Home செய்திகள் தூய்மை திருநகர் விழிப்புணர்வு பேரணி 2023 ..

தூய்மை திருநகர் விழிப்புணர்வு பேரணி 2023 ..

by ஆசிரியர்

திருநகர் பக்கம் குழு ஒருங்கிணைத்த மதுரை மாநகராட்சி மற்றும் 94 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்யன்   இணைந்து  பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுடன் பங்கேற்ற மாபெரும் தூய்மை நகருக்கான விழிப்புணர்வு பேரணியை மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மேற்கு மண்டல தலைவர்  சுவிதா விமல் 94 வது வார்டு மாமன்ற உறுப்பினர்  சுவேதா சத்யன் 95வது வார்டு மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி கிருஷ்ணசாமி , 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் M சிவா மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் குணசேகரன் மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள், திருநகர் காவல் ஆய்வாளர் மதுரை வீரன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பேரணியில் சீதாலட்சுமி மேல்நிலைப்பள்ளி, CSR மெட்ரிக் பள்ளி, இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி, முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, சவிதாபாய்(கோவை) மேல்நிலைப்பள்ளி, மன்னர் கல்லூரி, அண்ணா கல்லூரி மாணவ மாணவிகள், சமூகநல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருநகர் பக்கம் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்  விஸ்வா அனைவரையும் வரவேற்று பேசினார், பங்கேற்ற அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விருதுகளையும், மாணவர்ககளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும்  மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் பிரவின் குமார்  வழங்கினார்கள்.

பேரணி திருநகர் அண்ணா பூங்காவில் தொடங்கி 4வது,  3வது,  2வது,  1வது, 8வது, 7வது நிறுத்தங்களை சுற்றி வளம் வந்தனர். மாணவர்கள் தூய்மைக்கான வாசக பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு வாசகங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

இந்நிகழ்வை திருநகர் பக்கம் குழுவை சேர்ந்த நிலா பாண்டியன் அவர்கள் தொகுத்து வழங்கினார் மற்றும் ராஜேஷ் கண்ணன்  நன்றியுரை நிகழ்த்தினார்…

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com