10
மானாமதுரை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி விலக்கு பகுதியில் காவலர் ஒருவர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் முழுவதும் எரிந்து இறுதியாக கால் பகுதி எரிந்துகொண்டிருப்பதை கண்டறிந்துள்ளார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.