இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பெரிய கண்மாய் ரூ.78 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை இன்று (27.5.2020) நடந்தது. இளைய ஜமீன்தார் சக்கரவர்த்தி, நீர்வள ஆதாரத்து ரை குண்டாறு வடிகால் வட்ட உதவி பொறியாளர் கே.கண்ணன், உதவி செயற் பொறியாளர் கே.ராமமூர்த்தி, ஏ. உசிலங்குளம் ஊராட்சி தலைவர் செந்தூர், சாயல்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் கண்ணப்பன், ஒப்பந்தகாரர் வி.கே. முனியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
Category:
கீழக்கரை செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய நகர் காவல் நிலையம் கட்டிடம் தமிழக அரசின் சார்பில் 1கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் பூமிபூஜை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய நகர் காவல் நிலையம் கட்டிடம் தமிழக அரசின் சார்பில் 1கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். தொகுதியின் சார்பில் தமிழக முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர் காவல் நிலையம் போதிய இடவசதிகள் இன்றி சிறிய கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்தது.நகர் காவல்துறையினர் தங்களுக்கு புதிய கட்டிடம் அமைத்து தர அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தங்கள் தொகுதிக்கு புதிய காவல் நிலைய கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கோரிக்கையை உடனடியாக ஏற்று 110 விதியின் கீழ் 1 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவிட்டார்.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்குள் உள்ள பெரிய வளாகத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட 3 அடுக்கு புதிய காவல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்க்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.10 மாத காலத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு நகர் காவல்துறையினருக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தொகுதியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களால் மகளிர் குழுக்களுக்கு தொல்லை.. ஆட்சியரிடம் முறையீடு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களால் மகளிர் குழுக்கள் கடன் தொல்லை தாங்காமல் வட்டாட்சியரிடம் மனு கொடுத்து முறையீடு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன இந்த நிதி நிறுவனங்களில் ஏராளமான மகளிர் சுய உதவிக்குழு மற்றும் இல்லத்தரசிகள் என 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கடன் வாங்கி உள்ளனர் தற்போது 144 தடை உத்தரவு உள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் கடன் செலுத்த கால அவகாசம் விதித்துள்ளது இருப்பினும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து கடன்களை செலுத்த வேண்டும் அதுவும் வட்டியுடன் செலுத்த வேண்டும் காலதாமதம் ஆக்க கூடாது என மகளிர் குழுக்களையும் பெண்களையும் வலியுறுத்தி வருவதால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர் இந்த சூழ்நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக கூறி வட்டாட்சியரிடம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மனு கொடுத்து தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளின் உத்தரவை பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டு யானை கூட்டம் அட்டகாசம்..மின்வேலி அமைத்து தர கோரிக்கை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டு யானை கூட்டம் அட்டகாசம். தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை. மின்வேலி அமைத்து விவசாயிகளை காக்க வேண்டுமென என அரசுக்கு கோரிக்கை.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ராக்காச்சி அம்மன் கோயில் அடுத்துள்ள விவசாய நிலங்களில் சுமார் 40 ஏக்கரில் தனிநபர் ஒருவர் மாமரம், தென்னை மரம், வாழை மரம் போன்ற போன்றவற்றை பயிரிட்டுள்ளார். தற்போது மாங்காய் சீசன் துவங்கியுள்ள நிலையில் மா மரங்களை யானைக் கூட்டங்கள் சேதப்படுத்தி மாங்காய் மற்றும் தென்னை மரங்களை தூர்ரோடு சாய்த்து தென்னங்குருத்து சாப்பிட்டு சேதப்படுத்தி விடுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாம்பழம் குத்தகைக்கு எடுத்துள்ள குட்டி என்பவர் நம்மிடம் கூறும்பொழுது இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுமார் குறிப்பாக ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் மட்டும் ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஆக மா மரங்கள் மற்றும் தென்னை, வாழை போன்ற விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாங்காய் சீசன் என்பதால் மாமரங்களை குறிவைத்து காட்டு யானை கூட்டங்கள் தொடர்ந்து 4 நாட்களாக இந்த பகுதியில் முகாமிட்டு மா மரங்களை ஒடித்து மாங்காய்களை சாப்பிட்டும், தென்னை மரங்களை சாய்த்தும் சேதபடுத்தி வருகின்றது. இது குறித்து பலமுறை வனத்துறைக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை இந்த பகுதியில் மின் வேலி அமைத்து விவசாயிகளையும், விவசாய பயிர்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் த.ம.மு.க மாவட்ட செயலாளர் தில்லை சீமை ரகுமான் தலைமையில். ஏழு உட்பிரிவுகளை உள்ளிட்டு தேவேந்திர வேளாளர் என்று அரசாணை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று 200 நாட்களாக கருப்புச்சட்டை அணிந்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றன.
கீழை நியூஸ்
SKV சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் சில பகுதிகளில் தொற்று அறியப்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என கண்டறியப்பட்ட கமுதி பால் கடை முதல் முஸ்லிம் பஜார் வரை சாலைகளும், சாலை தெருவிலும் சாலைகள் அடைக்கப்பட்டு தனி நபர் செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகையால் வாகனங்களில் செல்லும் நபர்கள் அப்பகுதியை தவிர்த்து மாற்று பாதையை உபயோகப்படுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி IPS உடன் வெல்ஃபேர் கட்சியின் மாநில நிர்வாகிகள் சந்திப்பு…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சுமார் ஒன்றரை மாதங்கள் தனிமையில் இருந்து மீண்டு நேற்று பணியில் இணைந்த அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி IPSஐ சந்தித்து நலம் விசாரித்து உரையாடினர்.
நோய்த் தொற்றால் ஏற்படும் தனிமை எவ்வளவு அபாயகரமானது என்பதை உரையாடலின் போது குறிப்பிட்டது, அந்த தனிமையின் வேதனையை வெளிப்படுத்தியது.
அச்சந்திப்பின் நினைவாக வெல்ஃபேர் கட்சியின் மாநில பொருளாளர் அலி அஸ்கர் துணை ஆணையருக்கு சீல்டு மாஸ்க் அணிவித்ததுடன் அவருடன் பணிபுரியும் சக காவலர்களுக்கும், வெல்ஃபேர்கட்சியின் சார்பாக “சீல்டு மாஸ்க்” வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கட்சியின் வழக்கறிஞர் ஷாஜஹான் மற்றும் மாநிலச் செயலாளர் முஹம்மது கவுஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுவினால் தொடரும் உயிர் பலி.. மது மயக்கத்தில் கண் முன்னே மகனை பறிகொடுத்த தந்தை..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரையை அடுத்த பெருங்குடி அருகே உள்ள ஐ நேந்தல் கண்மாயில் பிரமோத் என்ற ஒன்பது வயது சிறுவன் கண்மாயில் மூழ்கி இறந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஐநேந்தல் பகுதியை சார்ந்தவர் விருமாண்டி, அவர் தன் மகனுடன் அருகில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். அச்சமயத்தில் விருமாண்டி குடிபோதையில் இருந்துள்ளார். அப்பொழுது குளிக்க சென்ற சிறுவன் ஆரமான இடத்திற்கு சென்று தத்தளித்துள்ளான். ஆனால் விருமாண்டி போதையில் நிலை இல்லாமல் இருந்ததால் அவரால் கண்மாயில் இறங்கி காப்பாற்ற இயலாமல், அவர் கண் முன்பே சிறுவன் நீரில் மூழ்கி இறந்துள்ளான்.
பின்னர் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து மதுரை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பெருங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குடிபோதையால் தனது 9 வயது மகனை இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் மீண்டும் தொடருமா சாலை பணிகள்??.. ஊரடங்கும்.. தடையும் நீங்கி நாட்கள் பல கடந்து விட்டது…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வந்த சாலை போடும் பணிகள் நிறுத்தப்பட்டது.
ஆனால் சில நாட்களுக்கு முட்பு ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு கட்டுபாட்டுடன் பணிகள் தொடரலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மாநில அரசும் மத்திய அரசும் உத்தரவு பிறப்பித்து நாட்களுக்கு மேலாகியும் சாலை பணிகள் தொடங்கப்படவில்லை.
சாலை பணி பாதியில் நிறுத்தப்படரடதால் பல இடங்களில் மேடு பள்ளத்துடன், இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புதிதாக போட்டுள்ள தார் சாலையில் கற்கள் பெயர்ந்து வருகிறது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் தரமான சாலையை அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் இரண்டாவது படித்து வந்த மாணவன் சுகவீனமாக இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிகவும் சுகவீனமுற்ற சிறுவனை ராம்நாடு GHல் இருந்து திருவனந்தபுரம் சித்ரா மருத்துவமனைக்கு மாற்றியே ஆக வேண்டிய சூழ்நிலையில், பெற்றோர்களால் திருவனந்தபுரம் செல்ல pass எடுக்க முடியவில்லை என்று 25/5/2020 தகவல் வந்தது.
இந்த சூழ்நிலையில் காலை 10 மணியிலிருந்து ஆட்சியர் அலுவலகத்தில் முயற்சி செய்தும்,1:30 மணிவரை கிடைக்கவில்லை. பின்னர் சென்னை secretariat ல் தொடர்பு கொண்டு , ராமநாதபுரத்தில் உள்ள தன்னார்வ நண்பர்கள் மூலம் pass ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் இரவு 8 மணிக்கு (26/5) ராமநாதபுரத்தில் இருந்து தமுமுக ambulance மூலம் உரிய முதலுதவி தயாரிப்புகளுடன் பயண செலவுகள் கொடுத்து, சிறுவன் எபனை திருவனந்தபுரம் அனுப்பி வைக்கப்பட்டான்.
இந்ந முயற்சியில் HPSAA அலும்னிக்கள் காமில் , ஹுப்பு ரசூல், சதக் ( Colombo), அஸ்லம், இல்யாஸ், ஜாபர் பாட்சா , ஹமீது நிசா ஆகியோர் மற்றும் office bearers, ஜாகிர்-கத்தார், ஆசிக்(Ar-rahman videos), அமீர் பாட்சா, பிர்தௌஸ், ராமநாதபுரம் சுல்தான், ரமீஸ்தீன், ஹசன் ஃபைசல் மற்றும் ஏராளமான அலும்னிக்கள் விசாரித்தும், பொருளாதார உதவிகள் மற்றும், ஆலோசனைகள் வழங்கியும் உதவினர். இச்செயல்பாடுகளை செயலாளர் (HPSAA) விளக்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு ரத்து செய்யும் வகையில் மின் மீட்டர் பொருத்தும் மின் வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முடிவை கண்டித்து, இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் டி.எம்.எஸ்.கோபி தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்,
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பில் கிருமி நாசினி, முகக்கவசம் விநியோகம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்கம் சார்பாக உச்சிப்புளி காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், என் மனங்கொண்டான், கீழநாகாச்சி, புதுமடம் ஊராட்சி தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசங்களை உச்சிப்புளி ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் வி.என். நாகேஸ்வரன் வழங்கினார்.
இதில் உச்சிப்புளி ரோட்டரி சங்கத் தலைவர் அபுதாகீர், உச்சிப்புளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கார்மேகம், கீழநாகாச்சி ஊராட்சி தலைவர் ராணி கணேசன், புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், உச்சிப்புளி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் டாக்டர் ஜெயபாலன், வழக்கறிஞர் செந்தில் குமார், தலைவர் தேர்வு ராஜேஸ்வரன், வெள்ளைச்சாமி சிவக்குமார், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் கமுதி ஒன்றியம் சார்பாக 200 குடும்பங்களுக்கு அத்தியா.வசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. ரஜினி மக்கள் மன்றம் போகலூர் ஒன்றியம் சார்பாக திருவாடி கிராமத்தில் 120 குடும்பங்களுக்கு நலத்திட்டம் வழங்கப்பட்டது, ரஜினி மக்கள் மன்றம் ராமேஸ்வரம் நகர் கிளை சார்பில் வெளி மாநில யாத்ரீக பக்தர்கள் 200 பேருக்கு 30 நாளாக உணவு வழங்கப்பட்டது.
ரஜினி மக்கள் மன்றம மண்டபம் ஒன்றியம் சார்பில் உச்சிப்புளி அருகே தாமரைக்குளம், ரெட்டையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள், ஆதரவற்றோர், முதியோர், கணவரை இழந்தோர் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு பேரிடர் கால நிவாரண உதவி வழங்கப்பட்டது. அரிசி, காய்கறி தொகுப்பை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர் கே.செந்தில் செல்வானந்த் வழங்கினார். மாவட்ட வர்த்தக அணி செயலர் முருகானந்தம், மண்டபம் ஒன்றிய செயலர் வி.ரஜினி, மாவட்ட மகளிரணி துணை செயலர் கோகிலா தமிழ் குமரன், கிளை நிர்வாகிகள் தாமரைக்குளம் சந்திர மோகன், காரான் கோவிந்தராஜ், ராமநாதபுரம் நகர தகவல் தொழில் நுட்ப அணி முகவை செல்வா, ரெட்டையூரணி தனபால், கீழமண்குண்டு முத்துராஜ், மேலமண்குண்டு சசிகுமார், தாமரைக்குளம் சீனிமுத்து, சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் ஒரு புறம் மின் தட்டுப்பாடு.. மறுபுறம் நகராட்சி மின் பணியாளர்களின் மெத்தனப்போக்கு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரையில் மாதம் தோறும் பராமரிப்பு என அறிவிக்கப்பட்ட மின் வெட்டு இருந்தாலும், பராமரிப்பு என்பது ஓன்று உள்ளதா எனும் எண்ணும் வகையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்த வண்ணம்தான் உள்ளது, அதையும் தாண்டி பற்றாகுறை நிலவும் நிலைதான் கீழக்கரையில்.
ஆம், மின் தட்டுப்பாடு காலத்தில் பகலில் சுடர் விடும் கீழக்கரை நகராட்சி மின் விளக்குகள் எரிந்து வருவதை பல இடங்களில் காண முடிகிறது. இது பொறுப்பில்லாமல் செயல் படும் கீழக்கரை நகராட்சி மின் பணியாளர்களின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. மினசாரம் அணையும் முன்பு விழித்து கொள்ளுமா மின்சார நகராட்சி மின் பணியாளர்கள்??..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் இன்று கீழக்கரையில் பாரத ஸ்டேட் வங்கி, கிழக்கு தெரு, சாலை தெரு, அண்ணாநகர் பகுதிகளை பகுதிகளை ஆய்வு நடத்தினார்.
பின்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கரோனா வைரஸ் உள்ள பகுதியில் மட்டும் வங்கிகள் திறக்கப்படாது. மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து வங்கிகளும் எப்போதும் போல் செயல்படும் என்று கூறினார்.
இதில் கீழக்கரை தாசில்தார் வீர ராஜா, கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, கீழக்கரை சரக காவல் கண்காணிப்பாளர் முருகேசன், கீழக்கரை காவல் ஆய்வாளர் தங்க கிருஷ்ணன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.
கீழை நியூஸ்
SKV சுஐபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நடுத்தெரு பள்ளி கழிவு நீர் பிரச்சினை.. ஜமாஅத் சார்பில் விளக்கமும்.. மறுப்பும்.. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனமே..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நடுத்தெரு ஜமாத் பள்ளி பின்புறம் கழிவு நீர் வழிந்தோடைவது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட ஜமாத்தினர் முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அப்பகுதி இளைஞர்கள் குற்றச்சாட்டை வைத்தனர்.
இது சம்பந்தமாக நடுத்தெரு ஜமாத்தை சார்ந்த அல்லாபக்ஸ் என்பவர் கூறுகையில், “ஜமாத் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். மேலும் கடந்த இரண்டு மாதங்களாக நகராட்சி ஆணையரிடம் தொடர்ந்து வலியுறுத்தி மனுவும் கொடுத்துள்ளோம். மேலும் பெருநாள் சமயம் என்பதாலும், பேவர் பிளாக் சாலை வேலை நடப்பதாலும், தற்காலிகமாக நிவர்த்தி செய்து தந்தார்கள், ஆனால் பெருநாள் சமயம் என்பதால் தண்ணீர் செலவினங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் வாருகால் நிறைந்து வழிந்தோடி வருகிறது. இதற்கு முறையான நிரந்தர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நிரந்தர தீர்வு காண முடியாத நடுத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல் பின்புறம் ஓடும் கழிவு நீர் பிரச்சினை… மீண்டும் புகார் அளித்துள்ள நடுத்தெரு இஸ்லாமியா சகோதரர்கள்.. நகராட்சி விரைந்து செயல்படுமா??..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
கீழக்கரை நடுத்தெரு ஜூம்மா பள்ளிவாசல் பின்புறம் அருகில் உள்ள கால்வாய் அடைப்பு காரணமாக தினமும் கழிவுநீர் வெளியேறி கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன் அதை சீரமைத்து தருமாறு COMMITTEE OF MIF சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சாலை பணி நடந்து வருவதால் தற்காலிகமாக சீரமைத்து தருகிறோம் என நகராட்சி ஆனையாளர் சார்பாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தற்காலிகமாக சீரமைத்து தந்தனர்.
ஆனால் தற்காலிக சீரமைப்பு அசல் நாட்கள் கூட தாக்குபிடிக்கவில்லை. மீண்டும் பள்ளியின் வாசலில் கழிவுநீர் ஓடி ஓடிய வண்ணம், சம்பந்தப்பட்டவர்களும் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் பொதுமக்களுக்கு நோய் மற்றும் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இது சம்பந்தமாக MIF நிர்வாகி ஒருவர் கூறுகையில், அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் மட்டும் சமூக வலைதளங்களில் மும்முரம் காட்டும் ஜமாஅத்தார்கள் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் இந்த விடயத்தில் அக்கரை காட்டாதது ஏன்?. தயவு செய்து ஜமாஅத்தார்கள் ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு உதவி செய்யுமாறு COMMITTEE OF MIF சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அணிலை பற்றி அறிந்து கொள்வோம்.. நாமும் நேசிப்போம்.. அணில் குஞ்சுகளை மீட்டு பாலூட்டும் மதுரையை சேர்ந்த கால்நடை மருத்துவர்!!
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரையில் சாலையோரம் கிடந்த இரட்டை அணில் குஞ்சுகளை மீட்டு பாலூட்டும் மருத்துவர் பிரத்யேக வீடியோ காட்சிகளை நமது (சத்திய பாதை மாத இதழ்)கீழை நியூஸ் பிரத்யேகமாக நமக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மதுரை பாசிங்காபுரம் பகுதியை சேர்ந்த பிரபல கால்நடை மருத்துவர் மெர்லின் ராஜ், இவர் பணி விஷயமாக வெளியே சென்றபோது பிறந்த சில நிமிடங்களே ஆன இரு இரண்டு அணில் குட்டிகள் ஒரு மாதத்திற்கு முன்பு சாலையோரம் கிடந்துள்ளது,அதனை மீட்டு மருத்துவர் வீட்டிற்கு எடுத்து வந்து உரிய மருத்துவ சிகிச்சை அளித்து தொடர்ந்து பாலூட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இரண்டு அணி குஞ்சுகளும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வீட்டிற்குள்ளே துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கிறது,இந்த இரண்டு குட்டிகளுக்கும் மருத்துவர் ஆரோ & ஆம்பள் என பெயர் சூட்டியுள்ளார், குணமடைந்த பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இரண்டு குட்டிகளும் சுற்றி வருவதாகவும் இந்நிலையில் அணில் குஞ்சுகளுக்கு மருத்துவர் பாலூட்டி வருகிறார், மருத்துவர் அணிலுக்கு அவரே பாலூட்டும் வளர்த்து வருவது தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை எல்லீஸ் நகரில், எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கினார்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
மதுரை எல்லீஸ் நகரில், எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
மதுரை எல்லீஸ் நகரில், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சோலை ராஜா தலைமையில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு இளைஞரணி நிர்வாகிகளுக்கு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்வில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ், கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, இளைஞரணி மாவட்ட இணைச்செயலாளர் புதூர் மோகன், மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் செந்தில்குமார்,1ம் பகுதி இளைஞரணி அவைத்தலைவர் கேபிள் ஆல்பர்ட் மற்றும் சோலை இளவரசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தள்ளாத வயதிலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்யும் சதம் வைத்தியர்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
தள்ளாத வயதிலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் மதுரையைச் சேர்ந்த சித்த வைத்தியர் முனிசாமி.
மதுரை காளவாசல் அருகில் உள்ள சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் 85 வயதான சித்த வைத்தியர் முனிசாமி. இவர் தனது தள்ளாத வயதிலும் பல்வேறு சமூக சேவைகளும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். தனது ஆரோக்யா தொண்டு நிறுவனம் சார்பில், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீர் சூரணம் பாக்கெட்டுகளை இதுவரை 10,000 பேருக்கு வழங்கியுள்ளார்.மேலும் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்கள் சுமார் 300 பேருக்கு அரிசி வழங்கியுள்ளார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு சுமார் 10,000 பேர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை மதுரை விராட்டிபத்தில் உள்ள ஏழை,எளிய மக்களுக்கு அரிசி வழங்கினார். தனது தள்ளாத வயதிலும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் சித்த வைத்தியர் முனிசாமியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் அஸ்வின், மகிபாலன், முரளிதரன், ஜெயந்தி, சுப்புலட்சுமி, பாபு, ஏர்வாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்
You must be logged in to post a comment.