33
இராமநாதபுரம், நவ.1 – இராமநாதபுரம் ராயல்ஸ் ரோட்டரி சங்கம், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி ஆகியன சார்பில் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநனர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த நில்! கவனி! செல்!
விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பெரியசாமி தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் சின்னதுரை அப்துல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது, விருதுநகர் ரோட்டரி சங்க நிர்வாகி நாகேந்திரன் ஆகியோர் பேசினர். ரோட்டரி சங்கத்தலைவர் தலைவர் ஷங்கர், செயலர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.