Home செய்திகள் வாணியம்பாடியில் கர்நாடக அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் திமுக நிர்வாகிகள் அட்டகாசம்…

வாணியம்பாடியில் கர்நாடக அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் திமுக நிர்வாகிகள் அட்டகாசம்…

by ஆசிரியர்

வேலூரிலிருந்து பெங்களூருக்கு கர்நாடக விரைவு பஸ் நேற்று இரவு வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சிக்கு பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.முன்னால் முந்தி செல்ல கார் முயன்றது ஆனால் முடியவில்லை (பெங்களூரு _ சென்னை தேசியசாலை மொத்தம் 6-வழி சாலை) இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் செட்டியப்பனூர் அருகே பஸ்சுக்கு முன்னால் காரை நிறுத்தி கர்நாடக பஸ் டிரைவரை இழுத்து சரமாரியாக அடித்து உதைத்து விட்டு காருடன் தப்பி ஓடினர்.

தகவல் அறிந்த வாணியம்பாடி போலீசார் விரைந்து வந்து டிரைவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் கொடுத்த புகாரின்படி வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதி குமார் ,ராஜேஷ், சிவா, அப்பு,பிரவின் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராஜேஷ், சிவா ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய சாரதி குமார், உள்ளிட்டோரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!