முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை வடக்கு மாவட்ட திமுக கழக வழக்கறிஞர் அணி சார்பாக செம்பனார்கோயில் ஊராட்சி மன்றத்தில் பணியாற்றும் தூய்மையை பணியாளர்களுக்கு நாகை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன், செம்பனார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பனார்கோவில் ஒன்றிய திமுக பொறுப்பாளர் பிஎம் அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் பிஎம் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். நிகழ்வில் கழக வழக்கறிஞர்கள் ராஜ்குமார் ,விக்ரமன், பிரபாகரன் செம்பனார்கோவில் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வரத்தினம், செம்பனார்கோவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் லதா, சத்யபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.
You must be logged in to post a comment.