முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் டில்லியில் நேற்று காலமானார். மறைந்த வாஜ்பாய்க்கு பா.ஜ., சார்பில ராமநாதபுரம் அரண்மனை முன்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. மாநில துணைத் தலைவர்கள் குப்புராமு, கூரியூர் சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் கார்மேகம், மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்ட துணைத் தலைவர் குமார், நகர் தலைவர் குமரன், சேவா பாரதி மாவட்ட தலைவர் மதிசேகர பாண்டியன், மற்றும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Category:
கீழக்கரை செய்திகள்
செம்பட்டி அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி தண்ணீர் தொட்டிக்கு மாலை அணிவித்து கிராமமக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் ஆதார், ரேஷன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளனர்.
திணடுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை யூனியன், செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டை ஊராட்சி எஸ்.புதுக்கோட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுமார் 40 குடும்பத்தினர் உள்ளனர். இந்த கிராமத்தில் சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பறை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த பல ஆண்டுகளாக இல்லை.
இந்நிலையில், கடந்த 3 வருடங்களாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. ஒரு குடம் தண்ணீரை ரூ.5-க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, பலமுறை நிலக்கோட்டை ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணாபுரம் பெண்கள் உள்பட கிராம மக்கள் நேற்று காலிக்குடங்களுடன், கையில் பூமாலையுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் தண்ணீர் தொட்டிக்கு மாலை அணிவித்து, அதன்முன்பு காலிக்குடங்களை வைத்து, அருகில் இறந்தவர்களை அடக்கம் செய்ய இறுதிச்சடங்கு செய்வதுபோல், வாழைப்பழம், பத்தி, சூடம் கொளுத்தி, தேங்காய் உடைத்தனர். பின்னர் தண்ணீர் வரும் தொட்டி இறந்துவிட்டதாக கூறி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகும், அதிகாரிகள் யாரும் அங்கு வராததால், கிராம மக்கள் அவர்களாகவே கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் தெய்வங்களின் கதை சொல்லும் மன்றம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ்சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளிதொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் ‘மக்கள் தெய்வங்கள்’ என்ற தலைப்பில் வரலாற்றுக்கதை சொல்லும் மன்றம் நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவி து.நிஷா கோபிகா வரவேற்றார். ஓவிய ஆசிரியர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளித் தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் பேசியபோது, பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம் பகுதியில் வாழ்ந்து மறைந்தவர்கள் மக்களால் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார்கள். இத்தெய்வங்களைப் பற்றிய வாய்மொழி வரலாறை மாணவர்கள் தெரிந்துகொண்டு அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
மன்னர்களுக்கு மட்டுமல்ல சாதாரண மக்களுக்கும் வரலாறு உண்டு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஊருக்காகவும், நாட்டுக்காகவும் தங்கள் உயிரை இழந்த பலபேர் மக்களால் போற்றப்படுகிறார்கள். கிராமக் கோயில்களின் வழிபாடுகளில் பல வரலாறுகள் உள்ளன. அவற்றை மாணவர்கள் ஆவணப்படுத்தவேண்டும் என மன்றப் பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு அறிமுக உரையின் போது கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் 9ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேரும், 7ஆம் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும் கலந்துகொண்டு வரலாற்றுக் கதைகளை சொன்னார்கள். உடன்கட்டை ஏறி இறந்த பெண்களுக்கு கட்டப்பட்ட மாலைக்கோயில்கள் குறித்து ச.சந்திராஸ்ரீயும், ஆர்.எஸ்.மடையில் உள்ள வண்ணமிளகு, களஞ்சியம் ஆகிய இரு தெய்வப்பெண்கள் குறித்து து.மனோஜும், அம்மன்கோயில் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் குறித்து ச.ஜனனியும், ராமநாதபுரத்தில் ஆர்தர் ஹீபர் தாமஸ் நினைவாகக் கட்டப்பட்ட கப்பல் வடிவ தேவாலயம் குறித்து அ.முகமது லபிப்பும், கழுமர வழிபாடு குறித்து ச.ஜாஸ்மினும் கதை சொன்னார்கள்.
ஆறாம் வகுப்பு மாணவன் மு.சண்முகராஜ் நன்றி கூறினார். எட்டாம் வகுப்பு மாணவி ச.சாஜிஹா பானு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் விசாலி, சுதர்ஸன், முகம்மதுநஜிப் ஆகியோர் செய்தனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கேரள மக்களே கவலை வேண்டாம்.. செய்நன்றி மறவா தமிழர் கூட்டம் உள்ளது.. உங்களுக்கு உதவ..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நூறு ஆண்டு கால வரலாற்றில் காணாத அளவு மழை பெய்து.. கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. கேரள மக்கள் சொத்தை இழந்து, இருக்கும் இடத்தை இழந்து, கால்நடைகளை இழந்து, வயல் நிலங்களை இழந்து, பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தவர்களும் திக்கு திசை தெரியாமல் தவித்த வண்ணம் உள்ளனர்.
இந்திய ராணுவ வீரர்களும், அரசாங்க ஊழியர்களும், சமூக அமைப்புகளும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற அளவு கேரளா மக்களுக்கு உதவிகள் செய்தாலும் அவர்களுடைய இழப்புக்கு ஈடுகட்ட முடியாமலே உள்ளனர். இச்சமயத்தில் பல கோடிகளும் சிறு துளியாகவே உள்ளது. அண்டை மாநிலமான தமிழகத்தின் உதவியை அதிகம் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர் கேரள சகோதர, சகோதரிகள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டிய தருணம். கீழே உள்ள கேரள முதலமைச்சர் நிதிக்கு வாரி வழங்குங்கள், மற்றவர்களுக்கும் பரப்புங்கள். நாம் தனி நபராக ஒவ்வொருவரும் கொடுக்கும் சிறு தொகையும், பெரு உதவியாக இருக்கும். வங்கி கணக்கு விபரம் கீழே:-
Chief Minister’s Distress Releif Fund.
Account No:67319948232
State Bank of India, City Branch
Trivandrum..
IFSC code: SBIN 0070028
Contributions to the Chef Minister’s Releif Fund are 100% tax exempted
(நன்கொடைக்கு 100% வரி விலக்கு உண்டு..)
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஆர்.எஸ்.மங்கலம் புதிய தாலுகா உதயமானது! – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்!..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புதிய தாலுகா அலுவலகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள ஆர்.எஸ்.மங்கல த்தை தனியாக பிரித்து புதிய தாலுகா வாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் நடராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, திருவாடானை தாசில்தார் , புதிய தாலுகா அலுவலக தாசில்தார் கார்த்திகேயன், ஆர்.எஸ.மங்கலம் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை நகராட்சியில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் எனும் உயர் கோபுர விளக்குகள் ஒவ்வொன்றும் ₹ 5லட்சம் செலவில் 9 விளக்குகள் நகரெங்கும் அமைக்கப்பட்டது. இதில் ஏர்வாடி முக்கு ரோட்டில் அமைந்துள்ள ஒன்றை தவிர 8 விளக்குகளும் பல மாதங்களாக எரியாமல் இருள் மண்டி கிடக்கிறது.
இதை சரிசெய்ய நகராட்சியில் கட்சிகள் சங்கங்கள் சமூக அமைப்பு மற்றும் பொதுமக்கள் பலரும் புகார் மனு பல தந்தும் பலனில்லை. இதை கண்டித்து அனைத்து கட்சியினர் ஒன்றினைந்து தெற்குத் தெரு சங்கம் அருகே மெழுகுதிரி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எட்டப்பட்டது.
அதன்படி, இன்று 08.30 மணி அளவில் அனைவரும் வந்தபின் தேமுதிக கட்சி சார்பாக பந்தே நவாஸ் அவர்களும், நகர் நல இயக்கம் சார்பாக பசீர் மரைக்கா அவர்களும், பார்வேர்ட் பிளாக் சார்பாக ரகுமான் அவர்களும், தமுமுக சார்பாக பாதுஷா அவர்களும், தெற்கு தெரு சங்கம் சார்பாக லாகீது கான் அவர்களும், SDPI சார்பாக சித்தீக் அவர்களும், திமுக சார்பாக பசீர் அவர்களும் சிறிது நேரம் நகராட்சியை கண்டித்து பேசினார்கள்.
அதன் பின் அனைவரும் கோசங்களை எழுப்பினர்.இறுதியாக தெற்கு தெரு ஜமாத் சார்பாகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மக்கள் டீம் காதர் வந்திருந்த அனைவருக்கும், காவல் துறையினருக்கும், பத்திரிக்கை துறை அன்பர்களுக்கும் நன்றிதனை தெரிவித்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
தகவல்.: மக்கள் டீம் :
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் இராமநாதபுரத்தில் இன்று (16/08/2018) மாலை நடந்தது. இராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணா சிலை பகுதியில் துவங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளான சின்னக் கடை, பழைய. புதிய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே பீடர் ரோடு, வண்டிக்காரத் தெரு , மத்திய கொடிக்கம்பம் வழியாக அரண்மனை வாசல் பகுதியில் நிறைவடைந்தது.
பின்னர் மாவட்ட தி மு க செயலர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய செயலர் நல்ல சேதுபதி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் முகவை கிருபானந்தம், முன்னாள் நகர் செயலாளர் ரத்தினம், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் ரஜி சேதுபதி, நகர் செயலர் தலைவர் மாரியப்பன், முன்னாள் எம் எல் ஏ திசை வீரன், நகர் தி மு க செயலர் கார் மேகம், மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் ஆத்ம கார்த்திக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, முன்னாள் மாவட்ட தலைவர் குட் லக் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணகாந்தி, பேச்சாளர் கருணாகரன், மாவட்ட துணை தலைவர் கருப்பையா, மாவட்ட செயலாளர் வலம்புரி, செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், இளைஞர் காங் மாவட்ட பொது செயலர் மணிகண்டன், பொறுப்பளார் சுஜித்குமார், நகர் தலைவர் கோபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலர் விடுதலை கிட்டு, மாவட்ட செயலர் சருபர் சாதிக் திருவாடானை தொகுதி செயலர் பழனிக்குமார், செய்தி தொடர்பாளர் சத்தியராஜ், இந்திய கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் முருகபூபதி, மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அரு.சுப்ரமணியன், நகர் செயலாளர் சுப்ரமணியன், மக்கள் நீதி மய்யம் இளைஞரணி நிர்வாகி நிவாஸ் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இன்று காலை திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் திருச்சியில் இருந்து நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளூர் என்ற இடத்தில் உரம் ஏற்றி வந்த லாரி டிரைவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த டிரைவரை வெள்ளூர் கிராம பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து அவனுக்கு உடனடியாக தண்டனை வழங்கி உள்ளனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் சார்பில் நாட்டின் 72வது சுதந்திர தின விழா!
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய நாட்டின் 72 வது சுதந்திர தின விழா இராமநாதபுரம் வட்டார தலைவர் முன்னாள் இராணுவ வீரர் எஸ்.கோபால் தலைமையில் இராமநாதபுரம் புளிக்காரதெருவில் நடைபெற்றது .இவ்விழாவில் வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல் ஜப்பார் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் எம் .பாஸ்கர சேதுபதி, கே. எம். சந்திரன், ஆர்.ஞானசேகரன், என். ரமேஷ், எஸ். சுரேஷ் , ஜெகன், எஸ்.குருநாதன் உள்பட ஏராளமான கட்சித் தொண்டர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார காங்கிரஸ் தலைவர் கோபால் செய்திருந்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தேவிபட்டிணத்தில் கொள்ளயடிக்கப்பட்ட நகை… வழிப்பறி கொள்ளையரிடம் 42 பவுன் நகை மீட்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே பழனிவலசை கிராமத்தில் சாலை ஓரம் சென்ற பெண்ணிடம் 5 பேர் கொண்ட கும்பல் செயினை பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து திம்மம்பட்டி பாண்டித்துரை, பி.கொடிக்குளம் புலிக்கேசவன் ஆகியோர் ஹலோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காரில் தப்பிச்சென்று கொண்டிருந்த கொள்ளையர்களை தனது காரில் விரட்டிச் சென்ற புலிக்கேசவன், அவரது நண்பர் தேவிபட்டினம் வைரவகேசுக்கு தகவல் கொடுத்தார்.
துரிதமாக செயல்பட்ட வைரவகேசு நயினார்கோவில் சாலையில் டிராக்டரை நிறுத்தி காரில் தப்பி வந்த கொள்ளையர்களை பிடித்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசாரிடம் கொள்ளையர்களை ஒப்படைத்தனர். விசாரணையில் பரமக்குடி ஏ.கச்சன் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சக்திவேல், சென்னை பெசன்ட் நகர் ஓலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வசந்த் என்ற செல்வக்குமார், சென்னை காமராஜர் நகர் 4வது தெரு முருகேசன் மகன் தினேஷ் ஆகியோர் என தெரிந்தது.
இவர்களை கைது செய்த போலீசார் அவர்களின் நணர்களான பரமக்குடி காடர்ந்தகுடி காலனி ரவி மகன் வினோத், குமரேசன் மகன் ராஜேஷ் பாண்டி ஆகியோரை கைது செய்தனர். இராமநாதபுரத்தில் 10 கொள்ளை, வழிப்பறி, சிவகங்கையில் ஒரு வழக்கில் தொடர்புடைய இவர்களிடமிருந்து நாற்பத்திரண்டு பவுன் நகையை மீட்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரத்தில் தனியார் நிறுவன திறப்பு விழாவுடன் சுதந்திர தின விழா..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் சென்டர் பாயின்ட் மையம் திறப்பு விழா மற்றும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமாகா மண்டபம் வட்டாரத் தலைவர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க பட்டயத் தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். பன்னாட்டு நிறுவன ஆலோசரும், ஆடிட்டருமான அகமது தீன் வரவேற்றார்.
இராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தேசியக் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். என் மனங்கொண்டான் மாலிக், நான்கு வழிச்சாலை நில எடுப்பால் பாதிக்கப்பட்டோர் மீட்பு நலச் சங்க தலைவர் சீனிவாசன், சமூக ஆர்வலர்கள் என் மனம் கொண்டான் அமீன், முத்து முகமது, புதுமடம் தமுமுக தலைவர் சகுபர் சாதிக், புதுமடம் மக்கள் நல மன்ற தலைவர் பக்கீர் முகமது உள்பட பலர் பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சுதந்திர தினத்தை முன்னிட்டு TNTJ மற்றும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இந்தியாவின் 72 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்குகிளை ஆகியன இணைந்து 15.8.2018 புதன்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கீழக்கரை அரசு மருத்துவமனையில் வைத்து கிளைத்தலைவர் பதுருசமான் தலைமையில், தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமினை கீழக்கரை காவல் துறை ஆய்வாளர் P. முத்துலெட்சுமி B.Sc அவர்கள் துவக்கிவைத்தார். இந்த இரத்ததான முகாமில் அனைத்து மத சமுதாய சகோதர சகோதரிகளும் கலந்துகொண்டு தங்களது இரத்தங்களை தானமாக வழங்கினார்கள்.
முகாமிற்கு ஆர்வத்துடன் தங்களது இரத்தத்தை தானம் செய்ய வந்திருத்த 25 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் பலகீனத்தால் இரத்ததானம் செய்ய முடியாமல் திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சமபந்தி விருந்து வைபவம் நடைபெறும் என தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று (15/08/2018) இராமநாதபுரம் மாவட்டம் குணடுகரை முருகன் கோயிலில் அறநிலையத்துறை சார்பாக சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் ஆட்சியர் ச.நடராஜனட கலந்து கொண்டார். அவருடன் அறநிலைய துணை ஆணையர் இராமசாமி கலந்து கொண்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் நயினார் கோயில் ஊராட்சி ஒன்றியம் பாண்டியூர் கிராமத்தில் இன்று (15/08/2018) கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்சகூட்டத்தில் இராமநாதர மாவட்ட ஆட்சியாளர் ச.நடராஜன் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு ஆட்சியரிடம் மனுக்களை அளித்து தீர்மானமாக இயற்ற கோரினர். இந்நிகழ்ச்சியில் ஆட்சியருடன் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லதுரை கலந்து கொண்டார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
by ஆசிரியர்
written by ஆசிரியர்
பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.. தமிழ்நாட்டில் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அதன்படி, மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித சங்கிலி போராட்டம் மாலை 4 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் பழனி பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் கந்தசாமி நகர செயலாளர் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை இரவு நேரத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகின்றது.அரசு அதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.மேலும் குழந்கள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழ்நாட்டில் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. எனவே இனிவரும் காலகட்டங்களில் பெண்கள் குழந்தைகளை பாதுகாக்க கடுமையான சட்டத்தினை இயற்ற வேண்டும்.உள்ளிட்ட பல கோசங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வில் பாண்டி, இராஜமாணிக்கம், ராஜா,மற்றும் பெண்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பழனிசெய்தியாளர் ரியாஸ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 72-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.. – புகைப்பட தொகுப்பு..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
72-ஆம் ஆண்டு சுதந்தர தின விழா ஆகஸ்டு 15.8.2018, காலை 8.50 முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. 7இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக டாக்டர். நூருல் ஹவா M.B.B.S, M.S, D.G.O, நிர்வாக இயக்குனர், ஷிபான் மருத்துவமனை செயலாளர், ஷிபான் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அவர்கள், கொடியோற்றத்துடன் தொடங்கிவைத்தார்.
இவ்வவிழாவில் மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி உதவியாளர்கள் பங்கு பெற்றனர். அதனை தொடர்ந்து மாணவி பாத்திமா ஷிபானா இறைவணக்கத்துடன் தொடங்கி, கல்லூரி முதல்வர் A.R நாதிரா பானு கமால் அவர்கள் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியினை தொடங்கி சுதந்திர தினவிழா 71 ஆண்டுகள் நிறைவு பெற்று 72 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளதை மாணவிகளுக்கு உரையாற்றினார்.
கல்லூரியில் தலைமை தாங்கிய டாக்டர். நூருல் ஹவா அவர்களுக்கு சுதந்திர தின நினைவு பரிசு கல்லூரி நிர்வாகம் வழங்கியது. மாணவி பாத்திமா மரியம் B.A ஆங்கிலம் விடுதலை போராட்ட வீரர்களை பற்றி உரையாற்றினார். அவரை தொடர்ந்து மாணவி அபிநயா B.sc கணிதவியல் பெண்கள் நாட்டின் கண்கள் என்று உரைத்து பெண்களின் இன்றைய சுதந்திரத்தைப்பற்றியும், பெண்களுக்கு இன்று பாதுகாப்பு இல்லை என்றும், பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாற வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
அதன் பின்னர் மாணவிகள் வந்தே மாதரம் பாடலைப்பாடி சுதந்திர உணர்வை வளர்த்தர். அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக டாக்டர். நூருல் ஹவா அவர்கள் சுதந்திர உணர்வை எடுத்துரைத்து, போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு முதல்பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, சான்றிதழ்களுடன் வழங்கினார். இறுதியாக ரௌவ்லத்துல் ஜன்னா மாணவிகளுக்கு நன்றியுரை வழங்கினார். மாணவிகள் தேசிய கீதம் முழங்கி, மரம் நடுதலுடன் இவ்விழா இனிதே முடிவடைந்தது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சுதந்திர தின விழாவில் பணி பாராட்டு சான்றிதழ்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு, சட்ட விரோத மது விற்பனை தடுப்பு மற்றும் காவல் துறை சார்ந்த பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
சான்று பெற்றவர்கள் : காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை, காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் (மது விலக்கு, பரமக்குடி) , கேணிக்கரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், எஸ்.ஐ., கள் ஜெய்குமார் (தனி பிரிவு), கணேசலிங்க பாண்டி (கொடூர குற்ற பிரிவு), மண்டல மாணிக்கம் எஸ்.ஐ., மதுமதி, சிறப்பு எஸ்.ஐ.,கள் ஆசைத்தம் பி (மாவட்ட குற்ற ஆவண பிரிவு), அர்ச்சுணன் (மாவட்ட குற்றப்பிரிவு), முத்துச்சாமி (கமுதி) , குமார் ( ராமநாதபுரம் பஜார்), செந்தில்குமார் (தேவிபட்டினம்), ராஜாராம் (கீழ செல்வனூர்), தலைமை காவலர்கள் பூமிநாதன் (கேணிக்கரை), முனியசாமி (கமுதி), மகாலிங்கம் (அபிராமம்), ராதாகி ருஷ்ணன் (அபிராமம்), தில்லை முத்து (ராமநாதபுரம் ஆயுதப்படை மோப்ப நாய் பிரிவு), முதல் நிலை காவலர்கள் கிருஷ்ணவேல் (கீழத்தூவல்), கார் வண்ணன் (திருப்பாலைக்குடி), ஆனந்த குமார் (பரமக்குடி டவுன்), பாலமுருகன் (ராமநாதபுரம் டவுன்), நாகநாத சேதுபதி (கேணிக்கரை), ராஜகுரு (சத்திரக்குடி), வேதமாணிக்கம் ( பெருநாழி), கோபிநாதன் (முதுகுளத்தூர்), போலீஸ்காரர்கள் முரளி பிரசாத் (அபிராமம்), துரைராஜ் (தொண்டி ), சரவணகுமாரி (கடலாடி), மாவட்ட காவல் அலுவலக கண்காணிப்பாளர்கள் வசந்தி, புனிதா, உதவியாளர்கள் இளங்கோ, கஜேந்திரன், இளநிலை உதவியாளர் சரவணன், அலுவலக உதவியாளர் சகுந்தலா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 09/8/2018 அன்று தேவிபட்டினம் அருகே பழனி வலசையில் பெண்களிடம் வழிப்பறி செய்து விட்டு காரில் தப்பிய கொள்ளையர்களை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்த பி.கொடிக்குளம் கேசவன், திம்மம்பட்டி பாண்டித்துரை, தேவிபட்டினம் வைரவ கேசு மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவு ரத்த தான முகாம்கள் நடத்தி அரசு ரத்த வங்கிக்கு ரத்தம் சேகரிப்பு பணியை பாராட்டி ஆசிரியர் அய்யப்பனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
காவல் சரக துணை தலைவர் காமினி, காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, கூடுதல் கண்காணிப்பாளர்கள் வெள்ளைத்துரை, கண்ணன், காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன், தனி பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ ஆகியோர் பாராட்டினர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் தனிநபர் முயற்சியில் அன்னதான வங்கி..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் அருன்குமார் என்பவரின் தனிப்பட்ட முயற்ச்சியால் சுமார் 1லட்சம் மதிப்பிலான அன்னதான வங்கி சுதந்திர தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டது.
இதில் யார் வேண்டுமானாலும் உணவு பொருட்கள் மற்றும் புத்தகம், ஆடை போன்றவற்றை வைக்கலாம் தேவைப்படும் யார் வேண்டுமானாலும் உணவு புத்தகம் ஆடைகளை எடுத்துகொள்ளலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சிறந்த ஊராட்சி செயலாளருக்கான விருது பெற்ற நிலக்கோட்டை தாலுகா செயலர்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
சுதந்திர தினத்தில் சிறந்த ஊராட்சி செயலாளருக்கான விருதை நிலக்கோட்டை தாலுகா கோட்டூர் ஊராட்சி செயலர் பாண்டியராஜ் இன்று (15/08/2018) பெற்றார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட கோட்டூர் ஊராட்சி செயலர் பாண்டியராஜ் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரையில் பல்வேறு பள்ளிகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…புகைப்படங்கள்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இந்தியாவின் 72வது சுதந்திர தின விழா கீழக்கரையில் உள்ள முகைதீனியா மெட்ரிக் மேன்நிலைப் பள்ளி, ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நூராயனியா பள்ளி, ஸஹரத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளி மற்றும் இன்னும் பிற பள்ளிகளிலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் பள்ளியின் மூத்த நிர்வாகிகள் இந்திய தேசிய கொடியை ஏற்றி இனிப்ப வழங்கினர். பின்னர் சுதந்திர தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
You must be logged in to post a comment.