13
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் எஸ்.சதீஷ். இவர் கடந்த 12 ஆண்டுகளாக வறட்சி பகுதியான தொண்டியில் மரக்கன்றுகள் நட்டு மரங்கள் வளர்த்தார்.
இவரது தன்னார்வ பணியை ஊக்குவிக்கும் வகையில் செம்மை அமைப்பு சார்பில் கிருஷ்ணா டாவின்சி விருது செந்தமிழன் ஆலோசனைபடி வழங்கி கவுரவிக்கப்பட்டது. மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு வசதியாக வாகனம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என செந்தமிழன் உறுதி அளித்தார்.
இதுபோன்று ஒவ்வொரு தனி மனிதனும் விவசாயத்தில் கவனம் செலுத்தினால் வறட்சி மாவட்டம் பசுமை புரட்சி மாவட்டமாக மாறும்.
You must be logged in to post a comment.