விளைவுகள் குறித்து ஆராய்ந்துகொண்டே இருந்தார். ஏதோ ஒரு இடத்தில் ஷாக் அடிக்கிறதே அங்கு என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்தார். மின்சாரத்தைக் கம்பியின் மூலம் அனுப்பும்போது, பக்கத்தில் இருக்கும் திசைகாட்டி காந்தம் திரும்பிவிடுகிறது என்பதையும் ஆராய்ந்து, காந்தத்தின் மூலமும் மின்சாரத்தை இயக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். அவருடைய ஆய்வுகள் அனைத்தும் மின்சாரம், காந்தம் தொடர்புடையவையாகவே இருந்தன. எலக்ட்ரோ மேக்னட் துறையின் தந்தை என்று இவர் கருதப்பட்டார். மின்னணு என்று சொல்லப்படும் எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும் புதிய தடங்களைப் பதித்தார்.
19 ஆம் நூற்றாண்டின் எஞ்சியுள்ள பொறியியல் மற்றும் தொழில்துறைக்கு ஆதிக்கம் செலுத்திய மின்மயமான சாதனங்களின் வெற்றிகரமான வளர்ச்சிக்கான பாரடேயின் கருத்தாய்வு மாதிரியானது முக்கியமானதாக இருந்தது. இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். மைக்கேல் பாரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம். மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் அடித்தளத்தை அமைத்த மைக்கேல் பரடே ஆகஸ்ட் 25, 1867ல் தனது 75வது அகவையில் மிடில்செக்ஸ், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.
செய்தி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை அடுத்த கீழ் நாச்சி பட்டு எஸ் வி எம் இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் உலக அமைதி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கா. பியூலா கரோலின் தலைமை தாங்கினார்
சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் சி எஸ் துரை மாவட்ட துணை தலைவர் மதியழகன் முத்துக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சமாதான பறவை வானில் பறக்க விட்டு ஒன்றாக சேர்ந்து உலக அமைதி தினம் கொண்டாடினர் பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்வின் போது அடிப்படை பயிற்சி முகாம் மாநில தலைவர்கள் டேவிட், பவானி பாய் ,ராதிகா, வின்சலீனா, எமிலியா, ஜெயினுலாபுதீன் , சக்தி கைலாஷ் மற்றும் சாரண சாரணிய ஆசிரியர்கள் பங்கேற்றனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை காடுபட்டி போலீஸார் விசாரணை..
மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கோவில்குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சுந்தரபாண்டியன் வயது 25.இவர் சோழவந்தான் பகுதியில் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார் இவர் தனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரை வற்புறுத்தியதாகவும் அதற்கு சிறிது காலம் செல்லட்டும் என பெற்றோர்கள் கூறியதாகவும் இதனால் விரத்தி அடைந்த சுந்தர பாண்டியன் நேற்று இரவு கோவில் குருவித்துறையில் தோட்டத்தில் உள்ளமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுந்தரபாண்டியன் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுகாக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து காடுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இடைகால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா..
இடைகால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. இதில் ஊட்டச்சத்தின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. தென்காசி மாவட்ட மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து மையங்களில் தேசிய மாத ஊட்டச்சத்து விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் இடைகால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தேசிய ஊட்ட சத்து மாத விழா நடைபெற்றது. திருநெல்வேலி மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம், குழந்தை உரிமையும் நீங்களும் பெங்களூரு என்ற நிறுவனமும் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியைகள் குருலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் பணியாளர் வேலம்மாள் அனைவரையும் வரவேற்று பேசினார். புஷ்பா ஊட்ட சத்து அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினார். அப்போது, குழந்தைகள் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், தானியங்கள், பருப்பு வகைகள் சாப்பிட வேண்டும், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட துரித உணவு வகைகளை வாங்கி சாப்பிடக் கூடாது. ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொறி உருண்டை, பேரிச்சம் பழம், நில கடலை ஆகியவைகளை சாப்பிட வேண்டும். என்று குறிப்பிட்டார். விழாவில் பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மனித உரிமை கல்வி மற்றும் காப்பு களம் பணியாளர் தங்கம் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புளியங்குடி காயிதே மில்லத் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மிதிவண்டிகளை டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ வழங்கினார்..
தென்காசி மாவட்டம் புளியங்குடி காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. வாசுதேவநல்லூர் எம்எல்ஏ டாக்டர். சதன் திருமலைக்குமார் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
புளியங்குடி காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் பொறியாளர் பி.என் எம் மௌலல் கௌமி தலைமையில் நடந்தது. ஜமாஅத் கமிட்டி உதவி தலைவர் எ. சாகுல் ஹமீது, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் எம்.காலிதீன், எம். முகம்மது உசேன், முகம்மது முகைதீன் ஆலிம், இளைஞர் மன்றம் நிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சபூர் பாத்திமா அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியை சுபைதா பானு, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் எஸ்.எம். சாகுல் ஹமீது, மதிமுக மாவட்ட பொருளாளர் எம். அலாவுதீன், உதவி தலைமை ஆசிரியை சகிலா பானு, மதிமுக நகரச் செயலாளர் ஜாஹிர் உசேன், மணிச்சுடர் சாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் ஜமாஅத் கமிட்டி செயலாளர் ஏ. அபுதாகிர் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம், செப்.22- இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். தொழில்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆணையரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயத்திற்கு வாடகைக்கு வழங்கப்படும் டிராக்டர், உபகரணங்கள், அதன் மூலம் பயனடைந்த விவசாயிகள், கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தால் பயனடைந்த விவசாயிகள், உழவன் செயலி பயன்பாடு குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஊரகவளர்ச்சி துறை மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்ட பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். கிராமப்புறங்களில் குடிநீர் வழங்கல் முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழையையொட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பள்ளிகளில் பயன்பாடற்ற நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றவும், மராமத்து பணிகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதி திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார் .
மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு , உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.