இராமநாதபுரம், நவ.8- இராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் சார்பில் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
பட்டயத்தலைவர் தினேஷ் பாபு தலைமை வகித்தார். தலைவர் ரம்யா தினேஷ் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உயிருக்கு போராடிய பலருக்கு உரிய நேரத்தில் உயிர் காக்கும் சிகிச்சை அளித்து உயிர்களை காப்பாற்றிய டாக்டர் எம்.ஜவஹர் பாரூக், சிறந்த கல்விப்பணி ஆற்றிய கணித ஆசிரியர் எம்.சீனிவாசகன் (ஓய்வு), ஓவிய ஆசிரியர் ஜி.வேல்முருகன், விழாக்கள், விஷேசங்களில் சிறந்த இன்முக சேவை புரிந்த ராமநாதபுரம் வைசிராய் ரெசிடன்சி, தமிழர்களின் பராம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கரகம், தற்காப்பு கலையான சிலம்பம் உள்ளிட்ட கலைகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இலவச பயிற்சி அளித்து வரும் கிராமியக்கலை தலைமை பயிற்றுநர் சிலம்பொலி எம்.லோக சுப்ரமணியன், என்.சத்யபாமா, எம்.மீனாள், எம்.ரெத்தினம் உள்ளிட்டோருக்கு சிறந்த நுண்புலன் விருதுகளை ரோட்டரி ஆளுநர் ஆர்.முத்தையா பிள்ளை வழங்கினார். ரோட்டரி மாவட்ட பொதுச்செயலாளர் ஏ. ஆறுமுக பெருமாள், உதவி கவர்னர் ஜி.டி.அருள் பிரசாத்,
ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் தலைவர் எஸ்.அண்ணாதுரை, செயலாளர் கே.பாலாஜி, தொழில் சேவை பிரிவு இயக்குநர் ஆர்விஎஸ் பார்த்தசாரதி, தொழில் விருதுகள் பிரிவு தலைவர் கே.முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.
10
You must be logged in to post a comment.