10
நாளை (17/04/2019) தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை வருவதால் ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டும், நாளை மறுநாள் தேர்தல், அதற்கு அடுத்த நாள் புனித வெள்ளியை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் விடுமுறை அளிப்பதால் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
ஆகையால் பொதுமக்களுக்கு தேவையான பணம் எடுப்பதற்கு ஏடிஎம்களை முறையாக கண்காணித்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.